வியாழன், ஏப்ரல் 28, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிளட்சர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன், பொறுப்பேற்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் கிறிஸ்டன். சமீபத்திய உலக கோப்பை தொடருடன் இவரது மூன்றாண்டு பயிற்சிக்காலம் முடிந்தது. தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பம் இல்லாத கிறிஸ்ட்ன், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா திரும்பினார். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய பயிற்சியாளர் தேர்வில் தீவிரமாக இறங்கியது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், ஆன்டி பிளவர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இருந்தனர். நேற்று, பி.சி.சி.ஐ., செயற்குழு மும்பையில் கூடியது. இதன் முடிவில், பிளட்சர் (62) இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானார்.
இவர் கடந்த 1983 உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்காக பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1999 முதல் 2007 வரை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து அணி, 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, ஆஷஸ் தொடரை வென்றது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" இந்திய அணியின் பயிற்சியாளராக, பிளட்சர் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும், அணியில் சேர்ந்து கொள்வார். பவுலிங் பயிற்சியாளர் பணியில் எரிக் சிம்மன்ஸ் தொடர்வார்,'' என்றார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9296&Value3=A

சனி, ஏப்ரல் 23, 2011

மெல்ல முச்சுவிடுவோம்

உலகில் ஜெனிக்கும் உயிர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மூச்சுகளை இறைவனிடமிருந்து வாங்கி வந்திருப்பதாகவும், அந்த மூச்சுகளை நாம் பூமியில்
செலவழிப்பதாகவும் இதனால் வேகமாய் மூச்சு விடுவோர் வேகமாய் இறைவனிடம் திரும்பிவிடுவதாகவும் மெதுவாய் ஆற அமர மூச்சுவிடுவோர் இன்னும் கொஞ்சநாள் கூட பூமியில் வாழ்வதாகவும் முன்னோர்கள் நம்பியிருக்கிறார்கள். இதற்கு நாம் அத்தாட்சி வேண்டுமானால் விலங்குகளிடம் போகலாம். நிமிடத்திற்கு நான்கு மூச்சுகள் மட்டுமே விடும் கடல் ஆமைகள் முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.ஆனால் குரங்குகள் நிமிடத்திற்கு 32 முறை மூச்சுவிட அதன் ஆயுட்காலமோ அதிகமாய் போனால் 25 வருடங்கள் மட்டுமே.ஹம்மிங் பறவைகள் நிமிடத்திற்கு 360 தடவைகள் மட்டுமே மூச்சுவிட அதன் அதிக பட்ச வாழ்நாட்கள் 3 ஆண்டுகளாக குறைந்துவிடுகின்றது.Shrews எனப்படும் நச்செலிகள் இன்னும் பாவம், நிமிடத்திற்கு 660 தடவைகள் வேகமாக சுவாசித்து அதனை செலவழித்து விடுவதால் அதன் ஆயுசுநாட்களோ 18 மாதங்கள் மட்டுமே.இப்படி இது ஒரு நிரூபிக்கப்ப்ட்ட உண்மையாக இருக்கின்றது.இதைத் தான் ஆர்ட் ஆப் லிவிங் கிளாசுகளில் பிரீதிங் எக்சசைஸ்சாக பயிற்றுவிக்கின்றார்கள். மெதுவாக மூச்சுவிடு அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழலாமென்கின்றார்கள்.

ஆதாரம் & நன்றி : http://pkp.blogspot.com/

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

IPL-2011 பைனலுக்கு செல்வது எப்படி?

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைனல் எப்படி?
இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:
* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.
* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.
* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9127&Value3=I

புதன், ஏப்ரல் 06, 2011

Coach Kirsten bids goodbye to India











Source : http://epaper.dinamani.com/epapermain.aspx#

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

World Cup - 2015




















Source : http://www.google.co.in/imgres?imgurl=http://1cric.com




Source :
http://www.google.co.in/imgres?imgurl=http://4.bp.blogspot.com

உலகக் கோப்பையை வென்றது இந்தியா! - கோடிக்கணக்கான ரசிகர்கள் குதூகலம்!








தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக
கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9082&Value3=A

தோனியின் "டை' ராசி உலக கோப்பை தொடரிலும் நீடித்தது. இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இறுதியில் நமது அணி உலக கோப்பை வென்று அசத்தியது.
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., மற்றும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நான்கு முக்கிய தொடர்களின் போது, ஒரு போட்டி "டை' ஆனது.
* கடந்த 2007ல், தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், டர்பனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "பவுல்-அவுட்' முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 136 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் விக்டோரியா அணி வெற்றி பெற்றது.
* இந்த உலக கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இந்த நான்கு தொடர்களில், தோனி தலைமையிலான அணி விளையாடிய ஒரு போட்டி "டை' ஆனது. இந்த ராசி கைகொடுக்க, இறுதியில் கோப்பை வென்று அசத்தியது.
---
ஸ்ரீசாந்த் ராசி
வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை முதல் லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்க, அடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான பைனலில் இடம் பிடித்தார். இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. கடந்த 2007ல், "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். இத்தொடரின் பைனலில், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா கொடுத்த "கேட்சை' எளிதாக பிடித்து, இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தார். இதனால் தான் கேப்டன் தோனி, இலங்கை அணிக்கு எதிரான பைனலில் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9085&Value3=A



"சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம், என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்தது.
இதுகுறித்து இந்தியாவின் சச்சின் கூறியதாவது: சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்ற தருணத்தை, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இதைவிட வேறு எதையும் அடைய விரும்பவில்லை. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வெல்ல காரணமாக இருந்த சக வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், அப்டன் மற்றும் உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9086&Value3=I

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts