திங்கள், நவம்பர் 30, 2009

இந்தியா அணியின் 100வ்து டெஸ்ட் வெற்றி



நன்றி : http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx#

வியாழன், நவம்பர் 26, 2009

Mobile number portability (MNP)



பாடித்தது : http://www.dinakaran.com/dncgibin/dinakaranepaper.asp?imge=2009/nov/22/11

டிராவிட் - பார்டரை கடந்தார்...

நேற்றைய போட்டியில் [25-11-19] இந்திய வீரர் டிராவிட், 137வது ரன் எடுத்த போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஆலன் பார்டரை முந்தி, நான்காவது இடம் பிடித்தார்.

அதிக ரன்கள் எடுத்துள்ள "டாப்-5' வீரர்கள்:

வீரர்/அணி போட்டி ரன்கள்

சச்சின்(இந்தியா) 161 12917
லாரா(வெ.இண்டீஸ்) 131 11953
பாண்டிங்(ஆஸி.,) 136 11345
டிராவிட்(இந்தியா) 136 11182
ஆலன் பார்டர்(ஆஸி.,) 156 11174

பாடித்தது : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4396&Value3=I

சனி, நவம்பர் 21, 2009

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களைக் காலி செய்திடுமோ? இயக்கத்தை முடக்கி வைத்துவிடுமோ என்ற அச்சத்துடன் நாம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. இந்த சிந்தனையுடன் ஏன் கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குகிறார்கள் என எண்ணியபோது கிடைத்த எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்? சரியான கேள்வி தான். இதற்கான விடைகள் பலவாறாக உள்ளன.

1. தனி மனித மனப் பிரச்சினகள்: பல பதில்கள் கிடைத்தாலும் இந்த பதில் சற்று வேடிக்கையாக இருக்கிறது. தாங்கள் மற்றவர்களைக் காட்டிலும் இந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர். இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன் திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கிவிட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது. வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்றபின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார்.

2.பணம்: இதுதான் பலரை இழுக்கும் தூண்டில். வைரஸ் உருவாக்கி எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? பல வழிகளில் சம்பாதிக்கலாம் என்று தெரிகிறது. முதலாவதாக டேட்டா திருட்டு. வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யூட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது. தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகிவிட்டது. இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனைப் பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது. முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது. இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது. இவற்றை ஆங்கிலத்தில் “ransomware” என்று அழைக்கின்றனர். ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.

3. குழு ஆதிக்கம்: ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன. இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை. ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு. இதே போல் பல கும்பல்களை இன்டர்நெட்டில் காணலாம். இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான்.

4. அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்: அண்மையில் இந்திய தேசிய கட்சி ஒன்றின் இணைய தளத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான். ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேலயாக உள்ளது. இவர் கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும். எடுத்துக் காட் டாக ஒரு அரசியல் கட்சியின் இணைய தளத் தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட் டது. ஆனால் அது நேராக அந்க கட்சியின் தளத்தை ஆக்ரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை. அதற் குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது. அந்த வைரஸ் குறிப் பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத் தைத் தான் தங்கும் கம்ப்யூட் டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப் பட்டிருக்கும். அது அடுத்த நிலையாக இருக்கும். பாதிக் கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது. ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப் யூட் டர்களிலிருந்து அந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரி யாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப் சைட் டைத் தாக் கியிருக்கும். இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தோறும் உருவாகி வருகின் றன. சைபர் உலகின் சாபக்கேடாக இது மாறிவிட்டது. வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியதுள்ளது.


நன்றி : http://senthilvayal.wordpress.com/2009/05/22/

30 ஆயிரம் ரன்கள் குவித்து சச்சின் உலக சாதனை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்​டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார்.


30 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதலாவது வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமதாபாதில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் 35 ரன்களை எடுத்தபோது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாத​னை​யைப் புரிந்தார்.


1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் 21-ம் ஆண்டில் நுழைந்துள்ளார். 20-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அவர் இந்தப் போட்டியில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


டெஸ்ட் போட்டிகள், ஒரு தின போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் சேர்த்து அவர் தற்போது 30,065 ரன்களைச் சேர்த்துள்ளார்.


சச்சின் குவித்த ரன்கள் விவரம்:


போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி

டெஸ்ட் - 160 12,877 43 53 54.79

ஒரு நாள் - 436 17,178 45 91 44.50

டி20 - 1 10 - - 10.00


நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=157611&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=


மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன் கடந்து புதிய சாதனை படைத்தார். அகமதாபாத் டெஸ்டின் கடைசி நாளான நேற்று, சச்சின் 35 ரன் எடுத்த போது ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் சேர்த்து 30 ஆயிரம் ரன்னை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் 30 ஆயிரம் ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதுவரை 160 டெஸ்ட், 436 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் அவர் 88 சதம், 144 அரை சதம் மற்றும் 199 விக்கெட் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த


டாப் 5 வீரர்கள் விவரம்:

பெயர் போட்டி ரன்கள் சதம் சராசரி

சச்சின் 597 30065 88 48.33
பான்டிங் 483 24057 66 47.92
லாரா 430 22358 53 46.28
டிராவிட் 474 21803 39 45.32
காலிஸ் 436 20974 47 49.11

நன்றி : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=748

வியாழன், நவம்பர் 19, 2009

உலகக் கோப்பை கிரிக்கெட் 2010 அட்டவணை: முதல் போட்டி இந்தியா Vs வங்கதேசம்!

பிப்.19 - இந்தியா - வங்காளதேசம் (மிர்பூர்)

பிப்.20 - இலங்கை - கனடா (ஹம்பன்தோடா-இலங்கை)
பிப்.20 - கென்யா - நியூசிலாந்து (சென்னை)
பிப்.21 - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
பிப்.22 - இங்கிலாந்து - ஆலந்து (நாக்பூர்)
பிப்.23 - கென்யா - பாகிஸ்தான் (ஹம்பன்தோடா)
பிப்.24 - தென்ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.25 - வங்காளதேசம் - அயர்லாந்து (மிர்பூர்)
பிப்.25 - ஆஸ்திரேலியா நியூசிலாந்து (நாக்பூர்)
பிப்.26 - பாகிஸ்தான் - இலங்கை (கொழும்பு)

பிப்.27 - இந்தியா - இங்கிலாந்து (கொல்கத்தா)

பிப்.28 - ஆலந்து - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.28 - கனடா - ஜிம்பாப்வே (நாக்பூர்)
மார்ச் 1 - கென்யா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 2 - இங்கிலாந்து -அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 3 - கனடா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 3 - ஆலந்து - தென்ஆப்பிரிக்கா (மொஹாலி)
மார்ச் 4 - வங்காளதேசம் - மே. இ. தீவுகள் (மிர்பூர்)
மார்ச் 4 - நியூசிலாந்து - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
மார்ச் 5 - ஆஸ்திரேலியா - இலங்கை (கொழும்பு)

மார்ச் 6 - இந்தியா - அயர்லாந்து (பெங்களூர்)

மார்ச் 6 - இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா (சென்னை)
மார்ச் 7 - கனடா - கென்யா (டெல்லி)
மார்ச் 8 - நியூசிலாந்து - பாகிஸ்தான் (பல்லிகேலே)

மார்ச் 9 - இந்தியா - ஆலந்து (டெல்லிஃ

மார்ச் 10 - இலங்கை - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 11 - வங்காளதேசம் - இங்கிலாந்து (சிட்டகாங்)
மார்ச் 11 - அயர்லாந்து - மே. இ. தீவுகள் (மொஹாலி)

மார்ச் 12 - இந்தியா - தென்ஆப்பிரிக்கா (நாக்பூர்)

மார்ச் 13 - கனடா - நியூசிலாந்து (மும்பை)
மார்ச் 13 - ஆஸ்திரேலியா - கென்யா (பெங்களூர்)
மார்ச் 14 - வங்காளதேசம் -ஆலந்து (சிட்டகாங்)
மார்ச் 14 - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 15 - அயர்லாந்து - தென்ஆப்பிரிக்கா (கொல்கத்தா)
மார்ச் 16 - ஆஸ்திரேலியா - கனடா (பெங்களூர்)
மார்ச் 17 - இங்கிலாந்து - மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 18 - நியூசிலாந்து - இலங்கை (மும்பை)
மார்ச் 18 - அயர்லாந்து - ஆலந்து (கொல்கத்தா)
மார்ச் 19 - வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா (மிர்பூர்)
மார்ச் 19 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 20 - கென்யா - ஜிம்பாப்வே (கொல்கத்தா)

மார்ச் 20 - இந்தியா- மே.இ. தீவுகள் (சென்னை)

மார்ச் 23 - முதல் காலிறுதிப் போட்டி- மிர்பூர்

மார்ச் 24 - 2வது காலிறுதிப் போட்டி- கொழும்பு

மார்ச் 25 - 3வது காலிறுதிப் போட்டி- மிர்பூர்

மார்ச் 26 - 4வது காலிறுதிப் போட்டி - அகமதாபாத்.

மார்ச் 29 - முதல் அரை இறுதிப் போட்டி- கொழும்பு.
மார்ச் 30 - 2வது அரை இறுதிப் போட்டி- மொஹாலி

ஏப்ரல் 2 - இறுதிப் போட்டி - மும்பை.

செவ்வாய், நவம்பர் 17, 2009

ராகுல் திராவிட் - 11,000 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் திராவிட் பெற்றார்.

ஆமதாபாதில் திங்கள்கிழமை [16-11-09] துவங்கிய இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் எடுத்திருந்தபோது திராவிட் இந்தச் சாதனையைச் செய்தார்.

11 ஆயி​ரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 177 ரன்கள் தேவை என்ற நிலை​யில் திராவிட் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டம் முடியும்போது 177 ரன்கள் நாட்-அவுட் என பெவிலியன் திரும்பினார் திராவிட். இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட் ஆமதாபாத் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிராக திரா​விட் எடுக்கும் 2-வது சதமாகும் இது. டெஸ்ட் போட்டிகளில் இது அவருக்கு 27-வது சதம்.

11 ஆயிரம் ரன்கள் எடுத்த 5-வது வீரர் திராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. 135-வது டெஸ்டில் இந்த சாதனையை திராவிட் படைத்துள்ளார்.

வீரர் போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி

சச்சின் (இந்தியா) 160 12777 42 53 54.37

லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34 48 52.88

பாண்டிங் (ஆஸி.,) 136 11345 38 48 55.88

பார்டர் (ஆஸி.,) 156 11174 27 63 50.56

டிராவிட் (இந்தியா) 135 11000 27 57 53.39


Courtesy : http://www.dinamani.com/edition/story.aspx?&Court
SectionName=Sports&artid=155772&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=
&
http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4297&Value3=A

திங்கள், நவம்பர் 16, 2009

Tendulkar @ 20 Years









சனி, நவம்பர் 14, 2009

மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி...

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920

இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947

ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954

காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970

பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973

மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979

ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983

டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984

விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989

மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990

2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991

அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992

மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996

மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997

எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000

இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001

வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002

டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004

மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006

மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007

ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010

எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

நன்றி : http://www.honeytamilonline.co.cc/2009/09/blog-post_20.html

மறக்க முடியாத முதல் போட்டி: சச்சின்

" இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது தான் எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியை மறக்க முடியாது " என, சச்சின் தெரிவித்துள்ளார்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். மிக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி வரும் இவர் நாளை 21வது காலடி எடுத்து வைக்கிறார். தனது கடந்தகால மறக்க முடியாத அனுபவங்களை சச்சின் இங்கே பகிர்ந்து கொள்கிறார்:


எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் மிக நீண்டது. இதில் சிறப்பு வாய்ந்த பல்வேறு தருணங்கள் உள்ளன. அவற்றை கணக்கிடுவது கடினம். ஆனாலும், இந்திய அணிக்காக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது மகத்தான தருணம். கடந்த 1989 நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றேன். அன்று இந்திய அணியின் "கேப்' அணிந்து களமிறங்கிய அனுபவம் என்றென்றும் என்மனதில் நிலைத்து இருக்கும்.


அதிர்ஷ்ட வாய்ப்பு:
இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.


புதிய மாற்றங்கள்:
கடந்த 1989ல் இருந்த கிரிக்கெட்டை விட தற்போது மூன்றாவது அம்பயர், "டுவென்டி-20' என நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவிர, பேட்ஸ்மேன்கள் பல்வேறு வகையில் அடித்து விளையாடுகிறார்கள். அவர்கள் "ரிஸ்க்' எடுக்கத் தயங்குவது இல்லை. ஏனெனில் ஒரு நல்ல ஆடுகளத்தில் இப்போதெல்லாம் 275 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியில் பெரிய ஸ்கோர் அல்ல.
டெஸ்ட் போட்டிகளில் முன்பு குறைந்த அளவில் தான் முடிவுகள் வந்தன. இது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அதிக டெஸ்ட்கள் முடிவைத் தருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


புதிய சவால்:
எனது ஆட்டமுறையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஏனெனில் கிரிக்கெட் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தகுந்து எப்போதும் நம்மை தயாராக வைத்திருப்பது கடினமானது.


தாய் பிரார்த்தனை:
நம்மை சார்ந்து இருப்பவர்களது ஒத்துழைப்பும் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும். எனது பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் எனது மனைவி என, எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். எனது தாயாருக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் எனது மற்றும் தேசத்தின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார்.


இருண்ட அத்தியாயம்:
கடந்த 1999ல் வெடித்த கிரிக்கெட் சூதாட்டம் ஒரு இருண்ட அத்தியாயம். அது பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.


ரசிகர்கள் ஆதரவு:
எனது மூத்த சகோதரர் தவிர, பிற சகோதர, சகோதரிகளிடமும் கிரிக்கெட் குறித்து விவாதிப்பேன். அடுத்து எனது மனைவியுடனும் இதுகுறித்து பேசுவேன். இதுதான் நான் நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம். இவைகள் தவிர, இந்திய ரசிகர்களிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைத்தது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4272&Value3=I

வெள்ளி, நவம்பர் 13, 2009

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் 30 ஆயிரம் ரன்னை நெருங்கும் தெண்டுல்கர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர்.

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். வருகிற 15-ந்தேதி அவர் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 20 ஆண்டு கால விளையாட்டில் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சாதனை என்றாலே சச்சின் தான் என்று சொல்லுமளவுக்கு உள்ளது.

தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை நோக்கி செல்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சேர்த்து அவர் 30 ஆயிரம் ரன்னை நெருங்குகிறார். அதற்கு இன்னும் 49 ரன் தேவை. அவர் 436 ஒருநாள் போட்டியில் விளையாடி 17, 178 ரன்னும், 159 டெஸ்டில் 12,773 ரன்னும் எடுத்துள்ளார். இரண்டையும் சேர்த்து 29,951 ரன் குவித்துள்ளார்.

இன்றைய போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 30 ஆயிரம் ரன்னை தொடுவார். தெண்டுல்கரின் சாதனைகளை எட்டிபிடிக்க முடியாத தூரத்தில் மற்ற வீரர்கள் உள்ளனர்.1 1

நன்றி : http://www.maalaimalar.com/2009/11/11162347/vlr2101101109.html

திங்கள், நவம்பர் 09, 2009

விண்டோஸ் வந்த வரலாறு....!!!

உலகின் 90 சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து , இன்று வெளியாகியுள்ள விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே காணலாம்.

1985 : விண்டோஸ் 1

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் மவுஸ் பயன்பாட்டை தந்தது.

1987 : விண்டோஸ் 2

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

1990 : விண்டோஸ் 3

1990 ஆம் ஆண்டு மே 22 வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

1991 : விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

1992 : விண்டோஸ் 3.1

ஏப்ரல் மாதம் வெளியான இந்த பதிப்பு வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது.

1993 : விண்டோஸ் என்.டி

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது.

1995 : விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு மிகப் பெரிய அளவிலான விளம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

1998 : விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

2000 : விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த பதிப்பானது , இதற்கு முன்னர் வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும் .

2000 : விண்டோஸ் ME (மில்லேனியம்)

விண்டோஸ் வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

2001 : விண்டோஸ் எக்ஸ்பி

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த பதிப்பு கோப்புகள் மேலாண்மை(File Management) , பாதுகாப்பு , உறுதி ,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

2007 : விண்டோஸ் விஸ்டா

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.

2009 : விண்டோஸ் 7

விண்டோஸ் விஸ்டாவில் உள்ள பல குறைகளை நீக்கி மைக்ரோ சாப்ட் இந்த பதிப்பை வெளியிடவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

நன்றி : http://www.honeytamilonline.co.cc/2009/10/blog-post_22.html

வெள்ளி, நவம்பர் 06, 2009

டெண்டுல்கரும் 17000 ரன்களும்

டெண்டுல்கர் ஒவ்வொரு ஆயிரம் ரன் களை கடந்த விதம்

ரன்கள் ஆட்டம் ஆண்டு

1000 36 1992

2000 73 1994

3000 96 1995

4000 115 1996

5000 141 1997

6000 176 1998

7000 196 1998

8000 217 1999

9000 242 2000

10000 266 2001

11000 284 2002

12000 309 2003

13000 330 2004

14000 359 2006

15000 387 2007

16000 409 2008

17000 435 2009 (05-11-09)


ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரன்கள் குவித்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 17,168 (05-11-09)

சனத் ஜயசூர்யா (இலங்கை) 13,377

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 12,286

இன்சமாம் (பாகிஸ்தான்) 11,739

சவுரவ் கங்குலி (இந்தியா) 11,363.

ராகுல் திராவிட் (இந்தியா) 10,765

பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவு) 10,405

ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) 10,328



சச்சின் சோகம்

175 ரன்கள் குவித்த சச்சின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்றபோதும் சச்சின் சோகமாகக் காணப்பட்டார். சோகத்தின் மொத்தமாக இருந்த சச்சின் தழுதழுத்த குரலில் பேசினார்.

அவர் கூறியதாவது: நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டோம். என்னுடன் இணைந்து ரெய்னா சிறப்பாக ஆடினார். ரெய்னாவிடம் ஏராளமான திறமை ஒளிந்து கிடக்கிறது. அவர் மிகப்பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார். என்னுடைய இந்த ஆட்டம் எனக்குப் பிடித்தமான ஒன்று என்றாலும் இந்தியா வெற்றி பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவுக்காக நீண்ட நாள் விளையாடவேண்டும். இந்தியா வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றார் அவர்.

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts