வியாழன், நவம்பர் 06, 2008

பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம்பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்படர்கின்ற காதல் அதிசயம்(பூவுக்குல்)ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமேஅலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமேமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமேஉடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்நினைத்தால் நினைத்தால் அதிசயமே(கல்தோன்றி)(பூவுக்குள்)பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமேஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமேவான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமேநங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமேஅசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)(பூவுக்குள்)

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும்.

அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கேது திசை தொடங்கும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சுக்கிர திசை தொடங்கும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சூரிய திசை தொடங்கும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சந்திர திசை தொடங்கும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் செவ்வாய் திசை முதலில் தொடங்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத் திரத்தில் பிறந்தால் முதலில் ராகு திசை தொடங்கும்.

புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் குரு திசை முதலில் தொடங்கும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் சனி திசை
முதலில் தொடங்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் புதன் திசை தொடங்கும்.

12 ராசிகளில் பிறந்தவர்களின் தன்மைகள்

மேஷம்

ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் ஆவார். தைரியம், துணிவு, முரட்டுத்தனமான நடவடிக்கை, வலிமை மிகுந்த உடலமைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, கூட்டாளிகளை உயர்த்தும் தன்மை, பலரை நிர்வகிக்கும் திறன், மிகதைரியசாலியாக மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவராக விளங்குவார்கள்.

ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகானவர்கள். கோதுமை போன்ற நிறமும், தரமான உயரமும், கருப்பான கண்களும் நன்றாக வளர்ந்த தலைமுடியும், கற்பனை வளம் கொண்டு பேச்சுத் திறனால் மற்றவர்களை கவர்ச்சி செய்யும் திறன் கொண்டவராகவும், மென்மையான உணர்ச்சியும், கலை, சினிமா, ஆடை, ஆபரணத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

புதன் ஆதிக்கம் கொண்ட இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், உயரமான உடலமைப்பு, எளிதில் உணர்ச்சிக்கு உட்பட்டவராகவும், வேடிக்கை செய்பவரும், வணிகத்துறையில் நாட்டம் கொண்டவராகவும், அடிக் கடிமனம் மாறும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

கடகம்

ஜென்ம ராசியாதிபதி சந்திரன் ஆவார். மனோதைரியம் மிக்கவ ராகவும், தரமான உயரமும், வெண்மை நிறமும், இரக்க குணமும் வீட்டை நேசிப்பவராகவும் இருப்பார்கள். மிக புத்திசாலியாகவும், உடல் அழகும் கொண்டவராக இருப்பார்கள். பெண் என்றால் கவர்ச்சி மிகுந்த உடலமைப்பு, இனிய குரல், சேமிக்கும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

சிம்மம்

ராசியாதிபதி சூரியன் ஆவார். இயற்கையாகவே எதிலும் மிகத் துணிச்சலுடன் தொலைநோக்கு பார்வையும், லட்சியம் பல உடையவராகவும், கௌரவமான தோற்றமும், வெளிபார்வைக்கு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்போல இருந்தாலும் அப்படி இருக்க மாட்டார்கள். எதிலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ள தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

ஜென்ம ராசியாதிபதி புதன் பகவான் ஆவார். தரமான உடலமைப்பு உணர்ச்சி மிக்கவராகவும், புத்திசாலியாகவும், காதல் கற்பனை கொள்பவரா கவும், இசையிலும் பல நுண்ணிய கலைகளிலும் நாட்டம் கொண்டவராகவும், மற்றவர்களை எளிதில் நட்பு கொள்ளாத வராகவும் இருப்பார்கள்.

துலாம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகான தோற்றம், கற்பனை வளம் மிக்கவராகவும், நல்ல உடலமைப்பும், அன்புள்ளவராகவும், எந்த சூழ்நிலையிலும் சாயாத தன்மை கொண்டவராகவும், கலை, இசை, சினிமாவில் நாட்டம் கொண்டவராகவும் இருப் பார்கள்.


விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயர்ந்த பண்பு உடையவராகவும், இளமையானவராகவும், உணர்ச்சி வசப்படும் தன்மையும், பயந்த சுபாவம் கொண்டவராகவும், மனக்குழப்பம் அதிகம் கொண்டவரா கவும், ரகசிய உடல் பாதிப்பு உடைய வராகவும் இருப்பார்கள்.

தனுசு

குருவின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் பயந்த சுபாவம் கொண்டு இருந்தாலும்; நினைத்த காரியத்தை முடிப்பதில் பிடிவாதம் கொண்டவராகவும், அறிவு திறன் மிக்கவராகவும், மற்றவர்களை எளிதில் நம்பும் தன்மை கொண்டவராகவும், கடவுள் பயம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

மகரம்

சனியின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயரமான உடலமைப்பு, மாநிறம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம், திறமை மிக்கவர். நல்ல நடவடிக்கை கொண்டவராகவும், கடவுள் பயம் கொண்டவராகவும், வாழ்வில் அடி மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்த வர்களாக இருப்பார்கள்.

கும்பம்

ஜென்ம ராசி யாதிபதி சனி பகவான் ஆவார். படித்தவர், புத்திசாலி, சீக்கிரம் கோபம் வரும் தன்மை கொண்டவர்கள். கற்பனை வளம் மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பல்வேறு தடைகளை சந்திப்பவர்.

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் நல்லநிறமும், திடமான உடலமைப்பும், மிக ஜாக்கிரதையாக செயல்படும் திறனும் கொண்டு கடவுள் பயம்மிக்கவராக இருப்பார்கள்.

நன்றி : http://eegarai.darkbb.com/-f3/--t555.htm

புதன், நவம்பர் 05, 2008

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும். அதாவது,
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள்.
ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும்,
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்கள்.
ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்கள்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.
ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்கள், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள்
மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகள். பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள்.
வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts