வியாழன், மார்ச் 12, 2009

வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

Thanks to : http://www.pkp.blogspot.com

புதன், மார்ச் 04, 2009

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."

"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."

"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!

- Courtesyhttp://www.pkp.blogspot.com

புதன், பிப்ரவரி 18, 2009

குறிக்கோள்

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு
நன்றி : http://www.pkp.blogspot.com

மகிழ்ச்சி

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!

வியாழன், பிப்ரவரி 12, 2009

மொழியாக்கமும் அகராதியும் : திகழ்மிளிர்

1 கையெழுத்து Handwriting
2 கையொப்பம் Signature
3 வாழ்த்தொப்பம் Autograph
4 தன் வரலாறு Autobiagraphy
5 உறுதியொப்பம் Authentication
6 சுருக்கொப்பம் Initials
7 சீம்பூ Shampoo
8 அலாரம் Alarm
9 உரிமை ஊதியம் Royalty
10 பராமரிப்பு ஊதியம் Alimony
11 ஓய்வு ஊதியம் Pension
12 குறும் பேழை Brief Case
13 ஊடகம் Media
14 செய்தித்தாள், நாளேடு Newspaper
15 ஓடு பாதை Runway
16 வாழ்க்கை Life
17 விமானம் Flight
18 தாய்மொழி Mother Tongue
19 நாடாளுமன்றம் , பாராளுமன்றம் Parliament
20 பார்வையாளர்கள் Visitors
21 நடிகர்கள் Actors
22 இருக்கை , நாற்காலி , கதிரை Chair
23 கனவுகள் Dreams
24 பழம் Fruit
25 வாழைப்பழம் Banana
26 வரலாறு History
27 மரம் Tree
28 பலாப்பழம் Jackfruit
29 பலகை Plank
30 விசைப் பலகை, தட்டச்சுப் பலகை Keyboard
31 விளம்பரம் Advertising
32 விளம்பரப் பலகை Hoardings
33 மாநில உரிமம் State Permit
34 கணினிப்பலகை, கணினித்திரை Computer Monitor
35 திரைப்பலகை Theatre Screen
36 கரும்பலகை Blackboard
37 திரையரங்கு Cinema Theatre
38 வாக்காளர் Voter
39 அகராதி Dictionary
40 கைப்படுக்கை Stretcher

வியாழன், ஜனவரி 29, 2009

"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Thanks http://www.pkp.blogspot.com/

செவ்வாய், ஜனவரி 13, 2009

தமிழின் பெருமைகள்

ஏறுமுக இலக்கங்கள்1 = ஒன்று -one10 = பத்து -ten100 = நூறு -hundred1000 = ஆயிரம் -thouand10000 = பத்தாயிரம் -ten thousand100000 = நூறாயிரம் -hundred thousand1000000 = பத்துநூறாயிரம் - one million10000000 = கோடி -ten million100000000 = அற்புதம் -hundred million1000000000 = நிகர்புதம் - one billion10000000000 = கும்பம் -ten billion100000000000 = கணம் -hundred billion1000000000000 = கற்பம் -one trillion10000000000000 = நிகற்பம் -ten trillion100000000000000 = பதுமம் -hundred trillion1000000000000000 = சங்கம் -one zillion10000000000000000 = வெல்லம் -ten zillion100000000000000000 = அன்னியம் -hundred zillion1000000000000000000 = அர்த்தம் -?10000000000000000000 = பரார்த்தம் —?100000000000000000000 = பூரியம் -?1000000000000000000000 = முக்கோடி -?10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

வியாழன், நவம்பர் 06, 2008

பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம்பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்படர்கின்ற காதல் அதிசயம்(பூவுக்குல்)ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமேஅலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமேமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமேஉடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்நினைத்தால் நினைத்தால் அதிசயமே(கல்தோன்றி)(பூவுக்குள்)பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமேஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமேவான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமேநங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமேஅசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)(பூவுக்குள்)

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும்.

அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கேது திசை தொடங்கும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சுக்கிர திசை தொடங்கும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சூரிய திசை தொடங்கும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சந்திர திசை தொடங்கும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் செவ்வாய் திசை முதலில் தொடங்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத் திரத்தில் பிறந்தால் முதலில் ராகு திசை தொடங்கும்.

புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் குரு திசை முதலில் தொடங்கும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் சனி திசை
முதலில் தொடங்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் புதன் திசை தொடங்கும்.

12 ராசிகளில் பிறந்தவர்களின் தன்மைகள்

மேஷம்

ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் ஆவார். தைரியம், துணிவு, முரட்டுத்தனமான நடவடிக்கை, வலிமை மிகுந்த உடலமைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, கூட்டாளிகளை உயர்த்தும் தன்மை, பலரை நிர்வகிக்கும் திறன், மிகதைரியசாலியாக மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவராக விளங்குவார்கள்.

ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகானவர்கள். கோதுமை போன்ற நிறமும், தரமான உயரமும், கருப்பான கண்களும் நன்றாக வளர்ந்த தலைமுடியும், கற்பனை வளம் கொண்டு பேச்சுத் திறனால் மற்றவர்களை கவர்ச்சி செய்யும் திறன் கொண்டவராகவும், மென்மையான உணர்ச்சியும், கலை, சினிமா, ஆடை, ஆபரணத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

புதன் ஆதிக்கம் கொண்ட இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், உயரமான உடலமைப்பு, எளிதில் உணர்ச்சிக்கு உட்பட்டவராகவும், வேடிக்கை செய்பவரும், வணிகத்துறையில் நாட்டம் கொண்டவராகவும், அடிக் கடிமனம் மாறும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

கடகம்

ஜென்ம ராசியாதிபதி சந்திரன் ஆவார். மனோதைரியம் மிக்கவ ராகவும், தரமான உயரமும், வெண்மை நிறமும், இரக்க குணமும் வீட்டை நேசிப்பவராகவும் இருப்பார்கள். மிக புத்திசாலியாகவும், உடல் அழகும் கொண்டவராக இருப்பார்கள். பெண் என்றால் கவர்ச்சி மிகுந்த உடலமைப்பு, இனிய குரல், சேமிக்கும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

சிம்மம்

ராசியாதிபதி சூரியன் ஆவார். இயற்கையாகவே எதிலும் மிகத் துணிச்சலுடன் தொலைநோக்கு பார்வையும், லட்சியம் பல உடையவராகவும், கௌரவமான தோற்றமும், வெளிபார்வைக்கு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்போல இருந்தாலும் அப்படி இருக்க மாட்டார்கள். எதிலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ள தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

ஜென்ம ராசியாதிபதி புதன் பகவான் ஆவார். தரமான உடலமைப்பு உணர்ச்சி மிக்கவராகவும், புத்திசாலியாகவும், காதல் கற்பனை கொள்பவரா கவும், இசையிலும் பல நுண்ணிய கலைகளிலும் நாட்டம் கொண்டவராகவும், மற்றவர்களை எளிதில் நட்பு கொள்ளாத வராகவும் இருப்பார்கள்.

துலாம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகான தோற்றம், கற்பனை வளம் மிக்கவராகவும், நல்ல உடலமைப்பும், அன்புள்ளவராகவும், எந்த சூழ்நிலையிலும் சாயாத தன்மை கொண்டவராகவும், கலை, இசை, சினிமாவில் நாட்டம் கொண்டவராகவும் இருப் பார்கள்.


விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயர்ந்த பண்பு உடையவராகவும், இளமையானவராகவும், உணர்ச்சி வசப்படும் தன்மையும், பயந்த சுபாவம் கொண்டவராகவும், மனக்குழப்பம் அதிகம் கொண்டவரா கவும், ரகசிய உடல் பாதிப்பு உடைய வராகவும் இருப்பார்கள்.

தனுசு

குருவின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் பயந்த சுபாவம் கொண்டு இருந்தாலும்; நினைத்த காரியத்தை முடிப்பதில் பிடிவாதம் கொண்டவராகவும், அறிவு திறன் மிக்கவராகவும், மற்றவர்களை எளிதில் நம்பும் தன்மை கொண்டவராகவும், கடவுள் பயம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

மகரம்

சனியின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயரமான உடலமைப்பு, மாநிறம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம், திறமை மிக்கவர். நல்ல நடவடிக்கை கொண்டவராகவும், கடவுள் பயம் கொண்டவராகவும், வாழ்வில் அடி மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்த வர்களாக இருப்பார்கள்.

கும்பம்

ஜென்ம ராசி யாதிபதி சனி பகவான் ஆவார். படித்தவர், புத்திசாலி, சீக்கிரம் கோபம் வரும் தன்மை கொண்டவர்கள். கற்பனை வளம் மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பல்வேறு தடைகளை சந்திப்பவர்.

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் நல்லநிறமும், திடமான உடலமைப்பும், மிக ஜாக்கிரதையாக செயல்படும் திறனும் கொண்டு கடவுள் பயம்மிக்கவராக இருப்பார்கள்.

நன்றி : http://eegarai.darkbb.com/-f3/--t555.htm

புதன், நவம்பர் 05, 2008

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும். அதாவது,
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள்.
ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும்,
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்கள்.
ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்கள்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.
ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்கள், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள்
மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகள். பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள்.
வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

வியாழன், அக்டோபர் 30, 2008

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்...
சிரிக்கும் குழந்தையை தேடித்தேடி ரசிக்கிறேன்...
நீதானடி என் தெய்வம்..’’

நன்றி : http://www.karkibava.com

புதன், அக்டோபர் 29, 2008

சில்லென்று ஒரு காதல்

படம் : சில்லென்று ஒரு காதல்இசை :ஏஆர்ரகுமான்பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகாஇயக்கம்:என்.கிருஷ்ணாஎழுதியவர்:வாலிவரிகள்(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வாநான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதேமுன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

(பெண்)பூ வைத்தாய் பூ வைத்தாய்நீ பூவைக்கோர் பூ வைத்தாய்மண பூ வைத்து பூ வைத்தபூவைக்குள் தீ வைத்தாய்(ஒ ஓ)

(ஆண்)தேனி - நீ -நீ மழையில் ஆடநாம் - நாம் -நாம் நனைந்து வாடஎன் நாளத்தில் உன் ரத்தம்ஆடைக்குள் உன் சத்தம்உயிரே ஒ

(பெண்)தோழி ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன்முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாநான் நானா கேட்டேன் என்னை நானே

(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானே

(பெண்)முன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமாநாம் வாழும் வீட்டுக்குள்வே ராரும் வந்தாலே தகுமா?

(பெண்)தேன் மழை தேக்கத்தில் நீ தான்உந்தன் தோள்களில் இடம் தரலாமாநான் சாயும் தோள் மேல்வேர்யாரும் சாய்ந்தாலேதகுமா?

(ஆண்)நீரும் செங்குள சேறும்கலந்தது போலேகலந்திடலாம்

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசித்திர புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

வெள்ளி, அக்டோபர் 10, 2008

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமன்

தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.

சீதை

வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்
பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.

லக்ஷமணன்

சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.

பரதன்

தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.
கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

கூனி-மந்தரை

யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது

சூர்பனகை

திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது

ராவணன்

இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.

மண்டோதரி

கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

கும்பகர்ணன்

தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

விபீஷணன்

தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

வாலி

தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.

சுக்ரீவன்

அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.

அனுமான்

தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.

புஷ்பகவிமானம்

இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.

நன்றி : ஈதேனீ மன்றம், http://wiki.pkp.in/forum/t-95805/#post-280147

வியாழன், செப்டம்பர் 04, 2008

தமிழின் பெருமை

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

- நன்றி www.pkp.blogspot.com

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008

சொற்கள்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு நிறைய சொற்கள் சென்றிருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகள்:From Tamil to english:காசு (money) ==> cashஅகம் (pronounced aham, meaning: home)) ==> homeகட்டுமரம் ==> catamaranநாவாய் ==> navyமாங்காய் ==> mangoஒன்று ==> ஒன்னு ==> oneரெண்டு ==> twoஎட்டு ==> eightFrom Tamil to Sanskrit/Hindi:பூசெய் (பூவினால் வழிபாடு செய்தல்) ==> பூஜாசலம் (சலசலத்து ஓடும் நீர்) ==> ஜலதீப ஆவளி (தீப வரிசை) ==> தீபாவலி/தீவாலிஇன்னும் பல உண்டு...

நல்ல தமிழ்ச் சொற்கள்

எரிவளி - காஸ்அரிகட்டை - Cutting Boardஇயங்கி - Switchபயின் மரம் - Rubber Treeகணிதர் - Astrologerகல்லெடை - Poundஆகூழ் - Luckகுப்பி - Bottleஆளோடி - Verandahநெகிழி - Plasticசுமை உந்து - Lorryபுறநோக்கி - Door lenseகழுவுதொட்டி - Washbasinகாட்சிப் பேழை - Showcaseநடையர் -Pedestriansதண்மி - Refrigeratorஊடுகதிர் - X rayவானூர்தி - Aeroplaneமணக்குப்பி - Perfume bottleதுடிப்பறிமானி - Stethoscopeகன்னெய் - Petrolமழிதகடு -Shaving Bladeகோப்பேடு -Fileமீவான் - Helicopterதூவல் -Penஊர்தி - Carமாச்சில் - Biscuitஏதிலி -Orphan
நன்றி http://tholkaappiyam.blogspot.com/

சனி, ஆகஸ்ட் 09, 2008

மனஉறுதி

1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.
2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.
3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.
4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.
5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.
6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.
7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.
8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை
9) முட்டுக்களைகளை முறித்தெறி
10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

சனி, ஜூலை 26, 2008

கணிணி மொழிகளின் நிலவரம்


தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண

நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி

புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை

இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே

சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி

அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா

கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது

இடத்திலிருந்த சி++-ஐ ஒரே அடியாய் அடித்து தள்ளிவிட்டு விசுவல்பேசிக்

இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது. ஒரு வரிகூட எழுத

தெரியாவிட்டாலும் என்னமோ எனது அபிமான கணிணிமொழியான பிஎச்பி-

க்கு நாலாவது இடம் தான்.அது ரொம்ப ஏறுவதும் இல்லை.ரொம்ப

இறங்குவதும் இல்லை.ஸ்டெடி பார்டி.அதற்கு அப்புறம் தான் பெர்ல், பைதான்

-லாம் வருகின்றது. நோட்டம் விட்டதில் 100-க்கும் மேல் இது மாதிரி கணிணி

மொழிகள் உள்ளனவாம்.உங்களுக்கும் தெரியட்டுமேன்னு இங்கே

பட்டியலிட்டேன்.அநியாயம் என்னன்னா எனக்கு நன்னா தெரிந்த

கணிணிமொழியான அதன் தாய்மொழியாம் பைனரியை இப்பட்டியலில்

காணோம்.

தாயோடு அறுசுவை போம்.

தந்தையோடு கல்வி போம்.

சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.

உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.

உடன் பிறப்பால் தோள்வலி போம்.

மனைவியோடு எவையும் போம்.

- யாரோ

சனி, ஏப்ரல் 12, 2008

குறிப்புகள்

FortNight - Fourteen Night

37 - எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாது.


Ice Apple - என்பது நுங்கு

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts