வியாழன், மார்ச் 31, 2011

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்
நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9055&Value3=I

செவ்வாய், மார்ச் 22, 2011

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது.
மற்றவர்கள் எப்படி:
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககராவுக்கு (1977), இம்முறை உலக கோப்பை கிடைக்காது. இங்கிலாந்தின் ஸ்டிராசிற்கு (1977), ஆஷஸ் வெற்றியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இதனால் தான் அடுத்து வந்த ஒருநாள் தொடரில் மோசமாக தோற்றது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980) சிறப்பாக செயல்பட்டாலும், இவர் இம்ரான் கான் ஆகமுடியாது. வெட்டோரி (1979), சமிக்கும் (1983) கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லையாம்.
கிளார்க் வந்தால்...:
கடந்த 2006 உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற, இத்தாலி கேப்டன் கன்னவரோ பிறந்த ஆண்டு 1973. ஆஸ்திரேலிய அணி பார்ப்பதற்கு வலிமையாக இருந்தாலும், பாண்டிங்கிற்கு மீண்டும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை. ஒருவேளை காயம் காரணமாக பாண்டிங் விலகி, 1981ல் பிறந்த மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியேற்றால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தாலும், மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
கிரகங்களில் வலிமையானதாக உள்ள புளூட்டோ தான், 1983ல் கபில் தேவுக்கு சாதகமாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பை வெல்லச் செய்தது. தற்போது இதே பலன்கள் தோனிக்கு ஊக்கமாக அமைவதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நன்றி :
http://sports.dinamalar.com

திங்கள், மார்ச் 21, 2011






















Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage



Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts