சனி, டிசம்பர் 24, 2011

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.


நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2bmM0e0dXO40ecBnB2b4P0e2d2M9Z2c3LB5243Ald223CAI2

சனி, டிசம்பர் 10, 2011

பாராட்டு மழையில் சேவக்!

ஒரு நாள் போட்டியின், ஒரே இன்னிங்சில் 219 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்த சேவக்கிற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இவரது "ரோல் மாடல் சச்சின் உட்பட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாயார பாராட்டியுள்ளனர்.

இந்தூரில் நேற்று முன் தினம் [08-12-11] நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 219 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் சேவக், ஒரு நாள் அரங்கில் புதிய வரலாறு படைத்தார். இவர், வீரர் சக வீரர் சச்சினின் சாதனையை முறியடித்தார்.

கடந்த 2010ல் குவாலியர் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சச்சின் 200 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது அவர் கூறுகையில்,"எனது இந்த சாதனையை, சகவீரர் ஒருவர் முறியடித்தால் மகிழ்ச்சி தான்", என்றார்.

இதையடுத்து எல்லோரது எதிர்பார்ப்பும்சேவக் மீது திரும்பியது. சச்சின் சாதனையை முறியடிக்க, இவரால் மட்டுமே முடியும் என்றனர். இதற்கான வாய்ப்பு கடந்த உலக கோப்பை தொடரில் கிடைத்தது. வங்கதேசத்துக்கு எதிரான இப்போட்டியில் 175 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசியில் சச்சினின் சாதனையை, ஒன்றரை ஆண்டில் சேவக் தகர்த்து விட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 219 ரன்கள் அடித்துவிட்டார்.

இதுகுறித்து சேவக் கூறியது:
எனது "ரோல் மாடல் சச்சினின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இருமுறை தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தவிர, இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டடேன்.
இந்த இரட்டை சதத்தை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன். மொத்தத்தில் இந்த இன்னிங்ஸ் சிறப்பானது ஆகும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடலாம். ஆனால் ஒருநாள் போட்டியில் ரன்ரேட் முக்கியம். தவிர, ஆடுகளமும் சாதகமாக இருந்ததால் சாதிக்க முடிந்தது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா சென்ற இரு தொடர்களில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இம்முறையும் அதேபோல விளையாட முயற்சிப்போம்".
இவ்வாறு சேவக் கூறினார்.

இரட்டை சதம் அடித்த சேவக்கிற்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டியுள்ளனர். சிலரது வாழ்த்துக்கள்:

சச்சின்: "வெல்டன் சேவக். எனது சாதனையை சக இந்திய வீரர் ஒருவர் முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

முரளி விஜய்:
சேவக் இரட்டை சதம் அடித்ததை பார்த்தேன். இது நம்பமுடியாமல் இருந்தது.

தினேஷ் கார்த்திக்:
நான் சேவக்கின் தீவிர ரசிகன். டெஸ்ட் போட்டியில் "டிரிபிள் சதம் அடித்த போதே, ஒருநாள் அரங்கில் 200 ரன்களை எட்டுவது இவருக்கு சாதாரணம் என நினைத்தேன். கடைசியில் சாதித்து விட்டார்.

கிரண் மோரே:
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வியத்தகு முன்னேற்றம் அடைந்ததற்கு, சேவக் தான் முக்கிய காரணம். மூன்று வித போட்டிகளிலும் அதிரடி தான் இவரது சிறப்பு. கடினமான ஆடுகளம், மாறுபட்ட சூழலிலும் இவர் அசத்துவார். சேவக்கை சச்சினுடன் ஒப்பிடக் கூடாது.

இதேபோல டென்னிஸ் பிரபலங்கள் மகேஷ் பூபதி, சானியா மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சதம் அடித்தால் வெற்றி
ஒருநாள் போட்டிகளில் சேவக் இதுவரை 15 சதம் அடித்து, அதிக சதம் இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றார். முதல் இரு இடங்களில் சச்சின் (48), கங்குலி (22) உள்ளனர்.
* சேவக் சதம் அடித்த 15 போட்டிகளில் இந்திய அணி 14ல் வென்றுள்ளது.
* கேப்டனாக இருந்து அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை, ஜெயசூர்யாவிடம் (189, எதிர் இந்தியா, 2000) இருந்து, சேவக் தட்டிச் சென்றார்.
* டெஸ்டில் இருமுறை "டிரிபிள் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் இவர் தான்.

19ல் காதல்
சேவக் சாதித்த போட்டிகளில் கடைசி இரு எண்கள் 19 என உள்ளது. டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோர் 319 (எதிர், தென் ஆப்ரிக்கா), ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் (எதிர், வெஸ்ட் இண்டீஸ்) எடுத்துள்ள இவர், ஐ.பி.எல்., "டுவென்டி-20 போட்டியில் ( 2011, எதிர்-டெக்கான் சார்ஜர்ஸ்) அதிகபட்ச ரன்கள் 119 என்பது "ஸ்பெஷல் தான்.

இதுவும் "153 தான்
கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான குவாலியரில் சச்சின் இரட்டை சதம் அடித்த போட்டியில், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூர் போட்டியில் சேவக், 219 ரன்கள் எடுத்த போதும், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது அபூர்வமாக உள்ளது.

கேப்டனாக அசத்தல்
இந்திய வீரர் சேவக், தனது ஒவ்வொரு ரன்னும் ஒரு சாதனை படைத்தார். இவர் 45வது ரன்னை கடந்த போது, கேப்டனாக தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக இவர், 2009ல் இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நடந்த போட்டியில் 44 ரன்கள் எடுத்தார்.

* 82வது ரன்னை எட்டிய போது, இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, 1994ல் சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த போட்டியில் அப்போதைய இந்திய அணி கேப்டன் அசார் 81 ரன்கள் எடுத்தார்.

* 100வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் போட்டியில் 15வது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2வது மற்றும் கேப்டனாக முதல் சதத்தை அடித்தார். தவிர இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிவேக சதம் (69 பந்து) அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், தனது முந்தைய சாதனையை முறியடித்தார். முன்னதாக 2002ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 75 பந்தில் சதம் அடித்தார்.

* 106வது ரன்னை கடந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2006ல், கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் அப்போதைய கேப்டன் டிராவிட் 105 ரன்கள் எடுத்தார்.

* 115வது ரன்னை எட்டிய போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக 2002ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

* 118வது ரன்னை அடைந்த போது, இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக இத்தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 117 ரன்கள் எடுத்தார்.

* 119வது ரன்னை கடந்த போது, இந்தூர் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, 2008ல் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக 118 ரன்கள் எடுத்தார்.

* 128வது ரன்னை எட்டிய போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1985ல் சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஆலன் பார்டர் 127 ரன்கள் எடுத்தார்.

* 142வது ரன்னை அடைந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2006ல் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் சச்சின் 141 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

* 147வது ரன்னை எட்டிய போது, இந்திய மண்ணில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக 2009ல் இலங்கைக்கு எதிராக ராஜ்காட்டில் நடந்த போட்டியில் 146 ரன்கள் எடுத்தார்.

* 150வது ரன்னை கடந்த போது, அதிவேகமாக (112 பந்தில்) 150 ரன்னை அடைந்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக இந்த ஆண்டு குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 118 பந்தில் இம்மைல்கல்லை எட்டினார்.

ஏழு சிக்சர்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அபாரமாக ஆடிய சேவக், ஒருநாள் அரங்கில் முதல் முறையாக ஒரே போட்டியில் ஏழு சிக்சர் விளாசினார். முன்னதாக இவர், நியூசிலாந்து (இடம்-ஹாமில்டன், 2009), இலங்கை (இடம்-ராஜ்காட், 2009) அணிகளுக்கு எதிராக தலா 6 சிக்சர் அடித்தார்.

சாதனை மேல் சாதனை
இந்தூரில் 219 ரன்கள் எடுத்த சேவக் பல்வேறு மைல்கற்களை கடந்தார். இதில் சில முக்கிய சாதனைகள்.

* 153வது ரன்னை அடைந்த போது, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1989ல் ஜார்ஜ்டவுனில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 152 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

* 174வது ரன்னை கடந்த போது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 2001ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் 173 ரன்கள் எடுத்தார்.

* 176வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் மிர்புரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் எடுத்தார்.

* 187வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் அப்போதைய கேப்டன் சச்சின் 186 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

* 190வது ரன்னை கடந்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த 2000ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அப்போதைய இலங்கை கேப்டன் ஜெயசூர்யா 189 ரன்கள் எடுத்தார்.

* 200வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் மற்றும் முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன்கள் எடுத்தார்.

* 200வது ரன்னை எட்டிய போது, முதல் தர போட்டியில் 300 அல்லது அதற்கு மேல் (319), "ஏ பிரிவு போட்டியில் இரட்டை சதம் (219), "டுவென்டி-20 போட்டியில் சதம் (119) அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

* 201வது ரன்னை அடைந்த போது, ஒருநாள் அரங்கில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் 219 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.


நன்றி & ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=11643&Value3=I

வியாழன், டிசம்பர் 08, 2011

NotePad ல் விளையாடலாம் வாங்க.

நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்துவது Windows operating System தான். அதில் உள்ள ஒரு Application தான் நோட்பேட்(Notepad). அதில் விளையாட்டாக சில விஷயங்கள் செய்யலாம். அவற்றை இப்போது பார்க்கலாம்.

Start=> program => accessories => Notepad மூலம் திறக்கவும்.

Trick 1 :

Notepad ல் “this app can break” என (quotes இல்லாமல்)
டைப் செய்யவும். எதாவது பெயர் குடுத்து Save பன்னவும்.
இப்போது திறந்து பாருங்கள்.


Trick 2 : ( World Trade Center Attack)

Notepad ல் “Q33N” என (quotes இல்லாமல்) டைப்
செய்யவும்.

Q33N ஐ தெரிவு செய்த்து கொண்டு பாண்ட்(Font) ஐ Windings என மாற்றவும்.
என்ன வருகிறது என பாருங்கள்.






Trick 3 : நேரம் அறிய.


Notepad ல் “.LOG” என (capital letter ) டைப்
செய்யவும்.


save செய்யவும்.


பின்பு திறந்து பாருங்கள் தற்பொழதைய நேரம் தெரியும்.


Trick 4 : Caps Lock, Num lock, Scroll Lock Key Trick.

Notepad ல்
set wshshell=wscript.createobject("wscript.shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys"{capslock}"
wshshell.sendkeys"{numlock}"
wshshell.sendkeys"{scrolllock}"
loop


டைப் செய்யவும்


எதேனும் பெயர் குடுத்து .VBS என Save செய்யவும்.
இப்போது Open செய்து பார்க்கவும்.

(நிறுத்த Alt + Ctl + Del அழுத்தி Contol panel இல் உள்ள உங்கள் file ஐ தெரிவு செய்து End Task குடுக்கவும்)

நன்றி & ஆதாரம் : http://rajamelaiyur.blogspot.com/2011/12/notepad.html

சனி, நவம்பர் 12, 2011

வாழ்க்கை என்பது எது தெரியுமா? ...........

" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ;
வாழ்க்கை அழகானது , அதனை ரசி ;
வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ;
வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ;
வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ;
வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ;
வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ;
வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ;
வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ;
வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ;
வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ;
வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு;
வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ;
வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு " - அன்னை திரேசா

நன்றி & ஆதாரம் : http://kklogan.blogspot.com/2011_10_01_archive.html

புதன், நவம்பர் 09, 2011

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு

பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை.

காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.

மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.

மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும்.

1. குறுகிய கால நினைவாற்றல், பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை.

2. அண்மைக் கால நினைவாற்றல், இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.

3. நீண்ட கால நினைவாற்றல், சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது.

ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.

நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.

புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.

தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.

வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.

சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.

அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.

அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?24UAld0baNr0Qd422AMe222cBnZ3edeZBBBc03eCAA2edKQ9rac03dOI42

சனி, அக்டோபர் 29, 2011

பெண்களின் ஆழமான ரகசியங்கள் ?

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.
* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.
* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.
* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.
** சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.


நன்றி & ஆதாரம் : http://topsitv.blogspot.com/2011/09/blog-post_7646.html

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

ஐ.சி.சி., புதிய விதிமுறைகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வரும் அக்., 1 முதல் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. இது இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் படி, ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 பந்துகள் பயன்படுத்தப்படும்.
* பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும் போது, பீல்டிங் செய்யும் அணி வீரர்களை தொல்லை செய்யக்கூடாது. "ரன் அவுட்' செய்வதை தடுக்கும் விதத்தில், பேட்ஸ்மேன் செயல்படுவதாக அம்பயர் நினைத்தால், மூன்றாவது அம்பயரிடம் முறையிடலாம். இறுதி முடிவை களத்தில் இருக்கும் அம்பயர் எடுக்கலாம்.
* "பவர்பிளே' விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி முதல் 10 ஓவர்கள் "பவர்பிளே' முடிந்தவுடன், "பவுலிங் பவர்பிளேயை' 16 ஓவருக்கு முன்னதாக எடுக்கக் கூடாது. "பேட்டிங் பவர்பிளேயை' 40 ஓவருக்கு முன்னதாக எடுக்க வேண்டும்.
* மூன்று வித போட்டிகளிலும், இனி பேட்ஸ்மேன் காயமடைந்தால், "ரன்னர்' கிடையாது. ஒருவேளை 9 விக்கெட் வீழ்ந்த பின், காயமடைந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய அல்லது பவுலிங் செய்ய விரும்பினால், அவர் காயமடைந்த சூழல், எவ்வளவு நேரம் களத்தில் இல்லாமல் இருந்தார் என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும்.
* பவுலிங் செய்யும் போது, அம்பயர் அருகில் நிற்கும் பேட்ஸ்மேன் "கிரீசை' விட்டு வெளியே இருந்தால், அவரை "அவுட்' செய்யலாம். அந்த பந்து கணக்கில் எடுக்கப்படாது.
* டெஸ்ட் போட்டியில் உணவு, தேநீர் இடைவேளைக்கு முன், 15 நிமிடம் கூடுதலாக பவுலிங் செய்துகொள்ள, இரு கேப்டன்களின் முடிவின் படி அனுமதிக்கலாம். ஒருவேளை முடிவு கிடைக்க தாமதமாகும் எனத் தெரிந்தால், அம்பயர்கள் இதை ஏற்கக்கூடாது.
* டெஸ்டில் 9 விக்கெட் விழுந்த நிலையில், போட்டியின் முடிவுக்காக உணவு, தேநீர் இடைவேளையை 30 நிமிடம் வரை தாமதப்படுத்தலாம்.
* ஒருநாள் போட்டிகளில் உணவு இடைவேளை, 20 ல் இருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி & ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=10873&Value3=A

திங்கள், செப்டம்பர் 12, 2011

விண்டோசை விட லினக்ஸ் மிகச் சிறந்தது ஏன்?

1. வைரஸ் அபாயம் கிடையாது: பெரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.

2. திற-மூலமென்பொருள்: விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணணியில் இன்ஸ்டால் செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியாது. ஆனால் லினக்ஸில் அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம் அவற்றை சுலபமாக கையாளலாம்.

4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள். விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.

5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.

6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு, பிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள் உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.

7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அமைப்பு தான் அழகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை அமைத்து பாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.

8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.

9. நமக்கு வேண்டியவாறு அணைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.

10. உபுண்டுவினை நம்முடைய கணணியில் அமைக்காமலே அதனை சீடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம். உபுண்டு சீடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.

நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?22KOld0bcP90Qd4e3SMC202cBnB2ddeZBnJ302eCAA2e4609racb3lOA42

சனி, செப்டம்பர் 03, 2011

கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து காணப்படும்

சிலர் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில் இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு(டி.என்.ஏ) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் உடல் நலத்தை பேணி காக்கும் குரோமோசோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றில் உள்ள "ஜீணோம்" என்ற மூலக்கூறில் அதிக துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு உடல் மெலிகிறது.

பொதுவாக மரபணு அதிகம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?203609F220eZnBd24ea4mOlT4cbdQCAAcddcySMQUdbc43lOmae43dBnZ3e033F90602

சனி, ஆகஸ்ட் 13, 2011

குரலைக் கவனியுங்கள்







நன்றி & ஆதாரம் : http://www.dailythanthi.com/irmalar/Home/second_page.asp?secid=14&artid=6473&issuedate=8/13/2011

செவ்வாய், ஜூலை 26, 2011

ATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா ?

இது போன்றதொரு சூழ் நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த பதிவுதான் இது .

நேராக ATM ல் கார்டை செருகி PIN நம்பரை REVERSE ஆக டைப் செய்யுங்கள்.உதாரணமாக உங்கள் PIN நம்பர் 1234 என்றால் 4321 என்று டைப் செய்யுங்கள் .

அவன் கேட்ட பணம் இப்போது வந்துவிடும் .ஆனால் அவன் அறியாமலேயே அவனுக்கு இப்போது ஒரு ஆபத்து.

உடனடியாக நீங்கள் திருடனிடம் மாட்டிக்கொண்ட விஷயம் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரிய வரும். உங்கள் பணம் மீட்கப் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.


இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டுள்ளது. பலருக்கு இது தெரியாததால் பயன்படுத்துவதில்லை. மனதில் இதை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்

ஆதாரம் & நன்றி : http://koodalbala.blogspot.com/2011/06/atm.html

சனி, ஜூலை 16, 2011

Chronology of major blasts in the country

Varanasi, Dec 7, 2010: Two-year-old girl killed and 25 others injured in a blast which takes place between the Dashashwamedh and Shitla ghats on the river Ganga.

Pune, Feb 13, 2010: 17 people killed and over 60 injured when a bomb rips out the famous German bakery in the city.

Mumbai, Nov 26, 2008: 166 people killed in coordinated serial explosions and indiscriminate firing across Mumbai including the crowded CST railway station and two five-star hotels -- Oberoi and Taj.

Assam, Oct 30, 2008: At least 77 killed and over 100 injured in 18 bombings across Assam.

Imphal, Oct 21, 2008: 17 killed in a powerful blast near Manipur Police Commando complex.

Malegaon, Maharashtra, Sep 29, 2008: Five people killed after a bomb kept in a motorbike goes off in a crowded market.

Modasa, Gujarat, Sep 29, 2008: One killed and several injured after a low-intensity bomb kept on a motorcycle goes off near a mosque.

New Delhi, Sep 27, 2008: Three people killed after a crude bomb is thrown in a busy market in Mehrauli.

New Delhi, Sep 13, 2008: 26 people killed in six blasts across the city.

Ahmedabad, July 26, 2008: 57 people killed after 20 synchronised blasts in less than two hours.

Bangalore, July 25, 2008: One person killed in a low-intensity bomb explosion.

Jaipur, May 13, 2008: 68 people killed in serial bombings.

January 2008: Terrorist attack on CRPF camp in Rampur kills eight.

October 2007: Two killed in blast inside Ajmer Sharif shrine in Rajasthan during Ramzan.

August 2007: 30 dead, 60 hurt in Hyderabad terror strike.

May 2007: A blast at Mecca mosque in Hyderabad kills 11 people.

February 19, 2007: Two bombs explode on board a train bound from India to Pakistan, burning to death at least 66 passengers, most of them Pakistanis.

September 2006: 30 dead and 100 hurt in twin blasts at a mosque in Malegaon.

July 2006: Seven bombs on Mumbai’s trains kill over 200 and injure 700 others.

March 2006: Twin bombings at a train station and a temple in Varanasi kill 20 people.

October 2005: Three bombs placed in busy New Delhi markets a day before Diwali kill 62 people and injure hundreds.

Source & Courtesy : http://www.thehindu.com/news/national/article2224460.ece#.TiAoD_qF8jh.email

புதன், ஜூலை 06, 2011

நவரத்தினங்கள்

1 மாணிக்கம் [Ruby]

மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !

2 முத்து [Pearl]

கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !

3 பவழம் [Red Coral]

பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !

4 மரகதம் [Emerald]

பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .

5 புஷ்பராகம் [Topaz]

'ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .

6 வைரம் [Diamond ]

வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும்.

7 நீலக்கல் [Blue Sapphire]

நீலக்கல் என்பது குருந்ததால் ஆனதும் சிவப்பு நிறமல்லாத ஒரு நிறத்தைக் கொண்டதுமான ஒரு இரத்தினக் கல்லைக் குறிக்கும். சிவப்பு நிறமான இரத்தினக்கல் சிவப்புக்கல் அல்லது மாணிக்கம் என அழைக்கக்கப்டும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்க்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பத்பராட்ச்சம் என அழைக்கப்படுகிறது.

8 கோமேதகம் [Hessonite]

நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை.

9 வைடூரியம் [Cats Eye]

க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !

ஆதாரம் & நன்றி : http://santhanamk.blogspot.com/2010/02/blog-post_11.html &
http://www.prohithar.com/gemstones.html

செவ்வாய், ஜூலை 05, 2011

கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை

தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

இம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா? பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா? என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார்.


இம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.


ஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்துக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா? என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது.

கடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது.
உலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை.

மேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழுக்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது.
தற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamilvaasi.blogspot.com/2011/07/blog-post_05.html

புதன், ஜூன் 22, 2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

◦முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.

◦ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

◦குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

◦உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

◦காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

◦தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

◦நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

◦செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

◦செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

◦செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

◦செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

◦போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

ஆதாரம் : http://www.vandhemadharam.com/2011/06/blog-post_18.html

திங்கள், ஜூன் 06, 2011

7th Picnic to Munnar on 05-06-11 [Sunday]

Picnic, social gathering at which each participant generally brings food to be shared, a group of fashionable people for purposes of entertainment. Each member was expected to provide a share of the entertainment and of the refreshments, and this idea of mutual sharing or cooperation was fundamental to the original significance of the picnic. Later the word took on the additional meaning of an outdoor pleasure party.


* 02:30 pm [04-06-11 Sat] – We start our Picnic, we accomplish with Chithambaram, Mani, Pojaraj, Pragash, Sakthivel, Saravanan, Shampu and Anandan.

* 05:00 am [05-06-11 Sun]- Udumalaipettai.

* 06:00 am [05-06-11 Sun]- Chinnar Check Post.

* 07:00 am - Thoovanam Falls.

* 07:15 am - Karumutty Fall with nice Bath.

* 08:15 am - Lakkam Falls.

* 09:30 am - 10:00 am - Munnar - Break-fast.


* 11:00 am - 12.00 pm - Top station.

which is about 27 km from Munnar is at a height of 1700 m above sea level. It is the highest point on the Munnar-Kodaikanal road. Travellers to Munnar make it a point to visit Top Station to enjoy the panoramic view it offers of the neighboring state of Tamil Nadu. It is one of the spots in Munnar to enjoy the Neelakurunji flowers blooming over a vast area.


* 12:00 pm - 01.00 pm - Kundala Dam.

Kundala Dam is an artificial reservior lying about 20 Km from Munnar.
The dam benefits the Kundala town - a charming town in Idukki District of
Kerala. Kundala Dam is relatively a small dam having curved shape.
Narrow road on the top of the dam offers a panoramic view of the catchment area of the Kundala Dam.

* 01:00 pm - 01.15 pm - Binacular Point.


* 01:45 pm - 02.30 pm - Mettupatty Dam.

Mattupatti Dam is constructed near Munnar in Idukki
District in Kerala. The dam is a storage stone network dam built in the mountain of Kerala, India to preserve water for Hydroelectricity [Indo-Swiss]. Mattupatti Dam has proved vital source of power in the state, yielding along with other such dams, huge profit to the states.

* 03:00 pm - 03.30 pm - Mummar Lunch.

* 09:00 pm - 09.20 pm - Tiruppur Dinner and Windup.

* 10:30 pm - respective Home.


So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam
6. 27-06-2010 [Sunday] - Yercaud & 1008 shivalinghas

திங்கள், மே 30, 2011

சென்னை கிங்ஸ் மீண்டும் ஐ.பி.எல் சாம்பியன் !

ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு) 12 608
2. கோஹ்லி (பெங்களூரு) 16 557
3. சச்சின் (மும்பை) 16 553
4. மார்ஷ் (பஞ்சாப்) 14 504
5. ஹசி (சென்னை) 14 492

மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி விக்.,
1. மலிங்கா (மும்பை) 16 28
2. முனாப் படேல் (மும்பை) 15 22
3. அரவிந்த் (பெங்களூரு) 13 21
4. அஷ்வின் (சென்னை) 16 20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்) 14 19

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் எதிரணி
1. 2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009 டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
4. 2011 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.

தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம் வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட் "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல் உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே ஐ.பி.எல்., "டுவென்டி-20'

ஆதாரம் & நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9577&Value3=I

திங்கள், மே 23, 2011

IPL - 4 Team Standings position as on 23-05-2011




Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

சனி, மே 21, 2011

IPL - 4 Team Standings position as on 21-05-11 @ 03 : 00 pm (IST)




Source with Courtesy : http://sports.ndtv.com/cricket

சனி, மே 14, 2011

''மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...''

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பதுதியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது. பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

ஆதாரம் & நன்றி : http://tamilstar.net/news-id-human-13-05-11692.htm

வெள்ளி, மே 06, 2011

விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

•லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
•வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
•விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
•லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
•லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை.
•புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
•விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவமுடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
•லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
•லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸினுடைய Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil-computer.blogspot.com/2011/05/blog-post.html

திங்கள், மே 02, 2011

அன்றும் இன்றும்

அப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம்.
இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.

கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.

மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.

சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப் பட்ட பிறகும் வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.

அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.

எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை. கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.

காய்ச்சலை வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

ஆதாரம் & நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5086&ncat=4

வியாழன், ஏப்ரல் 28, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிளட்சர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன், பொறுப்பேற்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் கிறிஸ்டன். சமீபத்திய உலக கோப்பை தொடருடன் இவரது மூன்றாண்டு பயிற்சிக்காலம் முடிந்தது. தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பம் இல்லாத கிறிஸ்ட்ன், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா திரும்பினார். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய பயிற்சியாளர் தேர்வில் தீவிரமாக இறங்கியது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், ஆன்டி பிளவர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இருந்தனர். நேற்று, பி.சி.சி.ஐ., செயற்குழு மும்பையில் கூடியது. இதன் முடிவில், பிளட்சர் (62) இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானார்.
இவர் கடந்த 1983 உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்காக பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1999 முதல் 2007 வரை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து அணி, 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, ஆஷஸ் தொடரை வென்றது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" இந்திய அணியின் பயிற்சியாளராக, பிளட்சர் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும், அணியில் சேர்ந்து கொள்வார். பவுலிங் பயிற்சியாளர் பணியில் எரிக் சிம்மன்ஸ் தொடர்வார்,'' என்றார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9296&Value3=A

சனி, ஏப்ரல் 23, 2011

மெல்ல முச்சுவிடுவோம்

உலகில் ஜெனிக்கும் உயிர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மூச்சுகளை இறைவனிடமிருந்து வாங்கி வந்திருப்பதாகவும், அந்த மூச்சுகளை நாம் பூமியில்
செலவழிப்பதாகவும் இதனால் வேகமாய் மூச்சு விடுவோர் வேகமாய் இறைவனிடம் திரும்பிவிடுவதாகவும் மெதுவாய் ஆற அமர மூச்சுவிடுவோர் இன்னும் கொஞ்சநாள் கூட பூமியில் வாழ்வதாகவும் முன்னோர்கள் நம்பியிருக்கிறார்கள். இதற்கு நாம் அத்தாட்சி வேண்டுமானால் விலங்குகளிடம் போகலாம். நிமிடத்திற்கு நான்கு மூச்சுகள் மட்டுமே விடும் கடல் ஆமைகள் முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.ஆனால் குரங்குகள் நிமிடத்திற்கு 32 முறை மூச்சுவிட அதன் ஆயுட்காலமோ அதிகமாய் போனால் 25 வருடங்கள் மட்டுமே.ஹம்மிங் பறவைகள் நிமிடத்திற்கு 360 தடவைகள் மட்டுமே மூச்சுவிட அதன் அதிக பட்ச வாழ்நாட்கள் 3 ஆண்டுகளாக குறைந்துவிடுகின்றது.Shrews எனப்படும் நச்செலிகள் இன்னும் பாவம், நிமிடத்திற்கு 660 தடவைகள் வேகமாக சுவாசித்து அதனை செலவழித்து விடுவதால் அதன் ஆயுசுநாட்களோ 18 மாதங்கள் மட்டுமே.இப்படி இது ஒரு நிரூபிக்கப்ப்ட்ட உண்மையாக இருக்கின்றது.இதைத் தான் ஆர்ட் ஆப் லிவிங் கிளாசுகளில் பிரீதிங் எக்சசைஸ்சாக பயிற்றுவிக்கின்றார்கள். மெதுவாக மூச்சுவிடு அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழலாமென்கின்றார்கள்.

ஆதாரம் & நன்றி : http://pkp.blogspot.com/

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

IPL-2011 பைனலுக்கு செல்வது எப்படி?

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைனல் எப்படி?
இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:
* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.
* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.
* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9127&Value3=I

புதன், ஏப்ரல் 06, 2011

Coach Kirsten bids goodbye to India











Source : http://epaper.dinamani.com/epapermain.aspx#

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

World Cup - 2015




















Source : http://www.google.co.in/imgres?imgurl=http://1cric.com




Source :
http://www.google.co.in/imgres?imgurl=http://4.bp.blogspot.com

உலகக் கோப்பையை வென்றது இந்தியா! - கோடிக்கணக்கான ரசிகர்கள் குதூகலம்!








தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக
கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9082&Value3=A

தோனியின் "டை' ராசி உலக கோப்பை தொடரிலும் நீடித்தது. இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இறுதியில் நமது அணி உலக கோப்பை வென்று அசத்தியது.
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., மற்றும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நான்கு முக்கிய தொடர்களின் போது, ஒரு போட்டி "டை' ஆனது.
* கடந்த 2007ல், தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், டர்பனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "பவுல்-அவுட்' முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 136 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் விக்டோரியா அணி வெற்றி பெற்றது.
* இந்த உலக கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இந்த நான்கு தொடர்களில், தோனி தலைமையிலான அணி விளையாடிய ஒரு போட்டி "டை' ஆனது. இந்த ராசி கைகொடுக்க, இறுதியில் கோப்பை வென்று அசத்தியது.
---
ஸ்ரீசாந்த் ராசி
வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை முதல் லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்க, அடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான பைனலில் இடம் பிடித்தார். இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. கடந்த 2007ல், "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். இத்தொடரின் பைனலில், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா கொடுத்த "கேட்சை' எளிதாக பிடித்து, இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தார். இதனால் தான் கேப்டன் தோனி, இலங்கை அணிக்கு எதிரான பைனலில் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9085&Value3=A



"சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம், என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்தது.
இதுகுறித்து இந்தியாவின் சச்சின் கூறியதாவது: சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்ற தருணத்தை, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இதைவிட வேறு எதையும் அடைய விரும்பவில்லை. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வெல்ல காரணமாக இருந்த சக வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், அப்டன் மற்றும் உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9086&Value3=I

வியாழன், மார்ச் 31, 2011

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்
நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9055&Value3=I

செவ்வாய், மார்ச் 22, 2011

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது.
மற்றவர்கள் எப்படி:
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககராவுக்கு (1977), இம்முறை உலக கோப்பை கிடைக்காது. இங்கிலாந்தின் ஸ்டிராசிற்கு (1977), ஆஷஸ் வெற்றியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இதனால் தான் அடுத்து வந்த ஒருநாள் தொடரில் மோசமாக தோற்றது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980) சிறப்பாக செயல்பட்டாலும், இவர் இம்ரான் கான் ஆகமுடியாது. வெட்டோரி (1979), சமிக்கும் (1983) கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லையாம்.
கிளார்க் வந்தால்...:
கடந்த 2006 உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற, இத்தாலி கேப்டன் கன்னவரோ பிறந்த ஆண்டு 1973. ஆஸ்திரேலிய அணி பார்ப்பதற்கு வலிமையாக இருந்தாலும், பாண்டிங்கிற்கு மீண்டும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை. ஒருவேளை காயம் காரணமாக பாண்டிங் விலகி, 1981ல் பிறந்த மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியேற்றால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தாலும், மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
கிரகங்களில் வலிமையானதாக உள்ள புளூட்டோ தான், 1983ல் கபில் தேவுக்கு சாதகமாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பை வெல்லச் செய்தது. தற்போது இதே பலன்கள் தோனிக்கு ஊக்கமாக அமைவதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நன்றி :
http://sports.dinamalar.com

திங்கள், மார்ச் 21, 2011






















Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage



Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

திங்கள், பிப்ரவரி 28, 2011

சச்சின் "உலக' சாதனை!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மார்க் வாக் உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=8783&Value3=A

புதன், பிப்ரவரி 16, 2011

ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.


கம்ப்யூட்டரின் உயிர்

நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை ( அதாவது உடலை ) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் ( அதாவது உயிர் ) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?

உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, "டிவி' போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை ( Instruction ) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது ( Execute ) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.



குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?

கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை ( Management ) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.

1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் ( CPU ) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்

எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:

1) ஒரு பயனாளர் - ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)



ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

நன்றி : http://mytamilpeople.blogspot.com/2011/02/operating-system-functions-and.html

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

Vases and Faces















Source : http://members.optusnet.com.au/charles57/Creative/Drawing/vases.htm

திங்கள், பிப்ரவரி 07, 2011

மறதியை விரட்ட ஒரு உத்தி

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள்.

நன்றி : http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/02/blog-post_05.html

வியாழன், பிப்ரவரி 03, 2011

மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றும் திட்டம்

சேவையை மாற்றுவது எப்படி?

கீழ்க்கண்டவற்றை பின்பற்றி நமது சேவையை மாற்றிக் கொள்ளலாம்.

- உங்களது செல்போன் எண்ணை 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவியுங்கள்.

- உங்களுக்கு தற்போதைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.

- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் மாற்றப்பட்டு விடும்.

- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே

நன்றி : http://thatstamil.oneindia.in/news/2011/01/20/mobile-number-portability-switch-tele-operator-aid0091.html

வியாழன், ஜனவரி 27, 2011

ப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு

இலவச வலைப்பூ சேவையில் முன்னணி வகிப்பது ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ். இந்த இரண்டில் எது சிறந்தது என்று அறிந்துக்கொள்ள ஒரு சிறிய தேடல். வேர்ட்பிரஸில் இலவச, மற்றும் கட்டண சேவை இரண்டும் இருந்தாலும் இலவச சேவையை மட்டுமே இங்கே ப்ளாக்கரோடு ஒப்பிட்டிருக்கிறேன்.

ஏன் பெரும்பாலானவர்கள் ப்ளாக்கர் சேவையில் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள்...?
· இலவசம் + எளிமையானது.
· கூகிள் என்ற மதிப்புமிக்க நிறுவனத்தின் சேவை.
· ஆட் சென்ஸ், பிகாஸா, பிரண்ட் கனெக்ட், யூடியூப் போன்ற இணைந்த
சேவைகள்

· எண்ணிலடங்கா இலவச விட்ஜெட்டுகள்.
· எத்தனை வலைப்பூ வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள்ளலாம். இலவசமாக.
· குறிச்சொற்களுக்கு ஏற்ப கூகிள் தேடுபொறியில் உங்கள் வலைப்பூ
முன்னிலைப்படுத்துப்படும்.


வேர்ட்பிரஸ்

· இலவசம். எளிமையானது எனினும் ப்ளாக்கர் அளவிற்கு எளிமையானது அல்ல.
· தனி வலைத்தளமாக மாற்றும் செய்முறை சுலபமானது.
· பிற சேவையில் இருந்து வலைப்பூவை ஏற்றுமதி செய்வது எளிது.
· ஏகப்பட்ட டெம்ப்ளேட்ஸ்.
· சேவையைப் பற்றி விசாலமான உதவி வழங்க: en.forums.wordpress.com/


வேர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்துவது கடினமா...?
· கொஞ்சம் கடினம்தான். ஆனால் பழகினால் இரண்டே நாட்களில் எளிமையாகிவிடும்.


புதிதாக வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறீர்களா...?
முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக வலைப்பூ ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்.
· பொழுதுபோக்கிற்காகவும், பர்சனல் விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காகவும் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ளாக்கர் சேவையே போதுமானது. எளிமையானதும் கூட.
· டெக்னிக்கலான விஷயங்களை எழுதுவும், தனி வலைத்தளமாக மாற்ற திட்டம் வைத்திருந்தாலும் வேர்ட்பிரஸ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.


ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறும் வசதி இருக்கிறதா...?
· ப்ளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸ் சேவைக்கு மாறுவது சாத்தியம். ஆனால் வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை.


பிற இலவச வலைப்பூ சேவைகள்...?
· TypePad
· Yahoo 360
· Live Journal
· BlogSome
இன்னும் ஏராளமான இலவச சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.

நன்றி : http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/vs.html

வியாழன், ஜனவரி 20, 2011

பெண்களின் ஏழு பருவங்கள்

•பேதை 1 முதல் 8 வயது வரை
•பெதும்பை 9 முதல் 10 வயது வரை
•மங்கை 11 முதல் 14 வயது வரை
•மடந்தை 15 முதல் 18 வயது வரை
•அரிவை 19 முதல் 24 வயது வரை
•தெரிவை 25 முதல் 29 வயது வரை
•பேரிளம் பெண் 30 வயது முதல்

வியாழன், ஜனவரி 13, 2011

கணினி வேகமாக செயல்பட

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…




1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.


2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.


3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.


4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.


5. கிளிக் "OK", "Apply" & "OK",


6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.


7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".


8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.


9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.


10. "Secondary IDE channel",
Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.


11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு சோதனை பண்ணுங்க

http://thamilkaniniyagam.blogspot.com/

செல்போன், லேப்டாப் ‘2 இன் 1’

லாஸ்வேகாஸ் கம்ப்யூட்டர் வைப்பதற்கு ஒரு கிரவுண்டு பரப்பில் இடம் தேவைப்பட்டது ஒரு காலம். சைஸ் சுருங்கி சுருங்கி டேபிளுக்கு வந்தது. லேப்டாப், பாம்டாப் என்று தொடர்ந்து சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த பரிணாம வளர்ச்சிதான் மோட்டரோலா நிறுவனத்தின் ‘2 இன் 1’ கண்டுபிடிப்பான ‘ஆட்ரிக்ஸ் 4ஜி’ ஸ்மார்ட்போன். வழக்கமான ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா அம்சங்களும் இதில் உண்டு. இன்னொரு கூடுதல் வசதி. இதை இன்ஸ்டன்ட் லேப்டாப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்காக டம்மி பீஸ் கீபோர்டு மற்றும் மானிட்டர் உருவாக்கியுள்ளனர்.




அதன் பின்பகுதியில் செல்போனை சொருகினால் செல்போனின் குட்டித் திரைக்கு பதிலாக, டம்மி பீஸின் அகன்ற மானிட்டரில் பார்த்துக் கொள்ளலாம். தாராளமாக மடியில் வைத்து டைப் செய்யலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இமெயில் அனுப்பலாம். டம்மி பீஸ் லேப்டாப்புக்கு என்று சாப்ட்வேர் எதுவும் கிடையாது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நேற்று தொடங்கி 9&ம் தேதி வரை நடக்கிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்ரிக்ஸ் 4ஜி, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நன்றி : http://www.tamilulakam.com/news/view.php?id=21627

வாட்டர் லெவல் Monitor










Water Level Monitor
[Save water and Save Nature]

* Greetings to all, We are going to introduce Water Level Monitor using IC 555.

* Our Slogan is “Save Water Save Nature”

When the water reaches a particular level, the circuit will produce an audible tone, visual Light.

* In the Circuit, water acts as a resistor and completes the Circuit thus activating the IC 555. This helps in monitoring water level in water tanks.

* This device is Simple, Safe, Portable and Easy to handle .




R1 – 1KOhm
R2 – 68KOhm
R3 - 10KOhm
R4 - 10 KOhm

C1 - 10uF 9v
C2 - 100nF
C3 - 100nF

IC1 – NE 555
IC2 – NE 555

Other
Speaker 8Ohm, 1 Watt
LED - 1
Power Source / Battery 5-15Volt

வியாழன், ஜனவரி 06, 2011

ஆவலைத் தூண்டும் அறுபது வலைப்பூ

1. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 76,621

2. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 85,946

3. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 188,994

4. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 230,176

5. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 240,124

6. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 257,850

7. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 281,081

8. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.com/
Alexa Rank 295,313

9. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 310,917

10. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 372,249

11. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com
Alexa Rank 432,540

12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc
Alexa Rank 545,195

13. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 579,170

14. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com
Alexa Rank 584,147

15. ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot.com/
Alexa Rank 939,528

16. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 951,930

17. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 1,000,838

18. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 1,040,014

19. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.com/
Alexa Rank 1,098,567

20. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,184,313

21. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,219,645

22. தmil computer
http://computertamil.eu/
Alexa Rank 1,267,806

23. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com
Alexa Rank 1,270,009

24. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 1,564,281

25. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com
Alexa Rank 1,613,320

26. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 1,895,185

27. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 2,098,319

28. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,164,196

29. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com
Alexa Rank 2,212,780

30. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com
Alexa Rank 2,243,323

31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்
http://vasanthlimax.blogspot.com
Alexa Rank 2,345,140

32. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com
Alexa Rank 2,398,478

33. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,419,779

34. தொழில்நுட்ப உலகம்
http://itulaku.blogspot.com
Alexa Rank 2,606,863

35. Jiyath Online | ஜியாத் ஒன்லைன்
http://jiyathonline.blogspot.com/
Alexa Rank 2,899,226

36. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com
Alexa Rank 2,912,224

37. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 2,916,627

38. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,053,713

39. Tamil-Tech Tech News
http://www.tamil-tech.com
Alexa Rank 4,040,040

40. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training.blogspot.com
Alexa Rank 4,149,327

41. Vino's Cafe
http://dareone.blogspot.com
Alexa Rank 4,331,534

42. தமிழ்பிளாக்.இன்
http://www.tamilblog.in
Alexa Rank 4,619,820

43. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 4,769,285

44. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com
Alexa Rank 4,777,685

45. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com
Alexa Rank 4,882,988

46. AutoCad
http://cadlearn.blogspot.com
Alexa Rank 5,250,508

47. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 5,513,052

48. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 5,801,433

49. K. Menan
http://kmenan.blogspot.com
Alexa Rank 5,938,559

50. கணிப் பொருள்
http://kaniporul.blogspot.com
Alexa Rank 6,108,005

51. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 6,234,539

52. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 6,288,572

53. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com
Alexa Rank 6,386,259

54. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com
Alexa Rank 6,391,785

55. Sajeenewtech
http://sajeenewtech.blogspot.com
Alexa Rank 7,149,284

56. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 7,464,827

57. Tamil Blog
http://tamil2012.blogspot.com
Alexa Rank 8,836,732

58. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com
Alexa Rank 9,731,889

59. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 9,801,565

60. கம்ப்யூட்டர் நண்பன்
http://computernanban.blogspot.com
Alexa Rank 11,915,029


நன்றி : http://www.suthanthira-menporul.com/2011/01/top-sixty-tamil-computer-websites.html

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts