செவ்வாய், நவம்பர் 25, 2014

சுயமுன்னேற்றம்



செரி காட்டர் ஸ்காட்டின் என்பவர் சுயமுன்னேற்றம் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர் மனிதராயிருக்க பத்து விதிகள் என கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.
ஒன்றாம் விதி : நீங்கள் ஒரு உடலைப் பெறுவீர்கள். (நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, வாழ்க்கை முழுவதும் அது உங்களுடையதுதான். ஆகவே,அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளே இருப்பதுதான் முக்கியம்.)
இரண்டாம் விதி: உங்களுக்கு பாடங்கள் கிடைக்கும்
மூன்றாம் விதி: தவறுகள் என்பதே கிடையாது. எல்லாமே பாடங்கள்தான்.
நான்காம் விதி: கற்று முடியும்வரை பாடங்கள் தொடரும்.
ஐந்தாம் விதி: கற்றல் முடிவதில்லை.
ஆறாம் விதி: இருக்கும் இடத்தைவிட சிறந்தது எதுவுமில்லை.
ஏழாம் விதி: பிறர் உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே!
எட்டாம் விதி: உங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.
ஒன்பதாம் விதி: உங்களுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
பத்தாம் விதி: இவை அனைத்தையும் பிறக்கும்போது மறந்துவிடுவீர்கள்.
( நாம் அனைவரும் இத்தகைய குணங்களோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது ஆரம்பகால அனுபவங்கள் நம்மை நமது ஆன்ம பலத்தை இழக்கச் செய்து பொருளியல் உலகினுள் திருப்பி விடுகின்றன. நாம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டவர்களாகிறோம்.)

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts