செவ்வாய், டிசம்பர் 28, 2010

ப்ளாக் [Blog] -ன் வரலாறு

ஓர் வலைப்பதிவு வெளியீடு அமைப்பாகும்.இதனை முதலில் பைரா லாப்ஸ் என்ற நிறுவனம் 1999ஆம் ஆண்டு உருவாக்கியது. பின்னர் 2003ஆம்ஆண்டில் கூகிள்/Google நிறுவனம் இவ்வமைப்பை வாங்கியது.இங்கு சொந்த வலைத்தளங்கள் இல்லாத வலைப்பதிவர்கள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டு blogspot.com என்ற துணைபரப்பில் இந்நிறுவன வழங்கியில் இருந்து வெளியிடுகிறார்கள். இந்த சேவையை கூகிள்/Google இலவசமாக வழங்குகிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil25.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

வியாழன், டிசம்பர் 23, 2010

தண்ணீரின் மேல் நடக்கலாம்

வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.

ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.


நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்

இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.




உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.

மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,




நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.



நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.

மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.


ஆதாரங்களுடன் நன்றி : http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_5384.html

திங்கள், டிசம்பர் 20, 2010

சச்சின் சகாப்தம்

இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.


37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தார்.


21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், தனது 175-வது டெஸ்ட் போட்டியில் 50-வது சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.


இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 1,532 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 7 சதங்களை விளாசியுள்ளார். அவரின் சராசாரி 85 ரன்கள் ஆகும்.


இதுவரை 175 டெஸ்ட் போட்டியில் விளையாடி 14,500 ரன்களுக்கு மேல் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சினே முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 சதங்களுடனும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 37 சதங்களுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.


ஒருநாள் போட்டியில் 46 சதம்


442 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 17,598 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின் விரைவில் 50-வது சதத்தை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் வாழ்த்து


டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்துள்ள சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=349031&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடர்கிறது சச்சின் சகாப்தம்


சச்சின் வரலாறு:

மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை "ஆப்சைடில்' தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார்.

தொடரும் சாதனை பயணம்...

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

50 சதம் வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010

ஆஸி.,க்கு எதிராக அதிகம்


தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி சதங்கள்

1. ஆஸ்திரேலியா 11

2. இலங்கை 9

3. இங்கிலாந்து 7

4. தென் ஆப்ரிக்கா 6

5. வங்கதேசம் 5

6. நியூசிலாந்து 4

7. வெஸ்ட் இண்டீஸ் 3

8. ஜிம்பாப்வே 3

9. பாகிஸ்தான் 2

தோனிக்கு பெருமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஆதாரங்களுடன் நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=
7955&Value3=I

வெள்ளி, டிசம்பர் 17, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.z9tech.com/view.php?22Amld0b4jF0Qd4a2KMC2e2cBnd3cdeZBZV203eQAA2e2q69racd3JOo40

திங்கள், டிசம்பர் 13, 2010

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது. வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.
1.சிறந்த பதிவுகளை வெளியிடவும்.
2.மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.
3.உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.
4.உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.
6.உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம். அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.
7.உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.
8.ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.
9.உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்
10.உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.
11.உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.
12.ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.
13.நேரம் தவறாமல் பதிவு போடவும்.
14.Popular Post விட்ஜெட் சேருங்கள்.
15.உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.
16.உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.
17.உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.
18.வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது.
19.உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.
20.உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.
21.உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.
22.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords
23.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add
24.follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.
25.Archive விட்ஜெட் பொருத்துங்கள்.
26.Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும்.
27.Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.
28.Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.
29.உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.
30.உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.
31.ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
32.பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.
33.கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.
34.உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.
35.உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.
36.Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.
37.உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள்.
38.பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
39.தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம்.
40.தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.
இந்த வழிகளை கடைபிடித்தால் கூடிய விரைவில் நீங்கள் சிறந்த பதிவராக வலம் வரலாம்.

ஆதாரம் நன்றிகளுடன் : http://vandhemadharam.blogspot.com/2010/09/40.html

வெள்ளி, டிசம்பர் 10, 2010

Windows Xp – Commands – Cpl list

Run command is very useful, but sometimes it is forgotten. Use it sometimes and you will find how powerful is run command.

1.Accessibility Controls – access.cpl
2.Accessibility Wizard – accwiz
3.Add Hardware Wizard – hdwwiz.cpl
4.Add/Remove Programs – appwiz.cpl
5.Administrative Tools – control admintools
6.Automatic Updates – wuaucpl.cpl
7.Bluetooth Transfer Wizard – fsquirt

8.Calculator – calc
9.Certificate Manager – certmgr.msc
10.Character Map – charmap
11.Check Disk Utility – chkdsk
12.Clipboard Viewer – clipbrd
13.Command Prompt – cmd
14.Component Services – dcomcnfg
15.Computer Management – compmgmt.msc
16.Control Panel – control
17.Date and Time Properties – timedate.cpl
18.DDE Shares – ddeshare
19.Device Manager – devmgmt.msc
20.Direct X Troubleshooter – dxdiag
21.Disk Cleanup Utility – cleanmgr
22.Disk Defragment – dfrg.msc
23.Disk Management – diskmgmt.msc
24.Disk Partition Manager – diskpart
25.Display Properties – control desktop
26.Display Properties – desk.cpl
27.Dr. Watson System Troubleshooting Utility – drwtsn32
28.Driver Verifier Utility – verifier
29.Event Viewer – eventvwr.msc
30.Files and Settings Transfer Tool – migwiz
31.File Signature Verification Tool – sigverif
32.Findfast – findfast.cpl
33.Firefox – firefox
34.Folders Properties – control folders
35.Fonts – control fonts
36.Fonts Folder – fonts
37.Free Cell Card Game – freecell
38.Game Controllers – joy.cpl
39.Group Policy Editor (for xp professional) – gpedit.msc
40.Hearts Card Game – mshearts
41.Help and Support – helpctr
42.HyperTerminal – hypertrm
43.Iexpress Wizard – iexpress
44.Indexing Service – ciadv.msc
45.Internet Connection Wizard – icwconn1
46.Internet Explorer – iexplore
47.Internet Properties – inetcpl.cpl
48.Keyboard Properties – control keyboard
49.Local Security Settings – secpol.msc
50.Local Users and Groups – lusrmgr.msc
51.Logs You Out Of Windows – logoff
52.Malicious Software Removal Tool – mrt
53.Microsoft Chat – winchat
54.Microsoft Movie Maker – moviemk
55.Microsoft Paint – mspaint
56.Microsoft Syncronization Tool – mobsync
57.Minesweeper Game – winmine
58.Mouse Properties – control mouse
59.Mouse Properties – main.cpl
60.Netmeeting – conf
61.Network Connections – control netconnections
62.Network Connections – ncpa.cpl
63.Network Setup Wizard – netsetup.cpl
64.Notepad notepad
65.Object Packager – packager
66.ODBC Data Source Administrator – odbccp32.cpl
67.On Screen Keyboard – osk
68.Outlook Express – msimn
69.Paint – pbrush
70.Password Properties – password.cpl
71.Performance Monitor – perfmon.msc
72.Performance Monitor – perfmon
73.Phone and Modem Options – telephon.cpl
74.Phone Dialer – dialer
75.Pinball Game – pinball
76.Power Configuration – powercfg.cpl
77.Printers and Faxes – control printers
78.Printers Folder – printers
79.Regional Settings – intl.cpl
80.Registry Editor – regedit
81.Registry Editor – regedit32
82.Remote Access Phonebook – rasphone
83.Remote Desktop – mstsc
84.Removable Storage – ntmsmgr.msc
85.Removable Storage Operator Requests – ntmsoprq.msc
86.Resultant Set of Policy (for xp professional) – rsop.msc
87.Scanners and Cameras – sticpl.cpl
88.Scheduled Tasks – control schedtasks
89.Security Center – wscui.cpl
90.Services – services.msc
91.Shared Folders – fsmgmt.msc
92.Shuts Down Windows – shutdown
93.Sounds and Audio – mmsys.cpl
94.Spider Solitare Card Game – spider
95.SQL Client Configuration – cliconfg
96.System Configuration Editor – sysedit
97.System Configuration Utility – msconfig
98.System Information – msinfo32
99.System Properties – sysdm.cpl
100.Task Manager – taskmgr
101.TCP Tester – tcptest
102.Telnet Client – telnet
103.User Account Management – nusrmgr.cpl
104.Utility Manager – utilman
105.Windows Address Book – wab
106.Windows Address Book Import Utility – wabmig
107.Windows Explorer – explorer
108.Windows Firewall – firewall.cpl
109.Windows Magnifier – magnify
110.Windows Management Infrastructure – wmimgmt.msc
111.Windows Media Player – wmplayer
112.Windows Messenger – msmsgs
113.Windows System Security Tool – syskey
114.Windows Update Launches – wupdmgr
115.Windows Version – winver
116.Windows XP Tour Wizard – tourstart
117.Wordpad – write

Source with Courtesy : http://sysadminblog.net/?p=81

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts