செவ்வாய், டிசம்பர் 28, 2010

ப்ளாக் [Blog] -ன் வரலாறு

ஓர் வலைப்பதிவு வெளியீடு அமைப்பாகும்.இதனை முதலில் பைரா லாப்ஸ் என்ற நிறுவனம் 1999ஆம் ஆண்டு உருவாக்கியது. பின்னர் 2003ஆம்ஆண்டில் கூகிள்/Google நிறுவனம் இவ்வமைப்பை வாங்கியது.இங்கு சொந்த வலைத்தளங்கள் இல்லாத வலைப்பதிவர்கள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டு blogspot.com என்ற துணைபரப்பில் இந்நிறுவன வழங்கியில் இருந்து வெளியிடுகிறார்கள். இந்த சேவையை கூகிள்/Google இலவசமாக வழங்குகிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil25.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

வியாழன், டிசம்பர் 23, 2010

தண்ணீரின் மேல் நடக்கலாம்

வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.

ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.


நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்

இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.




உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.

மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,




நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.



நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.

மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.


ஆதாரங்களுடன் நன்றி : http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_5384.html

திங்கள், டிசம்பர் 20, 2010

சச்சின் சகாப்தம்

இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.


37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தார்.


21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், தனது 175-வது டெஸ்ட் போட்டியில் 50-வது சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.


இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 1,532 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 7 சதங்களை விளாசியுள்ளார். அவரின் சராசாரி 85 ரன்கள் ஆகும்.


இதுவரை 175 டெஸ்ட் போட்டியில் விளையாடி 14,500 ரன்களுக்கு மேல் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சினே முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 சதங்களுடனும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 37 சதங்களுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.


ஒருநாள் போட்டியில் 46 சதம்


442 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 17,598 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின் விரைவில் 50-வது சதத்தை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் வாழ்த்து


டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்துள்ள சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=349031&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடர்கிறது சச்சின் சகாப்தம்


சச்சின் வரலாறு:

மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை "ஆப்சைடில்' தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார்.

தொடரும் சாதனை பயணம்...

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

50 சதம் வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010

ஆஸி.,க்கு எதிராக அதிகம்


தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி சதங்கள்

1. ஆஸ்திரேலியா 11

2. இலங்கை 9

3. இங்கிலாந்து 7

4. தென் ஆப்ரிக்கா 6

5. வங்கதேசம் 5

6. நியூசிலாந்து 4

7. வெஸ்ட் இண்டீஸ் 3

8. ஜிம்பாப்வே 3

9. பாகிஸ்தான் 2

தோனிக்கு பெருமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஆதாரங்களுடன் நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=
7955&Value3=I

வெள்ளி, டிசம்பர் 17, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.z9tech.com/view.php?22Amld0b4jF0Qd4a2KMC2e2cBnd3cdeZBZV203eQAA2e2q69racd3JOo40

திங்கள், டிசம்பர் 13, 2010

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது. வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.
1.சிறந்த பதிவுகளை வெளியிடவும்.
2.மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.
3.உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.
4.உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.
6.உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம். அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.
7.உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.
8.ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.
9.உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்
10.உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.
11.உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.
12.ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.
13.நேரம் தவறாமல் பதிவு போடவும்.
14.Popular Post விட்ஜெட் சேருங்கள்.
15.உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.
16.உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.
17.உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.
18.வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது.
19.உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.
20.உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.
21.உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.
22.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords
23.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add
24.follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.
25.Archive விட்ஜெட் பொருத்துங்கள்.
26.Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும்.
27.Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.
28.Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.
29.உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.
30.உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.
31.ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
32.பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.
33.கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.
34.உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.
35.உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.
36.Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.
37.உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள்.
38.பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
39.தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம்.
40.தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.
இந்த வழிகளை கடைபிடித்தால் கூடிய விரைவில் நீங்கள் சிறந்த பதிவராக வலம் வரலாம்.

ஆதாரம் நன்றிகளுடன் : http://vandhemadharam.blogspot.com/2010/09/40.html

வெள்ளி, டிசம்பர் 10, 2010

Windows Xp – Commands – Cpl list

Run command is very useful, but sometimes it is forgotten. Use it sometimes and you will find how powerful is run command.

1.Accessibility Controls – access.cpl
2.Accessibility Wizard – accwiz
3.Add Hardware Wizard – hdwwiz.cpl
4.Add/Remove Programs – appwiz.cpl
5.Administrative Tools – control admintools
6.Automatic Updates – wuaucpl.cpl
7.Bluetooth Transfer Wizard – fsquirt

8.Calculator – calc
9.Certificate Manager – certmgr.msc
10.Character Map – charmap
11.Check Disk Utility – chkdsk
12.Clipboard Viewer – clipbrd
13.Command Prompt – cmd
14.Component Services – dcomcnfg
15.Computer Management – compmgmt.msc
16.Control Panel – control
17.Date and Time Properties – timedate.cpl
18.DDE Shares – ddeshare
19.Device Manager – devmgmt.msc
20.Direct X Troubleshooter – dxdiag
21.Disk Cleanup Utility – cleanmgr
22.Disk Defragment – dfrg.msc
23.Disk Management – diskmgmt.msc
24.Disk Partition Manager – diskpart
25.Display Properties – control desktop
26.Display Properties – desk.cpl
27.Dr. Watson System Troubleshooting Utility – drwtsn32
28.Driver Verifier Utility – verifier
29.Event Viewer – eventvwr.msc
30.Files and Settings Transfer Tool – migwiz
31.File Signature Verification Tool – sigverif
32.Findfast – findfast.cpl
33.Firefox – firefox
34.Folders Properties – control folders
35.Fonts – control fonts
36.Fonts Folder – fonts
37.Free Cell Card Game – freecell
38.Game Controllers – joy.cpl
39.Group Policy Editor (for xp professional) – gpedit.msc
40.Hearts Card Game – mshearts
41.Help and Support – helpctr
42.HyperTerminal – hypertrm
43.Iexpress Wizard – iexpress
44.Indexing Service – ciadv.msc
45.Internet Connection Wizard – icwconn1
46.Internet Explorer – iexplore
47.Internet Properties – inetcpl.cpl
48.Keyboard Properties – control keyboard
49.Local Security Settings – secpol.msc
50.Local Users and Groups – lusrmgr.msc
51.Logs You Out Of Windows – logoff
52.Malicious Software Removal Tool – mrt
53.Microsoft Chat – winchat
54.Microsoft Movie Maker – moviemk
55.Microsoft Paint – mspaint
56.Microsoft Syncronization Tool – mobsync
57.Minesweeper Game – winmine
58.Mouse Properties – control mouse
59.Mouse Properties – main.cpl
60.Netmeeting – conf
61.Network Connections – control netconnections
62.Network Connections – ncpa.cpl
63.Network Setup Wizard – netsetup.cpl
64.Notepad notepad
65.Object Packager – packager
66.ODBC Data Source Administrator – odbccp32.cpl
67.On Screen Keyboard – osk
68.Outlook Express – msimn
69.Paint – pbrush
70.Password Properties – password.cpl
71.Performance Monitor – perfmon.msc
72.Performance Monitor – perfmon
73.Phone and Modem Options – telephon.cpl
74.Phone Dialer – dialer
75.Pinball Game – pinball
76.Power Configuration – powercfg.cpl
77.Printers and Faxes – control printers
78.Printers Folder – printers
79.Regional Settings – intl.cpl
80.Registry Editor – regedit
81.Registry Editor – regedit32
82.Remote Access Phonebook – rasphone
83.Remote Desktop – mstsc
84.Removable Storage – ntmsmgr.msc
85.Removable Storage Operator Requests – ntmsoprq.msc
86.Resultant Set of Policy (for xp professional) – rsop.msc
87.Scanners and Cameras – sticpl.cpl
88.Scheduled Tasks – control schedtasks
89.Security Center – wscui.cpl
90.Services – services.msc
91.Shared Folders – fsmgmt.msc
92.Shuts Down Windows – shutdown
93.Sounds and Audio – mmsys.cpl
94.Spider Solitare Card Game – spider
95.SQL Client Configuration – cliconfg
96.System Configuration Editor – sysedit
97.System Configuration Utility – msconfig
98.System Information – msinfo32
99.System Properties – sysdm.cpl
100.Task Manager – taskmgr
101.TCP Tester – tcptest
102.Telnet Client – telnet
103.User Account Management – nusrmgr.cpl
104.Utility Manager – utilman
105.Windows Address Book – wab
106.Windows Address Book Import Utility – wabmig
107.Windows Explorer – explorer
108.Windows Firewall – firewall.cpl
109.Windows Magnifier – magnify
110.Windows Management Infrastructure – wmimgmt.msc
111.Windows Media Player – wmplayer
112.Windows Messenger – msmsgs
113.Windows System Security Tool – syskey
114.Windows Update Launches – wupdmgr
115.Windows Version – winver
116.Windows XP Tour Wizard – tourstart
117.Wordpad – write

Source with Courtesy : http://sysadminblog.net/?p=81

சனி, நவம்பர் 27, 2010

தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்

1907

•முதலாவது Wireless Telephone System உருவானது

1930

•முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

1931

•கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

1936

•போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

1940

•எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943

•முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947

•Citezen 's Band Radio , Car Radiotelephone

1947

•Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949

•Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954

•முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956

•கார் மொபைல் போன் சிஸ்டம்

1958

•கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

1966

•Cordless தொலைபேசி உருவானது

1972

•இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

1973

•முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983

•முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

1991

•உலகின் முதலாவது GSM செலூலர் போன்

1993

•SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994

•Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995

•முதலாவது இரு வழி பேஜர் உருவானது

1998

•Nokia 2110
•முதலாவது Color Palm -Size PC

2000

•முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002

•Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003

•Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004

•மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005

•Maicrosoft 3G போன்

2006

•Microft Windows 5 .0 Smartphone
•Motrola வின் Ming Smartphone
போன்றன பாவனைக்கு வந்தது

2007


•iPod Touch
•Apple இன் iPhone
•Android OS
•Wi -Max
•Amzon Kindle (Wirless Reading Device )
போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின

2008

•முதலாவது Androd Phone
•HTC Dream
•iPhone 3G
•iPhone இக்கான SKD
என்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

2009

•Nokia 900 அறிமுகமானது

2010


•iPad ,IPhone 4 , BlackBerry Play Book
பயன்பாட்டுக்கு வந்தது.

ஆதாரம் : http://nishole.blogspot.com/2010/11/blog-post_25.html

நுண்ணறிவு

நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், பண்பியல் பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், , இதனை, ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.

நன்றி : http://psychologytamil.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

வியாழன், நவம்பர் 25, 2010

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?

வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?22Amld0b4XF0Qd4a2AMM2e2cBnd3cdeZBZV203eQAA2e2M69racd2JO440

சனி, நவம்பர் 20, 2010

அரசியல் ஆத்திச்சூடி..!!

அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை சுருட்டு.,

இலவசம் குடு.,

ஈயையும் கட்சியில் சேர்.,

உண்மையை மறை.,

ஊழலை உலகமயமாக்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ஐந்து காலேஜாவது கட்டு.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,

ஓடி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,

நன்றி : http://gokulathilsuriyan.blogspot.com/2010/11/blog-post_19.html

வெள்ளி, நவம்பர் 12, 2010

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

1.அட்சரங்கள்.
2.விகிதம்.
3.கணிதம்.
4.வேதம்.
5.புராணம்.
6.வியாகரணம்.
7.ஜோதிடம்.
8.தர்ம சாஸ்திரம்.
9.யோக சாஸ்திரம்.
10.நீதி சாஸ்திரம்.
11.மந்திர சாஸ்திரம்.
12.நிமித்த சாஸ்திரம்.
13.சிற்ப சாஸ்திரம்.
14.வைத்திய சாஸ்திரம்.
15.சாமுத்ரிகா லட்சணம்.
16.சப்தப்பிரம்மம்.
17.காவியம்.
18.அலங்காரம்.
19.வாக்கு வன்மை.
20.கூத்து.
21.நடனம்.
22.வீணை இசை.
23.புல்லாங்குழல் வாசிப்பு.
24.மிருதங்க இசை.
25.தாளம்.
26.ஆயுதப் பயிற்சி.
27.ரத்னப்பரீட்சை.
28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
30.குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
31.ரத சாஸ்திரம்.
32.பூமியறிதல்.
33.போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம்.
34.மற்போர் சாஸ்திரம்.
35.வசீகரித்தல்.
36.உச்சாடனம்.
37.பகைமூட்டுதல்.
38.காம சாஸ்திரம்.
39.மோகனம்.
40.ஆகரஷனம்.
41.ரசவாதம்.
42.கந்தரவ ரகசியம்.
43.மிருக பாஷை அறிதல்.
44.துயரம் மாற்றுதல்.
45.நாடி சாஸ்திரம்.
46.விஷம் நீக்கும் சாஸ்திரம்.
47.களவு.
48.மறைத்துரைத்தல்.
49.ஆகாயப் பிரவேசம்.
50.விண் நடமாட்டம்.
51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
52.அரூபமாதல்.
53.இந்திர ஜாலம்.
54.மகேந்திர ஜாலம்.
55.அக்னி ஸ்தம்பனம்.
56.ஜலஸ்தம்பனம்.
57.வாயு ஸ்தம்பனம்.
58.கண்கட்டு வித்தை.
59.வாய்கட்டு வித்தை.
60.சுக்கில ஸ்தம்பனம்.
61.சுன்ன ஸ்தம்பனம்.
62.வாள்வித்தை.
63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
64.இசை.

நன்றி : http://velang.blogspot.com/2008/12/blog-post_15.html

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?
1.டி வி டி ரிப் (DVD RIP)

Media->Convert/Save சென்று டிஸ்க் டாபை(Tab) அழுத்தவும். கோப்பின் பெயரின் பதிவு செய்த பின்(.MPG இல் முடிவுற வேண்டும்) ஸேவ்(Save) செய்யவும்.

2.வீடியோ ரெகார்டிங்


பார்க்கும் வீடியோக்களை நீங்கள் ரெகார்ட் செய்யலாம்(Streaming Videos).
அதற்கு முதல் View>Advanced Control சென்றால் உடனே ரெகார்ட் என்ற பட்டன் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் ரெகார்ட் செய்யலாம்.

3.ரார் கோப்புகளை பார்க்கலாம்(Video Files in Rar)

உங்கள் வீடியோக்கள் ரார் கோப்புக்குள் அடங்கி இருந்தால் எக்ஸ்ட்ராட்(Extract) செய்யாமலேயே நேரடியாக பார்க்கலாம்.

4.ஆன்லைன் ரேடியோ.


Media>Services Discovery>Shoutcast radio listings சென்றால் ஆன்லைன் ரேடியோ பல கேட்கலாம் .

5.வீடியோ வகை மாற்றம் :


ஒரு வீடியோ வகையில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(MP4, WMV, AVI, OGG, MP3 etc).

Media>Convert/Save சென்று உங்களுடைய கோப்பினை ஏற்றி பின்பு Convert அழுத்துங்கள்.

Note: output format,output file location தேர்ந்தெடுக்க மறக்கக் கூடாது

நன்றி : http://pudhiyayugam.blogspot.com/2009/10/blog-post.html

வியாழன், நவம்பர் 11, 2010

நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன, ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

ஆதாரம் : http://erodethangadurai.blogspot.com/2010/10/must-see_15.html

விடை சொல்லமுடியா வினாக்கள்

சில கேள்விகளுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சில கேள்விகள் இங்கே?


மத்திய அரசுக்கு கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை?


ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவர்?


ராமாதாஸ் அடுத்து எந்த கட்சியுடன் கூட்ட
ணி வைப்பார்? எப்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்?


ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்?


தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?


தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?


இந்தியாவின் உண்மையான பிரதமர் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?


விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா?

நன்றி : http://ragariz.blogspot.com/2010/11/blog-post_10.html

செவ்வாய், அக்டோபர் 19, 2010

100 வயதில் பிஎச்டி படிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி !

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 100 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர், பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்ள பெயர் பதிவு செய்துள்ளார். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மிகவும் வயதான பி.எச்.டி. மாணவர் இவர்தான். கவுகாத்தியில் வசிப்பவர் போலாராம் தாஸ். இந்த வாரக் கடைசியில் இவருக்கு 100வது பிறந்த நாள் வருகிறது. போலாராம் தாஸ் 19 வயது இளைஞனாக இருந்தபோது, 1930&ல் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக 2 மாதம் சிறை தண்டனை பெற்றார். இதன் பின்னர் வணிகவியல், சட்டப்படிப்பு படித்தார். 1945ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1971ம் ஆண்டில் அரசு பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தாஸ், ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி பெயர் மந்தாகினி. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிஎச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது போலாவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒன்றே மனிதத்துவம், ஒரே கடவுள் என்ற மதங்களின் தத்துவ அடிப்டையிலான நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறித்து அசாமின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை இப்போது செய்து வருகிறார். அதில் பெறப் போகும் பட்டம்தான் தனது 100 ஆண்டு பிறந்த நாள் பரிசு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாஸ்.

தாஸ் பி.எச்.டி. ஆய்வு மாணவராக சேர்ந்துள்ள கவுகாத்தி பல்கலை.யின் துணைவேந்தர் ஓ.கே. மெட்ஹி கூறுகையில், “100 வயதில் ஆய்வு படிப்பை படிக்கும் மாணவரை பார்ப்பது உண்மையில் அரிது. தாசை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவரது இந்த முயற்சி, தன்னம்பிக்கை, சமுதாய சேவை ஆகியவை இளைய சமுதாயத்துக்கு உத்வேகத்தை அளிக்கும்Ó என்றார்.

ஆதாரம் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18268&id1=12

திங்கள், அக்டோபர் 18, 2010

காமன்வெத் சாதனையார்கள் - 2010





Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

புதன், அக்டோபர் 13, 2010

சச்சின் - டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம்

12-10-10, 214 ரன்கள் குவித்த சச்சின், டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சக வீரர் சேவக், இலங்கையின் அட்டபட்டு, ஜெயவர்தனா, பாகிஸ்தானின் மியாண்தத் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். தவிர, அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 4 வது இடத்தை கைப்பற்றினார்.

டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள்:
வீரர் போட்டி இரட்டை சதம்
பிராட்மேன் (ஆஸி.,) 52 12
லாரா (வெ.இண்டீஸ்) 131 9
ஹம்மண்ட் (இங்கிலாந்து) 85 7
சங்ககரா (இலங்கை) 91 7
சேவக் (இந்தியா) 81 6
அட்டபட்டு (இலங்கை) 90 6
ஜெயவர்தனா (இலங்கை) 113 6
மியாண்தத் (பாக்.,) 124 6
சச்சின் (இந்தியா) 171 6

மகளுக்கு அர்ப்பணம்

பெங்களூரு டெஸ்டில், அடித்த இரட்டை சதத்தை தனது மகள் சாராவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இது குறித்து சச்சின் கூறுகையில்,""இன்று (அக்.12) எனது மகள் சாராவுக்கு 13 வது பிறந்த நாள். இந்த நாளில், நான் அடித்த இரட்டை சதத்தை எனது மகள் சாராவுக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன்,'' என்றார்.

ஆதராம் : http://www.dailythanthi.com/article.asp?NewsID=600367&disdate=10/13/2010

திங்கள், அக்டோபர் 11, 2010

சச்சின் 14 ஆயிரம் ரன்கள்: டெஸ்டில் புதிய சாதனை

டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து, புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த சச்சின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7275&Value3=I

வியாழன், அக்டோபர் 07, 2010

சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது* சிறந்த டெஸ்ட் வீரர் சேவக்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.

முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.

கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.


சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்.



நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7248&Value3=I

வியாழன், செப்டம்பர் 30, 2010

அயோத்தி பிரச்சினை அன்று முதல் இன்று வரை



மூலம் : http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=2992010

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?

ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.

முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2b2e0FF22eeZZBB20ecU4OXJ2cddQQAAccd3KmM0W4b44Rlmmaa43ddnB2d0e2X96600

புதன், செப்டம்பர் 15, 2010

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், “கம்ப்யூட்டர் நெட் ஒர்க்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே “ஆன்லைனில்’ பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் “ஸ்கேன்’ செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,” என்றார்.

நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84045

புதன், செப்டம்பர் 08, 2010

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப்பிங் சாதனை

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் முறியடித்துள்ளார். இவர் சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் வெளியிட்ட கேலக்ஸி எஸ் என்ற போனை இதற்குப் பயன்படுத்தினார். இவர் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. சாலையோரக் கடைகளில் பொருள் வாங்கச் சென்ற இவர், அங்கே கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். இந்த சாதனை பற்றிக் கூறியவுடன், தானும் கலந்து கொண்டு, ஜஸ்ட் லைக் தட், டைப் செய்துள்ளார். அதுவே கின்னஸ் சாதனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. தான் நாளொன்றுக்கு 40 முதல் 50 டெக்ஸ்ட் மெசேஜ் போன் மூலம் அனுப்புவதாகவும், அதுவே வேகத்தை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1646&ncat=5

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

மூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

உடற்பயிற்சி செய்வதால் பலருக்கு இதயத்திற்கு நலம் தரும் என்று தெரியும் ஆனால் உடற்பயிற்சியினால் மூளைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

உடற்பயிற்சியினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் செல்கள் நலமாக வைத்திருக்கின்றன. மூளையை நலமாக வைத்திருக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயக்க வழிவகை செய்கிறது. மூளையில் நல் இயக்கத்திற்கு ஓமேகா 3 எனும் ரசாயனம் உதவுகிறது. இது சாலமன் மற்றும் ஒரு சில மீன் வகைகளில் கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு மற்றும் ஒரு சகங குளிர்பானங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

மூளையின் நலத்திற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின், சாலமன் மீன்கள், சாக்லேட், கிரீன் டீ ஆகியன மூளை வளர்ச்சிக்கு உதவுபவை. புத்தகங்கள் வாசிப்பது, குறுக்கெழுத்து போட்டிகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவை மூளையின் நலத்தை பாதுகாக்கும். சுறுசுறுப்பான இயக்கத்துடன் உள்ளவர்களுக்கு முதுமையில் மறதி ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் பேராசிரியர் கூறினார்.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2bdPdnBd4dc230QAm204acCe0FFcd0eavXO4A2cd324mlXTe2edFN96e4ce0eYmM0604b42BZBLTb0

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

கனவு காணுங்கள்


கனவு காணுங்கள்



ஆதாரம் : http://epaper.dinamani.com/epapermain.aspx#

ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகள்

புதிய விதிகள்

* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6791&Value3=A

சனி, ஜூலை 31, 2010

கோபத்தை ஏற்படுத்தும் நாள்

முதல் இந்திய பிரவுசர் - எபிக்

இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆதாரம் : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1052&ncat=4

வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை

முதல் வீரர்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரானார் இலங்கையின் முரளிதரன். 133 போட்டிகளில் பந்து வீசிய இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
முரளிதரன் (இலங்கை) 133 800
ஷேன்வார்ன் (ஆஸி.,) 145 708
அனில் கும்ளே (இந்தியா) 132 619
மெக்ராத் (ஆஸி.,) 124 563
வால்ஷ் (வெ.இண்டீஸ்) 132 519
கபில்தேவ் (இந்தியா) 131 434
ரிச்சர்ட் ஹாட்லி (நியூசி.,) 86 431
ஷான் போலக் (தெ.ஆ.,) 108 421
வாசிம் அக்ரம் (பாக்., ) 104 414

7 வது முறை
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

793 முதல் 800 வரை
காலே டெஸ்ட் போட்டியில் முரளிதரன் கைப்பற்றிய முதல் விக்கெட் இந்தியாவின் சச்சின். கடைசி விக்கெட் பிரக்யான் ஓஜா. காலே போட்டிக்கு முன்னதாக, இவர் 792 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். காலேவில் முரளிதரன் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
விக்கெட் வீரர்
793 சச்சின்
794 தோனி
795 யுவராஜ்
796 பிரக்யான் ஓஜா
797 மிதுன்
798 யுவராஜ்
799 ஹர்பஜன்
800 ஓஜா

சாதனைகள் பல....
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக்கெட்டுகள்.
* தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 4 முறை 10 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
* 2000, 2001, 2006 ம் ஆண்டுகளில், தலா 75 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர்.

விக்கெட் இல்லை
காலே டெஸ்டில் முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 32.1 ஓவர் வீசிய ஹர்பஜன், ஒரு விக்கெட் கூட வீழ்த்த வில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருப்பது இது 6 வது முறை.

5 வது வீரர்
காலே டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லட்சுமண், அந்நிய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின் (7521), டிராவிட் (6631), கவாஸ்கர் (5055), கங்குலி (4032) ஆகியோர் அந்நிய மண்ணில்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6607&Value3=A

வெள்ளி, ஜூலை 16, 2010

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி Rs. கிடையாது !









உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


சர்வதேச கரன்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு (ப) , ஜப்பான் யென் ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி அடையாள குறியீடு போட்டி ஒன்றும் நாடு முழுவதும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை திறத்தை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கப்பட்டன. 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உதயகுமார் என்பவரது படைப்பு ஏற்று கொள்ளப்பட்டன.


இந்திய ரூபாய்க்கு தனிச் சின்னம் கொடுத்த உதயகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் தஞ்சாவூர். அக்டோபர் 10, 1978ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை அண்ணா பல்க‌லைக் கழகத்தில் பி டெக் படித்தார். பின்னர் மும்பை ஐ.ஐ.டி.,யில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இன்று முதல் உதயகுமார் கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் துணை விரிவுரையாளராக பணியாற்றவிருக்கிறார்.


நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40794

[ 2239 M. Udaya Kumar 33, Annal Ammal Compound, Mettu Thereu, Bharathi nagar, Kovilpatti ‐

Source : http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/eligible_applicants.pdf - more than 2455 COMPETITOR]


இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.


ரூ. 2. 5 லட்சம் பரிசு : தமிழில் ரூ. 100 என்றோ , 100 ரூபாய் என்றோ எழுத வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் ஆர்.எஸ்., என்று போட வேண்டாம். இந்த குறியீட்டை போட்டாலே போதும். இந்த குறியீட்டை உருவாக்கிய ஐ.ஐ.டி., படித்த உதயகுமார் என்பவருக்கு அரசு 2. 5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கும். இந்த குறியீடு இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


என்ன இனிமேல் தயாராகும் கம்ப்யூட்டர்களின் கீ போர்டில் இந்த பட்டன் வைக்க வேண்டியதுதான் அடுத்த வேலையாக இருக்கும்.


நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40109


Most of the international countries have there own currency symbol like $ (US Dollar), £ (Great Britain pound), € (Euro), ¥ (Japanese Yen), etc etc. There is no official or special symbol for our Indian currency. Generally we use Rs., or INR, or रु or रुपया (Hindi) to represent the Indian rupees.

Source : http://www.thechetan.com/2009/03/design-our-indian-rupee-currency-symbol-and-win-prize/



இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்.​ ​

சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.​ சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை அனுப்பியிருந்தனர்.​ இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது.​ இதில் உதயகுமார் அனுப்பிய வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.​ இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.​ ​

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.​ வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான் தொடங்கப்பட்டது.

​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.​ ​

ஓராண்டுக்கு முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும்,​​ இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார்.​ இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ.​ 2.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.

இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ​(பிஹெச்டி)​ கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.​

இந்தக் கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார் இவரது தந்தை தர்மலிங்கம்.​ இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவார்.

சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர் உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

​ குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் தலா ரூ.​ 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின் டாலர்,​​ பிரிட்டனின் பவுண்ட்,​​ ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.


நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்திய+ரூபாய்+குறியீடு+வடிவமைப்பு:+தமிழகத்துக்கு+பெருமை+சேர்த்த+உதயகுமார்&artid=273124&SectionID=130&MainSectionID=130&SEO=&SectionName=India






The symbol for the Indian rupee () is an amalgam of both the Devanagari consonant "र" (Ra) and the Latin letter "R" without the vertical bar.



நன்றி : http://www.labnol.org/india/indian-currency-symbol/13914/


List of Five Entries which have been selected for Final Selection for the Symbol for Indian Rupee

Name Address
1. Shri Hitesh Padmashali JWT,
PeninsulaChambers,
Ganpatrao Kadam Marg, Lower Parel,
Mumbai - 400 013.

2. Shri Shahrukh J. Irani No.9/8, Rustom Baug,
Sant Savta Marg,
Byculla (E),
Mumbai - 400 027

3. Shri D. Udaya Kumar Industrial Design Centre,
Indian Institute of Technology
Bombay Powai, Mumbai - 400 076

4. Ms. Nondita Correa-Mehrotra 2-A, Connaught Mansion,
173 Wodehouse Road,
Mumbai - 400 005

5. Shri Shibin K.K. 'Aiswarya' Post - Koorara,
Thalassery, Kannur District,
Kerala - 670694

Source : http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/message_symbol_final.asp

Gets a unique symbol which blends the Devanagri ‘Ra' and Roman ‘R'

Source : http://www.thehindu.com/business/Economy/article516999.ece?homepage=true

the unique sign will also help isolate the currency from the current abbreviation ‘Rs’ which is used by neighbouring Pakistan, Nepal and Sri Lanka.

The winning designers concept was based on the Tricolour and “arithmetic equivalence”. While the white space between the two horizontal lines gives the impression of the national flag with the Ashok Chakra, the two bold parallel lines stand for ‘equals to’, representing balance in the economy, both within and with other economies of the world. The winning designer is an IIT post-graduate D Udaya Kumar.

Source : http://www.mohanbn.com/blog/new-symbol-for-indian-rupee-announced

CNN-IBN: Can you please explain to what it (the symbol) actually means?


D Udaya Kumar: I have given a lot of thought to this design. It is basically based on the letter 'ra' in Devnagri script. In that, I have just added a strikethrough line to represent Indian flag. And since I have incorporated the Devnagri script, it represents the Indianness of it because the top-line is quite unique and is not found in any other script. I have also tried to incorporate the Roman script 'R' within it for it to have an international appeal.

Source : http://ibnlive.in.com/news/new-rs-symbol-will-appeal-to-all-designer/126766-3.html

It is a perfect blend of Indian and Roman letters capital ‘R’ and Devanagri ‘Ra’ which represents rupaiah.Cabinet will decide on the matter on Thursday and is likely to approve a symbol reflecting the Hindi alphabet standing for ‘R’, which reflect India’s ethos and culture.

Source : http://indiareview.in/2010/07/16/new-indian-rupee-symbol-indian-rupee-symbol-image-designed-by-bombay-iit-student-udaya-kumar/

வியாழன், ஜூலை 08, 2010

திருக்குறளில் இறைவழிபாடு

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல"

- திருக்குறள்

பொருள்:

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்றி : http://www.yourastrology.co.in/home

உறவு

உன்னை அழவைக்கும் உறவு
உனக்குத் தேவையற்றது
உன் அழுகையை நிற்க வைக்கும் உறவே
உண்மையானது

புதன், ஜூலை 07, 2010

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசி நேயர்களுடைய கைகளில் உள்ள விரல்கள் குட்டையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகளும் மற்றவர்களைவிட அதிகமா இருக்கும். இவர்களுடைய முதுகில், கழுத்தில் தோள்பட்டையில் மச்சம் இருக்கும்.

இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுடைய குணம் மற்றவர்களை வருந்தச் செய்யும். இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் உருவாக்க மனப்பாங்கு கொண்டவர்கள். உடல் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர். இவர்கள் சராசரியாக வாழ்பவர்கள். அன்பு ஏற்படத் தொடங்கும் வேளையில் முன்னேற்றத்துக்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல் நலத்தை நல்லபடியாக கவனிப்பவர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். இதனை அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இந்த ராசி உள்ளவர்கள் ஆசியராகவும், செய்தியாளர்களாகவும் நன்றாக பணிபுரிவார்கள். பணத்துடைய அருமையும், முக்கியத்துவத்தையும் புரிந்தவர்கள். சிக்கனமாக இருக்க ஆசைப்படுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.



கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கன்னி ராசி உள்ளவர்களுக்கு விருச்சிகம், ரிசபமும், மகர ராசி உள்ளவர்கள் பொருந்துவார்கள். மீன ராசியை கவருபவர்கள். ஆனாலும் இரண்டு கன்னி ராசிக்காரர்கள் சேர்ந்தால் விரோதம் இருக்கும். மிதுனம், துலாம், சிம்ம ராசி உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். கன்னி ராசி உள்ளவர்கள் கும்ப ராசி, மேஷம் ராசி உள்ளவர்களை பிடிக்காது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்ற ராசிகளிடையே சராசரியாக பழகுவார்கள்

சங்கீதத்திலும், புகைப்படத் துறையிலும் சிறந்தவர்கள். படிப்பில் ஆர்வம் அதிகம். இவர்கள் விழிப்புணர்வோடும், கவனிப்போடும் இருப்பதனால் எழுத்தாளர்களாகவும் ஆவார்கள். கன்னி ராசி உடையவர்கள் உதவி செய்யும் குணமுடையவர். வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், செய்தி வாசிப்பவர்களாகவும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கஷ்ட நேரத்தில் உதவி செய்து மகிழ்ச்சியடைவர். நூலகப் பணியிலும், யோகத்திலும் ஈடுபடுவர். வேலை செய்யும் உணர்வுடையவர்கள்.


கன்னி ராசி உள்ளவர்கள் மகர ராசியும், விருச்சிக ராசி உள்ள மணமகனும், மணமகளோடு சம்பந்தம் அதிக சுகம் ஆகும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு பேச்சில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.


கன்னி ராசி உடையவர்கள் அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். அதனால் உறவு உடைந்து விடும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவதால் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவசரப்படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். ஓர் விஷயத்தை ஆர்வம் காட்டினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இவர்கள் ராமர், கிருஷ்ணர். கணபதி இஷ்ட தெய்வங்களின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால் கஷ்டங்கள் தீரும். பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும். இவர்கள் ஓம் பிராம் பிரீம் பிரோம் சகா என்ற மத்திரத்தை 9,000 முறை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசி உள்ளவர்களுக்கு பச்சை நிற உடை, கற்பூரம், பூ, பழம், பச்சைப் பொருட்கள், புதன்கிழமை தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.இவர்கள் படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி பெறலாம். கன்னி ராசி இருப்பவர்கள் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசி இருப்பவர்கள் பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை இந்த அவதிகளையெல்லாம்படுவார்கள். இந்த ராசி உள்ள நேயர்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சிலருக்கு முடி அழகாக இருப்பது உண்டு. இவர்களுக்கு ஏற்படும் தலைவலியால் கண் பார்வை குறையும் வாய்ப்புள்ளது. அதிகமாக யோசித்தால் மூளை பாதிப்பு ஏற்படும். ஞாபகசக்தி, ஆஸ்த்துமா, ரத்த கசிவு, வயிற்று வலி, இருமல் எல்லாம் வர நேரிடலாம். மனதுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் பயற்சி, நடை பயிற்சி செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில்தான் நன்மை இருக்கிறது. பழச்சாறு, காய்கறி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மாமிசம் இவற்றில் கவனிப்பாக இருக்க வேண்டும். மோர், தயிர் உடல் வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி, கால்சியம் இருக்கும் பொருட்களை உணவில் சேத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாகவும், விவேகமாக வாழ்ந்தால் உடல் நன்றாக இருக்கும்

இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். அக்கம், பக்கம் உள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள். குடும்பத்திற்காக அக்கறை காட்டுபவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள். ஆனாலும் இவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்காது. இருந்தாலும் தன் கடமையை செய்பவர்கள் இவர். அண்ணன், தம்பி, நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மீது பாசம் காட்டுவார்கள். இவர்களுக்கு வீட்டிலும், வெளியிலும் உதவி கிடைக்கும்



கன்னி ராசி உள்ளவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்டமான நாள். இந்த நாளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு சனிக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட நாள் இல்லை.


கன்னி ராசி உள்ளவர்களுக்கு 5 அதிர்ஷ்டமான எண்ணாகும். 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். இதைத் தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 2, 3, 8, 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்டமான எண்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத எண்களை உபயோகிக்கக் கூடாது

http://jaffnahajan.blogspot.com/2009/01/blog-post_3554.html

============================================================

கன்னி ராசி விசேஷ விதிகள்

கன்யா ராசிக்கும் – மிதுனராசிக்கும் – ராசியாதிபதி புதன் கன்யாராசியில் அடங்கியுள்ள – உத்திரம் பின் மூன்று பாதங்கள் ஹஸ்தம் சித்திரை முன்பாதி ஆக 2 1/4 நட்சத்திரங்களில் ஜனனமான பெண்களுக்கு – மிதுன ராசியில் அடங்கியுள்ள – மிருகசீர்ஷம் பின்பாதி திருவாதிரை புனர்பூசம் மூன்று பாதங்களில் ஜனனமான – பிள்ளைகளுக்கு பொருத்தம் மிக உத்தமம்.மித்ரர்களின் ராசியான – ஸிம்மம் – ரிஷபதுலாம் – மகரகும்பம் – இந்த ராசிகளில் அடங்கியுள்ள – மகம் – பூரம் – உத்திரம் – சித்திரை பின்பாதி – கார்த்திகை பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசீர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – உத்திராடம் பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசெர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – திருவோணம் – அவிட்டம் – சத்யம் – பூரட்டாதி – முன் மூன்று பாதங்கள் – உத்தமப் பொருத்தமாகும்.கன்யா ராசிக்கு மீனராசி – ஸமஸப்தமமாகும்.

மீனாராசியில் அடங்கியுள்ள – பூரட்டாதி 4 – ம் பாதம் உத்திரட்டாதி – ரேவதி – இந்த நட்சத்திரங்கள் – மிக உத்தமப் பொருத்தமாகும் – மேற்சொன்ன நட்சத்திரங்களுக்கு ரஜ்ஜு – தேவதை – கணம் – ராசி – முதலான தோஷங்கள் – கிடையாது. 27 வது நட்சத்திரம் இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கு தோஷமில்லை

http://www.ithazh.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/

======================================================

9. தனுசு லக்கினம்


தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.yourastrology.co.in/2010-04-14-13-16-22

==================================================

6th Picnic to Yercaud on 27-06-10 [Sunday]

There are various ways in which a man entertains himself. Picnic is kind of open air entertainment. Then they come back with light heart and happy mind.

06:30 am – We start our Picnic, we accomplish with Pragash, Pojaraj, Shampu, Suresh[Young Brother of Navaneethan], Vetri, Vijian and Nila’s Kumar.

08:30 am - Tharamangalam with Divya Dharshanam

Tharamangalam is famous for Kailasanathar with Sivagami Sundari Temple. Rounding Sagasra Lingam [the Lingam with 108 Lingams are drawn], Pathala Lingam. Housing beautiful statues and stone carvings, the temple walls and its granite roofs has figures of tortoise, fish, monkey, crocodile carved out. There are also statues of Rathi – Manmatha, Vali- Sukrive of the epic Ramayana and Yali with rotating stone ball in its mouth. There is a rotating lotus flower in the ceiling which is just one of the beautiful futures that adorn the Temple.

09:15 am – Break-fast [at Temple]

11:00 am – On the way Tower.

11:15 am – Yercaud – Tea Break

12:00 pm – Servarayan Malai, Maha Vishnu Kugai Kovil and around Places.

12:45 pm – Rajarajeswari Temple, the Statue under the Lord Bhiramma, Vishnu and Siva.

01:00 pm – Anna Park

02:15 pm – Lunch Break

03:00 pm – Pagoda point with around Places

03:30 pm – Lake View Garden – Boats, Rounding Ball, Jothidam

Yeri means lake and Kaadu means forest. Servarayan temple, which is situated at a height of 5326 feet. Hence the Yercaud hill area is called Shevaroy Hills.

05:30 pm – Tea break @ Salem

06:15 pm - 1008 shivalinghas

1. Maha Vishnu Kovil
2. Ramar Patapisegham with AstaLakshmi Kovil
3. Iyyappan Kovil
4. Anchineyar Kovil
5. 6 patai veedu
6. Arunachala Sundara Eswar& Umaiyambigai Kovil

Divya Dharshanam with Dr.A.Shanmugasundaram, Chair man, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.

7. RajaRajeshwari Kovil - *

1008 Shivalinghas in Salem
This temple was constructed with in 41 days by philanthropist Dr.A.Shanmugasundaram, Chancellor, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.
1008 Shiv ling temple where the main idol was almost 7-8 ft tall approx. Not sure what this temple is called but the lingas with their own nandis were installed around a hillock and atop this hillock is the huge shiv ling

07:30 pm – Windup

09:15 pm – Our respect Home.

Remember these place Salem, Uthama Solapuram & Veera Pandi

So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam

திங்கள், ஜூன் 28, 2010

டமிழன்














நன்றி : ஆனந்த விகடன் 16-06-10

புதன், ஜூன் 23, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் நரசிம்மலு நாயுடு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.வை.தாமோதரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுப்பிரமணிய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.அகத்தியலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.இளங்குமரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழண்ணல்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கல்கி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞானசம்பந்தனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமநாதன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சித்பவானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா.பொ.ரத்தினம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.இலக்குவனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அ.சிதம்பரநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
மகாவித்துவான் .வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதர் அருணகிரிநாதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ந.சி.கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொ.முருகப்பா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சதாசிவப் பண்டாரத்தார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் மயிலை சிவமுத்து
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமி சிதம்பரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அண்ணாமலை செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவிந்தசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாண்டித்துரைத் தேவர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா. சுப்பிரமணியபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உமாமகேசுவரன் பிள்ளை செல்வ கேசவராய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தண்டபாணி தேசிகர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தணிகை மணி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூரணலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமிநாத சர்மா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி விபுலானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆர்.கே.சண்முகம் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பெ.நா.அப்புஸ்வாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பொ.திருகூட சுந்தரம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுத்தானந்த பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாபநாசம் சிவன், அறிஞர் வ.ரா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.வே.சு. ஐயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராஜாஜி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார், நா.கதிரைவேற்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்

Copyright @ 2010 Dinamalar - No :1 Tamil News Paper. Designed and Hosted by Web Division,Dinamalar.|

நன்றி : http://tamil.dinamalar.com/semmozhinews_tamilariyargal.asp

சனி, ஜூன் 12, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010 - பாடல்































செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

இசை - எ.ஆர்.ரஹ்மான்

எழுத்து - கலைஞர் மு.கருணாநதி

பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.

























































































































(TMS)
1 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
2 பிறந்த பின்னர்,

(TMS)
Pirapokkum ella uyirkum
pirandha pinnar

(ARR)
3 யாதும் ஊரே யாவரும் கேளீர்

(ARR)
yaddhum ooreee yaavarum kellirrr

(Harini)
4 உண்பது நாழி உடுப்பது இரண்டே

(Harini)
onnbadhu naazhi udupathu irende

(Chinmayi)
5 உறைவிடம் என்பது ஒன்றே என

(Chinmayi)
uraividam enbadhu ondre

(Karthik)
6 உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்..

(Karthik)
uraithu vazhndhom uzhaithu vazhvom..

(Hariharan)
7 தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
8 நன்மொழியே நம் பொன் மொழியாம்

(Hariharan)
theedhum nandrum pirar thara vaarai yenum
nan mozhiye nam pon mozhiyaam

(Yuvan)
9 போரைப் புறம் தள்ளி
10 பொருளைப் பொதுவாக்கவே

(Yuvan)
porrai puram thallzhi
porulai podhuvaakave..

(Chorus)
11 அமைதி வழி காட்டும் அன்பு மொழி
12 அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

(Chorus)
amaidhi vazhi kaatum anbu mozhi
ayyan valluvarin vaaimozhiyaam

(ARR + Yuvan + Chorus)
13 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(ARR + Yuvan + Chorus)
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...

(P Susheela humming..)

(P Susheela humming..)

(Vijay Yesudas)
14 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
15 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

(Vijay Yesudas)
orrarivu mudhal aararivu uyirinam varayile
unarndhidum udal amaipai pagirthu koorum

(P Susheela)
15 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
16 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

(P Susheela)
orrarivu mudhal aararivu uyirinam varayile
unarndhidum udal amaipai pagirthu koorum

(G.V.Prakash Kumar)
17 ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
18 ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

(G.V.Prakash Kumar)
thozhgapugal thozhgapiyamum
oppatra kural koorum uyar panpaadu

(Naresh Iyer + chorus)
19 ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே

(Naresh Iyer + chorus)
olikindra silamubum meghalayum sindhamaniyudane..

(T.L.Maharajan)
20 வளையாபதி குண்டலகேசியும்..

(T.L.Maharajan)
vazhayapathi kundalakesiyumm..

(Chorus+ Nithya Shree humming)
21 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(Chorus+ Nithya Shree humming)
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...

(Blaaze + Shruthi Haasan)
22 கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
23 எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
24 எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
25 புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

(Blaaze + Shruthi Haasan)
kamba naataalvarum kavi arasiyevai nallaalum
yemmadhamum yetrum puzhgal endrum
yethanayo aayiram kavidhai neivor tharum
thadai anaithukkum vithaaga vilangum mozhi...

26 செம்மொழியான தமிழ் மொழியாம்…
Dr.Bala Murali Karishna + Srinivas + chorus)

SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM
(Dr.Bala Murali Karishna + Srinivas + chorus)

27 அகமென்றும் புறமென்றும் வாழ்வை
28 அழகாக வகுத்தளித்து
29 ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
30 ஓதி வளரும் உயிரான உலகமொழி
31 நம் மொழி – நம் மொழி – அதுவே
(Sruti Haasan)

aagam endrum puram endrum
vazhvai azhagaaga vaguthalithu
aadhi anddam illathu irukindra iniya mozhi
modhi vazharum uyiraana uzhaga mozhi
thamm mozhi namm mozhi
adhuve...
(Sruti Haasan)

32 செம்மொழியான தமிழ் மொழியாம்…
(Chorus)

SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...
(Chorus)

(Chorus)
33 தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியா...

(Chorus)
tamizh mozhi tamizh mozhi tamizh mozhi ya ghaaa...

(Chinnapponnu)
34 தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்

(Chinnapponnu)
Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam

(ARR)
35 வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
36 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(ARR)
Vazhiya Vazhiya ve..Thamizh .. Vazhiya Vazhiya ve
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM ...









Source : http://www.movih.com/kollywood-movie-songs-download/tamil-semmozhi-manadu-anthem-video-song-a-r-rahman.html

http://www.rahmanism.com/2010/05/world-classical-tamil-conference-anthem.html

ப்ளூடூத் ( Bluetooth)

பேசுக செல்பேசியில் அளவோடு; செலவானால்
பேசுதலின் குறுந்தகவல் நன்று.

இப்போதெல்லாம் செல்பேசி வாங்குபவர்கள், பேசுவதற்கும் குறுந்தகவல் அனுப்புவதற்கும்
மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை, செல்பேசியில் கேமெரா இருக்கிறதா? , ப்ளூடூத் எனப்படும் குறுந்தூர கம்பியில்லாத் தொடர்புமுறை வசதி இருக்கிறதா, அகச்சிவப்புத் துறை (Infra Red Port) இருக்கிறதா என்றெல்லாம் கவனித்துத் தான் வாங்குகிறர்கள் . தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கையில் மின்னணுவியல் கருவிகளின் பயன்பாட்டு எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. கருவிகளின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.










இந்தப் பதிவில் ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.



ப்ளூடூத் கருவிகள் மற்றும் அவற்றின் உபயோகங்களைக் குறித்துப் பார்ப்போம்.

கருவிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையான ப்ளூடூத் சாதனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ப்ளூடூத் காதுபேசி (Bluetooth headset) செல்பேசியைக் கையில் பிடித்துப் பேசுவதற்குப் பதில் காதில் மாட்டிக்கொண்டு கையை வீசிக்கொண்டு பேசிச் செல்ல உதவுபவை இந்த ப்ளூடூத் காதுபேசிகள். முன்பெல்லாம் இத்தகைய கருவிகளை எவரேனும் பொருத்தியிருப்பின் பார்ப்பவர்கள் "ஐயோ , அவருக்குக் காது கேளாது போலிருக்கிறது" என்று பரிதாபப் படுவர். ஆனால் இப்போது உம்மாதிரியாகக் காதில் மாட்டிக் கொண்டு கையை வீசிக்கொண்டு தனியே பேசிச் செல்பவர்களை யாரும் ( "ஆள் ஒரு மாதிரியோ" என) ஐயுறுவதில்லை. ப்ளூடூத் சுட்டி மற்றும் விசைப்பலகை (Bluetooth Mouse and Keyboard) அலுவலகத்தில்/வீட்டில் பயன்படும் மேசைக் கணினியில் இருக்கும் விசைப்பலகை மற்றும் சுட்டியை நீங்கள் கேபிள் இணைப்பின்றி ப்ளூடூத் இணைப்பு மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். கணினியிலும் ஒரு ப்ளூடூத் கருவி இணைக்கப்பட்டு விசைப் பலகை மற்றும் சுட்டியின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.

கணினியுடன் இணைந்திருக்கும் சிறிய ஒலி பெருக்கிகளும் ப்ளூடூத் வசதியுடன் கேபிளின்றி இணைக்கப்பட்டால் கணினி மேசையில் கசமுசா என்று சிக்கிக் கிடக்கும் கேபிள்களிருந்து விடுதலை பெறலாம். மேலும் நினைத்த இடத்திற்கு சுட்டியையோ விசைப்பலகையையோ , நகர்த்தி உபயோகிப்பது சுலபமாகிறது பொது உபயோக ப்ளூடூத் பொருத்தி (General Purpose Bluetooth Adaptor).

கணினியில் இக்கருவியை இணைத்துக் கொண்டால் போதும். பிற ப்ளூடூத் கருவிகளுடன் அவற்றின் உபயோகத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புப் பரிமாற்றம் (File Transfer ), இணைய இணைப்பு வசதி , காது பேசியுடன் இணைப்பு, தொடர் துறை (Serial Port) இணைப்பு, தொலைநகல் அனுப்பல் போன்ற பல வசதிகளை இந்தப் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கருவியும் மேற்கூறிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திறன் படைத்தது. செல்பேசியிலிருந்து கணினிக்கோ , கணினியிலிருந்து செல்பேசிக்கோ ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, கோப்புப் பரிமாற்றம் செய்வது எளிதாகிறது. ஜி பி ஆர் எஸ் வசதி கொண்ட செல்பேசியிலிருந்து இணைய இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, அழைப்புவழி (Dial up)சேவையைப் பயன்படுத்தி , இணைய இணைப்பினை கணினிக்கு கொண்டு செல்ல முடியும். மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம். கேபிள்கள் ஏதும் இல்லாமலேயே இணைய வசதியை எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ப்ளூடூத் அணுகு புள்ளி (
Bluetooth Access Point) இணைய இணைப்பினையோ அல்லது அலுவலகத்தின் உள் வலையமைப்பில் (Intranet) இணையவோ ப்ளூடூத் அணுகு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அலுவலகங்களில் புதிய கணினி இணைப்புகளை ஏற்படுத்துவதும், இருக்கும் இணைப்புகளை எளிதாக வேறிடத்துக்கு மாற்றுவதும் நொடியில் முடிகிறது. இதுபோலவே அலுவலகத்தின் அச்சடிப்பானுடன் ( Printer) ப்ளூடூத் இணைப்பின் மூலம் கோப்புக்களை அச்செடுக்க முடியும். தொலைநகல் எடுப்பதும் அனுப்புவதும் எளிதாகிறது. குறுக்கும் நெடுக்குமாக அலுவலகங்களில் விரவிக்கிடக்கும் கேபிள்களை நீக்க இந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ப்ளூடூத் நுட்பத்தினால் வேகம் சற்றே குறைவாக இருப்பதால் கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்பு ( Wireless Local Area Network , WLAN) தற்போது பிரபலமடைந்து வருகிறது.

இது தவிர, கார்களிலும் ப்ளூடூத் கருவிகளைக் கொண்டு (Bluetooth Car-kit) செல்பேசிகளுடன் தொடர்பேர்படுத்திக் கொண்டு, செல்பேசியைக் கையில் தொடாமலேயே அழைப்புகளை இணைக்கவும், பேசவும் முடியும். கார்களில் நாம் இசை கேட்டுக்கொண்டே செல்கையில் ஏதேனும் அழைப்பு ஏற்படின், இசையை நிறுத்தி வைத்து, நாம் பேசி முடித்ததும் மீண்டும் இசையைத் தொடர இந்தக் கருவிகள் உதவுகின்றன. சரி, இரு ப்ளூடூத் கருவிகள் அருகருகே நெருங்கையில் தாமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து தகவல் அனுப்பத் தொடங்கிவிடுமா? இல்லை. அவ்வாறு தாமாக இணைந்து கொண்டு தகவல் பரிமாரிமாறும் வசதி இருந்தால் அது பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையே அல்ல. ப்ளூடூத் கருவிகள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதைப் பின்வருமாறு எளிதாய் விளக்கலாம்.

1. இரு கருவிகளிலும் ப்ளூடூத் இயக்கம் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (Bluetooth ON).

2. கருவிகள் இரண்டும் கண்டுபிடிப்பு நிலையில் (Discoverable mode) இருக்க வேண்டும். இந்த நிலையானது ஏற்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே பிற கருவிகள் அந்தக் கருவி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக, நீங்கள் உங்களது ப்ளூடூத் கருவியை இயக்கியவுடன் அது கண்டுபிடிப்பு நிலையில் இயங்கத்தொடங்கும்.

3. ப்ளூடூத் கருவிக்கென அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புப் பகுதிக்குச் (Settings) சென்று , அருகிலுள்ள பிற கருவிகளைக் கண்டுபிடிக்கும் பட்டியை சுட்டுங்கள் . உங்களது ப்ளூடூத் கருவி உடனே, பிற கருவிகளைத் தேட ஆரம்பிக்கும். கண்டுபிடிப்பு நிலையில் உள்ள பிற கருவிகளைத் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு உங்கள் முன் நிறுத்தும்.

4. நீங்கள் இணைப்பு ஏற்படுத்த விரும்பும் கருவியைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களது கருவி குறிப்பிட்ட மற்றொரு கருவியுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இணைப்புக் கேட்டவுடன் இணைப்பு ஏற்படுத்த அனுமதிப்பதும், மறுப்பதும் எதிர்கருவியின் விருப்பம்.

5. உங்களது ப்ளூடூத் கருவியுடன் இணைய விருப்பம் எனில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடவுச்சொல்லை (Pass key) இணைத்து அனுப்பும்.

6. அக்கருவி அனுப்பும் கடவுச்சொல்லை உங்கள் கருவியில் உள்ளிட்டு அனுப்புங்கள். கடவுச் சொல் வேறுபட்டால் தொடர்பு மறுக்கப்படும். சரியான கடவுச் சொல் சரிபார்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்படும். இணைப்பு ஏற்படுத்தியாகி விட்டது. எவ்வாறு தகவல் பரிமாறுவது? அல்லது எவ்வாறு ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துவது?


ப்ளூடூத் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளுமுன் அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் அக்கருவிகளுக்கிடையே தெரிந்திருக்க வேண்டும். அதாவது இரு வேறு சேவை வழங்கும் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால் பயனில்லையே. உதாரணமாக, கோப்புப் பரிமாற்றம் செய்ய வேண்டுமனில், இரண்டு ப்ளூடூத் கருவிகளிடமும் கோப்புப் பரிமாற்றத்துக்கான சேவை (File Transfer) இருக்க வேண்டும்.

ப்ளூடூத் கருவிகள் (சென்ற பதிவில் கூறியது போல்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இணைந்தவுடன் இணைப்பு (Pairing) ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கருவிகளின் சேவையை கண்டுபிடிக்கும் (Service discovery) நிகழ்வும் ஏற்படுத்தலாம். அவ்வாறு சேவை கண்டுபிடித்தல் செய்த பின்பே ஒரு கருவியின் உபயோகம் மற்ற கருவிக்குத் தெரிய வரும். கடவுச் சொல் கொண்டு ஏற்படுத்தப்படும் இணைப்பு பாதுகாப்பானது. அவ்வாறு கடவுச் சொல் இல்லாமல் ஏற்படுத்தப்படும் இணைப்புகளால் உங்கள் அனுமதியின்றி தகவல் உங்கள் கணினி அல்லது செல்பேசியிலிருந்து திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்துகையில் பாதுகாப்பான (Secured data transfer) பரிமாற்ற வகையை உங்கள் கருவியின் அமைப்புப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

பொதுவிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் சாலச் சிறந்தது. உங்களது செல்பேசியின் ப்ளூடூத் கருவி இயக்க நிலையில் இருந்தால் பிற கருவிகள் உங்களது செல்பேசியுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கலாம் . பாதுகாப்பான பரிமாற்ற முறையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கவில்லை எனில் உங்கள் செல்பேசியிலிருக்கும் தகவல்களை நீங்கள் அறியாமலேயே பிறர் திருடிக்கொள்ளலாம் . விஷமிகள் , பொதுவிடங்களில் இயக்கத்திலிருக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து , மிரட்டும் தகவல்களை அனுப்பலாம். "You are Bluejacked" என்ற தகவல் இவற்றுள் பிரபலமான பயமுறுத்தும் தகவல் . இத்தகவலால் செல்பேசிக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் , நாம் மிரண்டு போய், செல்பேசிக்கு ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று தவறாய் எண்ண வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.இம்மாதிரித் தகவல்கள் உங்கள் செல்பேசியில் , நீங்கள் பொதுவிடங்களில் இருக்கும் போது ஏற்படின் தகவலப் புறக்கணித்து உடனடியாக உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள்.

சென்ற வருடத்தில் பரபரப்பூட்டிய கபீர் எனும் செல்பேசி வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கணினி வைரஸ் பல உலவும் இன்னாளில் , முதன் முதலில் செல்போனில் பரவிய வைரஸ் கபிர் ஆகும். எல்லாச் செல்பேசிகளிலும் இது பரவவில்லை. ஸிம்பியன் இயங்குதளம் அமைந்துள்ள செல்பேசிகளில் தான் இது பரவியது. நோக்கியாவின் செல்பேசிகள் பலவும் இந்த இயங்குதளம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பவை . ப்ளூடூத் மூலம் ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்குப் பரவும் வைரஸ்தானிது. ப்ளூடூத் மூலம் உங்களது செல்பேசிக்கு வரும் இந்த கோப்பு தகவல்பெட்டியில் (Inbox) சேகரிக்கப்படுகிறது. எதோ தகவல் வந்திருக்கிறது என்று எண்ணி இந்தக் கோப்பைத் திறந்தீர்களேயானால் , உங்களது ப்ளூடூத் அமைப்பினை மாற்றி, இந்தக் கோப்பினை அருகிலுள்ள பிற ப்ளூடூத் வசதியுள்ள செல்பேசிகளுக்கு அனுப்பி அந்தச் செல்பேசியையும் பாதிக்கும் குணம் கொன்டது இந்த வைரஸ் . இந்த வைரஸினால் செல்பேசியின் இயல்பான ப்ளூடூத் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ப்ளூடூத் இயக்கத்தினை நீங்கள் நிறுத்தி வைத்தாலும் , இந்த வைரஸ் உங்களது செல்பேசியில் நுழைந்து விட்டதெனில், தானாக, ப்ளூடூத் இயக்கத்தை ஆரம்பித்து அருகே உள்ள பிற ப்ளூடூத் செல்பேசிகளுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஒரு வைரஸ் மட்டுமே செல்பேசி வைரஸ் என அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு புரளிகள் இணையத்திலும் , மின்னஞ்சல் வழியாகவும் கிளப்பி விடப்படுகின்றன. "இந்த வகை எண்களிலிருந்து அழைப்பு ஏற்படின் அவ்வழைப்பை ஏற்க மறுத்து விடுங்கள் . அவ்வழைப்பினை ஏற்றுப் பேசினீர்களேயானால், உங்கள் செல்பேசியின் எண், ஸிம் அட்டையின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் " என்றெல்லாம் கூறிப் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகைத் தகவல்கள் அனைத்தும் புரளியே !

ப்ளூடூத் கருவிகளின் பயன்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது கம்பியில்லா காது பேசியும், கணினியில் பயன்படும் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியும் தான் . அழைப்பு ஏற்பட்டால், ப்ளூடூத் காதுபேசியைப் பயன்படுத்தி, செல்பேசியின் விசையை அழுத்தாமலேயே தானாக அழைப்பை ஏற்றுப் பேசலாம் (Auto Answer). தற்போது செல்பேசியிலேயே பாடல் கேட்கும் வசதி வந்துவிட்டதால் ஸ்டீரியோ வகை ப்ளூடூத் காதுபேசிகள் அறிமுகமாகப் போகின்றன. ஆக, இனிவரும் காலங்களில் , மின்னணுவியில் சாதனங்களில் மின்சார கேபிள்கள் தவிர வேறு எந்தத் தேவைக்கும் கேபிள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது !

ஆதாரம் : http://www.tamiloviam.com/unicode/09220506.asp

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts