சனி, நவம்பர் 20, 2010

அரசியல் ஆத்திச்சூடி..!!

அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை சுருட்டு.,

இலவசம் குடு.,

ஈயையும் கட்சியில் சேர்.,

உண்மையை மறை.,

ஊழலை உலகமயமாக்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ஐந்து காலேஜாவது கட்டு.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,

ஓடி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,

நன்றி : http://gokulathilsuriyan.blogspot.com/2010/11/blog-post_19.html

வெள்ளி, நவம்பர் 12, 2010

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

ஆயக்கலைகள் அறுபத்திநாலு

1.அட்சரங்கள்.
2.விகிதம்.
3.கணிதம்.
4.வேதம்.
5.புராணம்.
6.வியாகரணம்.
7.ஜோதிடம்.
8.தர்ம சாஸ்திரம்.
9.யோக சாஸ்திரம்.
10.நீதி சாஸ்திரம்.
11.மந்திர சாஸ்திரம்.
12.நிமித்த சாஸ்திரம்.
13.சிற்ப சாஸ்திரம்.
14.வைத்திய சாஸ்திரம்.
15.சாமுத்ரிகா லட்சணம்.
16.சப்தப்பிரம்மம்.
17.காவியம்.
18.அலங்காரம்.
19.வாக்கு வன்மை.
20.கூத்து.
21.நடனம்.
22.வீணை இசை.
23.புல்லாங்குழல் வாசிப்பு.
24.மிருதங்க இசை.
25.தாளம்.
26.ஆயுதப் பயிற்சி.
27.ரத்னப்பரீட்சை.
28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
30.குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
31.ரத சாஸ்திரம்.
32.பூமியறிதல்.
33.போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம்.
34.மற்போர் சாஸ்திரம்.
35.வசீகரித்தல்.
36.உச்சாடனம்.
37.பகைமூட்டுதல்.
38.காம சாஸ்திரம்.
39.மோகனம்.
40.ஆகரஷனம்.
41.ரசவாதம்.
42.கந்தரவ ரகசியம்.
43.மிருக பாஷை அறிதல்.
44.துயரம் மாற்றுதல்.
45.நாடி சாஸ்திரம்.
46.விஷம் நீக்கும் சாஸ்திரம்.
47.களவு.
48.மறைத்துரைத்தல்.
49.ஆகாயப் பிரவேசம்.
50.விண் நடமாட்டம்.
51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
52.அரூபமாதல்.
53.இந்திர ஜாலம்.
54.மகேந்திர ஜாலம்.
55.அக்னி ஸ்தம்பனம்.
56.ஜலஸ்தம்பனம்.
57.வாயு ஸ்தம்பனம்.
58.கண்கட்டு வித்தை.
59.வாய்கட்டு வித்தை.
60.சுக்கில ஸ்தம்பனம்.
61.சுன்ன ஸ்தம்பனம்.
62.வாள்வித்தை.
63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
64.இசை.

நன்றி : http://velang.blogspot.com/2008/12/blog-post_15.html

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?

வி எல் சி பிளேயர் - இதெல்லாம் கூட செய்யும் தெரியுமா உங்களுக்கு?
1.டி வி டி ரிப் (DVD RIP)

Media->Convert/Save சென்று டிஸ்க் டாபை(Tab) அழுத்தவும். கோப்பின் பெயரின் பதிவு செய்த பின்(.MPG இல் முடிவுற வேண்டும்) ஸேவ்(Save) செய்யவும்.

2.வீடியோ ரெகார்டிங்


பார்க்கும் வீடியோக்களை நீங்கள் ரெகார்ட் செய்யலாம்(Streaming Videos).
அதற்கு முதல் View>Advanced Control சென்றால் உடனே ரெகார்ட் என்ற பட்டன் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் ரெகார்ட் செய்யலாம்.

3.ரார் கோப்புகளை பார்க்கலாம்(Video Files in Rar)

உங்கள் வீடியோக்கள் ரார் கோப்புக்குள் அடங்கி இருந்தால் எக்ஸ்ட்ராட்(Extract) செய்யாமலேயே நேரடியாக பார்க்கலாம்.

4.ஆன்லைன் ரேடியோ.


Media>Services Discovery>Shoutcast radio listings சென்றால் ஆன்லைன் ரேடியோ பல கேட்கலாம் .

5.வீடியோ வகை மாற்றம் :


ஒரு வீடியோ வகையில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(MP4, WMV, AVI, OGG, MP3 etc).

Media>Convert/Save சென்று உங்களுடைய கோப்பினை ஏற்றி பின்பு Convert அழுத்துங்கள்.

Note: output format,output file location தேர்ந்தெடுக்க மறக்கக் கூடாது

நன்றி : http://pudhiyayugam.blogspot.com/2009/10/blog-post.html

வியாழன், நவம்பர் 11, 2010

நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரி கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன, ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

ஆதாரம் : http://erodethangadurai.blogspot.com/2010/10/must-see_15.html

விடை சொல்லமுடியா வினாக்கள்

சில கேள்விகளுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சில கேள்விகள் இங்கே?


மத்திய அரசுக்கு கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை?


ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவர்?


ராமாதாஸ் அடுத்து எந்த கட்சியுடன் கூட்ட
ணி வைப்பார்? எப்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்?


ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்?


தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?


தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?


இந்தியாவின் உண்மையான பிரதமர் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?


விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா?

நன்றி : http://ragariz.blogspot.com/2010/11/blog-post_10.html

செவ்வாய், அக்டோபர் 19, 2010

100 வயதில் பிஎச்டி படிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி !

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 100 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர், பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்ள பெயர் பதிவு செய்துள்ளார். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மிகவும் வயதான பி.எச்.டி. மாணவர் இவர்தான். கவுகாத்தியில் வசிப்பவர் போலாராம் தாஸ். இந்த வாரக் கடைசியில் இவருக்கு 100வது பிறந்த நாள் வருகிறது. போலாராம் தாஸ் 19 வயது இளைஞனாக இருந்தபோது, 1930&ல் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக 2 மாதம் சிறை தண்டனை பெற்றார். இதன் பின்னர் வணிகவியல், சட்டப்படிப்பு படித்தார். 1945ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1971ம் ஆண்டில் அரசு பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தாஸ், ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி பெயர் மந்தாகினி. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிஎச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது போலாவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒன்றே மனிதத்துவம், ஒரே கடவுள் என்ற மதங்களின் தத்துவ அடிப்டையிலான நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறித்து அசாமின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை இப்போது செய்து வருகிறார். அதில் பெறப் போகும் பட்டம்தான் தனது 100 ஆண்டு பிறந்த நாள் பரிசு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாஸ்.

தாஸ் பி.எச்.டி. ஆய்வு மாணவராக சேர்ந்துள்ள கவுகாத்தி பல்கலை.யின் துணைவேந்தர் ஓ.கே. மெட்ஹி கூறுகையில், “100 வயதில் ஆய்வு படிப்பை படிக்கும் மாணவரை பார்ப்பது உண்மையில் அரிது. தாசை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவரது இந்த முயற்சி, தன்னம்பிக்கை, சமுதாய சேவை ஆகியவை இளைய சமுதாயத்துக்கு உத்வேகத்தை அளிக்கும்Ó என்றார்.

ஆதாரம் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18268&id1=12

திங்கள், அக்டோபர் 18, 2010

காமன்வெத் சாதனையார்கள் - 2010





Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

புதன், அக்டோபர் 13, 2010

சச்சின் - டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம்

12-10-10, 214 ரன்கள் குவித்த சச்சின், டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சக வீரர் சேவக், இலங்கையின் அட்டபட்டு, ஜெயவர்தனா, பாகிஸ்தானின் மியாண்தத் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். தவிர, அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 4 வது இடத்தை கைப்பற்றினார்.

டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள்:
வீரர் போட்டி இரட்டை சதம்
பிராட்மேன் (ஆஸி.,) 52 12
லாரா (வெ.இண்டீஸ்) 131 9
ஹம்மண்ட் (இங்கிலாந்து) 85 7
சங்ககரா (இலங்கை) 91 7
சேவக் (இந்தியா) 81 6
அட்டபட்டு (இலங்கை) 90 6
ஜெயவர்தனா (இலங்கை) 113 6
மியாண்தத் (பாக்.,) 124 6
சச்சின் (இந்தியா) 171 6

மகளுக்கு அர்ப்பணம்

பெங்களூரு டெஸ்டில், அடித்த இரட்டை சதத்தை தனது மகள் சாராவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இது குறித்து சச்சின் கூறுகையில்,""இன்று (அக்.12) எனது மகள் சாராவுக்கு 13 வது பிறந்த நாள். இந்த நாளில், நான் அடித்த இரட்டை சதத்தை எனது மகள் சாராவுக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன்,'' என்றார்.

ஆதராம் : http://www.dailythanthi.com/article.asp?NewsID=600367&disdate=10/13/2010

திங்கள், அக்டோபர் 11, 2010

சச்சின் 14 ஆயிரம் ரன்கள்: டெஸ்டில் புதிய சாதனை

டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து, புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த சச்சின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7275&Value3=I

வியாழன், அக்டோபர் 07, 2010

சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது* சிறந்த டெஸ்ட் வீரர் சேவக்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.

முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.

கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.


சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்.



நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7248&Value3=I

வியாழன், செப்டம்பர் 30, 2010

அயோத்தி பிரச்சினை அன்று முதல் இன்று வரை



மூலம் : http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=2992010

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?

ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.

அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.

பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.

முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.

உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.

காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.

“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.

இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…

எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2b2e0FF22eeZZBB20ecU4OXJ2cddQQAAccd3KmM0W4b44Rlmmaa43ddnB2d0e2X96600

புதன், செப்டம்பர் 15, 2010

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், “கம்ப்யூட்டர் நெட் ஒர்க்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே “ஆன்லைனில்’ பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் “ஸ்கேன்’ செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,” என்றார்.

நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84045

புதன், செப்டம்பர் 08, 2010

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப்பிங் சாதனை

மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் முறியடித்துள்ளார். இவர் சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் வெளியிட்ட கேலக்ஸி எஸ் என்ற போனை இதற்குப் பயன்படுத்தினார். இவர் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. சாலையோரக் கடைகளில் பொருள் வாங்கச் சென்ற இவர், அங்கே கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். இந்த சாதனை பற்றிக் கூறியவுடன், தானும் கலந்து கொண்டு, ஜஸ்ட் லைக் தட், டைப் செய்துள்ளார். அதுவே கின்னஸ் சாதனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. தான் நாளொன்றுக்கு 40 முதல் 50 டெக்ஸ்ட் மெசேஜ் போன் மூலம் அனுப்புவதாகவும், அதுவே வேகத்தை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1646&ncat=5

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

மூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

உடற்பயிற்சி செய்வதால் பலருக்கு இதயத்திற்கு நலம் தரும் என்று தெரியும் ஆனால் உடற்பயிற்சியினால் மூளைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

உடற்பயிற்சியினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் செல்கள் நலமாக வைத்திருக்கின்றன. மூளையை நலமாக வைத்திருக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயக்க வழிவகை செய்கிறது. மூளையில் நல் இயக்கத்திற்கு ஓமேகா 3 எனும் ரசாயனம் உதவுகிறது. இது சாலமன் மற்றும் ஒரு சில மீன் வகைகளில் கிடைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு மற்றும் ஒரு சகங குளிர்பானங்கள் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

மூளையின் நலத்திற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின், சாலமன் மீன்கள், சாக்லேட், கிரீன் டீ ஆகியன மூளை வளர்ச்சிக்கு உதவுபவை. புத்தகங்கள் வாசிப்பது, குறுக்கெழுத்து போட்டிகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்றவை மூளையின் நலத்தை பாதுகாக்கும். சுறுசுறுப்பான இயக்கத்துடன் உள்ளவர்களுக்கு முதுமையில் மறதி ஏற்படும் பாதிப்பு குறையும் என்றும் பேராசிரியர் கூறினார்.

ஆதாரம் : http://www.z9tech.com/view.php?2bdPdnBd4dc230QAm204acCe0FFcd0eavXO4A2cd324mlXTe2edFN96e4ce0eYmM0604b42BZBLTb0

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

கனவு காணுங்கள்


கனவு காணுங்கள்



ஆதாரம் : http://epaper.dinamani.com/epapermain.aspx#

ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகள்

புதிய விதிகள்

* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6791&Value3=A

சனி, ஜூலை 31, 2010

கோபத்தை ஏற்படுத்தும் நாள்

முதல் இந்திய பிரவுசர் - எபிக்

இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆதாரம் : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1052&ncat=4

வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை

முதல் வீரர்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரானார் இலங்கையின் முரளிதரன். 133 போட்டிகளில் பந்து வீசிய இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
முரளிதரன் (இலங்கை) 133 800
ஷேன்வார்ன் (ஆஸி.,) 145 708
அனில் கும்ளே (இந்தியா) 132 619
மெக்ராத் (ஆஸி.,) 124 563
வால்ஷ் (வெ.இண்டீஸ்) 132 519
கபில்தேவ் (இந்தியா) 131 434
ரிச்சர்ட் ஹாட்லி (நியூசி.,) 86 431
ஷான் போலக் (தெ.ஆ.,) 108 421
வாசிம் அக்ரம் (பாக்., ) 104 414

7 வது முறை
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

793 முதல் 800 வரை
காலே டெஸ்ட் போட்டியில் முரளிதரன் கைப்பற்றிய முதல் விக்கெட் இந்தியாவின் சச்சின். கடைசி விக்கெட் பிரக்யான் ஓஜா. காலே போட்டிக்கு முன்னதாக, இவர் 792 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். காலேவில் முரளிதரன் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
விக்கெட் வீரர்
793 சச்சின்
794 தோனி
795 யுவராஜ்
796 பிரக்யான் ஓஜா
797 மிதுன்
798 யுவராஜ்
799 ஹர்பஜன்
800 ஓஜா

சாதனைகள் பல....
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக்கெட்டுகள்.
* தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 4 முறை 10 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
* 2000, 2001, 2006 ம் ஆண்டுகளில், தலா 75 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர்.

விக்கெட் இல்லை
காலே டெஸ்டில் முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 32.1 ஓவர் வீசிய ஹர்பஜன், ஒரு விக்கெட் கூட வீழ்த்த வில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருப்பது இது 6 வது முறை.

5 வது வீரர்
காலே டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லட்சுமண், அந்நிய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின் (7521), டிராவிட் (6631), கவாஸ்கர் (5055), கங்குலி (4032) ஆகியோர் அந்நிய மண்ணில்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6607&Value3=A

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts