செவ்வாய், ஜூன் 16, 2015

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

!!~ இராஜேந்திரன்
தமிழரசு ~!
நன்றி :ஆசிரியர் பக்கம்
https://www.facebook.com/groups/info.thagaval/


நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!!

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts