புதன், டிசம்பர் 12, 2012

12-12-12, 12:12:12

Frds, 2dy date is 12-12-12, 12:12:12 as a special one in our Life never c & never before, ve precious day-Pojaraj

செவ்வாய், நவம்பர் 27, 2012

நிலவேம்பு [Nilavembu]

நிலவேம்பு

கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.




வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.

ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees

Sanskrit Name:Kalmegh, Bhunimba
Assamese: Chiorta
Arabic: Quasabhuva
Marathi: kadu kirayata,Oli-kiryata
Bengali: Kālmegh (কালমেঘ)
Oriya: ଭୂଇଁନିମ୍ବ (Bhuinimba)
Chinese: Chuan Xin Lian (穿心蓮)
English: Green chirayta, creat, king of bitters, andrographis, India echinacea
Persian: Naine-havandi
Gujarati: Kariyatu
Sanskrit: Kālamegha (कालमेघ), Bhūnimba (भूनिम्ब)[2]
Hindi: Kirayat

Tamil: Nilavembu, Sirunangai, Siriyanangai (நிலவேம்பு)

Kannada: Nelabevu
Malayalam: NilavEpp (നിലവേപ്പ്) , Kiriyathth (കിരിയത്ത്)
Telugu: Nelavemu (నేలవేము) or Nelavepa
Malayasian: Hempedu Bumi
Indonesian: Sambiloto
Thai: Fa Thalai Chon (ฟ้าทะลายโจร), literally meaning 'the heavens strike the thieves'
Lao: La-Sa-Bee
Sinhalese: Hīn Kohomba / Heen Kohomba (හීන් කොහොඹ), හීන් බිම් කොහොඹ

மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.

நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.


Courtesy : http://bsubra.wordpress.com/2007/07/19/mooligai-corner-herbs-naturotherapy-manathakkali-nilavembu/

புதன், அக்டோபர் 10, 2012

ஔவையார் [Avvaiyar]


The Avvaiyars (Tamil: ஔவையார்) "respectable women" was the title of more than one poet who was active during different periods of Tamil literature. The Avvaiyar were some of the most famous and important female poets of the Tamil canon. Abithana Chintamani states that there were three female poets titled Avvaiyar.

Among them, Avvaiyar I lived during the Sangam period (c. 1st and 2nd century CE) and had cordial relation with the Tamil chieftains Paari and Athiyaman. She wrote 59 poems in the Puṟanāṉūṟu.

Avvaiyar II lived during the period of Kambar and Ottakoothar during the reign of the Chola dynasty in the 13th century. She is often imagined as an old and intelligent ...

ஔவையார் ஆத்திசூடி [Avvaiyar Aathichoodi]

உயிர் வருக்கம்ஆத்திசூடிEnglish translation
அறம் செய விரும்புDesire doing righteous deeds
ஆறுவது சினம்Calm your anger
இயல்வது கரவேல்Help others in whatever ways you can
ஈவது விலக்கேல்Never stop being charitable
உடையது விளம்பேல்Never proclaim/boast about what you have
ஊக்கமது கைவிடேல்Never give up hope
எண் எழுத்து இகழேல்Don't despise learning
ஏற்பது இகழ்ச்சிAccepting alms (begging) is despicable
ஐயமிட்டு உண்Share food with others (to the needy)
ஒப்புர வொழுகுAct virtuously
ஓதுவது ஒழியேல்Never give up learning
ஒளஒளவியம் பேசேல்Never talk jealous words
அஃகஞ் சுருக்கேல்Never cheat on grains (Food)

வியாழன், செப்டம்பர் 20, 2012

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!

அனைவரும் வாழ்வில் வெற்றிபெற பலவகையில்  முயற்சி  செய்து கொண்டு  தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் வெற்றிப்பெற  தியானம்  நமக்கு பெரிதும் துணைப் புரிகின்றது. தியானம் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

எப்படி தியானம் செய்வது?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனமாக இருந்தால் நாம் செய்யும் தியானமானது நிச்சயம் எளிதில் கைகூடும். இதிலும் நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

01.தியானம் செய்ய நமக்கு தேவையானது உடலிலும், உள்ளத்திலும் தூய்மையான  எண்ணம் இருக்க வேண்டும்.

02.தியானமானது எளிதில் கிடைக்ககூடிய விஷயமில்லை எனவே பொறுமை மிகவும் அவசியம், அதனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது.

03.தியானத்தை ஒருபோதும் சோம்பலின் காரணமாக கைவிடுதல் கூடாது. விடாமுயற்சியுடன் தொடரவேண்டும். நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும்,உடல் நலமாக இருக்கும் போதும்,உடல் நலமில்லாத போதும் தியானத்தை மட்டும் தவறவிடக்கூடாது.

04.நாம் தியானம் செய்ய மிகச் சிறந்த காலம், பகலும், இரவும் ஒன்றுகூடும் அந்திவேளை. இந்த வேளையில்தான்  நமது உடலின் அலைகள்  அமைதியாகவும்  ஆழமாகவும் இருக்கும். எனவே இவ்வேளையில் தியானம் செய்வது முழுமையாக நமக்கு உதவும்.

05.தியானம் செய்ய ஒரு பாய் மற்றும் சுத்தமான ஒரு துணி ஆகியவற்றை சுத்தமான தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டும். நிமிர்ந்து முதுகினை சாய்க்காமல் மற்றும் எதன் மீதும் சாயாமல் தியானிப்பது சிறந்தது.

06.தியானம் செய்யும் போது தலையும், தோள்களும், இடுப்பும் நேர்க் கோட்டில்  இருக்குமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும்.அதே சமயம் முதுகெலும்பைத் தளர்ந்த நிலையிலே வைத்திருக்க வேண்டும். எந்த பொழுதும் முதுகெலும்பின் மீது தேவையில்லாத பாரத்தினையும், அழுத்தத்தினையும் தரக்கூடாது.

07.நம்மை நாம் முழுமையாக உணர்தல் வேண்டும்.நமது கால் விரல்களில் இருந்து தொடங்கி,உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் முழுமையாக உள்ளதாக நினையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் முழுமையானதாகவும்,எந்த குறையும் இல்லாததாகவும் நினைத்து தலை பகுதி வரை மேலேற வேண்டும். பின்பு முழு உடலும் முழுமையாக உள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

08. இவ்வாறு செய்து முடித்த பிறகு இரு நாசிகள் (மூக்கின் துவாரம்) வழியாக மூச்சை நீளமாக உள்ளிழுத்து பின் அதை வெளியே விடவேண்டும். மூச்சு வெளியேறியவுடன் உடல்தாங்கும் வரை மூச்சை உள்ளிழுக்காமல் வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு நான்கு முறை மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

09.இதன் பின் மனதுக்கு அமைதி தரும் பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த 'மகா உலகத்தை படைத்த பரம்பொருளின் மகிமையினை எண்ணிக்கொண்டு அந்த பரம்பொருள் என்னை ஒளிரச் செய்வார்' என பலமுறை கூறியப்படியே பதினைந்து நிமிடங்கள் தியானிக்கவேண்டும்.

10. நமது மனதினை நம்முன் விரிந்து கிடக்கும் அமைதியான ஒரு நீர்ப் பரப்பாகவும், வந்துபோகும் எண்ணங்கள் அதில் தோன்றும்  நீர்க்குமிழியாகவும்  கற்பனை செய்துக்கொள்ளவேண்டும். எப்பொழுதும் எண்ணங்களை அடக்கிக்கொள்ள கூடாது. அவை தானாகவே எழும்பி அடங்கக்கூடியது.

இறுதியாக 'நான் மனம் அல்ல, நான் சிந்திப்பதை நானே உணர்கிறேன். என்மனம் செயல்படுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்ற உயர்ந்த கருத்தினை நாம் பற்றிக்கொண்டால் இறுதியில் மனம்வேறு, நாம் வேறு என்பதை உணரமுடியும்.

இந்த நிலையினை நாம் அடைந்துவிட்டால், மனமானது நம்முடைய  வசம் வந்துவிடும்.  இந்த நிலையினை நாம் எட்டிவிட்டால் நாம் விரும்பும் எதனையும் நம் வசமாக்கிகொள்ளலாம்.

இதன் மூலம் நாம் விரும்பும் அனைத்தையும் வெற்றிக் கொள்ளலாம். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நல்ல சிந்தனையையும்  இந்த உலகிற்கு தரமுடியும்.

அனைவரும் தியானத்தை சிறுபொழுது என்றாலும் விடாமல் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுகின்றேன்.
மூலம் & நன்றி : http://arivu-kadal.blogspot.in/2012/07/blog-post_20.html

புதன், செப்டம்பர் 12, 2012

தமிழர்களின் அறிவியல்..!

பிறப்பும் வாழ்வும்

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம் – 725

இதே போல இந்த உடம்பினுள் 96 வேதியியல் தொழில்கள் அல்லது செயல்பாடுகள் நடக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த உடம்பும் உள்ளமும் இதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்கியமாக செயல் புரியும்போது இந்த 96 செயல்களும் பிசகின்றி சீராக இயங்குகின்றன.

“முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடையக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே!”

தமிழ் சித்தர்கள் பழங்காலத்திலேயே உடல், உயிர் என்ற இரண்டிலும் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். அந்த தெளிவில்தான் மானுடம் மேம்படச் சிந்தனைத்திறனை அறிவியல் பார்வையோடு சித்தர் இலக்கியத்தின் மூலம் இன்றும் வியந்து நிற்கிற வகையில் காட்டியிருக்கிறார்கள்.

உழவு:
கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும், கரும்புக் கழிகளாலும் (தோகையோடு கூடிய கரும்பு) கட்டி அலங்காரம் செய்தார்கள். வெல்லம், சர்க்கரை விற்ற வணிகருக்கு பணித வாணிகர் என்பதே பெயர். பணித வாணிகள் நெடு மூலன் என்ற பெயரை மதுரைக்கருகில் இருக்கிற குகையொன்றில் பிராமி எழுத்தின் அமைப்பில் கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள். இது கி.மு 2200 ஆண்டுகளுக்கு முந்தியது என கடைச்சங்கச் செய்தி தெரிவிக்கிறது. அப்படியாயின் அதற்கு முன்பே தமிழர்களுக்கு கரும்பு பயிர் செய்கையும், கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை எடுக்கிற தொழில் நுட்பமும் தெரிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் ஐரோப்பியர் களுக்குக் கரும்பு தெரியாது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் தான் கரும்பும் வெல்லமும் மேலை நாட்டினருக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சீனியை கொண்டு வந்தார்கள்.

“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு” (குறள் 1038)

இன்றைக்கு விஞ்ஞானம் விரிவடைந்தாலும் இன்றும் இதே ஐந்து கோணங்களில்தான் விவசாயம் நடக்கிறது. மேலும் சாதாரண பழமொழிகளில் கூட விவசாய அறிவியலை வைத்திருக்கிறான். இதற்கேற்ப ஏறக்குறைய 20 பழமொழிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

உடை:

“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)

இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம்,
(வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்)
பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை,
மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை.

ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம்
(துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி,
பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்...
“அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும்,
சேலையை சாரி என்றும் பேசுவதும்,
எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின்
வேலையாகும்” எனச் சாடுகிறார்.

உணவு :
‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெறவளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)

எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை (உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்: தேன், தினைமா, கிழங்கு, பறவைகள், ஊன் வேட்டையில் கிடைத்த உணவுகள். முல்லை நிலம்: சோளம், கேழ்வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை

மருத நிலம் : பல்வகைச் சோறு, காய்கறிகள்

நெய்தல் நிலம்: மீன், நண்டு, இறால், கணவாய், காய்ந்த மீன் (கருவாடு), நெய் கலந்த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறுசுவை உணவையும் உண்டனர். இதுபோக ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலைபகர்கிறது.

இதிலிருந்து இரு செய்திகள் தெரிகின்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இருக்கின்றன. இன்னொன்று ஈழத்திலிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இலக்கியம்:
ஒரு பிரெஞ்சு பேராசிரியரிடம் ‘எது இலக்கியம்’ என்று கேட்டபோது வந்தபதில்: ‘‘நாட்டை, மொழியை, மக்களை முன்னே வைத்து செய்யப் பெறும் எழுத்துக்களே தலைசிறந்த இலக்கியங்கள்’’ என்பதே. தமிழில் தமிழை, மனிதர்களை உயர்த்தும் இலக்கியங்களே அதிகமாக இருக்கின்றன. ஆகவேதான் அதன் ஆளுமை இன்றைய விஞ்ஞான எந்திர வாழ்விலும் ஊடுறுவ முடிகிறது.
ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய வரலாற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘திருக்குறள் மூலபாடம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் கி.பி.1812இல் அச்சான திருக்குறள் பற்றியும், அதன் முகப்பு அட்டை, கடவுள் வாழ்த்துப் பகுதி இவைகளை படத்துடனும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். மேலைநாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல் படிக்கிறார்கள். நூல் படிக்கப் படிக்க அறிவின் வேல் கூர்மையாகும். அந்த அறிவைப் பெறுவதற்குத் தாய்மொழி தமிழ் மிகமிகஅவசியமாகும்.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அந்நூலின் முன்னுரையில்

‘வழக்கொழிந்து மாண்டு போன மொழிகளாலும், பயன்மிக உள்ளது. சாம்பலின் தலைபோல் அவற்றின் தன்மை வாழ்கின்றது. ஆயினும், இன்றும் வாழும் பண்டைய மொழிகளே சிறப்பு உடையன. வைரம் பாய்ந்த அம்மரங்களிலிருந்து பூக்க இருக்கும் கனிகள் எத்தனையோ! எனவே, தமிழர்கள் தங்கள் மொழி குறித்துக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையினை ஒழிக்க வேண்டும்.’

தமிழிசை:
"12ஆம் நூற்றாண்டு முதல் தோன்றிய சமஸ்கிருத சங்கீத நூல்கள் சங்கீதத்திற்கு இலக்கணம் கூற முயன்றாலும் பழக்கத்தில் உள்ள இசை மரபிற்கும் இவர் கள் கற்பித்த இலக்கணத்திற்கும் தொடர்பின்றி இசை உலகில் பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணி வந்துள்ளன. ஆகவே, இசையின் அடிப்படை இலக்கணத்தை நாடி நம் தமிழிசையின் பிறப்பிடத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் ஆகிறோம்'' என்று இசைப் பேரரசி டாக்டர் சேலம் எஸ். விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இவரின் கருத்தை உறுதி செய்வதுபோல் இசைப்பேரறிஞர் வா.சு.கோமதிசங்கரய்யர் ‘இசைத்தமிழ் இலக்கண விளக்கம்’ எனும் நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பண்களின் சிறப்பை உணர்ந்த வடநாட்டு பண்டிதர் ஒருவர் முப்பத்தாறு பண்களையும் எடுத்து அவற்றிற்கு வட மொழிப்பெயரை இட்டுப் பரப்பி உள்ளார். ஆனால் ஒன்பது நிறங்களின் (இராகங்கள்) பெயர்களை மாற்றாமல் விட்டமையால் அவைகள் தமிழில் இருப்பதே, அவை தமிழிலிருந்து பெயர்ந்தது என்பது உறுதியாகிறது.

தாவரவியல்:
‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)


தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல்,
பூண்டு என்பன அடங்கும். இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது. அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

மண்ணியல்:
மண்ணைக்கூடப் பழந்தமிழ் மக்கள்
1. ஆற்றுமண்,
2. சேற்றுமண்,
3. காட்டுமண்,
4. உதிரிமண்,
5.மலை மண்,
6. குளத்துமண்
என வகைப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக வேறொரு செய்தியும் உண்டு. கோயில் கட்டப்படும் நிலத்தை நன்கு உழுது அதில் நவதானியம் விதைக்க வேண்டும். அந்த விதை மூன்று நாட்களில் முளைத்தால் அது நல்ல நிலம்; ஐந்து நாட்களில் முளைத்தால் ஏறக்குறைய நல்ல பூமி; எட்டு நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அது மட்டமான பூமி.

நன்றி : Sivakumar

சனி, செப்டம்பர் 08, 2012

கான்டக்ட் லென்ஸ்சினால் கண்கள் குருடாகும் அபாயம்

தற்போது லட்சக்கணக்கான மக்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அகாந்தாமோபோ என்ற நுண்ணுயிர் பாக்ட்டீரியா தாக்குதலால் கண் பார்வை பாதித்து குருடாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்ட்டீரியா, தூசி மற்றும் கடல் நீர், நீச்சல் குளம் போன்றவற்றில் உள்ள தண்ணீரின் மூலம் பரவுகிறது. கான்டக்ட் லென்ஸ் மூலம் இந்த கிருமி கண்களுக்குள் மிக எளிதாக புகுந்து விடுகிறது.
அந்த லென்ஸ்சில் படிந்திருக்கும் இக்கிருமி கண், வெண் படலத்துக்குள் சென்று அதை தின்று விடும். மேலும் அங்கு தங்கி தனது இனப் பெருக்கத்தை மேற்கொள்கிறது. இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நமைச்சல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.
கண்களில் இருந்து நீர் வடியும். சிறிது சிறிதாக பார்வை மங்கும், கண்ணின் மேல் இமையில் வீக்கம் ஏற்படும். கடுமையாக வலி ஏற்படும். இந்த நோய் முற்றிய நிலையில் சில வாரங்களில் கண் பார்வை முற்றிலும் இழந்து குருட்டு தன்மை ஏற்படும்.
இவற்றை குணப்படுத்த கண் சொட்டு மருந்துகளை 20 நிமிடத்துக்கு ஒரு முறை என 3 வாரத்திற்கு போட்டு வரவேண்டும். இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கண்வெண் படலம் மாற்று ஆபரேசன் செய்து கொள்ளலாம்.
மூலம் : http://www.maalaimalar.com/2012/09/08141938/contact-lens-fault-to-eyes.html

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

அதிகமாக கோபப்படுபவர்களுக்காக

இந்த உலகில் கோபப்படாமல் இருப்பவர்களை பார்க்கவே முடியாது. அனைவருக்குமே கோபம் என்னும் குணம் இருக்கும்.
ஆனால் சிலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வதென்றே தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் கட்டுப்பாடின்றி வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசிவிடுவர்.
அந்த வார்த்தைகள் அனைத்தும் மிகவும் கடுமையானதாக இருக்கும். பின்னர் என்ன தான் தவறு என்று பின்னர் நினைத்து, மன்னிப்பு கேட்டாலும் அது பயனற்றதாக இருக்கும். மேலும் உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, வராத வியாதிகளைக் கூட வரவழைக்க நேரிடும்.
அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபத்தை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே கோபம் வரும் போது, அவற்றை குறைக்க சில எளிய டிப்ஸ் இருக்கிறது.
அது என்னவென்று படித்துக் பார்த்து, அதை நம்பி செய்து வாருங்கள், கோபம் கண்டிப்பாக குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உறவுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

1. கோபம் வந்து விட்டால் உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம். அதாவது கோபம் வரும் போது சற்று அமையாக இருந்து, மூச்சை உள்வாங்கி, பின் மூச்சை வெளிவிடும் போது மெதுவாக மனதிற்குள் 1,2,3 என்று பத்து வரை மெதுவாக சொல்லலாம். இது சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம். ஆனால் உண்மையில் இவ்வாறு செய்தால் கோபம் குறைந்துவிடும்.

2. எப்போது டென்சனாக இருக்கிறீர்களோ அப்போது யார் பேசினாலும் கோபம் வரும். ஆகவே அந்த நேரத்தில் சற்று தூரம் நடக்கலாம் அல்லது ஓடலாம். இதனால் மூளைச்செல்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளமும் சந்தோஷமாக இருக்கும்.

3. கோபம் வரும் நேரம், எப்போதும் உடனடியாக பேச வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அப்போது பேசும் பேச்சுக்கள் மற்றவர்களது மனதை பாதிக்கும். ஆகவே அந்த நேரத்தில் சற்று அமைதியாக இருந்து, யோசித்து என்ன பேச வேண்டுமோ, அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து பிறகு பேசுங்கள்.

4. மன்னிப்பு மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். ஒருவர் உங்களுக்கு ஏதேனும் தவறையோ அல்லது தீங்கோ ஏற்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கோபத்திற்கு அனுமதிக் கொடுத்தால், பின்னர் பாசிட்டிவ் ஃபீலிங் அனைத்தும் நெகட்டிவ்வாக மனதிற்குள் தோன்ற ஆரம்பித்துவிடும்.
ஆனால் அதுவே மன்னித்து விட்டால் அப்போது நீங்கள் ஒரு பெரிய மனிதர்களாக அனைவருக்கும் தெரிவீர்கள். பின்னர் நீங்களே உங்கள் கோபத்தின் மீதே கோபம் கொண்டு வெறுத்துவிடுவீர்கள்.

5. பதற்றமாக இருக்கும் நேரம் ஏதேனும் நகைச்சுவையைப் பார்க்கலாம். அதிலும் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் நகைச்சுவை நடிகர்கள் நடித்த சீன்களை பார்த்தால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆகும். மேலும் டென்சனும் அகலும்.

6. எப்போதெல்லாம் டென்சன் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டும். அதாவது மூச்சுப்பயிற்சி, பிடித்தப் பாடல்களைக் கேட்பது, மனதிற்குள் சில வாக்கியங்களான "டேக் இட் ஈஸி", "ஆல் இஸ் வெல்" போன்றவற்றை மனதிற்குள் சொல்லலாம். இவை அனைத்தும் மனதை சற்று தெளிவுறச் செய்யும்.

மூலம் : http://tech.lankasri.com/view.php?223009F220eZnBB34eeyOOldccbdQMAAcdddyIMWKbbc4llOmae44dBnn30033990602

புதன், ஆகஸ்ட் 29, 2012

Microsoft - Logos [லோகோக்கள்]

Microsoft இன் லோகோக்கள் பலதடவைகள் மாற்றப்பட்டுள்ளன.அண்மையிலும் Microsoft லோகோவை மாற்றியுள்ளது.


மூலம் : http://www.venkkayam.com/2012/08/microsoft.html

புதன், ஜூன் 06, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத  நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான  செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது  லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்  ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும்,  வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்  வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான  இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான்  உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும்,  அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது  வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால்
தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள்
 தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க  வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக்  அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

திங்கள், மே 14, 2012

8th Picnic to Kollimalai on 13-05-2012 [Sunday]

A picnic can be defined simply as a pleasure excursion at which a meal is eaten outdoors (al fresco or en plein air), ideally taking place in a beautiful landscape such as a park, beside a lake or with an interesting view and possibly at a public event such as before an open air theatre performance, and usually in summer. Descriptions of picnics show that the idea of a meal that was jointly contributed and was enjoyed out-of-doors were essential to a picnic from the early 19th century. Picnics are often family-oriented but can also be an intimate occasion between two people or a large get-together such as Friends Picnics, Company picnics, etc.,

*04:30 am [14-05-2012 Sun] – We begin our 8th Pinic, with our friends Chithambaram, Maniannan, Karthi, Pojaraj, Vetri, Vijian [Expect Shampu] and Kathir [Driver].

* 04:50 am - Poojai @ Puthumariamman Kovil, Kasiplayam, Gobichettipalayam

* 05:40 am - Morning refreshment @ Villarasampatti, Erode.

* 07:00 am - Namakkal

* 08:00 am - Beginning 70+ hair pin bends.

* 09:00 am - Breakfast on the way of Semmedu

[]

* 09:45 am – Reach Kolli Malai

Kolli Malai (Tamil: கொல்லி மலை) is a small mountain range located in central Tamil Nadu in Namakkal district of India. The mountains are about 1000 to 1300 m in height and cover an area of approximately 280 km². The Kolli Hills has 70 hair pin bends to reach the top of the hills. The Kolli Hills are part of the Eastern Ghats, which is a mountain range that runs mostly parallel to the east coast of South India. The mountains are relatively untouched by commercial tourism and still retain their natural beauty.


* 10:00 am – 12:15 pm - AKASA GANGAI WATER FALLS (Ganges of the Sky)
Akasa Gangai
(Tamil: ஆகாய கங்கை) is an enchanting 300 feet waterfall of river Aiyaru, located near Arappaleeshwarar temple. Thousands of steps lead down to the falls. It is situated in a beautiful valley surrounded by the mountains at all sides. Enroute, the natural beauty of the valley and the vegetation-covered peaks.

The location is ideal for trekking and the breeze is pleasant, the cascade of silvery water touching and brushing the innumerable herbs which are abound in Kollihills keeps everyone spell bound and fresh with its herbal qualities.

We [Pojaraj, Vetri and Vijian] enjoy lot and took Rich Bath.

[]

Note Good health condition,   Gents [10 – 50 yrs,], Ladies [10 – 35 yrs], Children [above 7 yrs] are possible to stepping towards the Akasa Gangai, Because, there will be a minimum of 1000 steps Up and down  to see the falls.








* 12:30 pm – Arapaleeswarar Kovil

The entire range of the Kolli Hills gets a religious importance because of the Arapaleeswarar Temple. Such is the importance of this temple that the ancient Tamil literature speaks of this temple in glorious terms. This temple is said to have been built by Valvil Ori in the 1st or 2nd century when he ruled the area. Lord Shiva is the main deity here and Aramvalartha Nayaki had separate Vimanam.

[]

* 01: 00 – 01:45 pm –  Ettukai Amman

Ettukai Amman is an ancient temple situated in the Kolli malai. This small temple attracts tourists on no moon days.

[]
* 02:30 pm – Lunch Break @ Boat house
[ Thanks to Shampu, Vijiyan and their respected Family]

* 03:15 – 03:45 pm – Boat House

Boat house in Kolli hills is one of the most visited spot by all tourist peoples. This is situated at Vasalurpatty near Solakkadu-Thinnanurpatty road. Actually it is a lake near kolli hills with permanent water source. Boating such as pedal boating is available where just can have lots of fun. We [Chitha, Karthi, Kathir, Poj and Vetri] pedaling with drizzles.

* 04:00 – 05:00 pm – Botanical Garden

Botanical Garden is another place of importance in Kolli mallai. It is situated three kilometers away from Semmedu formed at the old Tampcol site. This garden has a Park, Eco friendly cottages, Rose Garden, Herbal Park and a view point. The Children's park is situated just above the fountain in the Botanical Garden with statues of animals, see saw, wave slide, deluxe circular swing, merry go round, etc are in the Children`s park. There is also a porch room for flowers show in this park. This Botanical Garden is maintained by the government and has a large variety of local and regional plants. You will find a beautiful range of colorful flowers, medicinal herbs and plants. There is a pineapple research farm where hybrid species are grown.

* 05:15 pm –Semmedu Market, We drink a Mooligai soup [Aatty Kaal Kizhangu] and brought fine apples.
Finally we missed out some places [Siddhar Kugai, Masilla arivi, Selur View Point, Santhana Parai, etc.,]
* 10:30 pm - respective Home.

So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam
6. 27-06-2010 [Sunday] - Yercaud & 1008 shivalinghas
7. 04-06-2111 [Sunday] - Munnar

திங்கள், ஏப்ரல் 23, 2012

அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இதோ இவர்கள் என்ன நினைத்தார்கள்.  

மனித வாழ்க்கை பகுத்தறிவை விட அதிர்ஷ்டத்தாலேயே ஆளப்படுகிறது.

-  ஹுயூம்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும் ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது அவன் காதில் வி்ழுவதே இல்லை. - மார்க் டுவெய்ண்.

 அதிர்ஷ்டங்களை உண்டாக்கி கொள்வது நாம் ஆனால் அதை விதி என்று சொல்கிறோம்.    -  ஆல்ராய்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பை தொடர்ந்தே செல்லும். - கோல்ட்ஸ்மித்

அதிர்ஷ்ட சக்கரம் எப்போதும் சுற்றிக்கொண்டுள்ளது மேலே உள்ளது கீழே 
கீழே உள்ளது மேலே - கன்ஃபூஷியஸ்

 அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றி விடுகிறதா?   இல்லை,  அவர்களை வெளிப்படுத்துகிறது. - ரிக்கோபோனி

அதிர்ஷ்டம் மெலிந்தவர்களை தண்டிக்கும் தடி தைரியமானவர்க்கு ஊன்றுகோல் - லோவெல்

அதிர்ஷ்டத்தை நம்பாதே ஒழுக்கத்தை நம்பு - பப்ளியஸ் சிரஸ்

வெளிநாட்டினர் சொன்னார்கள் சரி
நம்மவர் !  சொன்னார்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.  (குறள் 594)

ஆதாரம் : 

http://eniyavaikooral.blogspot.in/search?updated-min=2011-01-01T00:00:00%2B05:30&updated-max=2012-01-01T00:00:00%2B05:30&max-results=8

சனி, மார்ச் 17, 2012

சதத்தில் சதம் கண்டார் சச்சின்

16-03-2012 : வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டிகளில் 100-வது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின்.

தனது 462-வது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார். ஷகிப் அல்ஹசன் வீசிய 43-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 100-வது சதத்தை நிறைவு செய்தார். 138 பந்துகளில் அவர் சதமடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 99-வது சதத்தை அடித்த சச்சின், ஓர் ஆண்டு, 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகே இப்போது 100-வது சதத்தை அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளைத் தவிர்த்து வந்த சச்சின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் களமிறங்கினார். அங்கு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு நழுவியது.


டெஸ்ட் போட்டியில் 51 சதம், ஒருநாள் போட்டியில் 49 என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ள சச்சினின் சாதனை மகத்தானது. கிரிக்கெட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களில் பிராட்மேனை தவிர யாரும் பேசப்படுவதில்லை. கிரிக்கெட் உள்ளவரை சச்சினின் சாதனைகளும் வாழ்ந்து கொண்டிருக்கும். சச்சினும் பேசப்பட்டு கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

கடந்து வந்த பாதை...



1989: 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போதைய இந்திய அணிக்கு ஸ்ரீகாந்த் கேப்டனாக இருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 அரைசதங்கள் அடித்தார்.



1990: ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் (119 நாட் அவுட்) சச்சின்.



1993: சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் (165 ரன்கள்). இதுதான் இந்திய மண்ணில் அவர் அடித்த முதல் சதம்.



1994: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிங்கர் கோப்பை ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். 79-வது ஒருநாள் போட்டியில்தான் அவர் இந்த சதத்தை அடித்தார்.



1996: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 சதம் உள்பட 523 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதே ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார். சச்சின் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தி டைட்டன் கோப்பையையும் கைப்பற்றியது.



1997: டொரன்டோவில் நடைபெற்ற 2-வது சஹாரா கோப்பை போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த ஆண்டில் விஸ்டன் விருதையும் வென்றார்.



1998: சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 155 ரன்கள் குவித்து, இந்தியா 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.



2001: ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை எட்டினார். அதே ஆண்டில் ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டையும் வீழ்த்தினார்.



2002: டெஸ்ட் போட்டியில் 29 சதங்கள் அடித்த பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார். அதே ஆண்டில் இங்கிலாந்தின் ஹெட்டிங்லியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போட்டியில் 193 ரன்கள் குவித்து 30-வது சதம் கண்டார். இதன்மூலம் பிராட்மேனின் (29 சதங்கள்) சாதனையையும் அவர் தகர்த்தார். தனது 99-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.



2003: உலகக் கோப்பை போட்டியில் 11 ஆட்டங்களில் விளையாடி 673 ரன்கள் குவித்து அந்த உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையும் அவர் வசமானது.

2004: டெஸ்ட் போட்டியில் 34 சதங்கள் அடித்த சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். கேரி கிர்ஸ்டன், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த 3-வது வீரர் என்ற பெருமையை எட்டினார். ஒருநாள் போட்டியில் 50 ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற கெüரவத்தையும் பெற்றார்.

2005: தனது 122-வது டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

2006: ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் 40-வது சதத்தை நிறைவுசெய்தார்.



2007: 400-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார்.



2008: இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சி.பி. தொடரின்போது ஒருநாள் போட்டியில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்தார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவரான மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை (11,953 ரன்கள்) முறியடித்தார்.

2009: ஹைதராபாதில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்தார் சச்சின்.

2010: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதமடித்தவர் என்ற பெருமை அவர் அவசமானது. அதே ஆண்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் வாஹின் சாதனையை (168) முறியடித்தார்.

2011: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடியபோது அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் சனத் ஜயசூர்யாவின் சாதனையை (444 ஆட்டங்கள்) முறியடித்தார். அந்த உலகக் கோப்பையில் 482 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணியில் அதிக ரன் குவித்தவரானார்.

2012: ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக தனது 100-வது சதத்தை நிறைவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 114 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் சதங்கள்



ரன் எதிரணி இன்னிங்ஸ் இடம் தேதி முடிவு

1. 119* இங்கிலாந்து 2 மான்செஸ்டர் 1990 ஆக.14 டிரா

2. 148* ஆஸ்திரேலியா 1 சிட்னி 1992 ஜன.6 டிரா

3. 114 ஆஸ்திரேலியா 1 பெர்த் 1992 பிப்.3 தோல்வி

4. 111 தென் ஆப்பிரிக்கா 1 ஜோகன்னஸ்பர்க் 1992 நவ.28 டிரா

5. 165 இங்கிலாந்து 1 சென்னை 1993 பிப்.12 வெற்றி

6. 104* இலங்கை 2 கொழும்பு 1993 ஜூலை 31 வெற்றி

7. 142 இலங்கை 1 லக்னௌ 1994 ஜன.19 வெற்றி

8. 179 மேற்கிந்தியத் தீவுகள் 1 நாகபுரி 1994 டிச.2 டிரா

9. 122 இங்கிலாந்து 2 பர்மிங்ஹாம் 1996 ஜூன் 8 தோல்வி

10. 177 இங்கிலாந்து 1 நாட்டிங்காம் 1996 ஜூலை 5 டிரா

11. 169 தென் ஆப்பிரிக்கா 1 கேப்டவுன் 1997 ஜன.4 தோல்வி

12. 143 இலங்கை 1 கொழும்பு 1997 ஆக.3 டிரா

13. 139 இலங்கை 1 கொழும்பு 1997 ஆக.11 டிரா

14. 148 இலங்கை 1 மும்பை 1997 டிச.4 டிரா

15. 155* ஆஸ்திரேலியா 2 சென்னை 1998 மார்ச் 9 வெற்றி

16. 177 ஆஸ்திரேலியா 1 பெங்களூர் 1998 மார்ச் 26 தோல்வி

17. 113 நியூசிலாந்து 2 வெலிங்டன் 1998 டிச.29 தோல்வி

18. 136 பாகிஸ்தான் 2 சென்னை 1999 ஜன.31 தோல்வி

19. 124* இலங்கை 2 கொழும்பு 1999 பிப்.28 டிரா

20. 126* நியூசிலாந்து 2 மொஹாலி 1999 அக்.13 டிரா

21. 217 நியூசிலாந்து 1 ஆமதாபாத் 1999 அக்.30 டிரா

22. 116 ஆஸ்திரேலியா 1 மெல்போர்ன் 1999 டிச.28 தோல்வி

23. 122 ஜிம்பாப்வே 1 புது தில்லி 2000 நவ.21 வெற்றி

24. 201* ஜிம்பாப்வே 1 நாகபுரி 2000 நவ.26 டிரா

25. 126 ஆஸ்திரேலியா 1 சென்னை 2001 மார்ச் 20 வெற்றி

26. 155 தென் ஆப்பிரிக்கா 1 புளோயம்பாண்டீன் 2001 நவ.3 தோல்வி

27. 103 இங்கிலாந்து 1 ஆமதாபாத் 2001 டிச.13 டிரா

28. 176 ஜிம்பாப்வே 1 நாகபுரி 2002 பிப்.24 வெற்றி

29. 117 மேற்கிந்தியத் தீவுகள் 1 போர்ட் ஆஃப் ஸ்பெயின் 2002 ஏப்.20 வெற்றி

30. 193 இங்கிலாந்து 1 லீட்ஸ் 2002 ஆக.23 வெற்றி

31. 176 மேற்கிந்தியத் தீவுகள் 2 கொல்கத்தா 2002 நவ.3 டிரா

32. 241* ஆஸ்திரேலியா 1 சிட்னி 2004 ஜன.4 டிரா

33. 194* பாகிஸ்தான் 1 முல்தான் 2004 மார்ச் 29 வெற்றி

34. 248* வங்கதேசம் 1 டாக்கா 2004 டிச.12 வெற்றி

35. 109 இலங்கை 1 புது தில்லி 2005 டிச.22 வெற்றி

36. 101 வங்கதேசம் 1 சிட்டகாங் 2007 மே 19 டிரா

37. 122* வங்கதேசம் 1 மிர்பூர் 2007 மே 26 வெற்றி

38 154* ஆஸ்திரேலியா 1 சிட்னி 2008 ஜன.4 தோல்வி

39. 153 ஆஸ்திரேலியா 1 அடிலெய்டு 2008 ஜன.25 டிரா

40. 109 ஆஸ்திரேலியா 1 நாகபுரி 2008 நவ.6 வெற்றி

41. 103* இங்கிலாந்து 2 சென்னை 2008 டிச.15 வெற்றி

42. 160 நியூசிலாந்து 1 ஹாமில்டன் 2009 மார்ச் 20 வெற்றி

43. 100* இலங்கை 2 ஆமதாபாத் 2009 நவ.20 டிரா

44. 105* வங்கதேசம் 1 சிட்டகாங் 2010 ஜன.18 வெற்றி

45. 143 வங்கதேசம் 1 மிர்பூர் 2010 ஜன.25 வெற்றி

46. 100 தென் ஆப்பிரிக்கா 2 நாகபுரி 2010 பிப்.9 தோல்வி

47. 106 தென் ஆப்பிரிக்கா 1 கொல்கத்தா 2010 பிப்.15 வெற்றி

48. 203 இலங்கை 1 கொழும்பு 2010 ஜூலை 28 டிரா

49. 214 ஆஸ்திரேலியா 1 பெங்களூர் 2010 அக்.11 வெற்றி

50. 111* தென் ஆப்பிரிக்கா 2 செஞ்சுரியன் 2010 டிச.19 தோல்வி

51. 146 தென் ஆப்பிரிக்கா 1 கேப்டவுன் 2011 ஜன.4 டிரா

நாடுகள் வாரியாக-டெஸ்டில்

எதிரணி போட்டி இன். நா.அ ரன் அ.ப. சரா 100 50

ஆஸ்திரேலியா 35 67 7 3,438 241 * 57.30 11 15

பாகிதான் 18 27 2 1,057 194 * 42.28 2 7

இலங்கை 25 36 3 1,995 203 60.45 9 6

மே.இ.தீவுகள் 19 30 2 1,546 179 55.21 3 9

ஜிம்பாப்வே 9 14 2 918 201 * 76.50 3 3

இங்கிலாந்து 28 47 4 2,423 193 56.34 7 12

நியூஸிலாந்து 22 36 5 1,532 217 49.41


தென் ஆப்பிரிக்கா 25 45 4 1,741 169 42.46 7 5

வங்கதேசம் 7 9 3 820 248 * 136.66 5 -

மொத்தம் 188 311 32 15,470 248 * 55.44 51 65

இந்தியாவில்... 82 135 15 6,765 217 56.37 22 29

வெளிநாட்டில்... 106 176 17 8,705 248 * 54.74 29 36

முதல் இன்னிங்ஸ் - 185 9 10,924 248 * 62.06 38 43

2-வது இன்னிங்ஸ் - 126 23 4,546 176 44.13 13 22

ஒருநாள் போட்டியில்...

எதிரணி போட்டி இன். நா.அ ரன் அ.ப. சரா 100 50

ஆஸ்திரேலியா 71 70 1 3,077 175 44.59 9 15

பாகிஸ்தான் 68 66 4 2,474 141 39.90 5 15

இலங்கை 84 80 9 3,113 138 43.84 8 17

மே.இ.தீவுகள் 39 39 9 1,573 141* 52.43 4 11

ஜிம்பாப்வே 34 33 5 1,377 146 49.17 5 5

இங்கிலாந்து 37 37 4 1,455 120 44.09 2 10

நியூஸிலாந்து 42 41 3 1,750 186* 46.05 5 8

தென் ஆப்பிரிக்கா 57 57 1 2,001 200* 35.73 5 8

வங்கதேசம் 12 11 1 496 114 49.60 1 2

பெர்முடா 1 1 1 57 57* - - 1

அயர்லாந்து 2 2 - 42 38 21.00 - -

கென்யா 10 9 3 647 146 107.83 4 1

நமீபியா 1 1 - 152 152 152.00 1 -

நெதர்லாந்து 2 2 - 79 52 39.50 - 1

யூ.ஏ.இ. 2 2 - 81 63 40.50 - 1

மொத்தம் 462 451 41 18,374 200* 44.81 49 95

இந்தியாவில் 164 160 15 6,976 200* 48.11 20 38

பொதுவான

இடத்தில் 151 145 16 6,333 152 49.09 17 33

வெளிநாட்டில் 147 146 10 5,065 163* 37.24 12 24

ஒரு நாள் போட்டி சதங்கள்

ரன் எதிரணி இடம் தேதி முடிவு

1. 110 ஆஸ்திரேலியா கொழும்பு 1994 செப்.9 வெற்றி

2. 115 நியூசிலாந்து வடோதரா 1994 அக்.28 வெற்றி



3. 105 மேற்கிந்தியத் தீவுகள் ஜெய்ப்பூர் 1994 நவ.11 வெற்றி



4. 112* இலங்கை ஷார்ஜா 1995 ஏப்.9 வெற்றி



5. 127* கென்யா கட்டக் 1996 பிப்.18 வெற்றி



6. 137 இலங்கை புது தில்லி 1996 மார்ச் 2 தோல்வி



7. 100 பாகிஸ்தான் சிங்கப்பூர் 1996 ஏப்.5 தோல்வி



8. 118 பாகிஸ்தான் ஷார்ஜா 1996 ஏப்.15 வெற்றி



9. 110 இலங்கை கொழும்பு 1996 ஆக.28 தோல்வி



10. 114 தென் ஆப்பிரிக்கா மும்பை 1996 டிச.14 வெற்றி



11. 104 ஜிம்பாப்வே பெனானி 1997 பிப்.9 வெற்றி



12. 117 நியூசிலாந்து பெங்களூர் 1997 மே 14 வெற்றி



13. 100 ஆஸ்திரேலியா கான்பூர் 1998 ஏப்.7 வெற்றி



14. 143 ஆஸ்திரேலியா ஷார்ஜா 1998 ஏப்.22 தோல்வி



15. 134 ஆஸ்திரேலியா ஷார்ஜா 1998 ஏப்.24 வெற்றி



16. 100* கென்யா கொல்கத்தா 1998 மே 31 வெற்றி



17. 128 இலங்கை கொழும்பு 1998 ஜூலை 7 வெற்றி



18. 127* ஜிம்பாப்வே புலவாயோ 1998 செப்.26 வெற்றி



19. 141 ஆஸ்திரேலியா டாக்கா 1998 அக்.28 வெற்றி



20. 118* ஜிம்பாப்வே ஷார்ஜா 1998 நவ.8 வெற்றி



21. 124* ஜிம்பாப்வே ஷார்ஜா 1998 நவ.13 வெற்றி



22. 140* கென்யா பிரிஸ்டல் 1999 மே 23 வெற்றி



23. 120 இலங்கை கொழும்பு 1999 ஆக.29 வெற்றி



24. 186 நியூசிலாந்து ஹைதராபாத் 1999 நவ.8 வெற்றி



25. 122 தென் ஆப்பிரிக்கா வடோதரா 2000 மார்ச் 17 வெற்றி



26. 101 இலங்கை ஷார்ஜா 2000 அக்.20 தோல்வி



27. 146 ஜிம்பாப்வே ஜோத்பூர் 2000 டிச.8 தோல்வி



28. 139 ஆஸ்திரேலியா இந்தூர் 2001 மார்ச் 31 வெற்றி



29. 122* மேற்கிந்தியத் தீவுகள் ஹராரே 2001 ஜூலை 4 வெற்றி



30. 101 தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் 2001 அக்.5 தோல்வி



31. 146 கென்யா பார்ல் 2001 அக்.24 வெற்றி


32. 105* இங்கிலாந்து செஸ்டர் லீ ஸ்டிரீட் 2002 ஜூலை 4 முடிவு இல்லை


33. 113 இலங்கை பிரிஸ்டல் 2002 ஜூலை 11 வெற்றி



34. 152 நமீபியா பீட்டர்மெரிட்ஸ்பர்க் 2003 பிப்.23 வெற்றி



35. 100 ஆஸ்திரேலியா குவாலியர் 2003 அக்.26 வெற்றி



36. 102 நியூசிலாந்து ஹைதராபாத் 2003 நவ.15 வெற்றி

37. 141 பாகிஸ்தான் ராவல்பிண்டி 2004 மார்ச் 16 தோல்வி

38. 123 பாகிஸ்தான் ஆமதாபாத் 2005 ஏப்.12 தோல்வி

39. 100 பாகிஸ்தான் பெஷாவர் 2006 பிப்.6 தோல்வி

40. 141* மேற்கிந்தியத் தீவுகள் கோலாலம்பூர் 2006 செப்.14 தோல்வி

41. 100* மேற்கிந்தியத் தீவுகள் வடோதரா 2007 ஜன.31 வெற்றி

42. 117* ஆஸ்திரேலியா சிட்னி 2008 மார்ச் 2 வெற்றி

43. 163* நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் 2009 மார்ச் 8 வெற்றி

44. 138 இலங்கை கொழும்பு 2009 செப்.14 வெற்றி

45. 175 ஆஸ்திரேலியா ஹைதராபாத் 2009 நவ.5 தோல்வி

46. 200* தென் ஆப்பிரிக்கா குவாலியர் 2010 பிப்.24 வெற்றி

47. 120 இங்கிலாந்து பெங்களூர் 2011 பிப்.27 "டை'

48. 111 தென் ஆப்பிரிக்கா நாகபுரி 2011 மார்ச் 12 தோல்வி

49 114 வங்கதேசம் டாக்கா 2012 மார்ச் 16 தோல்வி

50 கிலோ எடையை இழந்ததாக உணர்ந்தேன்

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100-வது சதத்தை அடித்தபிறகு 50 கிலோ எடையை இழந்தது போன்று உணர்ந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: என்னைச் சுற்றி இருந்த 100-வது சதம் என்ற மைல்கல் காரணமாக மனதளவில் மிகவும் கடினமாக உணர்ந்தேன். சதமடித்த பிறகு மகிழ்ச்சியில் மூழ்கவில்லை என்றாலும், 50 கிலோ எடையை இழந்ததுபோன்று உணர்ந்தேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இது எனக்கு மிகவும் கடினமான காலக்கட்டமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியத் தொடர் கடினமாக அமைந்தது. அதில் சிறப்பாக விளையாடியபோதும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதாக கருதுகிறேன். எவ்வளவு சதமடிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, அணிக்காக ஆடுவதே முக்கியம். 100-வது சதத்தைப் பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால் ஹோட்டல் உள்ளிட்ட எந்த இடத்தில் நான் இருந்தாலும், அங்கெல்லாம் என்னுடைய 100-வது சதத்தைப் பற்றிதான் ஊடகங்கள் பேசின. இது எனக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. யாரும் என்னுடைய 99 சதங்களைப் பற்றி பேசவில்லை என்றார்.



தனது ஒருநாள் போட்டி வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மிகவும் மெதுவாக ஆடி ரன் குவித்தார். அதுபற்றி கூறுகையில், " ரன் குவிப்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து சரியான முறையில் பேட்டுக்கு வரவில்லை' என்றார்.


மூலம் : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=568095&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=சதத்தில் சதம் கண்டார் சச்சின்

சனி, மார்ச் 10, 2012

பிள்ளையார் சுழி போட்டு விட்டார் டிராவிட்... பின் தொடருவாரா சச்சின்?

மூத்த வீரர்கள் போக வேண்டும், போயே ஆக வேண்டும் என்ற பலத்த கூக்குரல்களுக்கு மத்தியில், ஒரு ஜென்டில்மேன் வீரர் தனது ஓய்வை அழகாக அறிவித்து விட்டார். ராகுல் டிராவிடின் ஓய்வு முடிவு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும், சுவாசிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பெருத்த ஏமாற்றம்தான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு ஒன்று இருக்குமில்லையா, அதைத்தான் ராகுல் இன்று செய்துள்ளார். ஆனால் சச்சின் எப்போது இந்த முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.

நிச்சயம் சச்சினை யாரும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை, முடியவும் முடியாது. பிராட்மேனையே மிஞ்சியவர்தான் சச்சின், சந்தேகமில்லை. அவரைப் போன்ற ஒரு பிரமாதமான வீரர் நிச்சயம் இந்த நிமிடத்தில் யாரும் இல்லைதான். ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டு இல்லையா, இன்று டிராவிட் செய்ததை நாளை நிச்சயம் சச்சினும் செய்யத்தான் போகிறார். ஆனால் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாக செய் என்பது பழமொழி. அந்த வகையில், கெளரவமான நேரத்தில் விடைபெறுவதுதான் சாலச் சிறந்தது, சிறப்பானது என்பது இங்கு நோக்கப்பட வேண்டியதாகும்.

ராகுல் டிராவிட் அதைத் தான் செய்துள்ளார். பெரிசுகள் எல்லோம் கிளம்பிப் போக வேண்டும் என்ற பேச்சு கிளம்பியதுமே தனது ஒரு நாள் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்தார் டிராவிட். ஆனால் அந்த ஓய்வு முடிவை அறிவித்தபோது அவர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பிரமாதமாக ஆடிக் கொண்டிருந்தார் - அவர் மட்டும்தான் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார் என்பதையும் சொல்ல வேண்டும். அப்போது, வி.வி.எஸ்.லட்சுமன் கூட ஏமாற்றி விட்டார் - சச்சினும்தான்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த டிராவிட், எதிர்பார்த்தது போல ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் அத்தனை வீரர்களுமே, டிராவிட் உள்பட சரியாக ஆடவில்லை- சச்சினும்தான்.

எனவேதான் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று வழி விட வேண்டும். இளம் தலைமுறையினரை தயார் படுத்த வேண்டும். அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக புதிய இந்திய அணியை உருவாக்க வேண்டியது அவசியம் என்று பலரும், குறிப்பாக கவாஸ்கர் போன்றவர்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

வி.வி.எஸ்.லட்சுமன் விலக வேண்டும், ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். சச்சினும் விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர் - கவாஸ்கரும்தான்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் சட்டென தனது முடிவை சந்தோஷமாக அறிவித்துள்ளார் டிராவிட். இதன் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் சீனப் பெருஞ்சுவராக உயர்ந்திருக்கிறார் டிராவிட்.

அவரது சாதனைகள் சாதாரணமானவை அல்ல. கங்குலி காலத்தில் இவரைப் போல யாரும் படாதபாடு பட்டிருக்க மாட்டார்கள். காரணம், ஒரு பேட்ஸ்மேனாக ரன்களைக் குவிக்கவும் வைத்தார், அதேபோல விக்கெட் கீப்பர் வேலையையும் சுமத்தி பென்டெடுத்தார் கங்குலி. ஆனாலும் சற்றும் சளைக்காமல் 'கேப்டன்' இட்ட பணிகளை 'காட்' இட்ட பணியாக நினைத்து பிரமாதமாக ஆடி அசத்தியவர்தான் டிராவிட்.

இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக வலம் வந்தபோதிலும், டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்தோர் பட்டியலில் 2வது இடம், கேட்ச் பிடிப்பதில் சாதனை என பல பெருமைகளை கையில் வைத்திருந்தபோதும், மூத்தவர்கள் சரியாக ஆடவில்லை என்ற பேச்சு கிளம்பியுடனேயே தனது ஓய்வை அறிவித்திருப்பது நிச்சயம் டிராவிடுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான்.

டிராவிடைப் பின்பற்றப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இப்போதைக்கு பட்டியலில் இருப்பவர்கள் சச்சின் டெண்டுல்கரும், விவிஎஸ் லட்சுமனும்தான். பெரிய பட்டியல் கூட இல்லை. இரண்டே இரண்டு பேர்தான்.

இதில் எப்படியும் லட்சுமனை சீக்கிரமே ஓரம் கட்டி விட வாய்ப்புள்ளது. ஆனால் சச்சினை அப்படிச் செய்ய மாட்டார்கள். காரணம், அவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படுகிறவர் என்பதால், கடவுளைப் போய் எப்படிப்பா ஓரம் கட்டுவது என்று மூக்கை உறிஞ்சியபடியே ஸ்ரீகாந்த் கேட்டாலும் கேட்பார். எனவே சச்சினாகப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஒன்றுமில்லை, ஒரு நாள் போட்டிகளிலிருந்து மட்டும் சச்சின் ஓய்வு பெற்றால் கூட போதும். அவர் சாதிக்க வேண்டிய பிற சாதனைகளை அடுத்த ஒன்று அல்லது 2 டெஸ்ட் தொடரில் அவர் சாதித்து விட முடியும். ஏற்கனவே அவர் சர்வதேச 20 டுவென்டி போட்டிகளில் ஆடுவதில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமதான் ஆடி வருகிறார். அப்படியே ஒரு நாள் போட்டிகளையும் அவர் நிறுத்தி விடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரலாம். இதன் மூலம் அவர் மேலும் சில ஆண்டுகள் வரை விளையாட முடியும். காரணம், அவருக்குள் கிரிக்கெட் முழுமையாக வற்றிப் போய் விடவில்லை. எங்கேயோ பிளாக் ஆகி நிற்கிறது, அந்த அடைப்பை சரி செய்ய இந்த பிரேக் உதவலாம்.

கடவுள் நினைப்பதை யாராலும் ஊகிக்க முடியாது. சச்சின் விஷயத்திலும் கூட அப்படித்தான். ஆனால் கடவுள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைப்பார். சச்சின் எப்படியோ...

மூலம் : http://vizhiyepesu.blogspot.com/2012/03/blog-post_4423.html

வியாழன், மார்ச் 08, 2012

தங்கத்தின் விலை வளர்ச்சி






ஆதாரம் : http://pkp.blogspot.in/

வியாழன், பிப்ரவரி 16, 2012

புதிய பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.

தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது. இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.
இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார். தற்போது தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர், 2011-12 "பிக்பாஷ்' "டுவென்டி-20' தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்தார்.
முத்தரப்பு தொடர் முடிந்ததும், இவர் பவுலிங் பயிற்சியாளராக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.

ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=12324&Value3=I

புதன், பிப்ரவரி 01, 2012

வெப்சைட் V ப்ளாக்

வெப் ஹோஸ்டிங் என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும். இங்கு ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன். ஆனால் இன்று வெறும் சொந்த டொமைன் வைத்து எழுதினாலே அது வெப்சைட் என்று சொல்லும் வண்ணம் ஆகிவிட்டது.


ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.


பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வடிவமைப்பு என்பது மட்டும் அல்ல, பல்வேறு வசதிகள்.


ஒவ்வொரு வெப் சைட்டும் ஒரு ப்ளாக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து உள்ளீர்கள் என்றால், அந்த வெப் சைட் மூலம் உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை சொல்ல வேண்டும். நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்வது ப்ளாக். உதாரணம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் தன்னுடைய நிறுவனம் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி அதன் தளத்தில் சொல்லி இருக்கும், அதே ஒரு நிகழ்ச்சி ஒரு புதிய வசதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதைப் பற்றி சொல்வதற்கு அதன் ப்ளாக் பயன்படுத்தும்.

மூலம் : http://www.muruganandam.in/2011/12/what-is-web-hosting.html#more

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts