வியாழன், டிசம்பர் 31, 2009

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.


நன்றி : http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=243&id1=9

வியாழன், டிசம்பர் 17, 2009



Courtesy : http://epaper.dinamani.com/epapermainarchives.aspx?queryed=1&eddate=12%2f16%2f2009#

புதன், டிசம்பர் 09, 2009

ஒரு நாள் போட்டிகளில் மாற்றம்? * 40 ஓவராக குறைப்பு

ஒரு நாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது.

கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாயிட் உள்ளார்.

ஓவர்கள் குறைப்பு: தற்போது நடைமுறையில் உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர, "டுவென்டி-20' போட்டிகளை போல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

12 ஓவர்கள்: ஒரு நாள் போட்டிகளில் பவுலர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து, இரண்டு பவுலர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு பவுலர்களுக்கு தலா 10 ஓவர்களும், ஐந்தாவது பவுலர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும். இதன் மூலம் திறமையான பவுலர்களை அணியின் கேப்டன்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.,கிரிக்கெட் கமிட்டி எடுத்துள்ள இம்முடிவுகள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4510&Value3=A

செவ்வாய், டிசம்பர் 08, 2009

"நம்பர்-1" இடத்துக்கு முன்னேறி இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வந்த இலங்கை அணியின் சோகம் இந்த முறையும் தொடர்ந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்த கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சூப்பர் கேப்டன்:
மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துக் காட்டியுள்ளார் தோனி. 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவரது தலைமையில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 2 சதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சேவக் அதிரடி:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஜொலித்தார் இந்திய துவக்க வீரர் சேவக். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரின் செயல்பாடும் சிறப்பானதாக அமைந்தது.
அனுபவ அசத்தல்:
இத்தொடரில் இடம் பெற்ற அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். காம்பிருக்குப் பதில் மும்பை டெஸ்டில் இடம் பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வேகம் மிரட்டல்:
பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கிலும் மிரட்டியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ஜாகிர், ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளித்தனர். ஹர்பஜன், ஓஜாவின் சுழற் பந்து வீச்சு பக்கபலமாக அமைந்தது. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இத்தொடரில் வெற்றியை எட்டிய இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.
இலங்கை சோகம்:
இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் வந்த இலங்கை அணிக்கு சோகமே மிஞ்சியது. தொடரையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமரவீரா சொதப்பினார்.
முரளி ஏமாற்றம்:
முரளிதரனை நம்பி வந்த இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. ஹெராத் (11 விக்.,) ஆறுதல் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர்களான வலகேதரா, தம்மிகா பிரசாத், குலசேகரா சோபிக்க தவறினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இலங்கை அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு:
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, நேற்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,"" டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை எட்டி மக்கள் மனதை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனி, சேவக் உள்ளிட்ட வீரர்களுக்கு எனது சார்பிலும் லோக்சபா சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்,''என்றார்.
நாக்பூரில் இந்திய அணி:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி மொகாலியில் நடக்கிறது.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4507&Value3=I

இந்தியா “நம்பர்-1′: இலங்கையை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு நேற்று பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் “நம்பர்-1′ இடம் பெற்று சாதித்தது. இப்பெருமையை பெற மும்பை டெஸ்ட் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜாகிர் கான் வேகத்தில் மிரட்ட, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பையை சூப்பராக கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது.
ஜாகிர் 5 விக்.,:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே ஜாகிர் கான் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா 137 ரன்களுக்கு அவுட்டானார். பின் ஹெராத்(3), குலசேகராவை (19) வெளியேற்றிய ஜாகிர், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி கட்டத்தில் முரளிதரன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஜாகிர் கான் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய இவர், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹர்பஜன் சுழலில் முரளிதரன்(14) சிக்க, இந்திய ரசிகர்கள் <உற்சாகத்தில் மிதந்தனர். இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
முதலிடம்:
இன்று காலை ஆட்டம் துவங்கியதில் இருந்து இலங்கை அணி வெறும் 7.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதையடுத்து சுமார் 40 நிமிடங்களில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடந்த 1932ல் லார்ட்சில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் இந்தியா விளையாடியது. தற்போது 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று அசத்தியுள்ளது.
முதல் இன்னிங்சில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு:
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 393
இந்தியா 726/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 54(144)
தில்ஷன் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 16(27)
சங்ககரா (கே)தோனி(ப)ஜாகிர் 137(261)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)ஜாகிர் 12(24)
சமரவீரா(கே)லட்சுமண்(ப)ஜாகிர் 0(13)
மாத்யூஸ்(கே)தோனி(ப)ஓஜா 5(8)
பிரசன்னா எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 32(42)
குலசேகரா (கே)லட்சுமண்(ப)ஜாகிர் 19(68)
ஹெராத்(கே)ஓஜா(ப)ஜாகிர் 3(10)
முரளிதரன்(கே)தோனி(ப)ஹர்பஜன் 14(9)
வலகேதரா-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 17
மொத்தம் (100.4 ஓவரில் ஆல் அவுட்) 309
விக்கெட் வீழ்ச்சி: 1-29(தில்ஷன்), 2-119(பரணவிதனா), 3-135(ஜெயவர்தனா), 4-137(சமரவீரா), 5-144(மாத்யூஸ்), 6-208(பிரசன்னா), 7-278(சங்ககரா). 8-282(ஹெராத்), 9-307(குலசேகரா), 10-309(முரளிதரன்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 34.4-5-80-2, ஓஜா 23-4-84-2, ஜாகிர் 21-5-72-5, ஸ்ரீசாந்த் 13-4-36-1, சேவக் 9-2-24-0.
——
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.

கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.

கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இது தான் சிறந்த அணி: சச்சின்
முதலிடத்தை பெறுவதற்கு நான் மட்டுமல்ல நாடே காத்திருந்தது. இப்பெருமையை பெறுவதற்கு கடந்த 18 மாதங்களாக வீரர்கள் கடுமையாக உழைத்தனர். கிறிஸ்டன் தவிர நீக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வெங்கடேஷ் பிரசாத்(பவுலிங்), ராபின் சிங்(பீல்டிங்) ஆகியோருக்கும் பங்கு உண்டு. இந்திய சார்பில் இதுவரை பங்கேற்ற அணிகளில் தோனி தலைமையிலான அணி தான் மிகச் சிறந்தது. துவக்க வீரர் முதல் 7வது வீரர் வரை சிறப்பாக பேட் செய்கிறார். அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.

மறுபரிசீலனை முறை: சங்ககரா
மும்பை டெஸ்டில் அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இரண்டு முறை தில்ஷன் அவுட்டானார். இது குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,""சில தவறான முடிவுகளால் 500 ரன் வாய்ப்பு, நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவியது. இதற்கு அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை பின்பற்றப்படாததே காரணம்,'' என்றார். இதே கருத்தை வலியுறுத்திய முரளிதரன் கூறுகையில்,""ஐ.சி.சி., விரைவாக விழித்துக் கொண்டு, அனைத்து போட்டிகளிலும் அம்பயர் மறுபரிசீலனை முறையை அமல்படுத்த வேண்டும்,''என்றார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையி<லு<ம் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயன் அடைந்தால் நல்ல முறை என்பர். பாதிக்கப்பட்டால் பழித்துக் கூறுவர்,''என்றார்.

ஹர்பஜன் "50'
நேற்று முரளிதரனை வெளியேற்றிய ஹர்பஜன், டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக 50வது விக்கெட்டை பெற்ற இரண்டாவது இந்திய வீரரானார். முன்னதாக கும்ளே 74 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

எட்டாவது முறை
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எட்டாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை ஏமாற்றம்
இதுவரை ஏழு முறை (1982/83, 86/87, 90/91, 93/94, 97/98, 2005/06, 2009/10) இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 17 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 10 போட்டியில் வெற்றி கண்டது. ஏழு போட்டி "டிராவில்' முடிந்தது. இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த இலங்கை அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
* இந்தியா, இலங்கை அணிகள் இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் இந்திய அணி ஐந்து முறை (1986/87, 90/91, 93/94, 2005/06, 09/10) தொடரை வென்றது. இரண்டு முறை தொடர் டிராவில் முடிந்தது.

சேவக் அதிரடி:
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 491 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் 190 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
இந்தியா:
வீரர் போட்டி சதம்/அரைசதம் ரன்கள்
சேவக் 3 2/1 491
டிராவிட் 3 2/1 433
காம்பிர் 2 2/0 282
தோனி 3 2/0 214
சச்சின் 3 1/1 197
இலங்கை:
ஜெயவர்தனா 3 1/0 373
பிரசன்னா 3 1/0 297
தில்ஷன் 3 2/0 248
சங்ககரா 3 1/0 241
பரனவிதனா 3 0/2 200

ஹர்பஜன் துல்லியம்
இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி அதிகபட்சமாக 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
இந்தியா
வீரர் போட்டி விக்கெட்
ஹர்பஜன் 3 13
ஜாகிர் 3 10
ஓஜா 2 9
ஸ்ரீசாந்த் 2 8
இலங்கை:
ஹெராத் 3 11
முரளிதரன் 3 9
வெலகேதரா 3 6

நன்றி : தினமலர்



வெள்ளி, டிசம்பர் 04, 2009

சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...

239 பந்து 40 பவுண்டரி 7 சிக்சர் அடித்து நொறுக்கினார் சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...

* டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் (334, 304), லாரா (400*, 375), சேவக் (319, 309) மட்டுமே தலா இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளனர். சேவக் இன்றைய ஆட்டத்தில் 16 ரன் எடுத்தால், 3 முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

* டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதம், 6வது இரட்டை சதம் விளாசிய சேவக் 6000 ரன்களையும் கடந்தார்.

* 6000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் வரிசையில் சேவக் 3வது இடம் (123 இன்னிங்ஸ்) பிடித்தார். கவாஸ்கர் 117 இன்னிங்சிலும், சச்சின் 120 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

* இலங்கைக்கு எதிராக சேவக் அடித்த 2வது இரட்டை சதம் இது. கடந்த ஆண்டு காலேவில் நடந்த டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 201 ரன் விளாசியிருந்தார்.

* இந்தியா ஒரே நாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் (443/1) இது அமைந்தது. கான்பூர் டெஸ்டில் 417 ரன் எடுத்த சாதனை நேற்று தகர்ந்தது.

* அதிவேக இரட்டை சதங்களில் 2வது இடம் (168 பந்து)

நன்றி : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

திங்கள், நவம்பர் 30, 2009

இந்தியா அணியின் 100வ்து டெஸ்ட் வெற்றி



நன்றி : http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx#

வியாழன், நவம்பர் 26, 2009

Mobile number portability (MNP)



பாடித்தது : http://www.dinakaran.com/dncgibin/dinakaranepaper.asp?imge=2009/nov/22/11

டிராவிட் - பார்டரை கடந்தார்...

நேற்றைய போட்டியில் [25-11-19] இந்திய வீரர் டிராவிட், 137வது ரன் எடுத்த போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஆலன் பார்டரை முந்தி, நான்காவது இடம் பிடித்தார்.

அதிக ரன்கள் எடுத்துள்ள "டாப்-5' வீரர்கள்:

வீரர்/அணி போட்டி ரன்கள்

சச்சின்(இந்தியா) 161 12917
லாரா(வெ.இண்டீஸ்) 131 11953
பாண்டிங்(ஆஸி.,) 136 11345
டிராவிட்(இந்தியா) 136 11182
ஆலன் பார்டர்(ஆஸி.,) 156 11174

பாடித்தது : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4396&Value3=I

சனி, நவம்பர் 21, 2009

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களைக் காலி செய்திடுமோ? இயக்கத்தை முடக்கி வைத்துவிடுமோ என்ற அச்சத்துடன் நாம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. இந்த சிந்தனையுடன் ஏன் கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குகிறார்கள் என எண்ணியபோது கிடைத்த எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்? சரியான கேள்வி தான். இதற்கான விடைகள் பலவாறாக உள்ளன.

1. தனி மனித மனப் பிரச்சினகள்: பல பதில்கள் கிடைத்தாலும் இந்த பதில் சற்று வேடிக்கையாக இருக்கிறது. தாங்கள் மற்றவர்களைக் காட்டிலும் இந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர். இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன் திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கிவிட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது. வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்றபின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார்.

2.பணம்: இதுதான் பலரை இழுக்கும் தூண்டில். வைரஸ் உருவாக்கி எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? பல வழிகளில் சம்பாதிக்கலாம் என்று தெரிகிறது. முதலாவதாக டேட்டா திருட்டு. வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யூட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது. தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகிவிட்டது. இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனைப் பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது. முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது. இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது. இவற்றை ஆங்கிலத்தில் “ransomware” என்று அழைக்கின்றனர். ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.

3. குழு ஆதிக்கம்: ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன. இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை. ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு. இதே போல் பல கும்பல்களை இன்டர்நெட்டில் காணலாம். இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான்.

4. அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்: அண்மையில் இந்திய தேசிய கட்சி ஒன்றின் இணைய தளத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான். ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேலயாக உள்ளது. இவர் கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும். எடுத்துக் காட் டாக ஒரு அரசியல் கட்சியின் இணைய தளத் தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட் டது. ஆனால் அது நேராக அந்க கட்சியின் தளத்தை ஆக்ரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை. அதற் குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது. அந்த வைரஸ் குறிப் பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத் தைத் தான் தங்கும் கம்ப்யூட் டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப் பட்டிருக்கும். அது அடுத்த நிலையாக இருக்கும். பாதிக் கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது. ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப் யூட் டர்களிலிருந்து அந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரி யாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப் சைட் டைத் தாக் கியிருக்கும். இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தோறும் உருவாகி வருகின் றன. சைபர் உலகின் சாபக்கேடாக இது மாறிவிட்டது. வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியதுள்ளது.


நன்றி : http://senthilvayal.wordpress.com/2009/05/22/

30 ஆயிரம் ரன்கள் குவித்து சச்சின் உலக சாதனை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்​டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார்.


30 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதலாவது வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமதாபாதில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் 35 ரன்களை எடுத்தபோது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாத​னை​யைப் புரிந்தார்.


1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் 21-ம் ஆண்டில் நுழைந்துள்ளார். 20-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அவர் இந்தப் போட்டியில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


டெஸ்ட் போட்டிகள், ஒரு தின போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் சேர்த்து அவர் தற்போது 30,065 ரன்களைச் சேர்த்துள்ளார்.


சச்சின் குவித்த ரன்கள் விவரம்:


போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி

டெஸ்ட் - 160 12,877 43 53 54.79

ஒரு நாள் - 436 17,178 45 91 44.50

டி20 - 1 10 - - 10.00


நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=157611&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=


மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன் கடந்து புதிய சாதனை படைத்தார். அகமதாபாத் டெஸ்டின் கடைசி நாளான நேற்று, சச்சின் 35 ரன் எடுத்த போது ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் சேர்த்து 30 ஆயிரம் ரன்னை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் 30 ஆயிரம் ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதுவரை 160 டெஸ்ட், 436 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் அவர் 88 சதம், 144 அரை சதம் மற்றும் 199 விக்கெட் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த


டாப் 5 வீரர்கள் விவரம்:

பெயர் போட்டி ரன்கள் சதம் சராசரி

சச்சின் 597 30065 88 48.33
பான்டிங் 483 24057 66 47.92
லாரா 430 22358 53 46.28
டிராவிட் 474 21803 39 45.32
காலிஸ் 436 20974 47 49.11

நன்றி : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=748

வியாழன், நவம்பர் 19, 2009

உலகக் கோப்பை கிரிக்கெட் 2010 அட்டவணை: முதல் போட்டி இந்தியா Vs வங்கதேசம்!

பிப்.19 - இந்தியா - வங்காளதேசம் (மிர்பூர்)

பிப்.20 - இலங்கை - கனடா (ஹம்பன்தோடா-இலங்கை)
பிப்.20 - கென்யா - நியூசிலாந்து (சென்னை)
பிப்.21 - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
பிப்.22 - இங்கிலாந்து - ஆலந்து (நாக்பூர்)
பிப்.23 - கென்யா - பாகிஸ்தான் (ஹம்பன்தோடா)
பிப்.24 - தென்ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.25 - வங்காளதேசம் - அயர்லாந்து (மிர்பூர்)
பிப்.25 - ஆஸ்திரேலியா நியூசிலாந்து (நாக்பூர்)
பிப்.26 - பாகிஸ்தான் - இலங்கை (கொழும்பு)

பிப்.27 - இந்தியா - இங்கிலாந்து (கொல்கத்தா)

பிப்.28 - ஆலந்து - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.28 - கனடா - ஜிம்பாப்வே (நாக்பூர்)
மார்ச் 1 - கென்யா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 2 - இங்கிலாந்து -அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 3 - கனடா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 3 - ஆலந்து - தென்ஆப்பிரிக்கா (மொஹாலி)
மார்ச் 4 - வங்காளதேசம் - மே. இ. தீவுகள் (மிர்பூர்)
மார்ச் 4 - நியூசிலாந்து - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
மார்ச் 5 - ஆஸ்திரேலியா - இலங்கை (கொழும்பு)

மார்ச் 6 - இந்தியா - அயர்லாந்து (பெங்களூர்)

மார்ச் 6 - இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா (சென்னை)
மார்ச் 7 - கனடா - கென்யா (டெல்லி)
மார்ச் 8 - நியூசிலாந்து - பாகிஸ்தான் (பல்லிகேலே)

மார்ச் 9 - இந்தியா - ஆலந்து (டெல்லிஃ

மார்ச் 10 - இலங்கை - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 11 - வங்காளதேசம் - இங்கிலாந்து (சிட்டகாங்)
மார்ச் 11 - அயர்லாந்து - மே. இ. தீவுகள் (மொஹாலி)

மார்ச் 12 - இந்தியா - தென்ஆப்பிரிக்கா (நாக்பூர்)

மார்ச் 13 - கனடா - நியூசிலாந்து (மும்பை)
மார்ச் 13 - ஆஸ்திரேலியா - கென்யா (பெங்களூர்)
மார்ச் 14 - வங்காளதேசம் -ஆலந்து (சிட்டகாங்)
மார்ச் 14 - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 15 - அயர்லாந்து - தென்ஆப்பிரிக்கா (கொல்கத்தா)
மார்ச் 16 - ஆஸ்திரேலியா - கனடா (பெங்களூர்)
மார்ச் 17 - இங்கிலாந்து - மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 18 - நியூசிலாந்து - இலங்கை (மும்பை)
மார்ச் 18 - அயர்லாந்து - ஆலந்து (கொல்கத்தா)
மார்ச் 19 - வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா (மிர்பூர்)
மார்ச் 19 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 20 - கென்யா - ஜிம்பாப்வே (கொல்கத்தா)

மார்ச் 20 - இந்தியா- மே.இ. தீவுகள் (சென்னை)

மார்ச் 23 - முதல் காலிறுதிப் போட்டி- மிர்பூர்

மார்ச் 24 - 2வது காலிறுதிப் போட்டி- கொழும்பு

மார்ச் 25 - 3வது காலிறுதிப் போட்டி- மிர்பூர்

மார்ச் 26 - 4வது காலிறுதிப் போட்டி - அகமதாபாத்.

மார்ச் 29 - முதல் அரை இறுதிப் போட்டி- கொழும்பு.
மார்ச் 30 - 2வது அரை இறுதிப் போட்டி- மொஹாலி

ஏப்ரல் 2 - இறுதிப் போட்டி - மும்பை.

செவ்வாய், நவம்பர் 17, 2009

ராகுல் திராவிட் - 11,000 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் திராவிட் பெற்றார்.

ஆமதாபாதில் திங்கள்கிழமை [16-11-09] துவங்கிய இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் எடுத்திருந்தபோது திராவிட் இந்தச் சாதனையைச் செய்தார்.

11 ஆயி​ரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 177 ரன்கள் தேவை என்ற நிலை​யில் திராவிட் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டம் முடியும்போது 177 ரன்கள் நாட்-அவுட் என பெவிலியன் திரும்பினார் திராவிட். இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட் ஆமதாபாத் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிராக திரா​விட் எடுக்கும் 2-வது சதமாகும் இது. டெஸ்ட் போட்டிகளில் இது அவருக்கு 27-வது சதம்.

11 ஆயிரம் ரன்கள் எடுத்த 5-வது வீரர் திராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. 135-வது டெஸ்டில் இந்த சாதனையை திராவிட் படைத்துள்ளார்.

வீரர் போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி

சச்சின் (இந்தியா) 160 12777 42 53 54.37

லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34 48 52.88

பாண்டிங் (ஆஸி.,) 136 11345 38 48 55.88

பார்டர் (ஆஸி.,) 156 11174 27 63 50.56

டிராவிட் (இந்தியா) 135 11000 27 57 53.39


Courtesy : http://www.dinamani.com/edition/story.aspx?&Court
SectionName=Sports&artid=155772&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=
&
http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4297&Value3=A

திங்கள், நவம்பர் 16, 2009

Tendulkar @ 20 Years









சனி, நவம்பர் 14, 2009

மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி...

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920

இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947

ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954

காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970

பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973

மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979

ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983

டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984

விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989

மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990

2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991

அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992

மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996

மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997

எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000

இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001

வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002

டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004

மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006

மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007

ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010

எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

நன்றி : http://www.honeytamilonline.co.cc/2009/09/blog-post_20.html

மறக்க முடியாத முதல் போட்டி: சச்சின்

" இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது தான் எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியை மறக்க முடியாது " என, சச்சின் தெரிவித்துள்ளார்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். மிக நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி வரும் இவர் நாளை 21வது காலடி எடுத்து வைக்கிறார். தனது கடந்தகால மறக்க முடியாத அனுபவங்களை சச்சின் இங்கே பகிர்ந்து கொள்கிறார்:


எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் மிக நீண்டது. இதில் சிறப்பு வாய்ந்த பல்வேறு தருணங்கள் உள்ளன. அவற்றை கணக்கிடுவது கடினம். ஆனாலும், இந்திய அணிக்காக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது மகத்தான தருணம். கடந்த 1989 நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றேன். அன்று இந்திய அணியின் "கேப்' அணிந்து களமிறங்கிய அனுபவம் என்றென்றும் என்மனதில் நிலைத்து இருக்கும்.


அதிர்ஷ்ட வாய்ப்பு:
இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.


புதிய மாற்றங்கள்:
கடந்த 1989ல் இருந்த கிரிக்கெட்டை விட தற்போது மூன்றாவது அம்பயர், "டுவென்டி-20' என நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவிர, பேட்ஸ்மேன்கள் பல்வேறு வகையில் அடித்து விளையாடுகிறார்கள். அவர்கள் "ரிஸ்க்' எடுக்கத் தயங்குவது இல்லை. ஏனெனில் ஒரு நல்ல ஆடுகளத்தில் இப்போதெல்லாம் 275 ரன்கள் என்பது ஒருநாள் போட்டியில் பெரிய ஸ்கோர் அல்ல.
டெஸ்ட் போட்டிகளில் முன்பு குறைந்த அளவில் தான் முடிவுகள் வந்தன. இது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அதிக டெஸ்ட்கள் முடிவைத் தருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


புதிய சவால்:
எனது ஆட்டமுறையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஏனெனில் கிரிக்கெட் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தகுந்து எப்போதும் நம்மை தயாராக வைத்திருப்பது கடினமானது.


தாய் பிரார்த்தனை:
நம்மை சார்ந்து இருப்பவர்களது ஒத்துழைப்பும் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும். எனது பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் எனது மனைவி என, எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். எனது தாயாருக்கு கிரிக்கெட் தெரியாது. ஆனால் எனது மற்றும் தேசத்தின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார்.


இருண்ட அத்தியாயம்:
கடந்த 1999ல் வெடித்த கிரிக்கெட் சூதாட்டம் ஒரு இருண்ட அத்தியாயம். அது பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.


ரசிகர்கள் ஆதரவு:
எனது மூத்த சகோதரர் தவிர, பிற சகோதர, சகோதரிகளிடமும் கிரிக்கெட் குறித்து விவாதிப்பேன். அடுத்து எனது மனைவியுடனும் இதுகுறித்து பேசுவேன். இதுதான் நான் நீண்ட ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம். இவைகள் தவிர, இந்திய ரசிகர்களிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைத்தது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4272&Value3=I

வெள்ளி, நவம்பர் 13, 2009

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் 30 ஆயிரம் ரன்னை நெருங்கும் தெண்டுல்கர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர்.

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். வருகிற 15-ந்தேதி அவர் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 20 ஆண்டு கால விளையாட்டில் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சாதனை என்றாலே சச்சின் தான் என்று சொல்லுமளவுக்கு உள்ளது.

தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை நோக்கி செல்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சேர்த்து அவர் 30 ஆயிரம் ரன்னை நெருங்குகிறார். அதற்கு இன்னும் 49 ரன் தேவை. அவர் 436 ஒருநாள் போட்டியில் விளையாடி 17, 178 ரன்னும், 159 டெஸ்டில் 12,773 ரன்னும் எடுத்துள்ளார். இரண்டையும் சேர்த்து 29,951 ரன் குவித்துள்ளார்.

இன்றைய போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 30 ஆயிரம் ரன்னை தொடுவார். தெண்டுல்கரின் சாதனைகளை எட்டிபிடிக்க முடியாத தூரத்தில் மற்ற வீரர்கள் உள்ளனர்.1 1

நன்றி : http://www.maalaimalar.com/2009/11/11162347/vlr2101101109.html

திங்கள், நவம்பர் 09, 2009

விண்டோஸ் வந்த வரலாறு....!!!

உலகின் 90 சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து , இன்று வெளியாகியுள்ள விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே காணலாம்.

1985 : விண்டோஸ் 1

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் மவுஸ் பயன்பாட்டை தந்தது.

1987 : விண்டோஸ் 2

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

1990 : விண்டோஸ் 3

1990 ஆம் ஆண்டு மே 22 வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி சி.டிக்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

1991 : விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

1992 : விண்டோஸ் 3.1

ஏப்ரல் மாதம் வெளியான இந்த பதிப்பு வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது.

1993 : விண்டோஸ் என்.டி

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது.

1995 : விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு மிகப் பெரிய அளவிலான விளம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

1998 : விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

2000 : விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த பதிப்பானது , இதற்கு முன்னர் வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும் .

2000 : விண்டோஸ் ME (மில்லேனியம்)

விண்டோஸ் வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

2001 : விண்டோஸ் எக்ஸ்பி

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த பதிப்பு கோப்புகள் மேலாண்மை(File Management) , பாதுகாப்பு , உறுதி ,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

2007 : விண்டோஸ் விஸ்டா

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.

2009 : விண்டோஸ் 7

விண்டோஸ் விஸ்டாவில் உள்ள பல குறைகளை நீக்கி மைக்ரோ சாப்ட் இந்த பதிப்பை வெளியிடவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

நன்றி : http://www.honeytamilonline.co.cc/2009/10/blog-post_22.html

வெள்ளி, நவம்பர் 06, 2009

டெண்டுல்கரும் 17000 ரன்களும்

டெண்டுல்கர் ஒவ்வொரு ஆயிரம் ரன் களை கடந்த விதம்

ரன்கள் ஆட்டம் ஆண்டு

1000 36 1992

2000 73 1994

3000 96 1995

4000 115 1996

5000 141 1997

6000 176 1998

7000 196 1998

8000 217 1999

9000 242 2000

10000 266 2001

11000 284 2002

12000 309 2003

13000 330 2004

14000 359 2006

15000 387 2007

16000 409 2008

17000 435 2009 (05-11-09)


ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரன்கள் குவித்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 17,168 (05-11-09)

சனத் ஜயசூர்யா (இலங்கை) 13,377

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 12,286

இன்சமாம் (பாகிஸ்தான்) 11,739

சவுரவ் கங்குலி (இந்தியா) 11,363.

ராகுல் திராவிட் (இந்தியா) 10,765

பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவு) 10,405

ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) 10,328



சச்சின் சோகம்

175 ரன்கள் குவித்த சச்சின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்றபோதும் சச்சின் சோகமாகக் காணப்பட்டார். சோகத்தின் மொத்தமாக இருந்த சச்சின் தழுதழுத்த குரலில் பேசினார்.

அவர் கூறியதாவது: நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டோம். என்னுடன் இணைந்து ரெய்னா சிறப்பாக ஆடினார். ரெய்னாவிடம் ஏராளமான திறமை ஒளிந்து கிடக்கிறது. அவர் மிகப்பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார். என்னுடைய இந்த ஆட்டம் எனக்குப் பிடித்தமான ஒன்று என்றாலும் இந்தியா வெற்றி பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவுக்காக நீண்ட நாள் விளையாடவேண்டும். இந்தியா வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றார் அவர்.

புதன், அக்டோபர் 28, 2009

நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.


மூலம் : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=899

சனி, அக்டோபர் 24, 2009

இந்தியாவுக்கு "நம்பர்-1' வாய்ப்பு

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் "நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

"நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

* 5-2 என தொடரை வென்றால் 129 புள்ளிகளும், 6-1 என தொடரை தன்வசப்படுத்தினால், 131 புள்ளிகளும் பெற்று இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றும். ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அப்படியே (7-0) வெல்லும் பட்சத்தில், இந்திய அணிக்கு 133 புள்ளிகள் கிடைக்கும். ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தற்போது "நம்பர்-1' இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை வென்றால் தனது இடத்தில் நீடிக்கும்.

இரண்டு முறை: இதற்கு முன் இந்திய அணி இந்த ஆண்டு இரண்டு முறை "நம்பர்-1' வாய்ப்பை பெற்றது. ஆனால் இந்த வாய்ப்பு நிரந்தரமாக நீடிக்க வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சாதித்தால், முதலிடத்தில் சிறிது காலம் நீடிக்கலாம்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4063&Value3=A#

புதன், அக்டோபர் 14, 2009

இந்தியாவில் 51 நாள் சுற்றுப்பயணம்: 3 டெஸ்ட், 5 ஒரு நாள், 2 டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 51 நாள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்திய சுற்றுப்பயண விவரத்தை கொழும்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நவம்பர் 8-ம் தேதி இந்தியா வரும் இலங்கை அணி டிசம்பர் 28-ம் தேதி இலங்கைக்குத் திரும்பிச் செல்கிறது. இலங்கை சுற்றுப்பயண விவரம்:

நவம்பர் 8: இலங்கை அணி மும்பை பயணம்.

நவம்பர் 11-13: ஆமதாபாத்தில் போர்டு பிரசிடெண்ட் லெவன்-இலங்கை அணி மோதும் 3 நாள் போட்டி.

நவம்பர் 16-20: ஆமதாபாதில் முதல் டெஸ்ட்.

நவம்பர் 24-28: கான்பூரில் 2வது டெஸ்ட்.

டிசம்பர் 2-6: மும்பையில் 3-வது டெஸ்ட்.

டிசம்பர் 9: மொஹாலியில் முதலாவது டி20 போட்டி.

டிசம்பர் 12: நாகபுரியில் 2-வது டி20 போட்டி.

டிசம்பர் 15: ராஜ்கோட்டில் முதலாவது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 18: விசாகப்பட்டணத்தில் 2-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 21: கட்டாக்கில் 3-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 24: கோல்கத்தாவில் 4-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 27: தில்லியில் 5-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 28: கொழும்பு வருகை.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=139402&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=இந்தியாவில்%2051%20நாள்%20சுற்றுப்பயணம்:%203%20டெஸ்ட்,%205%20ஒரு%20நாள்,%202%20டி20%20போட்டிகளில்%20இலங்கை%20அணி%20விளையாடுகிறது

செவ்வாய், அக்டோபர் 13, 2009

ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் 15-ல் சென்னையில் தேர்வு

ஆஸ்திரேலியாவுடன் 7 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்காக இம்மாத கடைசியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி வரவுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவலையில் உள்ளது. இதையடுத்து இந்திய தேர்வுக் குழுவினர் அணியைத் தேர்வு செய்வதில் கவனத்துடன் செயல்படவுள்ளனர்.

நடந்து முடிந்த என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபி போட்டியில் விளையாடிய வீரர்களை தேர்வுக் குழுவினர் கவனித்துள்ளனர். இதிலிருந்தே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

அணித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 25-ம் தேதி வதோதராவில் நடைபெறும். கடைசி ஆட்டம் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் ஆட்டங்கள் விவரம்:

அக்டோபர் 25 - முதல் ஒரு நாள் ஆட்டம் - வதோதரா.
அக்டோபர் 28 - 2-வது ஒரு நாள் ஆட்டம் - நாகபுரி.
அக்டோபர் 31 - 3-வது ஒரு நாள் ஆட்டம் - தில்லி.
நவம்பர் 2 - 4-வது ஒரு நாள் ஆட்டம் - மொஹாலி.
நவம்பர் 5 - 5-வது ஒரு நாள் ஆட்டம் - குவாஹாட்டி.
நவம்பர் 8 - 6-வது ஒரு நாள் ஆட்டம் - ஹைதராபாத்.
நவம்பர் 11 - 7-வது ஒரு நாள் ஆட்டம் - நவி மும்பை.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Headlines&artid=139026&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=ஆஸ்திரேலியாவுடன்%20ஒரு%20நாள்%20தொடர்:%20இந்திய%20கிரிக்கெட்%20அணி%20அக்டோபர்%2015-ல்%20சென்னையில்%20தேர்வு

வியாழன், அக்டோபர் 08, 2009

India get easy draw for 2011 World Cup

India will be hosting 29 of those matches with Sri Lanka holding 12 and remaining eight going to Bangladesh, which will host two of the four quarterfinals. India and Lanka will hold other two last-eight clashes besides a semifinal each. The final will be held at the renovated Wankhede Stadium.

Group A: Australia (holders), Pakistan, New Zealand, Sri Lanka (co-hosts), Zimbabwe, Canada, Kenya
Group B: India (co-hosts), South Africa, England, West Indies, Bangladesh, Ireland and The Netherlands

Source : http://www.dnaindia.com/sport/report_india-get-easy-draw-for-2011-world-cup_1296192

==================================================================================

Dubai, Oct 7 (ANI): The International Cricket Council (ICC) on Wednesday announced the groups for the 2011 World Cup to be held in the sub-continent.

India is placed in Group B along with South Africa, England and the West Indies. Netherlands, Ireland and Bangladesh were the other three teams in India’s group.

While, Pakistan is staying in ‘Group A’ along world champions Australia, New Zealand, Sri Lanka, Zimbabwe, Kenya and Canada. (ANI)

Source : http://trak.in/news/icc-announces-world-cup-2011-groups/11593/

செவ்வாய், அக்டோபர் 06, 2009

பேசும் வினாடிக்கு கட்டணம்





நன்றி : http://dkn.dinakaran.com/firstpage.aspx#

சனி, அக்டோபர் 03, 2009

ICC Champions Trophy 2009/10 / Points table as on 01-10-09 & 1st Semi-Final Result


ICC Champions Trophy 2009/10 / Points table as on 01-10-09

Group A

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

Australia 3 2 0 0 1 5 +0.510 481/100.0 430/100.0
Pakistan 3 2 1 0 0 4 +0.999 641/130.3 587/150.0
India 3 1 1 0 1 3 +0.290 378/82.1 431/100.0
West Indies 3 0 3 0 0 0 -1.537 487/150.0 539/112.4

Group B

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

New Zealand 3 2 1 0 0 4 +0.782 676/127.1 640/141.1
England 3 2 1 0 0 4 -0.487 682/145.0 660/127.1
Sri Lanka 3 1 2 0 0 2 -0.085 750/137.4 734/132.4
South Africa 3 1 2 0 0 2 -0.177 724/128.5 798/137.4

1st Semi-Final: Australia v England at Centurion - Oct 2, 2009

Australia won by 9 wickets (with 49 balls remaining)

England 257 (47.4 ov); Australia 258/1 (41.5 ov)

Source : http://www.cricinfo.com/iccct2009/engine/series/374074.html?view=pointstable
http://www.cricinfo.com/ci/engine/current/match/scores/recent.html

ஐ.சி.சி., விருது: காம்பிர் மகிழ்ச்சி

ஜோகனஸ்பர்க்: "கடந்த 2004ல் டிராவிட்டுக்குப் பின்னர், ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கவுதம் காம்பிர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., விருதுகள், ஜோகனஸ்பர்கில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதை கேப்டன் தோனியும், சிறந்த டெஸ்ட் போட்டிக்கான விருதை கவுதம் காம்பிரும் பெற்றனர்.
விழாவில் தோனி பங்கேற்காததால், அவ்விருதை காம்பிர் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு, சிறந்த ஒரு நாள் வீரர் விருதை தோனி பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் பெற்றுள்ளார்.

2008 ஆக.13 முதல் 2009 ஆக.24 வரையான காலத்தில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சிறந்த டெஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இச்சமயத்தில் நடந்த, 24 ஒரு நாள் போட்டிகளில் 967 ரன்களும், கீப்பராக 26 விக்கெட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். இப்போட்டிகளில் கேப்டனாக 17 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஐ.சி.சி., வீரர் விருது தேர்வு நான்கு முனை போட்டியாக இருந்தது. தோனி, காம்பிருடன், இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூஸ் ஸ்டிராசும் போட்டியில் இருந்தார். ஆனால் கடைசியில் விருதை ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் தட்டிச் சென்றுவிட்டார்.

விருதுக்கான காலகட்டத்தில், 27 வயதான மிட்சல் ஜான்சன், 17 போட்டிகளில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 632 ரன்களையும் எடுத்தார். அதில் ஒரு சதமும் அடங்கும். 16 ஒரு நாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, 83 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த காலகட்டத்தில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட் செய்த காம்பிர், 84.60 சராசரியுடன், ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களை காம்பிர் விளாசியிருந்தார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் மீடியாவுக்கு பேட்டியளித்தார் காம்பிர். அப்போது அவர் தெரிவித்த போது, "நான் இந்த விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நல்ல பார்முக்கு திரும்புவேன் என்று கூட சில நேரங்களில் உறுதியாக நம்பவில்லை. என்னுடைய பயிற்சியாளர் பரத்வாஜ் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.

டில்லியில் நடந்த ஆஸி.,க்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் மற்றும், நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக 178 ரன் எடுத்த போட்டிகள் இரண்டும் என்றும் மறக்க முடியாதவை. தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது' என்றார்.

கடந்த 2004ல் ஐ.சி.சி., விருதுகள் நிறுவப்பட்ட போது, சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும், டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் டிராவிட் பெற்றார். அதன் பிறகு எந்த இந்திய வீரரும் இந்த பெருமையை பெறவில்லை.

==============================================================================

கிரிக்கெட் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்.

சிறந்த கிரிக்கெட் வீரர்: மிட்சல் ஜான்சன் (ஆஸி.,)

சிறந்த டெஸ்ட் வீரர்: கவுதம் காம்பிர் (இந்தியா)

சிறந்த ஒருநாள் வீரர்: தோனி (இந்தியா)

"டுவென்டி-20' சிறந்த வீரர்: தில்ஷன் (இலங்கை)

சிறந்த அம்பயர்: அலீம்தார் (பாக்.,)

சிறந்த அணி: நியூசிலாந்து

சிறந்த வளரும் வீரர்: பீட்டர் சிடில் (ஆஸி.,)

இந்த ஆண்டின் சிறந்த இணை வீரர்: வில்லியம் போர்ட்பீல்டு (அயர்லாந்து)

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: கிளைர் டெய்லர் (இங்கிலாந்து).

ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் வெளியிடப்பட்டுள்ளன. தோனி, சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளிலும் கேப்டன் பொறுப்பைப் பெற்று தோனி சாதித்துள்ளார்.

ஐ.சி.சி., டெஸ்ட் அணி: கவுதம் காம்பிர் (இந்தியா), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சச்சின் (இந்தியா), சமரவீரா (இலங்கை), கிளார்க் (ஆஸி.,), தோனி (இந்தியா - கேப்டன்), அல் ஹசன் (வ.தேசம்) மிட்சல் ஜான்சன் (ஆஸி.,) ஸ்டூவர்ட் பிராட் ( இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தெ.ஆ.,) மற்றும் ஹர்பஜன் சிங் (இந்தியா)

ஐ.சி.சி., ஒருநாள் அணி: சேவக் (இந்தியா), கெய்ல் (வெ.இ.,) பீட்டர்சன் (இங்கிலாந்து),
தில்ஷன் (இலங்கை), யுவராஜ் (இந்தியா) மார்ட்டின் குப்தில் (நியூசி.,) தோனி (இந்தியா -கேப்டன், வி.கீ.,) பிளின்டாப் (இங்கிலாந்து) குலசேகரா, மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாக்.,). 12வது வீரர்: திலன் துஷாரா (இலங்கை)

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3861&Value3=I

சனி, செப்டம்பர் 26, 2009

சனி பெயர்ச்சி பலன்கள் - 2009






Source : http://www.prohithar.com/sanipeyarchi2009.html

வியாழன், செப்டம்பர் 24, 2009

இரண்டவது முறையாக கிரிக்கெட் தரவரிசை : இந்தியா முதலிடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கிரிக்கெட் தரவரிசையில் உள்ள நாடுகள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது. இதில் இந்தியா 126 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இந்தியா இருந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் முதலிடத்தில் இருந்த இந்தியா அதற்கு அடுத்த நாளே 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு தற்போது வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணி 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்தியா 126 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 125 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா 124 புள்ளிகளுடன் இருக்கிறது.

இலங்கை 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் 5-ம் இடத்திலும் உள்ளன.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Chennai&artid=129476&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=

திங்கள், செப்டம்பர் 21, 2009

மொபைல் போன் வரலாறு

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது

2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010: எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

நன்றி : தினமலர், செப்டம்பர் 20,2009,13:11.
http://www.dinamalar.com/new/mobile_detail.asp?news_id=340&dt=09-21-09

புதன், செப்டம்பர் 16, 2009

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

கொழும்பு : முத்தரப்பு கிரிக்கெட்தொடரில் கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி.விறுவிறுப்பான பைனலில் சச்சின் சதம், ஹர்பஜன் மிரட்டல் பந்து வீச்சு கைகொடுக்க, இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் தோல்வி அடைந்த நியூசிலாந்து வெளியேறியது. நேற்று கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

தினேஷ் இல்லை: டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் "பார்ம்' இல்லாமல் தவித்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, விராத் கோஹ்லி சேர்க்கப் பட்டார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.

நல்ல அடித்தளம்: இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் அருமையான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (39) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தோனி, சச்சினுடன் இணைந்தார்.

சச்சின் சதம்: தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 44 வது சதம் இது. தவிர, இலங்கை அணிக்கு எதிராக 8 வது சதம். மறுமுனையில் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த தோனி, ஒரு நாள் அரங்கில் 32 வது அரை சதம் கடந்தார். 56 ரன்கள் எடுத்த தோனி, மலிங்கா வேகத்தில் வெளியேறினார். சச்சின், தோனி ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.

யுவராஜ் அதிரடி: தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், தசைப்பிடிப்பால் அவதிப்பட "ரன்னராக' டிராவிட் செயல்பட்டார். 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 138 ரன்கள் குவித்த சச்சின் பெவிலியன் திரும்பினார். பின்னர் யுவராஜ் அதிரடியை தொடர்ந்தார். யூசுப் பதான் (0), ரெய்னா (8) ஏமாற்றம் அளித்தனர். ஒரு நாள் அரங்கில் யுவராஜ், 41 வது அரை சதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. 6 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 56 ரன்கள் குவித்த யுவராஜ், அவுட்டாகாமல் இருந்தார்.

ஹர்பஜன் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்து ஜெயசூர்யாவும் மிரட்ட, மின்னல் வேகத்தில் (6.2 ஓவரில்) இந்த ஜோடி 50 ரன்களை எட்டியது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஏமாற்றமளிக்க, "சுழல் நாயகன்' ஹர்பஜனை அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தில்ஷனை (42) கிளீன் போல்டாக்கினார் ஹர்பஜன். அடுத்து வந்த ஜெயவர்தனாவையும் (1) வெளியேற்றிய ஹர்பஜன், இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

சங்ககரா பரிதாபம்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, யூசுப் பதான் பந்து வீச்சில் ஜெயசூர்யா (36) அவுட்டானார். யுவராஜ், மாத்திவ்சை (14) வெளியேற்றினார். அதிரடியாக ரன் குவிக்க நினைத்த துஷாரா (15) நிலைக்க வில்லை. பின்னர் சங்ககரா, கண் டம்பி இணைந்து பொறுப்புடன் ஆடினர். எதிர்பாராத விதமாக சங்ககரா (33), ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஹிட் -அவுட்டானார்.
ஆறுதல் ஜோடி: அடுத்து வந்த கபுகேதரா, அரை சதம் கடந்த கண்டம்பியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஒவ்வொரு ரன்களாக சேர்க்க, இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது. கபுகேதரா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 வது விக்கெட்டுக்கு கண்டம்பி, கபுகேதரா ஜோடி 70 ரன்கள் எடுத்தது.

"மேட்ச் வின்னர்': இந்நிலையில் துவக்கம் முதலே பந்து வீச்சில் அசத்திக் கொண்டிருந்த ஹர்பஜன், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கண்டம் பியை (66), அவுட்டாக்கி இலங்கை அணியின் நம்பிக்கையை தகர்த்தார். அடுத்த பந்திலேயே மலிங்காவையும் (0) வீழ்த்தி "மேட்ச் வின்னராக' ஜொலித்தார் ஹர்பஜன். 46.4 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பவுலிங்கில் மிரட்டிய ஹர்பஜன் 5 விக்கெட் வீழ்த்தினார். 1

11 ஆண்டுகளுக்குப் பின்: இவ்வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில், 11 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா கோப்பை வென்று சாதித்தது.

மூலம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3710&Value3=I

சனி, செப்டம்பர் 12, 2009

மூன்று

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Courtesy : http://www.pkp.blogspot.com

ஆங்கில அறிவு அவசியம் தானே...

இன்றைய விஞ்ஞான உலகில், ஆங்கில அறிவு அவசியம் தானே...


* ஆங்கிலஅறிவுதேவைஎன்று, தாய்மொழித் தமிழைப் புறக்கணிக்கிறோம். இதனால், ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் முழுமையாக தெரியாமல் திண்டாடுகிறோம். இன்று, பட்ட மேற்படிப்பு முடித்த ஒருவரிடம், ஆங்கில நாளிதழைக் கொடுத்து, இன்டர்நேஷனல், நேஷனல் எல்லாம் வேண்டாம். ரீஜினல் எனப்படும், உள்ளூர் செய்தியைப் படிக்கச் சொல்லக் கேளுங்க... விழி பிதுங்கி விடும் அவருக்கு! தமிழிலும் இதே நிலையில் தான் இருப்பார். நம் சந்ததியினரை, ரெண்டுங் கெட்டானாக விட்டுச் செல்லவே, ஆங்கில மொழி போதனை வழி வகுக்கும்!

நன்றி : அந்துமணி பதில்கள் (வாரமலர்) செப்டம்பர் 05,2009,11:58
http://www.dinamalar.com/new/varamalar_detail.asp?news_id=845&dt=09-12-09

வியாழன், செப்டம்பர் 10, 2009

Windows XP Tips & Tricks

Taking Ownership Of a Folder

Sometimes when you reinstall WindowsXP, you can receive an Access Denied error when trying to open a previous user's directory.
To take ownership of that folder again:

Log on with an account that has administrator rights
Right click on the folder
Select Properties
Click on the Security tab
Click on the Advanced button
Click on the Owner tab
In the list of Names, click on your name
To take ownership, click on Replace owner on subcontainers and objects
Click OK and Yes



Showing Common Tasks in Window

When you open a window from My Computer or the Control Panel, and you don't see the blue bar with additional options on the left side, you may simply need to turn on Common Tasks

From that same windows, go to Tools / Folder Options
Check Show common tasks in folders

--------------------------------------------------------------------------------

Renaming Multiple Files in a Directory

If you want to rename multiple files in the same directory:

Using the Windows Explorer, select all the files you want to rename
Press F2 or right click and select Rename
Enter the prefix for the name you want (e.g. Newname)
This will automatically rename the rest of the files Newname (1).jpg, Newname (2).jpg etc.
Make sure you include the extension if you have the Explorer configured to show them.

--------------------------------------------------------------------------------

Single Click To Open Programs and Folders

In order to open a program or folder, the normal procedure is to double-click the associated icon. Generally, one click will highlight the icon while two will open it. However, if you would prefer to open programs and folders with just one mouse click, you can easily configure your Windows XP system to allow this:

Press Windows Key + E to open Windows Explorer.

Click on "Tools" then on "Folder Options".

With the "General" tab selected, choose the item labelled "Single click to open an item (point to select)".

Click "OK" Exit out of the Folder Options dialog and out of Windows Explorer

--------------------------------------------------------------------------------
Viewing Your IP Address Information

There are several ways you can determine your IP address information:

IPCONFIG

Start / Run / cmd
IPCONFIG /ALL
This opens a command window. One advantage is that you can send the information to a text file (IPCONFIG /ALL > c:\ip.txt)
But sometimes the window shows show much information you need to scroll around to fine it.

VIEW STATUS

Control Panel / Network Connections / Double click the icons for your network (If the network has an icon in the system tray you can also just double click on that icon)
Click on the Support tab
Click on the Details button

--------------------------------------------------------------------------------

Changing the User Type

Normally in XP Pro, through the Control Panel / User Accounts icon, you are only allowed to create administrators or limited users.
If you want to create

Right click on My Computer
Manage
Local Users and Groups
Users
Right click on the user you want to change
Properties
Member of tab
Add button
Advanced button
Find Now button
From here you see the full list of possibilities (e.g. Power User, Backup Operator etc.)

--------------------------------------------------------------------------------

Identify Faulty Device Drivers

If you are having problems with lockups, blue screens, or can only get to safe mode,
often the problem is due to a faulty device driver.

One way to help identify them is through the use of the Verfier program

Start / Run / Verifier
Keep the default of Create Standard Settings
Select the type of drivers you want to confirm
A list of drivers to be verified on the next boot will be shown.
Reboot
If your computer stops with a blue screen, you should get an error message with the problem driver
To turn off the Verifier, run verifier /reset

--------------------------------------------------------------------------------

Common Control Panel Applets

The follow are some common Control Panel Applets that are located in the \windows\system32 directory.
If you find yourself using any of these frequently, then you can simply make shortcuts to them on your desktop.

appwiz.cpl Add/Remove Programs
desk.cpl Display Properties
firewall.cpl Firewall Settings
inetcpl.cpl Internet Options
mmsys.cpl Sound and Audio
ncpa.cpl Network Connections
nusrmgr.cpl User Accounts
powercfg.cpl Power Options
sysdm.cpl System Properties
wscui.cpl Security Center
wuaucpl.cpl Automatic Updates Configuration

--------------------------------------------------------------------------------

Guest Only Network Access

If you try and connect to an XP computer and are shown a logins screen with only the computername/Guest,
You may need to change one of the Local Security Policies:

Got to Control Panel - Administrative Tools
Go to Local Policies - Security Options
Check teh Network access: Sharing and security model for local accounts
Set it to Classic - local users authenticate as themselves

--------------------------------------------------------------------------------

Not Displaying Previous Network Share Shortcuts


By default, when you go to Network Places, it will scan and show shortcuts to previous network shares.
To turn this off and remove any current shortcuts

Open up the Windows Explorer
Go to Tools / Folder Options / View
The top section should be Files and Folders
Uncheck Automatically search for network folders and printers
Then go into Network Neighborhood Select all the previous netowork connections Delete them
Next time you look at the Network Neighborhood, they should not repopulate

--------------------------------------------------------------------------------

Hiding a XP Computer from Network Neighborhood

If you want to share files from a XP computer,
yet want to remove it from showing up in the Network Neighborhood,

Run net config server /hidden:yes

--------------------------------------------------------------------------------

Easy Way to Share Multiple Folders

If you need to share multiple folders, running the program SHRPUBW.EXE will bring up a simple dialog box to let you:

Browse to the folder you want to share
Enter in a Share name
Ender in a Share description
Set permissions. Several choices are available
Restart the process from within the same program

--------------------------------------------------------------------------------

Enable ClearType for Improved Font Display

ClearType is a font display technology that comes built into Windows XP. Enabling ClearType can significantly improve the clarity and readability of onscreen text. Although the improvement will be especially noticeable on LCD monitors, it can also improve font displays on CRT monitors.

To enable ClearType:

Right-click the Windows Desktop

In the context menu, click "Properties". The "Display Properties" window should appear

Click the "Appearance" tab

Click the "Effects" button

Click to enable the checkbox labelled "Use the following method to smooth edges of screen fonts:" and select "ClearType" in the drop down menu.

Click "OK" to save the changes.

Click "OK" again to exit the Display Properties" window.

--------------------------------------------------------------------------------

Courtesy : http://www.onecomputerguy.com/windowsxp_tips.htm
http://www.xp-tips.com/enable-clearytype.html
http://www.onecomputerguy.com/net_tips.htm
http://freepctech.com/pc/xp/xpindex.shtml

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 : அணிகள்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் 12 அணிகளின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.உள்நாட்டு "டுவென்டி-20' சாம்பியன்கள் பங்கேற்கும், முதல் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் வரும் அக். 8 ம் தேதி முதல் 23 வரை நடக்க உள்ளது. போட்டிகள் டில்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் நடக்க உள்ளன.

12 அணிகள்:இத்தொடரில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் (இந்தியா), பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (இந்தியா), டில்லி டேர்டெவில்ஸ் (இந்தியா), நியூசவுத் வேல்ஸ் புளூ (ஆஸி.,), விக்டோரியா பஸ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,), கேப் கோப்ராஸ் (தெ.ஆ.,), டைமண்ட் ஈகல்ஸ் (தெ.ஆ.,), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), டிரினிடாட் அண்டு டுபாகோ (வெ.இண்டீஸ்), வேயம்பா (இலங்கை), சக்சஸ் சார்க்ஸ் (இங்கிலாந்து) மற்றும் சோமர்செட் சாப்ராஸ் (இங்கிலாந்து) ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது.
சேவக் கேப்டன்:தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் சேவக், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளார். இவர் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தரப்பில் பங்கேற்கும் மற்ற அணிகளான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு அனில் கும்ளேவும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்டும் கேப்டனாக தேர்வாகி உள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' ல் பங்கேற்கும் இந்திய அணிகள் வருமாறு:

டெக்கான் சார்ஜர்ஸ்:கில்கிறிஸ்ட் (கேப்டன்), அசார் பிலாகியா, விஜய்குமார், வேணுகோபால் ராவ், வாஸ், சைமண்ட்ஸ், சுமன், ஸ்டைரிஸ், ஆர்.பி.சிங், சோயப் அகமது, எட்வர்ட்ஸ், ரியான் ஹாரிஸ், லட்சுமண், பிரக்யான் ஓஜா மற்றும் ரோகித் சர்மா.

பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ்:அனில் கும்ளே (கேப்டன்), ராகுல் டிராவிட், அகில், மெர்வி, உத்தப்பா, ரோஸ் டெய்லர், ரைடர், ஸ்டைன், மனிஷ் பாண்டே, பிரவீண் குமார், விராத் கோஹ்லி, காலிஸ், மார்க் பவுச்சர் மற்றும் வினய் குமார்.

டில்லி டேர் டெவில்ஸ்:சேவக் (கேப்டன்), காம்பிர், தில்ஷன், டிவிலியர்ஸ், ரஜத் பாட்டியா, ஓவேஸ் ஷா, சங்வான், சால்வி, நெஹ்ரா, நான்ஸ், அமித் மிஸ்ரா, மன்ஹாஸ், தினேஷ் கார்த்திக், கோலிங்வுட் மற்றும் வெட்டோரி.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3612&Value3=A

=================================================================

Group A: Deccan Chargers (India), Trinidad and Tobago (West Indies) and England No. 2 (to be decided).

Group B: New South Wales Blues (Australia), Diamond Eagles (South Africa) and England No. 1 (to be decided).

Group C: Royal Challengers Bangalore (India), Cape Cobras (South Africa) and Otago Volts (New Zealand).

Group D: Delhi Daredevils (India), Victoria Bushrangers (Australia) and Wayamba (Sri Lanka)


Champions League announces star-studded teams

Deccan Chargers: Adam Gilchrist (c), VVS Laxman, Rohit Sharma, Andrew Symonds, Fidel Edwards, Scott Styris, Chaminda Vaas, RP Singh, Ryan Harris, Pragyan Ojha, Y Venugopal Rao, T Suman, Azhar Bilakhia, Harmeet Singh, SM Shoaib.


Royal Challengers Bangalore: Anil Kumble (c), Rahul Dravid, Robin Uthappa, Jacques Kallis, Ross Taylor, Dale Steyn, Manish Pandey, Praveen Kumar, Jesse Ryder, Roelof Van Der Merwe, Mark Boucher, Vinay Kumar, Virat Kohli, Akhil Balachandra, Rajesh Bishoni.


Delhi Daredevils: Virender Sehwag (c), Tillakaratne Dilshan, Gautam Gambhir, Dirk Nannes, Dinesh Karthik, Daniel Vettori, Ashish Nehra, Amit Mishra, AB DeVilliers, Paul Collingwood, Owais Shah, Pradeep Sangwan, Aavishkar Salvi, Rajat Bhatia, Mithun Manhas.


Trinidad and Tobago: Daren Ganga (c), Sherwin Ganga, Dwayne Bravo, Darren Bravo, Denesh Ramdin, Ravi Rampaul, Lendl Simmons, Dave Mohammed, Keiron Pollard, William Perkins, Samuel Badree, Rayad Emrit, Navin Stewart, Sunil Narine, Adrian Barath.


Victorian Bushrangers: Cameron White (c), Bradley Hodge, Peter Siddle, David Hussey, Andrew McDonald, Jon Holland, Clinton McKay, Robert Quiney, Matthew Wade, Aiden Blizzard, Aaron Finch, Shane Harwood, John Hastings, Damien Wright, Bryce McGain.


NSW Blues: Simon Katich (c), Phillip Hughes, Brett Lee, Nathan Bracken, Stuart Clark, Moises Henriques, Nathan Hauritz, Daniel Smith, Doug Bollinger, Stephen O'Keefe, Ben Rohrer, Steven Smith, Aaron Bird, Dominic Thornely, David Warner.


Otago Volts: Craig Cumming (c), Brendon McCullum, Nathan McCullum, Aaron Redmond, Neil Broom, Ian Butler, Dimitri Mascarenhas, Greg Todd, Hamish Rutherford, Derek de Boorder, Nick Baird, Warren McSkimming, Neil Wagner, Mattew Harvie, James McMillan.


Cape Cobras: Graeme Smith (c), Hershelle Gibbs, J P Duminy, Justin Ontong, Charl Langeveldt, Claude Henderson, Monde Zondeki, Vernon Philander, Henry Davids, Derek Brand, Francois Plaatjies, Ryan Canning, Rory Kleinveldt, Richard Levi, Sybrand Engelbrecht.


Wayamba: Jehan Mubarak (c), Mahela Jayawardene, Ajantha Mendis, Rangana Herath, Farveez Maharoof, Kaushlya Lokuarachchi, Jeevantha Kulathunga, Mahela Udawatta, Thisara Perera, Sameera Soysa, Shalika Karunanayake, Isura Udana, Ishara Amerasinghe, Chanka Welagedera, Michael Vandort.


Sussex Sharks: Michael Yardy (c), Luke Wright, Piyush Chawla, Dwayne Smith, Edmund Joyce, Joe Gatting, Robin Martin-Jenkins, William Beer, Andrew Hodd, Christopher Nash, Ben Brown, Rory Hamilton-Brown, Mohmmed Yasir Arafat, Chad Keegan, James Kirtley.


Diamond Eagles: Boeta Dippenaar (c), Dillion du Preez, Morne van Wyk, Mthandeki Tshabalala, Adrian McLaren, Ryan McLaren, Victor Mpitsang, Ryan Bailey, Jandre Coetzee, Cornelis De Villiers, Dean Elgar, Reeza Hendricks, Alan Kruger, Rilee Rossouw, Shadley van Schalkwyk.


Somerset Sabres: Justin Langer (c), Marcus Trescothick, Zander de Bruyn, Omari Banks, James Hildreth, Craig Kieswetter, Pete Trego, Arul Suppiah, Alfonso Thomas, Max Waller, Charl Willoughby, Wes Durston, Mark Turner, Jos Buttler, Ben Philips.


Date Time (GMT) Match Details Venue

Thu 08 14:30 Bangalore Royal Challengers v Cape Cobras, 1st Match, Group C, Champions League T20, 2009 Bangalore (D/N)
Fri 09 10:30 Eagles v New South Wales, 2nd Match, Group B, Champions League T20, 2009 Delhi
Fri 09 14:30 Deccan Chargers v Victoria, 3rd Match, Group D, Champions League T20, 2009 Delhi (D/N)
Sat 10 10:30 Cape Cobras v Otago, 4th Match, Group C, Champions League T20, 2009 Hyderabad
Sat 10 14:30 Deccan Chargers v Cape Cobras, 5th Match, Group A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Sun 11 10:30 New South Wales v Sussex, 6th Match, Group B, Champions League T20, 2009 Delhi
Sun 11 14:30 Delhi Daredevils v Wayamba, 7th Match, Group D, Champions League T20, 2009 Delhi (D/N)
Mon 12 10:30 Somerset v Trinidad and Tobago, 8th Match, Group A, Champions League T20, 2009 Bangalore
Mon 12 14:30 Bangalore Royal Challengers v Otago, 9th Match, Group C, Champions League T20, 2009 Bangalore (D/N)
Tue 13 10:30 Victoria v Wayamba, 10th Match, Group D, Champions League T20, 2009 Delhi
Tue 13 14:30 Eagles v Sussex, 11th Match, Group B, Champions League T20, 2009 Delhi (D/N)
Wed 14 14:30 Deccan Chargers v Trinidad and Tobago, 12th Match, Group A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Thu 15 14:30 C1 v D2, 13th Match, League B, Champions League T20, 2009 Bangalore (D/N)
Fri 16 10:30 A2 v B2, 14th Match, League A, Champions League T20, 2009 Hyderabad
Fri 16 14:30 A1 v B1, 15th Match, League A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Sat 17 10:30 C2 v D2, 16th Match, League B, Champions League T20, 2009 Bangalore
Sat 17 14:30 C1 v D1, 17th Match, League B, Champions League T20, 2009 Bangalore (D/N)
Sun 18 10:30 A2 v B1, 18th Match, League A, Champions League T20, 2009 Hyderabad
Sun 18 14:30 A1 v B2, 19th Match, League A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Mon 19 14:30 C2 v D1, 20th Match, League B, Champions League T20, 2009 Delhi (D/N)
Wed 21 14:30 1st semi-final, Champions League T20, 2009 Delhi (D/N)
Thu 22 14:30 2nd semi-final, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Fri 23 14:30 Final, Champions League T20, 2009 Hyderabad (D/N)



Courtesy : http://cricket.ndtv.com/cricket/ndtvcricket/storypage.aspx?id=SPOEN20090108220

புதன், செப்டம்பர் 09, 2009

The Simplest C Program: What's Happening?

Let's walk through this program and start to see what the different lines are doing (Click here to open the program in another window):
This C program starts with #include . This line includes the "standard I/O library" into your program. The standard I/O library lets you read input from the keyboard (called "standard in"), write output to the screen (called "standard out"), process text files stored on the disk, and so on. It is an extremely useful library. C has a large number of standard libraries like stdio, including string, time and math libraries. A library is simply a package of code that someone else has written to make your life easier (we'll discuss libraries a bit later).

The line int main() declares the main function. Every C program must have a function named main somewhere in the code. We will learn more about functions shortly. At run time, program execution starts at the first line of the main function.

In C, the { and } symbols mark the beginning and end of a block of code. In this case, the block of code making up the main function contains two lines.

The printf statement in C allows you to send output to standard out (for us, the screen). The portion in quotes is called the format string and describes how the data is to be formatted when printed. The format string can contain string literals such as "This is output from my first program!," symbols for carriage returns (\n), and operators as placeholders for variables (see below). If you are using UNIX, you can type man 3 printf to get complete documentation for the printf function. If not, see the documentation included with your compiler for details about the printf function.






The return 0; line causes the function to return an error code of 0 (no error) to the shell that started execution. More on this capability a bit later.

Courtesy : http://computer.howstuffworks.com/c3.htm

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

DBMS - RDBMS & C - C++

DBMS - RDBMS
Data Base Management System - Relational Data Base Management System (Referntial Integrity + DBMS)
Support Single user - Multi users
Flat data, no relation ship concept (Relation between two files) - Tabular structure, Data is represented in the form of relations ie., some relation between the entities
It treats Data as Files internally - It treats data as Tables internally
can be saved in any order - should be saved in table format
Normalization process will not present - Normalization process will present
Process of Managing data for efficient retrivel & strorage (Eg : Sysbase, Foxpro) - Relations (tables) to acquire information retrival (Eg : SQL, Oracle, My-SqlServer)
User to create and maintain a database - Recovery of the database in case of loss of
database due to system failure or any other reason
Client Server concept is not present - Client Server Architecture is present
Primary Keys, Foreign keys is not possible - Possible
It supports 3 rules of E.F.CODD out off 12 rules - It's support min. 6 rules of E.F.CODD
No secure data - Multi level Security


C - C++

c is a procedural programming language - C++ is an object oriented programming language
C does not have classes and objects - C++ have classes and objects
C is Object based Applications like Structures and Unions - C++ is Object Oriented Language that means entire
application will be depending on Objects only.
C is a collection of FUNCTIONS - C++ is a collection of FUNCTIONS and/or CLASS.
The main function could not return a value - The C++ the main function shuld return a value
c is a topdown approach - C++ is bottom up approach
FOCUS ON PROCEDURES - FOCUS ON DATA
C does not support the C++ programme - C++ support the C program.



Courtesy : http://www.allinterview.com/showanswers/56803.html
http://www.geekinterview.com/question_details/28436

திங்கள், செப்டம்பர் 07, 2009

Q - 10

Wi-Fi - suggests Wireless Fidelity (Wire Free)

A Wi-Fi enabled device such as a PC, video game console, mobile phone, MP3 player or PDA can connect to the Internet when within range of a wireless network connected to the Internet. The coverage of one or more interconnected access points — called a hotspot.

CD & DVD

CD - DVD

Compact Disk - Digital Volatile Disk
Single Layer - Two Layers
700 MB - 4.7GB (Max 40 GB)

CD thiner than DVD.

InfraRed & Blue Tooth

Infrared technology is what most TV remotes use.
The distance an infrared signal can travel varies based on the strength of the remote, but is usually less than 50 feet for household electronics. In order for an infrared signal to be detected, there must be a direct line of sight between the transmitter (remote) and the receiver (TV). If there is a wall or large object between them, the signal will not pass through it.

Bluetooth, on the other hand, uses a radio frequency, which allows transmission through walls and other objects.

Floppy & Pen drive

Origin : 04-09-09 (3rd Fri)

http://programmerfindings.blogspot.com/search/label/Programming

புதன், செப்டம்பர் 02, 2009

Q - 9

STAR - Satellite Television for the Asian Region (STAR) Broadcasting Corporation (Hong Kong)

TEN SPORTS - Taj Entertainment Network is a sports channel, widely broadcast in Asia

File & Folder - Printer & Scanner -

Structure & Class

1. structures in c++ doesnot provide datahiding where as a class provides datahiding

2. classes support polymorphism, whereas structures donot

3. By default the members of structures are public while that for class is private

4. Structures contains only data while class bind both data and member functions


Origin : 02-09-09 (1st Wed) & 04-09-09 (3rd Fri)

Q - 8

TRAI - Telephone Regulatory Authority of Inida

ROM & RAM

Orgin : 18-08-09 ( ) & 02-09-09 (wed 1st)

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

Useful CPL and MSC files in Windows Server 2003 (XP)

You can also launch Control Panel apps from the command line, and here's a list of .cpl files for your reference that you can print out and paste on the wall beside your workstation until you've memoried the ones you use most commonly:

Accessibility Options
access.cpl

Add/Remove Programs
appwiz.cpl

Add Hardware Wizard
hdwwiz.cpl

Automatic Updates
wuaucpl.cpl

Bluetooth Properties
bthprops.cpl

Display Properties
desk.cpl

Firewall Properties
firewall.cpl

Game Controllers
joy.cpl

Internet Options
inetcpl.cpl

iSCSI Initiator
iscsicpl.cpl

Java Control Panel
jpicpl32.cpl

Licensing Mode
liccpa.cpl

Mouse Properties
main.cpl

Network Connections
ncpa.cpl

Network Setup Wizard
netsetup.cpl

ODBC Properties
odbccp32.cpl

Power Options
powercfg.cpl

Regional and Language Options
intl.cpl

Sound and Audio Devices
mmsys.cpl

Stored Passwords
keymgr.cpl

System Properties
sysdm.cpl

Telephone and Modem Properties
telephon.cpl

Time and Date Settings
timedate.cpl

User Accounts nusrmgr.cpl

Windows Security Center
wscui.cpl

Wireless Link
irprops.cpl


Here's a list of useful MSC files on a Windows Server 2003 machine. Some of the tools might not be available until you have installed the corresponding service.

appsrv.msc - Application Server
azman.msc - Authorization Manager
certmgr.msc - Certificates snap-in
certsrv.msc - Certificate Services
certtmpl.msc - Certificate Templates
ciadv.msc - Indexing Service
compmgmt.msc - Computer Management
dcpol.msc - Domain Controller Security Policy
devmgmt.msc - Device Manager
dfrg.msc - Disk Defragmenter
dfsgui.msc - Distributed File System
dhcpmgmt.msc - DHCP Manager
diskmgmt.msc - Disk Management
dnsmgmt.msc - DNS Manager
domain.msc - Active Directory Domains & Trusts
dompol.msc - Domain Security Policy
dsa.msc - Active Directory Users & Computers
dssite.msc - Active Directory Sites & Services
eventvwr.msc - Event Viewer
fxsadmin.msc - Fax Service Manager
filesvr.msc - File Server Management
fsmgmt.msc - Shared Folders
gpedit.msc - Group Policy Editor
ias.msc - Internet Authentication Service
iis.msc - Internet Information Services
lusrmgr.msc - Local Users & Groups
ntmsmgr.msc - Removable Storage Manager
ntmsoprq.msc - Removable Storage Operator Requests
perfmon.msc - Performance Monitor
rrasmgmt.msc - Routing and Remote Access
rsop.msc - Resultant Set of Policy
secpol.msc - Local Security Policy
services.msc - Services Configuration
tapimgmt.msc - Telephony
tscc.msc - Terminal Services
tsmmc.msc - Remote Desktop
wmimgmt.msc - Windows Management Instrumentation

Source : http://www.techtutorials.info/2003admin.html
http://www.visualwin.com/

How to set the path in Windows 2000 / Windows XP.

The path is now managed by Windows 2000 / Windows XP and not the autoexec.bat or autoexec.nt files. To change the system environment variables, follow the below steps.

From the desktop, right-click My Computer and click properties.
In the System Properties window, click on the Advanced tab.
In the Advanced section, click the Environment Variables button.
Finally, in the Environment Variables window, highlight the path variable in the Systems Variable section and click edit. Add or modify the path lines with the paths you wish the computer to access. Each different directory is separated with a semicolon as shown below.

C:\Program Files;C:\Winnt;C:\Winnt\System32

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts