வெள்ளி, செப்டம்பர் 30, 2011

ஐ.சி.சி., புதிய விதிமுறைகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வரும் அக்., 1 முதல் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. இது இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் படி, ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 பந்துகள் பயன்படுத்தப்படும்.
* பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும் போது, பீல்டிங் செய்யும் அணி வீரர்களை தொல்லை செய்யக்கூடாது. "ரன் அவுட்' செய்வதை தடுக்கும் விதத்தில், பேட்ஸ்மேன் செயல்படுவதாக அம்பயர் நினைத்தால், மூன்றாவது அம்பயரிடம் முறையிடலாம். இறுதி முடிவை களத்தில் இருக்கும் அம்பயர் எடுக்கலாம்.
* "பவர்பிளே' விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி முதல் 10 ஓவர்கள் "பவர்பிளே' முடிந்தவுடன், "பவுலிங் பவர்பிளேயை' 16 ஓவருக்கு முன்னதாக எடுக்கக் கூடாது. "பேட்டிங் பவர்பிளேயை' 40 ஓவருக்கு முன்னதாக எடுக்க வேண்டும்.
* மூன்று வித போட்டிகளிலும், இனி பேட்ஸ்மேன் காயமடைந்தால், "ரன்னர்' கிடையாது. ஒருவேளை 9 விக்கெட் வீழ்ந்த பின், காயமடைந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய அல்லது பவுலிங் செய்ய விரும்பினால், அவர் காயமடைந்த சூழல், எவ்வளவு நேரம் களத்தில் இல்லாமல் இருந்தார் என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும்.
* பவுலிங் செய்யும் போது, அம்பயர் அருகில் நிற்கும் பேட்ஸ்மேன் "கிரீசை' விட்டு வெளியே இருந்தால், அவரை "அவுட்' செய்யலாம். அந்த பந்து கணக்கில் எடுக்கப்படாது.
* டெஸ்ட் போட்டியில் உணவு, தேநீர் இடைவேளைக்கு முன், 15 நிமிடம் கூடுதலாக பவுலிங் செய்துகொள்ள, இரு கேப்டன்களின் முடிவின் படி அனுமதிக்கலாம். ஒருவேளை முடிவு கிடைக்க தாமதமாகும் எனத் தெரிந்தால், அம்பயர்கள் இதை ஏற்கக்கூடாது.
* டெஸ்டில் 9 விக்கெட் விழுந்த நிலையில், போட்டியின் முடிவுக்காக உணவு, தேநீர் இடைவேளையை 30 நிமிடம் வரை தாமதப்படுத்தலாம்.
* ஒருநாள் போட்டிகளில் உணவு இடைவேளை, 20 ல் இருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி & ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=10873&Value3=A

திங்கள், செப்டம்பர் 12, 2011

விண்டோசை விட லினக்ஸ் மிகச் சிறந்தது ஏன்?

1. வைரஸ் அபாயம் கிடையாது: பெரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.

2. திற-மூலமென்பொருள்: விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணணியில் இன்ஸ்டால் செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியாது. ஆனால் லினக்ஸில் அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம் அவற்றை சுலபமாக கையாளலாம்.

4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள். விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.

5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.

6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு, பிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள் உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.

7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அமைப்பு தான் அழகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை அமைத்து பாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.

8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.

9. நமக்கு வேண்டியவாறு அணைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.

10. உபுண்டுவினை நம்முடைய கணணியில் அமைக்காமலே அதனை சீடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம். உபுண்டு சீடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.

நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?22KOld0bcP90Qd4e3SMC202cBnB2ddeZBnJ302eCAA2e4609racb3lOA42

சனி, செப்டம்பர் 03, 2011

கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து காணப்படும்

சிலர் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில் இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு(டி.என்.ஏ) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் உடல் நலத்தை பேணி காக்கும் குரோமோசோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றில் உள்ள "ஜீணோம்" என்ற மூலக்கூறில் அதிக துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு உடல் மெலிகிறது.

பொதுவாக மரபணு அதிகம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?203609F220eZnBd24ea4mOlT4cbdQCAAcddcySMQUdbc43lOmae43dBnZ3e033F90602

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts