புதன், ஜூலை 07, 2010

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசி நேயர்களுடைய கைகளில் உள்ள விரல்கள் குட்டையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகளும் மற்றவர்களைவிட அதிகமா இருக்கும். இவர்களுடைய முதுகில், கழுத்தில் தோள்பட்டையில் மச்சம் இருக்கும்.

இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுடைய குணம் மற்றவர்களை வருந்தச் செய்யும். இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் உருவாக்க மனப்பாங்கு கொண்டவர்கள். உடல் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர். இவர்கள் சராசரியாக வாழ்பவர்கள். அன்பு ஏற்படத் தொடங்கும் வேளையில் முன்னேற்றத்துக்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல் நலத்தை நல்லபடியாக கவனிப்பவர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். இதனை அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இந்த ராசி உள்ளவர்கள் ஆசியராகவும், செய்தியாளர்களாகவும் நன்றாக பணிபுரிவார்கள். பணத்துடைய அருமையும், முக்கியத்துவத்தையும் புரிந்தவர்கள். சிக்கனமாக இருக்க ஆசைப்படுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.



கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கன்னி ராசி உள்ளவர்களுக்கு விருச்சிகம், ரிசபமும், மகர ராசி உள்ளவர்கள் பொருந்துவார்கள். மீன ராசியை கவருபவர்கள். ஆனாலும் இரண்டு கன்னி ராசிக்காரர்கள் சேர்ந்தால் விரோதம் இருக்கும். மிதுனம், துலாம், சிம்ம ராசி உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். கன்னி ராசி உள்ளவர்கள் கும்ப ராசி, மேஷம் ராசி உள்ளவர்களை பிடிக்காது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்ற ராசிகளிடையே சராசரியாக பழகுவார்கள்

சங்கீதத்திலும், புகைப்படத் துறையிலும் சிறந்தவர்கள். படிப்பில் ஆர்வம் அதிகம். இவர்கள் விழிப்புணர்வோடும், கவனிப்போடும் இருப்பதனால் எழுத்தாளர்களாகவும் ஆவார்கள். கன்னி ராசி உடையவர்கள் உதவி செய்யும் குணமுடையவர். வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், செய்தி வாசிப்பவர்களாகவும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கஷ்ட நேரத்தில் உதவி செய்து மகிழ்ச்சியடைவர். நூலகப் பணியிலும், யோகத்திலும் ஈடுபடுவர். வேலை செய்யும் உணர்வுடையவர்கள்.


கன்னி ராசி உள்ளவர்கள் மகர ராசியும், விருச்சிக ராசி உள்ள மணமகனும், மணமகளோடு சம்பந்தம் அதிக சுகம் ஆகும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு பேச்சில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.


கன்னி ராசி உடையவர்கள் அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். அதனால் உறவு உடைந்து விடும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவதால் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவசரப்படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். ஓர் விஷயத்தை ஆர்வம் காட்டினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இவர்கள் ராமர், கிருஷ்ணர். கணபதி இஷ்ட தெய்வங்களின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால் கஷ்டங்கள் தீரும். பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும். இவர்கள் ஓம் பிராம் பிரீம் பிரோம் சகா என்ற மத்திரத்தை 9,000 முறை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசி உள்ளவர்களுக்கு பச்சை நிற உடை, கற்பூரம், பூ, பழம், பச்சைப் பொருட்கள், புதன்கிழமை தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.இவர்கள் படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி பெறலாம். கன்னி ராசி இருப்பவர்கள் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசி இருப்பவர்கள் பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை இந்த அவதிகளையெல்லாம்படுவார்கள். இந்த ராசி உள்ள நேயர்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சிலருக்கு முடி அழகாக இருப்பது உண்டு. இவர்களுக்கு ஏற்படும் தலைவலியால் கண் பார்வை குறையும் வாய்ப்புள்ளது. அதிகமாக யோசித்தால் மூளை பாதிப்பு ஏற்படும். ஞாபகசக்தி, ஆஸ்த்துமா, ரத்த கசிவு, வயிற்று வலி, இருமல் எல்லாம் வர நேரிடலாம். மனதுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் பயற்சி, நடை பயிற்சி செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில்தான் நன்மை இருக்கிறது. பழச்சாறு, காய்கறி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மாமிசம் இவற்றில் கவனிப்பாக இருக்க வேண்டும். மோர், தயிர் உடல் வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி, கால்சியம் இருக்கும் பொருட்களை உணவில் சேத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாகவும், விவேகமாக வாழ்ந்தால் உடல் நன்றாக இருக்கும்

இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். அக்கம், பக்கம் உள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள். குடும்பத்திற்காக அக்கறை காட்டுபவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள். ஆனாலும் இவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்காது. இருந்தாலும் தன் கடமையை செய்பவர்கள் இவர். அண்ணன், தம்பி, நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மீது பாசம் காட்டுவார்கள். இவர்களுக்கு வீட்டிலும், வெளியிலும் உதவி கிடைக்கும்



கன்னி ராசி உள்ளவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்டமான நாள். இந்த நாளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு சனிக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட நாள் இல்லை.


கன்னி ராசி உள்ளவர்களுக்கு 5 அதிர்ஷ்டமான எண்ணாகும். 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். இதைத் தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 2, 3, 8, 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்டமான எண்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத எண்களை உபயோகிக்கக் கூடாது

http://jaffnahajan.blogspot.com/2009/01/blog-post_3554.html

============================================================

கன்னி ராசி விசேஷ விதிகள்

கன்யா ராசிக்கும் – மிதுனராசிக்கும் – ராசியாதிபதி புதன் கன்யாராசியில் அடங்கியுள்ள – உத்திரம் பின் மூன்று பாதங்கள் ஹஸ்தம் சித்திரை முன்பாதி ஆக 2 1/4 நட்சத்திரங்களில் ஜனனமான பெண்களுக்கு – மிதுன ராசியில் அடங்கியுள்ள – மிருகசீர்ஷம் பின்பாதி திருவாதிரை புனர்பூசம் மூன்று பாதங்களில் ஜனனமான – பிள்ளைகளுக்கு பொருத்தம் மிக உத்தமம்.மித்ரர்களின் ராசியான – ஸிம்மம் – ரிஷபதுலாம் – மகரகும்பம் – இந்த ராசிகளில் அடங்கியுள்ள – மகம் – பூரம் – உத்திரம் – சித்திரை பின்பாதி – கார்த்திகை பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசீர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – உத்திராடம் பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசெர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – திருவோணம் – அவிட்டம் – சத்யம் – பூரட்டாதி – முன் மூன்று பாதங்கள் – உத்தமப் பொருத்தமாகும்.கன்யா ராசிக்கு மீனராசி – ஸமஸப்தமமாகும்.

மீனாராசியில் அடங்கியுள்ள – பூரட்டாதி 4 – ம் பாதம் உத்திரட்டாதி – ரேவதி – இந்த நட்சத்திரங்கள் – மிக உத்தமப் பொருத்தமாகும் – மேற்சொன்ன நட்சத்திரங்களுக்கு ரஜ்ஜு – தேவதை – கணம் – ராசி – முதலான தோஷங்கள் – கிடையாது. 27 வது நட்சத்திரம் இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கு தோஷமில்லை

http://www.ithazh.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/

======================================================

9. தனுசு லக்கினம்


தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.yourastrology.co.in/2010-04-14-13-16-22

==================================================

6th Picnic to Yercaud on 27-06-10 [Sunday]

There are various ways in which a man entertains himself. Picnic is kind of open air entertainment. Then they come back with light heart and happy mind.

06:30 am – We start our Picnic, we accomplish with Pragash, Pojaraj, Shampu, Suresh[Young Brother of Navaneethan], Vetri, Vijian and Nila’s Kumar.

08:30 am - Tharamangalam with Divya Dharshanam

Tharamangalam is famous for Kailasanathar with Sivagami Sundari Temple. Rounding Sagasra Lingam [the Lingam with 108 Lingams are drawn], Pathala Lingam. Housing beautiful statues and stone carvings, the temple walls and its granite roofs has figures of tortoise, fish, monkey, crocodile carved out. There are also statues of Rathi – Manmatha, Vali- Sukrive of the epic Ramayana and Yali with rotating stone ball in its mouth. There is a rotating lotus flower in the ceiling which is just one of the beautiful futures that adorn the Temple.

09:15 am – Break-fast [at Temple]

11:00 am – On the way Tower.

11:15 am – Yercaud – Tea Break

12:00 pm – Servarayan Malai, Maha Vishnu Kugai Kovil and around Places.

12:45 pm – Rajarajeswari Temple, the Statue under the Lord Bhiramma, Vishnu and Siva.

01:00 pm – Anna Park

02:15 pm – Lunch Break

03:00 pm – Pagoda point with around Places

03:30 pm – Lake View Garden – Boats, Rounding Ball, Jothidam

Yeri means lake and Kaadu means forest. Servarayan temple, which is situated at a height of 5326 feet. Hence the Yercaud hill area is called Shevaroy Hills.

05:30 pm – Tea break @ Salem

06:15 pm - 1008 shivalinghas

1. Maha Vishnu Kovil
2. Ramar Patapisegham with AstaLakshmi Kovil
3. Iyyappan Kovil
4. Anchineyar Kovil
5. 6 patai veedu
6. Arunachala Sundara Eswar& Umaiyambigai Kovil

Divya Dharshanam with Dr.A.Shanmugasundaram, Chair man, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.

7. RajaRajeshwari Kovil - *

1008 Shivalinghas in Salem
This temple was constructed with in 41 days by philanthropist Dr.A.Shanmugasundaram, Chancellor, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.
1008 Shiv ling temple where the main idol was almost 7-8 ft tall approx. Not sure what this temple is called but the lingas with their own nandis were installed around a hillock and atop this hillock is the huge shiv ling

07:30 pm – Windup

09:15 pm – Our respect Home.

Remember these place Salem, Uthama Solapuram & Veera Pandi

So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam

திங்கள், ஜூன் 28, 2010

டமிழன்














நன்றி : ஆனந்த விகடன் 16-06-10

புதன், ஜூன் 23, 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் நரசிம்மலு நாயுடு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.வை.தாமோதரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுப்பிரமணிய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.அகத்தியலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.இளங்குமரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழண்ணல்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கல்கி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞானசம்பந்தனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமநாதன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சித்பவானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா.பொ.ரத்தினம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.இலக்குவனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அ.சிதம்பரநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
மகாவித்துவான் .வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதர் அருணகிரிநாதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ந.சி.கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொ.முருகப்பா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சதாசிவப் பண்டாரத்தார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் மயிலை சிவமுத்து
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமி சிதம்பரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அண்ணாமலை செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவிந்தசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாண்டித்துரைத் தேவர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா. சுப்பிரமணியபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உமாமகேசுவரன் பிள்ளை செல்வ கேசவராய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தண்டபாணி தேசிகர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தணிகை மணி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூரணலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமிநாத சர்மா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி விபுலானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆர்.கே.சண்முகம் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பெ.நா.அப்புஸ்வாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பொ.திருகூட சுந்தரம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுத்தானந்த பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாபநாசம் சிவன், அறிஞர் வ.ரா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.வே.சு. ஐயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராஜாஜி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார், நா.கதிரைவேற்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்

Copyright @ 2010 Dinamalar - No :1 Tamil News Paper. Designed and Hosted by Web Division,Dinamalar.|

நன்றி : http://tamil.dinamalar.com/semmozhinews_tamilariyargal.asp

சனி, ஜூன் 12, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010 - பாடல்































செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

இசை - எ.ஆர்.ரஹ்மான்

எழுத்து - கலைஞர் மு.கருணாநதி

பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.

























































































































(TMS)
1 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
2 பிறந்த பின்னர்,

(TMS)
Pirapokkum ella uyirkum
pirandha pinnar

(ARR)
3 யாதும் ஊரே யாவரும் கேளீர்

(ARR)
yaddhum ooreee yaavarum kellirrr

(Harini)
4 உண்பது நாழி உடுப்பது இரண்டே

(Harini)
onnbadhu naazhi udupathu irende

(Chinmayi)
5 உறைவிடம் என்பது ஒன்றே என

(Chinmayi)
uraividam enbadhu ondre

(Karthik)
6 உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்..

(Karthik)
uraithu vazhndhom uzhaithu vazhvom..

(Hariharan)
7 தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
8 நன்மொழியே நம் பொன் மொழியாம்

(Hariharan)
theedhum nandrum pirar thara vaarai yenum
nan mozhiye nam pon mozhiyaam

(Yuvan)
9 போரைப் புறம் தள்ளி
10 பொருளைப் பொதுவாக்கவே

(Yuvan)
porrai puram thallzhi
porulai podhuvaakave..

(Chorus)
11 அமைதி வழி காட்டும் அன்பு மொழி
12 அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

(Chorus)
amaidhi vazhi kaatum anbu mozhi
ayyan valluvarin vaaimozhiyaam

(ARR + Yuvan + Chorus)
13 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(ARR + Yuvan + Chorus)
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...

(P Susheela humming..)

(P Susheela humming..)

(Vijay Yesudas)
14 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
15 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

(Vijay Yesudas)
orrarivu mudhal aararivu uyirinam varayile
unarndhidum udal amaipai pagirthu koorum

(P Susheela)
15 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
16 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

(P Susheela)
orrarivu mudhal aararivu uyirinam varayile
unarndhidum udal amaipai pagirthu koorum

(G.V.Prakash Kumar)
17 ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
18 ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

(G.V.Prakash Kumar)
thozhgapugal thozhgapiyamum
oppatra kural koorum uyar panpaadu

(Naresh Iyer + chorus)
19 ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே

(Naresh Iyer + chorus)
olikindra silamubum meghalayum sindhamaniyudane..

(T.L.Maharajan)
20 வளையாபதி குண்டலகேசியும்..

(T.L.Maharajan)
vazhayapathi kundalakesiyumm..

(Chorus+ Nithya Shree humming)
21 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(Chorus+ Nithya Shree humming)
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...

(Blaaze + Shruthi Haasan)
22 கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
23 எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
24 எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
25 புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

(Blaaze + Shruthi Haasan)
kamba naataalvarum kavi arasiyevai nallaalum
yemmadhamum yetrum puzhgal endrum
yethanayo aayiram kavidhai neivor tharum
thadai anaithukkum vithaaga vilangum mozhi...

26 செம்மொழியான தமிழ் மொழியாம்…
Dr.Bala Murali Karishna + Srinivas + chorus)

SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM
(Dr.Bala Murali Karishna + Srinivas + chorus)

27 அகமென்றும் புறமென்றும் வாழ்வை
28 அழகாக வகுத்தளித்து
29 ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
30 ஓதி வளரும் உயிரான உலகமொழி
31 நம் மொழி – நம் மொழி – அதுவே
(Sruti Haasan)

aagam endrum puram endrum
vazhvai azhagaaga vaguthalithu
aadhi anddam illathu irukindra iniya mozhi
modhi vazharum uyiraana uzhaga mozhi
thamm mozhi namm mozhi
adhuve...
(Sruti Haasan)

32 செம்மொழியான தமிழ் மொழியாம்…
(Chorus)

SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM...
(Chorus)

(Chorus)
33 தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியா...

(Chorus)
tamizh mozhi tamizh mozhi tamizh mozhi ya ghaaa...

(Chinnapponnu)
34 தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்

(Chinnapponnu)
Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam

(ARR)
35 வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
36 செம்மொழியான தமிழ் மொழியாம்…

(ARR)
Vazhiya Vazhiya ve..Thamizh .. Vazhiya Vazhiya ve
SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM ...









Source : http://www.movih.com/kollywood-movie-songs-download/tamil-semmozhi-manadu-anthem-video-song-a-r-rahman.html

http://www.rahmanism.com/2010/05/world-classical-tamil-conference-anthem.html

ப்ளூடூத் ( Bluetooth)

பேசுக செல்பேசியில் அளவோடு; செலவானால்
பேசுதலின் குறுந்தகவல் நன்று.

இப்போதெல்லாம் செல்பேசி வாங்குபவர்கள், பேசுவதற்கும் குறுந்தகவல் அனுப்புவதற்கும்
மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை, செல்பேசியில் கேமெரா இருக்கிறதா? , ப்ளூடூத் எனப்படும் குறுந்தூர கம்பியில்லாத் தொடர்புமுறை வசதி இருக்கிறதா, அகச்சிவப்புத் துறை (Infra Red Port) இருக்கிறதா என்றெல்லாம் கவனித்துத் தான் வாங்குகிறர்கள் . தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கையில் மின்னணுவியல் கருவிகளின் பயன்பாட்டு எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. கருவிகளின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.










இந்தப் பதிவில் ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.



ப்ளூடூத் கருவிகள் மற்றும் அவற்றின் உபயோகங்களைக் குறித்துப் பார்ப்போம்.

கருவிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையான ப்ளூடூத் சாதனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ப்ளூடூத் காதுபேசி (Bluetooth headset) செல்பேசியைக் கையில் பிடித்துப் பேசுவதற்குப் பதில் காதில் மாட்டிக்கொண்டு கையை வீசிக்கொண்டு பேசிச் செல்ல உதவுபவை இந்த ப்ளூடூத் காதுபேசிகள். முன்பெல்லாம் இத்தகைய கருவிகளை எவரேனும் பொருத்தியிருப்பின் பார்ப்பவர்கள் "ஐயோ , அவருக்குக் காது கேளாது போலிருக்கிறது" என்று பரிதாபப் படுவர். ஆனால் இப்போது உம்மாதிரியாகக் காதில் மாட்டிக் கொண்டு கையை வீசிக்கொண்டு தனியே பேசிச் செல்பவர்களை யாரும் ( "ஆள் ஒரு மாதிரியோ" என) ஐயுறுவதில்லை. ப்ளூடூத் சுட்டி மற்றும் விசைப்பலகை (Bluetooth Mouse and Keyboard) அலுவலகத்தில்/வீட்டில் பயன்படும் மேசைக் கணினியில் இருக்கும் விசைப்பலகை மற்றும் சுட்டியை நீங்கள் கேபிள் இணைப்பின்றி ப்ளூடூத் இணைப்பு மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். கணினியிலும் ஒரு ப்ளூடூத் கருவி இணைக்கப்பட்டு விசைப் பலகை மற்றும் சுட்டியின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.

கணினியுடன் இணைந்திருக்கும் சிறிய ஒலி பெருக்கிகளும் ப்ளூடூத் வசதியுடன் கேபிளின்றி இணைக்கப்பட்டால் கணினி மேசையில் கசமுசா என்று சிக்கிக் கிடக்கும் கேபிள்களிருந்து விடுதலை பெறலாம். மேலும் நினைத்த இடத்திற்கு சுட்டியையோ விசைப்பலகையையோ , நகர்த்தி உபயோகிப்பது சுலபமாகிறது பொது உபயோக ப்ளூடூத் பொருத்தி (General Purpose Bluetooth Adaptor).

கணினியில் இக்கருவியை இணைத்துக் கொண்டால் போதும். பிற ப்ளூடூத் கருவிகளுடன் அவற்றின் உபயோகத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புப் பரிமாற்றம் (File Transfer ), இணைய இணைப்பு வசதி , காது பேசியுடன் இணைப்பு, தொடர் துறை (Serial Port) இணைப்பு, தொலைநகல் அனுப்பல் போன்ற பல வசதிகளை இந்தப் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கருவியும் மேற்கூறிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திறன் படைத்தது. செல்பேசியிலிருந்து கணினிக்கோ , கணினியிலிருந்து செல்பேசிக்கோ ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, கோப்புப் பரிமாற்றம் செய்வது எளிதாகிறது. ஜி பி ஆர் எஸ் வசதி கொண்ட செல்பேசியிலிருந்து இணைய இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, அழைப்புவழி (Dial up)சேவையைப் பயன்படுத்தி , இணைய இணைப்பினை கணினிக்கு கொண்டு செல்ல முடியும். மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம். கேபிள்கள் ஏதும் இல்லாமலேயே இணைய வசதியை எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ப்ளூடூத் அணுகு புள்ளி (
Bluetooth Access Point) இணைய இணைப்பினையோ அல்லது அலுவலகத்தின் உள் வலையமைப்பில் (Intranet) இணையவோ ப்ளூடூத் அணுகு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அலுவலகங்களில் புதிய கணினி இணைப்புகளை ஏற்படுத்துவதும், இருக்கும் இணைப்புகளை எளிதாக வேறிடத்துக்கு மாற்றுவதும் நொடியில் முடிகிறது. இதுபோலவே அலுவலகத்தின் அச்சடிப்பானுடன் ( Printer) ப்ளூடூத் இணைப்பின் மூலம் கோப்புக்களை அச்செடுக்க முடியும். தொலைநகல் எடுப்பதும் அனுப்புவதும் எளிதாகிறது. குறுக்கும் நெடுக்குமாக அலுவலகங்களில் விரவிக்கிடக்கும் கேபிள்களை நீக்க இந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ப்ளூடூத் நுட்பத்தினால் வேகம் சற்றே குறைவாக இருப்பதால் கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்பு ( Wireless Local Area Network , WLAN) தற்போது பிரபலமடைந்து வருகிறது.

இது தவிர, கார்களிலும் ப்ளூடூத் கருவிகளைக் கொண்டு (Bluetooth Car-kit) செல்பேசிகளுடன் தொடர்பேர்படுத்திக் கொண்டு, செல்பேசியைக் கையில் தொடாமலேயே அழைப்புகளை இணைக்கவும், பேசவும் முடியும். கார்களில் நாம் இசை கேட்டுக்கொண்டே செல்கையில் ஏதேனும் அழைப்பு ஏற்படின், இசையை நிறுத்தி வைத்து, நாம் பேசி முடித்ததும் மீண்டும் இசையைத் தொடர இந்தக் கருவிகள் உதவுகின்றன. சரி, இரு ப்ளூடூத் கருவிகள் அருகருகே நெருங்கையில் தாமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து தகவல் அனுப்பத் தொடங்கிவிடுமா? இல்லை. அவ்வாறு தாமாக இணைந்து கொண்டு தகவல் பரிமாரிமாறும் வசதி இருந்தால் அது பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையே அல்ல. ப்ளூடூத் கருவிகள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதைப் பின்வருமாறு எளிதாய் விளக்கலாம்.

1. இரு கருவிகளிலும் ப்ளூடூத் இயக்கம் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (Bluetooth ON).

2. கருவிகள் இரண்டும் கண்டுபிடிப்பு நிலையில் (Discoverable mode) இருக்க வேண்டும். இந்த நிலையானது ஏற்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே பிற கருவிகள் அந்தக் கருவி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக, நீங்கள் உங்களது ப்ளூடூத் கருவியை இயக்கியவுடன் அது கண்டுபிடிப்பு நிலையில் இயங்கத்தொடங்கும்.

3. ப்ளூடூத் கருவிக்கென அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புப் பகுதிக்குச் (Settings) சென்று , அருகிலுள்ள பிற கருவிகளைக் கண்டுபிடிக்கும் பட்டியை சுட்டுங்கள் . உங்களது ப்ளூடூத் கருவி உடனே, பிற கருவிகளைத் தேட ஆரம்பிக்கும். கண்டுபிடிப்பு நிலையில் உள்ள பிற கருவிகளைத் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு உங்கள் முன் நிறுத்தும்.

4. நீங்கள் இணைப்பு ஏற்படுத்த விரும்பும் கருவியைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களது கருவி குறிப்பிட்ட மற்றொரு கருவியுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இணைப்புக் கேட்டவுடன் இணைப்பு ஏற்படுத்த அனுமதிப்பதும், மறுப்பதும் எதிர்கருவியின் விருப்பம்.

5. உங்களது ப்ளூடூத் கருவியுடன் இணைய விருப்பம் எனில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடவுச்சொல்லை (Pass key) இணைத்து அனுப்பும்.

6. அக்கருவி அனுப்பும் கடவுச்சொல்லை உங்கள் கருவியில் உள்ளிட்டு அனுப்புங்கள். கடவுச் சொல் வேறுபட்டால் தொடர்பு மறுக்கப்படும். சரியான கடவுச் சொல் சரிபார்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்படும். இணைப்பு ஏற்படுத்தியாகி விட்டது. எவ்வாறு தகவல் பரிமாறுவது? அல்லது எவ்வாறு ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துவது?


ப்ளூடூத் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளுமுன் அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் அக்கருவிகளுக்கிடையே தெரிந்திருக்க வேண்டும். அதாவது இரு வேறு சேவை வழங்கும் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால் பயனில்லையே. உதாரணமாக, கோப்புப் பரிமாற்றம் செய்ய வேண்டுமனில், இரண்டு ப்ளூடூத் கருவிகளிடமும் கோப்புப் பரிமாற்றத்துக்கான சேவை (File Transfer) இருக்க வேண்டும்.

ப்ளூடூத் கருவிகள் (சென்ற பதிவில் கூறியது போல்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இணைந்தவுடன் இணைப்பு (Pairing) ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கருவிகளின் சேவையை கண்டுபிடிக்கும் (Service discovery) நிகழ்வும் ஏற்படுத்தலாம். அவ்வாறு சேவை கண்டுபிடித்தல் செய்த பின்பே ஒரு கருவியின் உபயோகம் மற்ற கருவிக்குத் தெரிய வரும். கடவுச் சொல் கொண்டு ஏற்படுத்தப்படும் இணைப்பு பாதுகாப்பானது. அவ்வாறு கடவுச் சொல் இல்லாமல் ஏற்படுத்தப்படும் இணைப்புகளால் உங்கள் அனுமதியின்றி தகவல் உங்கள் கணினி அல்லது செல்பேசியிலிருந்து திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்துகையில் பாதுகாப்பான (Secured data transfer) பரிமாற்ற வகையை உங்கள் கருவியின் அமைப்புப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

பொதுவிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் சாலச் சிறந்தது. உங்களது செல்பேசியின் ப்ளூடூத் கருவி இயக்க நிலையில் இருந்தால் பிற கருவிகள் உங்களது செல்பேசியுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கலாம் . பாதுகாப்பான பரிமாற்ற முறையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கவில்லை எனில் உங்கள் செல்பேசியிலிருக்கும் தகவல்களை நீங்கள் அறியாமலேயே பிறர் திருடிக்கொள்ளலாம் . விஷமிகள் , பொதுவிடங்களில் இயக்கத்திலிருக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து , மிரட்டும் தகவல்களை அனுப்பலாம். "You are Bluejacked" என்ற தகவல் இவற்றுள் பிரபலமான பயமுறுத்தும் தகவல் . இத்தகவலால் செல்பேசிக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் , நாம் மிரண்டு போய், செல்பேசிக்கு ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று தவறாய் எண்ண வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.இம்மாதிரித் தகவல்கள் உங்கள் செல்பேசியில் , நீங்கள் பொதுவிடங்களில் இருக்கும் போது ஏற்படின் தகவலப் புறக்கணித்து உடனடியாக உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள்.

சென்ற வருடத்தில் பரபரப்பூட்டிய கபீர் எனும் செல்பேசி வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கணினி வைரஸ் பல உலவும் இன்னாளில் , முதன் முதலில் செல்போனில் பரவிய வைரஸ் கபிர் ஆகும். எல்லாச் செல்பேசிகளிலும் இது பரவவில்லை. ஸிம்பியன் இயங்குதளம் அமைந்துள்ள செல்பேசிகளில் தான் இது பரவியது. நோக்கியாவின் செல்பேசிகள் பலவும் இந்த இயங்குதளம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பவை . ப்ளூடூத் மூலம் ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்குப் பரவும் வைரஸ்தானிது. ப்ளூடூத் மூலம் உங்களது செல்பேசிக்கு வரும் இந்த கோப்பு தகவல்பெட்டியில் (Inbox) சேகரிக்கப்படுகிறது. எதோ தகவல் வந்திருக்கிறது என்று எண்ணி இந்தக் கோப்பைத் திறந்தீர்களேயானால் , உங்களது ப்ளூடூத் அமைப்பினை மாற்றி, இந்தக் கோப்பினை அருகிலுள்ள பிற ப்ளூடூத் வசதியுள்ள செல்பேசிகளுக்கு அனுப்பி அந்தச் செல்பேசியையும் பாதிக்கும் குணம் கொன்டது இந்த வைரஸ் . இந்த வைரஸினால் செல்பேசியின் இயல்பான ப்ளூடூத் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ப்ளூடூத் இயக்கத்தினை நீங்கள் நிறுத்தி வைத்தாலும் , இந்த வைரஸ் உங்களது செல்பேசியில் நுழைந்து விட்டதெனில், தானாக, ப்ளூடூத் இயக்கத்தை ஆரம்பித்து அருகே உள்ள பிற ப்ளூடூத் செல்பேசிகளுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஒரு வைரஸ் மட்டுமே செல்பேசி வைரஸ் என அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு புரளிகள் இணையத்திலும் , மின்னஞ்சல் வழியாகவும் கிளப்பி விடப்படுகின்றன. "இந்த வகை எண்களிலிருந்து அழைப்பு ஏற்படின் அவ்வழைப்பை ஏற்க மறுத்து விடுங்கள் . அவ்வழைப்பினை ஏற்றுப் பேசினீர்களேயானால், உங்கள் செல்பேசியின் எண், ஸிம் அட்டையின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் " என்றெல்லாம் கூறிப் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகைத் தகவல்கள் அனைத்தும் புரளியே !

ப்ளூடூத் கருவிகளின் பயன்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது கம்பியில்லா காது பேசியும், கணினியில் பயன்படும் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியும் தான் . அழைப்பு ஏற்பட்டால், ப்ளூடூத் காதுபேசியைப் பயன்படுத்தி, செல்பேசியின் விசையை அழுத்தாமலேயே தானாக அழைப்பை ஏற்றுப் பேசலாம் (Auto Answer). தற்போது செல்பேசியிலேயே பாடல் கேட்கும் வசதி வந்துவிட்டதால் ஸ்டீரியோ வகை ப்ளூடூத் காதுபேசிகள் அறிமுகமாகப் போகின்றன. ஆக, இனிவரும் காலங்களில் , மின்னணுவியில் சாதனங்களில் மின்சார கேபிள்கள் தவிர வேறு எந்தத் தேவைக்கும் கேபிள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது !

ஆதாரம் : http://www.tamiloviam.com/unicode/09220506.asp

வெள்ளி, ஜூன் 11, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல்




Source : http://65.175.77.34/maalaimalar/epaperhome.aspx?issue=coimbatore/0962010

சனி, மே 22, 2010

அச்சத்தை போக்கிய விளையாட்டு - கலைவாணி

அச்சத்தை போக்கிய விளையாட்டு - கலைவாணி

நன்றி : http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=5/15/2010&secid=14

வெள்ளி, மே 07, 2010

T-20 உலக கோப்பை சூப்பர் 8 விவரம்




Courtesy : http://65.175.77.34/maalaimalar/epaperhome.aspx?issue=coimbatore/652010

வியாழன், மே 06, 2010

தமிழக மேல்சபை ஓர் கண்ணோட்டம்




Source : http://65.175.77.34/maalaimalar/epaperhome.aspx?issue=coimbatore/552010

புதன், ஏப்ரல் 28, 2010

ICC T-20 உலக கோப்பை ஓர் அறிமுகம்

















Courtesy : http://www.dinakaran.com/epaper.asp &
http://www.maalaimalar.com/

திங்கள், ஏப்ரல் 26, 2010

IPL T-20 -2010 - கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியது








Courtesy : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5778&Value3=A

http://epaper.dinamani.com/epapermain.aspx#

சனி, ஏப்ரல் 24, 2010

IPL Jury Awards - 24-04-10

Best Debut Performance – Kieron Pollard (Mumbai Indians)

Best Batsman - Sachin Tendulkar (Mumbai Indians)

Best Bowler – Pragyan Ojha (Deccan Chargers)

Best Dramatic Performance – Harbhajan Singh (Mumbai Indians)

Most Consistent Performer - Jacques Kallis (Royal Challengers Bangalore)

Best Breakthrough Performance 2008 - Brendon McCullum (Kolkata Knight Riders)

Best Breakthrough Performance 2009 - Anil Kumble (Royal Challengers Bangalore)

Best Fielder - AB de Villiers (Delhi Daredevils)

Best Ground - Chinnaswamy Stadium in Bangalore

Best Stadium Experience - DY Patil Stadium in Mumbai.

Viewers’ Choice Awards

Best Catch: David Hussey (Kolkata Knight Riders)

Best Batsman: Sachin Tendulkar (Mumbai Indians)

Best Captain: Sachin Tendulkar (Mumbai Indians)

Best Bowler: Pragyan Ojha (Deccan Chargers)

Best Commentator: Ravi Shastri

Most Stylish Player: Robin Uthappa (Royal Challengers Bangalore)

Most Fan-Friendly Cricketer: Adam Gilchrist (Deccan Chargers)

Best Fielder: Suresh Raina (Chennai Super Kings)


Statistical Awards

Most Economical Bowler: Ravichandran Ashwin (Chennai Super Kings)

Fastest Hundred: Yusuf Pathan (Rajasthan Royals)

Highest Percentage of Runs Scored in Boundaries: Virender Sehwag (Delhi Daredevils)

Source : http://www.crichotline.com/indian-premier-league-ipl-awards-2010/

Sachin Tendulkar’s Birthday - World Cricket Day - ICC Declare

The International Cricket Council or ICC is rumored to declare Sachin Tendulkar’s birthday as World Cricket Day. If this happens, then World Cricket Day will fall on April 24.

Source : http://tamilden.blogspot.com/2010/02/sachin-tendulkars-birthday-world.html

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

2010 DLF IPL Points Table, Standings as on 20-04-10




Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

சனி, ஏப்ரல் 17, 2010

TEAM WORK

வியாழன், ஏப்ரல் 15, 2010

2010 DLF IPL Points Table, Standings as on 15-04-10




Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

சனி, ஏப்ரல் 10, 2010

2010 DLF IPL Points Table, Standings as on 10-04-10




Source : http://epaper.dinamani.com/epapermain.aspx#

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

World Cup - 2011-mascot-Appu Logo

திங்கள், ஏப்ரல் 05, 2010

The Third Dimension: How 3D movies work



Source : http://www.obsessable.com/feature/the-third-dimension-how-3d-movies-work/





Source : http://redux.com/f/1006747/How-3D-works

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts