சனி, மே 14, 2011

''மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...''

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பதுதியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது. பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

ஆதாரம் & நன்றி : http://tamilstar.net/news-id-human-13-05-11692.htm

வெள்ளி, மே 06, 2011

விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

•லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
•வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
•விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
•லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
•லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை.
•புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
•விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவமுடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
•லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
•லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸினுடைய Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil-computer.blogspot.com/2011/05/blog-post.html

திங்கள், மே 02, 2011

அன்றும் இன்றும்

அப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம்.
இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.

கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.

மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.

சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப் பட்ட பிறகும் வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.

அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.

எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை. கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.

காய்ச்சலை வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

ஆதாரம் & நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5086&ncat=4

வியாழன், ஏப்ரல் 28, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிளட்சர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன், பொறுப்பேற்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் கிறிஸ்டன். சமீபத்திய உலக கோப்பை தொடருடன் இவரது மூன்றாண்டு பயிற்சிக்காலம் முடிந்தது. தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பம் இல்லாத கிறிஸ்ட்ன், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா திரும்பினார். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய பயிற்சியாளர் தேர்வில் தீவிரமாக இறங்கியது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், ஆன்டி பிளவர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இருந்தனர். நேற்று, பி.சி.சி.ஐ., செயற்குழு மும்பையில் கூடியது. இதன் முடிவில், பிளட்சர் (62) இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானார்.
இவர் கடந்த 1983 உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்காக பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1999 முதல் 2007 வரை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து அணி, 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, ஆஷஸ் தொடரை வென்றது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" இந்திய அணியின் பயிற்சியாளராக, பிளட்சர் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும், அணியில் சேர்ந்து கொள்வார். பவுலிங் பயிற்சியாளர் பணியில் எரிக் சிம்மன்ஸ் தொடர்வார்,'' என்றார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9296&Value3=A

சனி, ஏப்ரல் 23, 2011

மெல்ல முச்சுவிடுவோம்

உலகில் ஜெனிக்கும் உயிர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மூச்சுகளை இறைவனிடமிருந்து வாங்கி வந்திருப்பதாகவும், அந்த மூச்சுகளை நாம் பூமியில்
செலவழிப்பதாகவும் இதனால் வேகமாய் மூச்சு விடுவோர் வேகமாய் இறைவனிடம் திரும்பிவிடுவதாகவும் மெதுவாய் ஆற அமர மூச்சுவிடுவோர் இன்னும் கொஞ்சநாள் கூட பூமியில் வாழ்வதாகவும் முன்னோர்கள் நம்பியிருக்கிறார்கள். இதற்கு நாம் அத்தாட்சி வேண்டுமானால் விலங்குகளிடம் போகலாம். நிமிடத்திற்கு நான்கு மூச்சுகள் மட்டுமே விடும் கடல் ஆமைகள் முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.ஆனால் குரங்குகள் நிமிடத்திற்கு 32 முறை மூச்சுவிட அதன் ஆயுட்காலமோ அதிகமாய் போனால் 25 வருடங்கள் மட்டுமே.ஹம்மிங் பறவைகள் நிமிடத்திற்கு 360 தடவைகள் மட்டுமே மூச்சுவிட அதன் அதிக பட்ச வாழ்நாட்கள் 3 ஆண்டுகளாக குறைந்துவிடுகின்றது.Shrews எனப்படும் நச்செலிகள் இன்னும் பாவம், நிமிடத்திற்கு 660 தடவைகள் வேகமாக சுவாசித்து அதனை செலவழித்து விடுவதால் அதன் ஆயுசுநாட்களோ 18 மாதங்கள் மட்டுமே.இப்படி இது ஒரு நிரூபிக்கப்ப்ட்ட உண்மையாக இருக்கின்றது.இதைத் தான் ஆர்ட் ஆப் லிவிங் கிளாசுகளில் பிரீதிங் எக்சசைஸ்சாக பயிற்றுவிக்கின்றார்கள். மெதுவாக மூச்சுவிடு அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழலாமென்கின்றார்கள்.

ஆதாரம் & நன்றி : http://pkp.blogspot.com/

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

IPL-2011 பைனலுக்கு செல்வது எப்படி?

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைனல் எப்படி?
இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:
* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.
* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.
* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9127&Value3=I

புதன், ஏப்ரல் 06, 2011

Coach Kirsten bids goodbye to India











Source : http://epaper.dinamani.com/epapermain.aspx#

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

World Cup - 2015




















Source : http://www.google.co.in/imgres?imgurl=http://1cric.com




Source :
http://www.google.co.in/imgres?imgurl=http://4.bp.blogspot.com

உலகக் கோப்பையை வென்றது இந்தியா! - கோடிக்கணக்கான ரசிகர்கள் குதூகலம்!








தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக
கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9082&Value3=A

தோனியின் "டை' ராசி உலக கோப்பை தொடரிலும் நீடித்தது. இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இறுதியில் நமது அணி உலக கோப்பை வென்று அசத்தியது.
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., மற்றும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நான்கு முக்கிய தொடர்களின் போது, ஒரு போட்டி "டை' ஆனது.
* கடந்த 2007ல், தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், டர்பனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "பவுல்-அவுட்' முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 136 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் விக்டோரியா அணி வெற்றி பெற்றது.
* இந்த உலக கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இந்த நான்கு தொடர்களில், தோனி தலைமையிலான அணி விளையாடிய ஒரு போட்டி "டை' ஆனது. இந்த ராசி கைகொடுக்க, இறுதியில் கோப்பை வென்று அசத்தியது.
---
ஸ்ரீசாந்த் ராசி
வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை முதல் லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்க, அடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான பைனலில் இடம் பிடித்தார். இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. கடந்த 2007ல், "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். இத்தொடரின் பைனலில், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா கொடுத்த "கேட்சை' எளிதாக பிடித்து, இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தார். இதனால் தான் கேப்டன் தோனி, இலங்கை அணிக்கு எதிரான பைனலில் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9085&Value3=A



"சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம், என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இத்தொடரின் பைனலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதித்தது.
இதுகுறித்து இந்தியாவின் சச்சின் கூறியதாவது: சுமார் 28 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு உலக கோப்பை வென்ற தருணத்தை, எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இதைவிட வேறு எதையும் அடைய விரும்பவில்லை. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பை வெல்ல காரணமாக இருந்த சக வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து ஊக்குவித்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், அப்டன் மற்றும் உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.


http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9086&Value3=I

வியாழன், மார்ச் 31, 2011

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்
நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9055&Value3=I

செவ்வாய், மார்ச் 22, 2011

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது.
மற்றவர்கள் எப்படி:
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககராவுக்கு (1977), இம்முறை உலக கோப்பை கிடைக்காது. இங்கிலாந்தின் ஸ்டிராசிற்கு (1977), ஆஷஸ் வெற்றியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இதனால் தான் அடுத்து வந்த ஒருநாள் தொடரில் மோசமாக தோற்றது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980) சிறப்பாக செயல்பட்டாலும், இவர் இம்ரான் கான் ஆகமுடியாது. வெட்டோரி (1979), சமிக்கும் (1983) கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லையாம்.
கிளார்க் வந்தால்...:
கடந்த 2006 உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற, இத்தாலி கேப்டன் கன்னவரோ பிறந்த ஆண்டு 1973. ஆஸ்திரேலிய அணி பார்ப்பதற்கு வலிமையாக இருந்தாலும், பாண்டிங்கிற்கு மீண்டும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை. ஒருவேளை காயம் காரணமாக பாண்டிங் விலகி, 1981ல் பிறந்த மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியேற்றால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தாலும், மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
கிரகங்களில் வலிமையானதாக உள்ள புளூட்டோ தான், 1983ல் கபில் தேவுக்கு சாதகமாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பை வெல்லச் செய்தது. தற்போது இதே பலன்கள் தோனிக்கு ஊக்கமாக அமைவதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நன்றி :
http://sports.dinamalar.com

திங்கள், மார்ச் 21, 2011






















Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage



Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

திங்கள், பிப்ரவரி 28, 2011

சச்சின் "உலக' சாதனை!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மார்க் வாக் உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=8783&Value3=A

புதன், பிப்ரவரி 16, 2011

ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.


கம்ப்யூட்டரின் உயிர்

நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை ( அதாவது உடலை ) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் ( அதாவது உயிர் ) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?

உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, "டிவி' போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை ( Instruction ) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது ( Execute ) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.



குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?

கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை ( Management ) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.

1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் ( CPU ) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்

எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:

1) ஒரு பயனாளர் - ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)



ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

நன்றி : http://mytamilpeople.blogspot.com/2011/02/operating-system-functions-and.html

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

Vases and Faces















Source : http://members.optusnet.com.au/charles57/Creative/Drawing/vases.htm

திங்கள், பிப்ரவரி 07, 2011

மறதியை விரட்ட ஒரு உத்தி

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள்.

நன்றி : http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/02/blog-post_05.html

வியாழன், பிப்ரவரி 03, 2011

மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றும் திட்டம்

சேவையை மாற்றுவது எப்படி?

கீழ்க்கண்டவற்றை பின்பற்றி நமது சேவையை மாற்றிக் கொள்ளலாம்.

- உங்களது செல்போன் எண்ணை 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவியுங்கள்.

- உங்களுக்கு தற்போதைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.

- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் மாற்றப்பட்டு விடும்.

- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே

நன்றி : http://thatstamil.oneindia.in/news/2011/01/20/mobile-number-portability-switch-tele-operator-aid0091.html

வியாழன், ஜனவரி 27, 2011

ப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு

இலவச வலைப்பூ சேவையில் முன்னணி வகிப்பது ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ். இந்த இரண்டில் எது சிறந்தது என்று அறிந்துக்கொள்ள ஒரு சிறிய தேடல். வேர்ட்பிரஸில் இலவச, மற்றும் கட்டண சேவை இரண்டும் இருந்தாலும் இலவச சேவையை மட்டுமே இங்கே ப்ளாக்கரோடு ஒப்பிட்டிருக்கிறேன்.

ஏன் பெரும்பாலானவர்கள் ப்ளாக்கர் சேவையில் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள்...?
· இலவசம் + எளிமையானது.
· கூகிள் என்ற மதிப்புமிக்க நிறுவனத்தின் சேவை.
· ஆட் சென்ஸ், பிகாஸா, பிரண்ட் கனெக்ட், யூடியூப் போன்ற இணைந்த
சேவைகள்

· எண்ணிலடங்கா இலவச விட்ஜெட்டுகள்.
· எத்தனை வலைப்பூ வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள்ளலாம். இலவசமாக.
· குறிச்சொற்களுக்கு ஏற்ப கூகிள் தேடுபொறியில் உங்கள் வலைப்பூ
முன்னிலைப்படுத்துப்படும்.


வேர்ட்பிரஸ்

· இலவசம். எளிமையானது எனினும் ப்ளாக்கர் அளவிற்கு எளிமையானது அல்ல.
· தனி வலைத்தளமாக மாற்றும் செய்முறை சுலபமானது.
· பிற சேவையில் இருந்து வலைப்பூவை ஏற்றுமதி செய்வது எளிது.
· ஏகப்பட்ட டெம்ப்ளேட்ஸ்.
· சேவையைப் பற்றி விசாலமான உதவி வழங்க: en.forums.wordpress.com/


வேர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்துவது கடினமா...?
· கொஞ்சம் கடினம்தான். ஆனால் பழகினால் இரண்டே நாட்களில் எளிமையாகிவிடும்.


புதிதாக வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறீர்களா...?
முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக வலைப்பூ ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்.
· பொழுதுபோக்கிற்காகவும், பர்சனல் விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காகவும் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ளாக்கர் சேவையே போதுமானது. எளிமையானதும் கூட.
· டெக்னிக்கலான விஷயங்களை எழுதுவும், தனி வலைத்தளமாக மாற்ற திட்டம் வைத்திருந்தாலும் வேர்ட்பிரஸ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.


ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறும் வசதி இருக்கிறதா...?
· ப்ளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸ் சேவைக்கு மாறுவது சாத்தியம். ஆனால் வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை.


பிற இலவச வலைப்பூ சேவைகள்...?
· TypePad
· Yahoo 360
· Live Journal
· BlogSome
இன்னும் ஏராளமான இலவச சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.

நன்றி : http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/vs.html

வியாழன், ஜனவரி 20, 2011

பெண்களின் ஏழு பருவங்கள்

•பேதை 1 முதல் 8 வயது வரை
•பெதும்பை 9 முதல் 10 வயது வரை
•மங்கை 11 முதல் 14 வயது வரை
•மடந்தை 15 முதல் 18 வயது வரை
•அரிவை 19 முதல் 24 வயது வரை
•தெரிவை 25 முதல் 29 வயது வரை
•பேரிளம் பெண் 30 வயது முதல்

வியாழன், ஜனவரி 13, 2011

கணினி வேகமாக செயல்பட

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…




1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.


2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.


3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.


4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.


5. கிளிக் "OK", "Apply" & "OK",


6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.


7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".


8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.


9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.


10. "Secondary IDE channel",
Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.


11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு சோதனை பண்ணுங்க

http://thamilkaniniyagam.blogspot.com/

செல்போன், லேப்டாப் ‘2 இன் 1’

லாஸ்வேகாஸ் கம்ப்யூட்டர் வைப்பதற்கு ஒரு கிரவுண்டு பரப்பில் இடம் தேவைப்பட்டது ஒரு காலம். சைஸ் சுருங்கி சுருங்கி டேபிளுக்கு வந்தது. லேப்டாப், பாம்டாப் என்று தொடர்ந்து சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த பரிணாம வளர்ச்சிதான் மோட்டரோலா நிறுவனத்தின் ‘2 இன் 1’ கண்டுபிடிப்பான ‘ஆட்ரிக்ஸ் 4ஜி’ ஸ்மார்ட்போன். வழக்கமான ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா அம்சங்களும் இதில் உண்டு. இன்னொரு கூடுதல் வசதி. இதை இன்ஸ்டன்ட் லேப்டாப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்காக டம்மி பீஸ் கீபோர்டு மற்றும் மானிட்டர் உருவாக்கியுள்ளனர்.




அதன் பின்பகுதியில் செல்போனை சொருகினால் செல்போனின் குட்டித் திரைக்கு பதிலாக, டம்மி பீஸின் அகன்ற மானிட்டரில் பார்த்துக் கொள்ளலாம். தாராளமாக மடியில் வைத்து டைப் செய்யலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இமெயில் அனுப்பலாம். டம்மி பீஸ் லேப்டாப்புக்கு என்று சாப்ட்வேர் எதுவும் கிடையாது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நேற்று தொடங்கி 9&ம் தேதி வரை நடக்கிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்ரிக்ஸ் 4ஜி, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நன்றி : http://www.tamilulakam.com/news/view.php?id=21627

வாட்டர் லெவல் Monitor










Water Level Monitor
[Save water and Save Nature]

* Greetings to all, We are going to introduce Water Level Monitor using IC 555.

* Our Slogan is “Save Water Save Nature”

When the water reaches a particular level, the circuit will produce an audible tone, visual Light.

* In the Circuit, water acts as a resistor and completes the Circuit thus activating the IC 555. This helps in monitoring water level in water tanks.

* This device is Simple, Safe, Portable and Easy to handle .




R1 – 1KOhm
R2 – 68KOhm
R3 - 10KOhm
R4 - 10 KOhm

C1 - 10uF 9v
C2 - 100nF
C3 - 100nF

IC1 – NE 555
IC2 – NE 555

Other
Speaker 8Ohm, 1 Watt
LED - 1
Power Source / Battery 5-15Volt

வியாழன், ஜனவரி 06, 2011

ஆவலைத் தூண்டும் அறுபது வலைப்பூ

1. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 76,621

2. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 85,946

3. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 188,994

4. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 230,176

5. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 240,124

6. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 257,850

7. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com
Alexa Rank 281,081

8. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.com/
Alexa Rank 295,313

9. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 310,917

10. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 372,249

11. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com
Alexa Rank 432,540

12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்
http://www.sollamattaen.co.cc
Alexa Rank 545,195

13. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 579,170

14. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com
Alexa Rank 584,147

15. ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot.com/
Alexa Rank 939,528

16. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 951,930

17. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 1,000,838

18. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 1,040,014

19. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.com/
Alexa Rank 1,098,567

20. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,184,313

21. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,219,645

22. தmil computer
http://computertamil.eu/
Alexa Rank 1,267,806

23. லினக்ஸ்
http://kumarlinux.blogspot.com
Alexa Rank 1,270,009

24. தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com
Alexa Rank 1,564,281

25. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com
Alexa Rank 1,613,320

26. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 1,895,185

27. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 2,098,319

28. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,164,196

29. தமிழ் கணினியகம்
http://thamilkaniniyagam.blogspot.com
Alexa Rank 2,212,780

30. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com
Alexa Rank 2,243,323

31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்
http://vasanthlimax.blogspot.com
Alexa Rank 2,345,140

32. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com
Alexa Rank 2,398,478

33. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 2,419,779

34. தொழில்நுட்ப உலகம்
http://itulaku.blogspot.com
Alexa Rank 2,606,863

35. Jiyath Online | ஜியாத் ஒன்லைன்
http://jiyathonline.blogspot.com/
Alexa Rank 2,899,226

36. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com
Alexa Rank 2,912,224

37. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 2,916,627

38. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,053,713

39. Tamil-Tech Tech News
http://www.tamil-tech.com
Alexa Rank 4,040,040

40. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training.blogspot.com
Alexa Rank 4,149,327

41. Vino's Cafe
http://dareone.blogspot.com
Alexa Rank 4,331,534

42. தமிழ்பிளாக்.இன்
http://www.tamilblog.in
Alexa Rank 4,619,820

43. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 4,769,285

44. தகவல் மலர்
http://thagavalmalar.blogspot.com
Alexa Rank 4,777,685

45. Vinoth Infotek
http://vinothinfotek.blogspot.com
Alexa Rank 4,882,988

46. AutoCad
http://cadlearn.blogspot.com
Alexa Rank 5,250,508

47. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 5,513,052

48. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 5,801,433

49. K. Menan
http://kmenan.blogspot.com
Alexa Rank 5,938,559

50. கணிப் பொருள்
http://kaniporul.blogspot.com
Alexa Rank 6,108,005

51. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 6,234,539

52. கணிநுட்பம்
http://kaninutpam.blogspot.com
Alexa Rank 6,288,572

53. தமிழ் Fedora
http://fedoraintamil.blogspot.com
Alexa Rank 6,386,259

54. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்
http://tamilcomputer.wordpress.com
Alexa Rank 6,391,785

55. Sajeenewtech
http://sajeenewtech.blogspot.com
Alexa Rank 7,149,284

56. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 7,464,827

57. Tamil Blog
http://tamil2012.blogspot.com
Alexa Rank 8,836,732

58. கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com
Alexa Rank 9,731,889

59. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 9,801,565

60. கம்ப்யூட்டர் நண்பன்
http://computernanban.blogspot.com
Alexa Rank 11,915,029


நன்றி : http://www.suthanthira-menporul.com/2011/01/top-sixty-tamil-computer-websites.html

செவ்வாய், டிசம்பர் 28, 2010

ப்ளாக் [Blog] -ன் வரலாறு

ஓர் வலைப்பதிவு வெளியீடு அமைப்பாகும்.இதனை முதலில் பைரா லாப்ஸ் என்ற நிறுவனம் 1999ஆம் ஆண்டு உருவாக்கியது. பின்னர் 2003ஆம்ஆண்டில் கூகிள்/Google நிறுவனம் இவ்வமைப்பை வாங்கியது.இங்கு சொந்த வலைத்தளங்கள் இல்லாத வலைப்பதிவர்கள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டு blogspot.com என்ற துணைபரப்பில் இந்நிறுவன வழங்கியில் இருந்து வெளியிடுகிறார்கள். இந்த சேவையை கூகிள்/Google இலவசமாக வழங்குகிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil25.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

வியாழன், டிசம்பர் 23, 2010

தண்ணீரின் மேல் நடக்கலாம்

வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.

ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.


நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்

இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.




உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.

மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,




நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.



நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.

மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.


ஆதாரங்களுடன் நன்றி : http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_5384.html

திங்கள், டிசம்பர் 20, 2010

சச்சின் சகாப்தம்

இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.


37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தார்.


21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், தனது 175-வது டெஸ்ட் போட்டியில் 50-வது சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.


இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 1,532 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 7 சதங்களை விளாசியுள்ளார். அவரின் சராசாரி 85 ரன்கள் ஆகும்.


இதுவரை 175 டெஸ்ட் போட்டியில் விளையாடி 14,500 ரன்களுக்கு மேல் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சினே முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 சதங்களுடனும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 37 சதங்களுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.


ஒருநாள் போட்டியில் 46 சதம்


442 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 17,598 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின் விரைவில் 50-வது சதத்தை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் வாழ்த்து


டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்துள்ள சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=349031&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடர்கிறது சச்சின் சகாப்தம்


சச்சின் வரலாறு:

மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை "ஆப்சைடில்' தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார்.

தொடரும் சாதனை பயணம்...

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

50 சதம் வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010

ஆஸி.,க்கு எதிராக அதிகம்


தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி சதங்கள்

1. ஆஸ்திரேலியா 11

2. இலங்கை 9

3. இங்கிலாந்து 7

4. தென் ஆப்ரிக்கா 6

5. வங்கதேசம் 5

6. நியூசிலாந்து 4

7. வெஸ்ட் இண்டீஸ் 3

8. ஜிம்பாப்வே 3

9. பாகிஸ்தான் 2

தோனிக்கு பெருமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஆதாரங்களுடன் நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=
7955&Value3=I

வெள்ளி, டிசம்பர் 17, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.z9tech.com/view.php?22Amld0b4jF0Qd4a2KMC2e2cBnd3cdeZBZV203eQAA2e2q69racd3JOo40

திங்கள், டிசம்பர் 13, 2010

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது. வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.
1.சிறந்த பதிவுகளை வெளியிடவும்.
2.மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.
3.உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.
4.உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.
5.உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.
6.உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம். அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.
7.உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.
8.ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.
9.உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்
10.உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.
11.உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.
12.ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.
13.நேரம் தவறாமல் பதிவு போடவும்.
14.Popular Post விட்ஜெட் சேருங்கள்.
15.உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.
16.உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.
17.உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.
18.வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது.
19.உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.
20.உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.
21.உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.
22.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords
23.உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add
24.follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.
25.Archive விட்ஜெட் பொருத்துங்கள்.
26.Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும்.
27.Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.
28.Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.
29.உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.
30.உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.
31.ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
32.பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.
33.கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.
34.உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.
35.உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.
36.Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.
37.உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள்.
38.பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
39.தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம்.
40.தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.
இந்த வழிகளை கடைபிடித்தால் கூடிய விரைவில் நீங்கள் சிறந்த பதிவராக வலம் வரலாம்.

ஆதாரம் நன்றிகளுடன் : http://vandhemadharam.blogspot.com/2010/09/40.html

வெள்ளி, டிசம்பர் 10, 2010

Windows Xp – Commands – Cpl list

Run command is very useful, but sometimes it is forgotten. Use it sometimes and you will find how powerful is run command.

1.Accessibility Controls – access.cpl
2.Accessibility Wizard – accwiz
3.Add Hardware Wizard – hdwwiz.cpl
4.Add/Remove Programs – appwiz.cpl
5.Administrative Tools – control admintools
6.Automatic Updates – wuaucpl.cpl
7.Bluetooth Transfer Wizard – fsquirt

8.Calculator – calc
9.Certificate Manager – certmgr.msc
10.Character Map – charmap
11.Check Disk Utility – chkdsk
12.Clipboard Viewer – clipbrd
13.Command Prompt – cmd
14.Component Services – dcomcnfg
15.Computer Management – compmgmt.msc
16.Control Panel – control
17.Date and Time Properties – timedate.cpl
18.DDE Shares – ddeshare
19.Device Manager – devmgmt.msc
20.Direct X Troubleshooter – dxdiag
21.Disk Cleanup Utility – cleanmgr
22.Disk Defragment – dfrg.msc
23.Disk Management – diskmgmt.msc
24.Disk Partition Manager – diskpart
25.Display Properties – control desktop
26.Display Properties – desk.cpl
27.Dr. Watson System Troubleshooting Utility – drwtsn32
28.Driver Verifier Utility – verifier
29.Event Viewer – eventvwr.msc
30.Files and Settings Transfer Tool – migwiz
31.File Signature Verification Tool – sigverif
32.Findfast – findfast.cpl
33.Firefox – firefox
34.Folders Properties – control folders
35.Fonts – control fonts
36.Fonts Folder – fonts
37.Free Cell Card Game – freecell
38.Game Controllers – joy.cpl
39.Group Policy Editor (for xp professional) – gpedit.msc
40.Hearts Card Game – mshearts
41.Help and Support – helpctr
42.HyperTerminal – hypertrm
43.Iexpress Wizard – iexpress
44.Indexing Service – ciadv.msc
45.Internet Connection Wizard – icwconn1
46.Internet Explorer – iexplore
47.Internet Properties – inetcpl.cpl
48.Keyboard Properties – control keyboard
49.Local Security Settings – secpol.msc
50.Local Users and Groups – lusrmgr.msc
51.Logs You Out Of Windows – logoff
52.Malicious Software Removal Tool – mrt
53.Microsoft Chat – winchat
54.Microsoft Movie Maker – moviemk
55.Microsoft Paint – mspaint
56.Microsoft Syncronization Tool – mobsync
57.Minesweeper Game – winmine
58.Mouse Properties – control mouse
59.Mouse Properties – main.cpl
60.Netmeeting – conf
61.Network Connections – control netconnections
62.Network Connections – ncpa.cpl
63.Network Setup Wizard – netsetup.cpl
64.Notepad notepad
65.Object Packager – packager
66.ODBC Data Source Administrator – odbccp32.cpl
67.On Screen Keyboard – osk
68.Outlook Express – msimn
69.Paint – pbrush
70.Password Properties – password.cpl
71.Performance Monitor – perfmon.msc
72.Performance Monitor – perfmon
73.Phone and Modem Options – telephon.cpl
74.Phone Dialer – dialer
75.Pinball Game – pinball
76.Power Configuration – powercfg.cpl
77.Printers and Faxes – control printers
78.Printers Folder – printers
79.Regional Settings – intl.cpl
80.Registry Editor – regedit
81.Registry Editor – regedit32
82.Remote Access Phonebook – rasphone
83.Remote Desktop – mstsc
84.Removable Storage – ntmsmgr.msc
85.Removable Storage Operator Requests – ntmsoprq.msc
86.Resultant Set of Policy (for xp professional) – rsop.msc
87.Scanners and Cameras – sticpl.cpl
88.Scheduled Tasks – control schedtasks
89.Security Center – wscui.cpl
90.Services – services.msc
91.Shared Folders – fsmgmt.msc
92.Shuts Down Windows – shutdown
93.Sounds and Audio – mmsys.cpl
94.Spider Solitare Card Game – spider
95.SQL Client Configuration – cliconfg
96.System Configuration Editor – sysedit
97.System Configuration Utility – msconfig
98.System Information – msinfo32
99.System Properties – sysdm.cpl
100.Task Manager – taskmgr
101.TCP Tester – tcptest
102.Telnet Client – telnet
103.User Account Management – nusrmgr.cpl
104.Utility Manager – utilman
105.Windows Address Book – wab
106.Windows Address Book Import Utility – wabmig
107.Windows Explorer – explorer
108.Windows Firewall – firewall.cpl
109.Windows Magnifier – magnify
110.Windows Management Infrastructure – wmimgmt.msc
111.Windows Media Player – wmplayer
112.Windows Messenger – msmsgs
113.Windows System Security Tool – syskey
114.Windows Update Launches – wupdmgr
115.Windows Version – winver
116.Windows XP Tour Wizard – tourstart
117.Wordpad – write

Source with Courtesy : http://sysadminblog.net/?p=81

சனி, நவம்பர் 27, 2010

தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்

1907

•முதலாவது Wireless Telephone System உருவானது

1930

•முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

1931

•கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

1936

•போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

1940

•எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943

•முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947

•Citezen 's Band Radio , Car Radiotelephone

1947

•Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949

•Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954

•முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956

•கார் மொபைல் போன் சிஸ்டம்

1958

•கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

1966

•Cordless தொலைபேசி உருவானது

1972

•இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

1973

•முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983

•முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

1991

•உலகின் முதலாவது GSM செலூலர் போன்

1993

•SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994

•Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995

•முதலாவது இரு வழி பேஜர் உருவானது

1998

•Nokia 2110
•முதலாவது Color Palm -Size PC

2000

•முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002

•Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003

•Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004

•மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005

•Maicrosoft 3G போன்

2006

•Microft Windows 5 .0 Smartphone
•Motrola வின் Ming Smartphone
போன்றன பாவனைக்கு வந்தது

2007


•iPod Touch
•Apple இன் iPhone
•Android OS
•Wi -Max
•Amzon Kindle (Wirless Reading Device )
போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின

2008

•முதலாவது Androd Phone
•HTC Dream
•iPhone 3G
•iPhone இக்கான SKD
என்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

2009

•Nokia 900 அறிமுகமானது

2010


•iPad ,IPhone 4 , BlackBerry Play Book
பயன்பாட்டுக்கு வந்தது.

ஆதாரம் : http://nishole.blogspot.com/2010/11/blog-post_25.html

நுண்ணறிவு

நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், பண்பியல் பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், , இதனை, ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.

நன்றி : http://psychologytamil.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

வியாழன், நவம்பர் 25, 2010

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?

வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?22Amld0b4XF0Qd4a2AMM2e2cBnd3cdeZBZV203eQAA2e2M69racd2JO440

சனி, நவம்பர் 20, 2010

அரசியல் ஆத்திச்சூடி..!!

அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை சுருட்டு.,

இலவசம் குடு.,

ஈயையும் கட்சியில் சேர்.,

உண்மையை மறை.,

ஊழலை உலகமயமாக்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ஐந்து காலேஜாவது கட்டு.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,

ஓடி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,

நன்றி : http://gokulathilsuriyan.blogspot.com/2010/11/blog-post_19.html

வெள்ளி, நவம்பர் 12, 2010

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

1.அட்சரங்கள்.
2.விகிதம்.
3.கணிதம்.
4.வேதம்.
5.புராணம்.
6.வியாகரணம்.
7.ஜோதிடம்.
8.தர்ம சாஸ்திரம்.
9.யோக சாஸ்திரம்.
10.நீதி சாஸ்திரம்.
11.மந்திர சாஸ்திரம்.
12.நிமித்த சாஸ்திரம்.
13.சிற்ப சாஸ்திரம்.
14.வைத்திய சாஸ்திரம்.
15.சாமுத்ரிகா லட்சணம்.
16.சப்தப்பிரம்மம்.
17.காவியம்.
18.அலங்காரம்.
19.வாக்கு வன்மை.
20.கூத்து.
21.நடனம்.
22.வீணை இசை.
23.புல்லாங்குழல் வாசிப்பு.
24.மிருதங்க இசை.
25.தாளம்.
26.ஆயுதப் பயிற்சி.
27.ரத்னப்பரீட்சை.
28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
30.குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
31.ரத சாஸ்திரம்.
32.பூமியறிதல்.
33.போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம்.
34.மற்போர் சாஸ்திரம்.
35.வசீகரித்தல்.
36.உச்சாடனம்.
37.பகைமூட்டுதல்.
38.காம சாஸ்திரம்.
39.மோகனம்.
40.ஆகரஷனம்.
41.ரசவாதம்.
42.கந்தரவ ரகசியம்.
43.மிருக பாஷை அறிதல்.
44.துயரம் மாற்றுதல்.
45.நாடி சாஸ்திரம்.
46.விஷம் நீக்கும் சாஸ்திரம்.
47.களவு.
48.மறைத்துரைத்தல்.
49.ஆகாயப் பிரவேசம்.
50.விண் நடமாட்டம்.
51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
52.அரூபமாதல்.
53.இந்திர ஜாலம்.
54.மகேந்திர ஜாலம்.
55.அக்னி ஸ்தம்பனம்.
56.ஜலஸ்தம்பனம்.
57.வாயு ஸ்தம்பனம்.
58.கண்கட்டு வித்தை.
59.வாய்கட்டு வித்தை.
60.சுக்கில ஸ்தம்பனம்.
61.சுன்ன ஸ்தம்பனம்.
62.வாள்வித்தை.
63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
64.இசை.

நன்றி : http://velang.blogspot.com/2008/12/blog-post_15.html

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?
1.டி வி டி ரிப் (DVD RIP)

Media->Convert/Save சென்று டிஸ்க் டாபை(Tab) அழுத்தவும். கோப்பின் பெயரின் பதிவு செய்த பின்(.MPG இல் முடிவுற வேண்டும்) ஸேவ்(Save) செய்யவும்.

2.வீடியோ ரெகார்டிங்


பார்க்கும் வீடியோக்களை நீங்கள் ரெகார்ட் செய்யலாம்(Streaming Videos).
அதற்கு முதல் View>Advanced Control சென்றால் உடனே ரெகார்ட் என்ற பட்டன் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் ரெகார்ட் செய்யலாம்.

3.ரார் கோப்புகளை பார்க்கலாம்(Video Files in Rar)

உங்கள் வீடியோக்கள் ரார் கோப்புக்குள் அடங்கி இருந்தால் எக்ஸ்ட்ராட்(Extract) செய்யாமலேயே நேரடியாக பார்க்கலாம்.

4.ஆன்லைன் ரேடியோ.


Media>Services Discovery>Shoutcast radio listings சென்றால் ஆன்லைன் ரேடியோ பல கேட்கலாம் .

5.வீடியோ வகை மாற்றம் :


ஒரு வீடியோ வகையில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(MP4, WMV, AVI, OGG, MP3 etc).

Media>Convert/Save சென்று உங்களுடைய கோப்பினை ஏற்றி பின்பு Convert அழுத்துங்கள்.

Note: output format,output file location தேர்ந்தெடுக்க மறக்கக் கூடாது

நன்றி : http://pudhiyayugam.blogspot.com/2009/10/blog-post.html

வியாழன், நவம்பர் 11, 2010

நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன, ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

ஆதாரம் : http://erodethangadurai.blogspot.com/2010/10/must-see_15.html

விடை சொல்லமுடியா வினாக்கள்

சில கேள்விகளுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சில கேள்விகள் இங்கே?


மத்திய அரசுக்கு கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை?


ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவர்?


ராமாதாஸ் அடுத்து எந்த கட்சியுடன் கூட்ட
ணி வைப்பார்? எப்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்?


ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்?


தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?


தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?


இந்தியாவின் உண்மையான பிரதமர் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?


விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா?

நன்றி : http://ragariz.blogspot.com/2010/11/blog-post_10.html

செவ்வாய், அக்டோபர் 19, 2010

100 வயதில் பிஎச்டி படிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி !

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 100 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர், பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்ள பெயர் பதிவு செய்துள்ளார். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மிகவும் வயதான பி.எச்.டி. மாணவர் இவர்தான். கவுகாத்தியில் வசிப்பவர் போலாராம் தாஸ். இந்த வாரக் கடைசியில் இவருக்கு 100வது பிறந்த நாள் வருகிறது. போலாராம் தாஸ் 19 வயது இளைஞனாக இருந்தபோது, 1930&ல் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக 2 மாதம் சிறை தண்டனை பெற்றார். இதன் பின்னர் வணிகவியல், சட்டப்படிப்பு படித்தார். 1945ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1971ம் ஆண்டில் அரசு பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தாஸ், ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி பெயர் மந்தாகினி. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிஎச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது போலாவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒன்றே மனிதத்துவம், ஒரே கடவுள் என்ற மதங்களின் தத்துவ அடிப்டையிலான நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறித்து அசாமின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை இப்போது செய்து வருகிறார். அதில் பெறப் போகும் பட்டம்தான் தனது 100 ஆண்டு பிறந்த நாள் பரிசு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாஸ்.

தாஸ் பி.எச்.டி. ஆய்வு மாணவராக சேர்ந்துள்ள கவுகாத்தி பல்கலை.யின் துணைவேந்தர் ஓ.கே. மெட்ஹி கூறுகையில், “100 வயதில் ஆய்வு படிப்பை படிக்கும் மாணவரை பார்ப்பது உண்மையில் அரிது. தாசை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவரது இந்த முயற்சி, தன்னம்பிக்கை, சமுதாய சேவை ஆகியவை இளைய சமுதாயத்துக்கு உத்வேகத்தை அளிக்கும்Ó என்றார்.

ஆதாரம் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18268&id1=12

திங்கள், அக்டோபர் 18, 2010

காமன்வெத் சாதனையார்கள் - 2010





Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

புதன், அக்டோபர் 13, 2010

சச்சின் - டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம்

12-10-10, 214 ரன்கள் குவித்த சச்சின், டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சக வீரர் சேவக், இலங்கையின் அட்டபட்டு, ஜெயவர்தனா, பாகிஸ்தானின் மியாண்தத் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். தவிர, அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 4 வது இடத்தை கைப்பற்றினார்.

டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள்:
வீரர் போட்டி இரட்டை சதம்
பிராட்மேன் (ஆஸி.,) 52 12
லாரா (வெ.இண்டீஸ்) 131 9
ஹம்மண்ட் (இங்கிலாந்து) 85 7
சங்ககரா (இலங்கை) 91 7
சேவக் (இந்தியா) 81 6
அட்டபட்டு (இலங்கை) 90 6
ஜெயவர்தனா (இலங்கை) 113 6
மியாண்தத் (பாக்.,) 124 6
சச்சின் (இந்தியா) 171 6

மகளுக்கு அர்ப்பணம்

பெங்களூரு டெஸ்டில், அடித்த இரட்டை சதத்தை தனது மகள் சாராவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இது குறித்து சச்சின் கூறுகையில்,""இன்று (அக்.12) எனது மகள் சாராவுக்கு 13 வது பிறந்த நாள். இந்த நாளில், நான் அடித்த இரட்டை சதத்தை எனது மகள் சாராவுக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன்,'' என்றார்.

ஆதராம் : http://www.dailythanthi.com/article.asp?NewsID=600367&disdate=10/13/2010

திங்கள், அக்டோபர் 11, 2010

சச்சின் 14 ஆயிரம் ரன்கள்: டெஸ்டில் புதிய சாதனை

டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து, புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த சச்சின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7275&Value3=I

வியாழன், அக்டோபர் 07, 2010

சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது* சிறந்த டெஸ்ட் வீரர் சேவக்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.

முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.

கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.


சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்.



நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7248&Value3=I

வியாழன், செப்டம்பர் 30, 2010

அயோத்தி பிரச்சினை அன்று முதல் இன்று வரை



மூலம் : http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=2992010

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?

ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.

முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2b2e0FF22eeZZBB20ecU4OXJ2cddQQAAccd3KmM0W4b44Rlmmaa43ddnB2d0e2X96600

புதன், செப்டம்பர் 15, 2010

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், “கம்ப்யூட்டர் நெட் ஒர்க்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே “ஆன்லைனில்’ பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் “ஸ்கேன்’ செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,” என்றார்.

நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84045

புதன், செப்டம்பர் 08, 2010

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப்பிங் சாதனை

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் முறியடித்துள்ளார். இவர் சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் வெளியிட்ட கேலக்ஸி எஸ் என்ற போனை இதற்குப் பயன்படுத்தினார். இவர் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. சாலையோரக் கடைகளில் பொருள் வாங்கச் சென்ற இவர், அங்கே கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். இந்த சாதனை பற்றிக் கூறியவுடன், தானும் கலந்து கொண்டு, ஜஸ்ட் லைக் தட், டைப் செய்துள்ளார். அதுவே கின்னஸ் சாதனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. தான் நாளொன்றுக்கு 40 முதல் 50 டெக்ஸ்ட் மெசேஜ் போன் மூலம் அனுப்புவதாகவும், அதுவே வேகத்தை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1646&ncat=5

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

மூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

உடற்பயிற்சி செய்வதால் பலருக்கு இதயத்திற்கு நலம் தரும் என்று தெரியும் ஆனால் உடற்பயிற்சியினால் மூளைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

உடற்பயிற்சியினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் செல்கள் நலமாக வைத்திருக்கின்றன. மூளையை நலமாக வைத்திருக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயக்க வழிவகை செய்கிறது. மூளையில் நல் இயக்கத்திற்கு ஓமேகா 3 எனும் ரசாயனம் உதவுகிறது. இது சாலமன் மற்றும் ஒரு சில மீன் வகைகளில் கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு மற்றும் ஒரு சகங குளிர்பானங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

மூளையின் நலத்திற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின், சாலமன் மீன்கள், சாக்லேட், கிரீன் டீ ஆகியன மூளை வளர்ச்சிக்கு உதவுபவை. புத்தகங்கள் வாசிப்பது, குறுக்கெழுத்து போட்டிகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவை மூளையின் நலத்தை பாதுகாக்கும். சுறுசுறுப்பான இயக்கத்துடன் உள்ளவர்களுக்கு முதுமையில் மறதி ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் பேராசிரியர் கூறினார்.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2bdPdnBd4dc230QAm204acCe0FFcd0eavXO4A2cd324mlXTe2edFN96e4ce0eYmM0604b42BZBLTb0

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

கனவு காணுங்கள்


கனவு காணுங்கள்



ஆதாரம் : http://epaper.dinamani.com/epapermain.aspx#

ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகள்

புதிய விதிகள்

* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6791&Value3=A

சனி, ஜூலை 31, 2010

கோபத்தை ஏற்படுத்தும் நாள்

முதல் இந்திய பிரவுசர் - எபிக்

இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆதாரம் : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1052&ncat=4

வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை

முதல் வீரர்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரானார் இலங்கையின் முரளிதரன். 133 போட்டிகளில் பந்து வீசிய இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
முரளிதரன் (இலங்கை) 133 800
ஷேன்வார்ன் (ஆஸி.,) 145 708
அனில் கும்ளே (இந்தியா) 132 619
மெக்ராத் (ஆஸி.,) 124 563
வால்ஷ் (வெ.இண்டீஸ்) 132 519
கபில்தேவ் (இந்தியா) 131 434
ரிச்சர்ட் ஹாட்லி (நியூசி.,) 86 431
ஷான் போலக் (தெ.ஆ.,) 108 421
வாசிம் அக்ரம் (பாக்., ) 104 414

7 வது முறை
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

793 முதல் 800 வரை
காலே டெஸ்ட் போட்டியில் முரளிதரன் கைப்பற்றிய முதல் விக்கெட் இந்தியாவின் சச்சின். கடைசி விக்கெட் பிரக்யான் ஓஜா. காலே போட்டிக்கு முன்னதாக, இவர் 792 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். காலேவில் முரளிதரன் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
விக்கெட் வீரர்
793 சச்சின்
794 தோனி
795 யுவராஜ்
796 பிரக்யான் ஓஜா
797 மிதுன்
798 யுவராஜ்
799 ஹர்பஜன்
800 ஓஜா

சாதனைகள் பல....
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக்கெட்டுகள்.
* தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 4 முறை 10 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
* 2000, 2001, 2006 ம் ஆண்டுகளில், தலா 75 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர்.

விக்கெட் இல்லை
காலே டெஸ்டில் முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 32.1 ஓவர் வீசிய ஹர்பஜன், ஒரு விக்கெட் கூட வீழ்த்த வில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருப்பது இது 6 வது முறை.

5 வது வீரர்
காலே டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லட்சுமண், அந்நிய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின் (7521), டிராவிட் (6631), கவாஸ்கர் (5055), கங்குலி (4032) ஆகியோர் அந்நிய மண்ணில்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6607&Value3=A

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts