புதன், ஜூன் 23, 2010
தமிழ் வளர்த்த அறிஞர்கள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் நரசிம்மலு நாயுடு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.வை.தாமோதரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுப்பிரமணிய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.அகத்தியலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.இளங்குமரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழண்ணல்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கல்கி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞானசம்பந்தனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமநாதன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சித்பவானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா.பொ.ரத்தினம்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சி.இலக்குவனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அ.சிதம்பரநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
மகாவித்துவான் .வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதர் அருணகிரிநாதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ந.சி.கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொ.முருகப்பா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சதாசிவப் பண்டாரத்தார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பேராசிரியர் மயிலை சிவமுத்து
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமி சிதம்பரனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அண்ணாமலை செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவிந்தசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாண்டித்துரைத் தேவர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா. சுப்பிரமணியபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உமாமகேசுவரன் பிள்ளை செல்வ கேசவராய முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தண்டபாணி தேசிகர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தணிகை மணி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூரணலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமிநாத சர்மா
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் கந்தையாபிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி விபுலானந்தர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆர்.கே.சண்முகம் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பெ.நா.அப்புஸ்வாமி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பொ.திருகூட சுந்தரம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுத்தானந்த பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாபநாசம் சிவன், அறிஞர் வ.ரா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.வே.சு. ஐயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராஜாஜி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார், நா.கதிரைவேற்பிள்ளை
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்
Copyright @ 2010 Dinamalar - No :1 Tamil News Paper. Designed and Hosted by Web Division,Dinamalar.|
நன்றி : http://tamil.dinamalar.com/semmozhinews_tamilariyargal.asp
சனி, ஜூன் 12, 2010
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010 - பாடல்
![]() |
செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்! ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்! இசை - எ.ஆர்.ரஹ்மான் எழுத்து - கலைஞர் மு.கருணாநதி பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர். |
(TMS) 1 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - 2 பிறந்த பின்னர், | (TMS) Pirapokkum ella uyirkum pirandha pinnar |
(ARR) 3 யாதும் ஊரே யாவரும் கேளீர் | (ARR) yaddhum ooreee yaavarum kellirrr |
(Harini) 4 உண்பது நாழி உடுப்பது இரண்டே | (Harini) onnbadhu naazhi udupathu irende |
(Chinmayi) 5 உறைவிடம் என்பது ஒன்றே என | (Chinmayi) uraividam enbadhu ondre |
(Karthik) 6 உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்.. | (Karthik) uraithu vazhndhom uzhaithu vazhvom.. |
(Hariharan) 7 தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் 8 நன்மொழியே நம் பொன் மொழியாம் | (Hariharan) theedhum nandrum pirar thara vaarai yenum nan mozhiye nam pon mozhiyaam |
(Yuvan) 9 போரைப் புறம் தள்ளி 10 பொருளைப் பொதுவாக்கவே | (Yuvan) porrai puram thallzhi porulai podhuvaakave.. |
(Chorus) 11 அமைதி வழி காட்டும் அன்பு மொழி 12 அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் | (Chorus) amaidhi vazhi kaatum anbu mozhi ayyan valluvarin vaaimozhiyaam |
(ARR + Yuvan + Chorus) 13 செம்மொழியான தமிழ் மொழியாம்… | (ARR + Yuvan + Chorus) SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM... |
(P Susheela humming..) | (P Susheela humming..) |
(Vijay Yesudas) 14 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே 15 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் | (Vijay Yesudas) orrarivu mudhal aararivu uyirinam varayile unarndhidum udal amaipai pagirthu koorum |
(P Susheela) 15 ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே 16 உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் | (P Susheela) orrarivu mudhal aararivu uyirinam varayile unarndhidum udal amaipai pagirthu koorum |
(G.V.Prakash Kumar) 17 ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் 18 ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு | (G.V.Prakash Kumar) thozhgapugal thozhgapiyamum oppatra kural koorum uyar panpaadu |
(Naresh Iyer + chorus) 19 ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே | (Naresh Iyer + chorus) olikindra silamubum meghalayum sindhamaniyudane.. |
(T.L.Maharajan) 20 வளையாபதி குண்டலகேசியும்.. | (T.L.Maharajan) vazhayapathi kundalakesiyumm.. |
(Chorus+ Nithya Shree humming) 21 செம்மொழியான தமிழ் மொழியாம்… | (Chorus+ Nithya Shree humming) SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM... |
(Blaaze + Shruthi Haasan) 22 கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் 23 எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற 24 எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும் 25 புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி | (Blaaze + Shruthi Haasan) kamba naataalvarum kavi arasiyevai nallaalum yemmadhamum yetrum puzhgal endrum yethanayo aayiram kavidhai neivor tharum thadai anaithukkum vithaaga vilangum mozhi... |
26 செம்மொழியான தமிழ் மொழியாம்… Dr.Bala Murali Karishna + Srinivas + chorus) | SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM (Dr.Bala Murali Karishna + Srinivas + chorus) |
27 அகமென்றும் புறமென்றும் வாழ்வை 28 அழகாக வகுத்தளித்து 29 ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - 30 ஓதி வளரும் உயிரான உலகமொழி 31 நம் மொழி – நம் மொழி – அதுவே (Sruti Haasan) | aagam endrum puram endrum vazhvai azhagaaga vaguthalithu aadhi anddam illathu irukindra iniya mozhi modhi vazharum uyiraana uzhaga mozhi thamm mozhi namm mozhi adhuve... (Sruti Haasan) |
32 செம்மொழியான தமிழ் மொழியாம்… (Chorus) | SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM... (Chorus) |
(Chorus) 33 தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியா... | (Chorus) tamizh mozhi tamizh mozhi tamizh mozhi ya ghaaa... |
(Chinnapponnu) 34 தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம் | (Chinnapponnu) Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam |
(ARR) 35 வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே… 36 செம்மொழியான தமிழ் மொழியாம்… | (ARR) Vazhiya Vazhiya ve..Thamizh .. Vazhiya Vazhiya ve SEMMOZHIYAANA TAMIZH MOZHIYAAAM ... |
Source : http://www.movih.com/kollywood-movie-songs-download/tamil-semmozhi-manadu-anthem-video-song-a-r-rahman.html |
http://www.rahmanism.com/2010/05/world-classical-tamil-conference-anthem.html |
ப்ளூடூத் ( Bluetooth)
பேசுதலின் குறுந்தகவல் நன்று.
இப்போதெல்லாம் செல்பேசி வாங்குபவர்கள், பேசுவதற்கும் குறுந்தகவல் அனுப்புவதற்கும்
மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை, செல்பேசியில் கேமெரா இருக்கிறதா? , ப்ளூடூத் எனப்படும் குறுந்தூர கம்பியில்லாத் தொடர்புமுறை வசதி இருக்கிறதா, அகச்சிவப்புத் துறை (Infra Red Port) இருக்கிறதா என்றெல்லாம் கவனித்துத் தான் வாங்குகிறர்கள் . தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கையில் மின்னணுவியல் கருவிகளின் பயன்பாட்டு எல்லைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. கருவிகளின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
இந்தப் பதிவில் ப்ளூடூத் (Bluetooth) எனப்படும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொடர்பு முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?
அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.
வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.
பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?
பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.
1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.
ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்.
ப்ளூடூத் கருவிகள் மற்றும் அவற்றின் உபயோகங்களைக் குறித்துப் பார்ப்போம்.
கருவிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையான ப்ளூடூத் சாதனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ப்ளூடூத் காதுபேசி (Bluetooth headset) செல்பேசியைக் கையில் பிடித்துப் பேசுவதற்குப் பதில் காதில் மாட்டிக்கொண்டு கையை வீசிக்கொண்டு பேசிச் செல்ல உதவுபவை இந்த ப்ளூடூத் காதுபேசிகள். முன்பெல்லாம் இத்தகைய கருவிகளை எவரேனும் பொருத்தியிருப்பின் பார்ப்பவர்கள் "ஐயோ , அவருக்குக் காது கேளாது போலிருக்கிறது" என்று பரிதாபப் படுவர். ஆனால் இப்போது உம்மாதிரியாகக் காதில் மாட்டிக் கொண்டு கையை வீசிக்கொண்டு தனியே பேசிச் செல்பவர்களை யாரும் ( "ஆள் ஒரு மாதிரியோ" என) ஐயுறுவதில்லை. ப்ளூடூத் சுட்டி மற்றும் விசைப்பலகை (Bluetooth Mouse and Keyboard) அலுவலகத்தில்/வீட்டில் பயன்படும் மேசைக் கணினியில் இருக்கும் விசைப்பலகை மற்றும் சுட்டியை நீங்கள் கேபிள் இணைப்பின்றி ப்ளூடூத் இணைப்பு மூலம் கணினியுடன் இணைத்துக் கொள்ளலாம். கணினியிலும் ஒரு ப்ளூடூத் கருவி இணைக்கப்பட்டு விசைப் பலகை மற்றும் சுட்டியின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.
கணினியுடன் இணைந்திருக்கும் சிறிய ஒலி பெருக்கிகளும் ப்ளூடூத் வசதியுடன் கேபிளின்றி இணைக்கப்பட்டால் கணினி மேசையில் கசமுசா என்று சிக்கிக் கிடக்கும் கேபிள்களிருந்து விடுதலை பெறலாம். மேலும் நினைத்த இடத்திற்கு சுட்டியையோ விசைப்பலகையையோ , நகர்த்தி உபயோகிப்பது சுலபமாகிறது பொது உபயோக ப்ளூடூத் பொருத்தி (General Purpose Bluetooth Adaptor).
கணினியில் இக்கருவியை இணைத்துக் கொண்டால் போதும். பிற ப்ளூடூத் கருவிகளுடன் அவற்றின் உபயோகத்திற்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புப் பரிமாற்றம் (File Transfer ), இணைய இணைப்பு வசதி , காது பேசியுடன் இணைப்பு, தொடர் துறை (Serial Port) இணைப்பு, தொலைநகல் அனுப்பல் போன்ற பல வசதிகளை இந்தப் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கருவியும் மேற்கூறிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திறன் படைத்தது. செல்பேசியிலிருந்து கணினிக்கோ , கணினியிலிருந்து செல்பேசிக்கோ ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, கோப்புப் பரிமாற்றம் செய்வது எளிதாகிறது. ஜி பி ஆர் எஸ் வசதி கொண்ட செல்பேசியிலிருந்து இணைய இணைப்பு ஏற்படுத்திக்கொண்டு, அழைப்புவழி (Dial up)சேவையைப் பயன்படுத்தி , இணைய இணைப்பினை கணினிக்கு கொண்டு செல்ல முடியும். மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம். கேபிள்கள் ஏதும் இல்லாமலேயே இணைய வசதியை எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. ப்ளூடூத் அணுகு புள்ளி (
Bluetooth Access Point) இணைய இணைப்பினையோ அல்லது அலுவலகத்தின் உள் வலையமைப்பில் (Intranet) இணையவோ ப்ளூடூத் அணுகு புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் அலுவலகங்களில் புதிய கணினி இணைப்புகளை ஏற்படுத்துவதும், இருக்கும் இணைப்புகளை எளிதாக வேறிடத்துக்கு மாற்றுவதும் நொடியில் முடிகிறது. இதுபோலவே அலுவலகத்தின் அச்சடிப்பானுடன் ( Printer) ப்ளூடூத் இணைப்பின் மூலம் கோப்புக்களை அச்செடுக்க முடியும். தொலைநகல் எடுப்பதும் அனுப்புவதும் எளிதாகிறது. குறுக்கும் நெடுக்குமாக அலுவலகங்களில் விரவிக்கிடக்கும் கேபிள்களை நீக்க இந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் ப்ளூடூத் நுட்பத்தினால் வேகம் சற்றே குறைவாக இருப்பதால் கம்பியில்லாக் குறும்பரப்பு வலையமைப்பு ( Wireless Local Area Network , WLAN) தற்போது பிரபலமடைந்து வருகிறது.
இது தவிர, கார்களிலும் ப்ளூடூத் கருவிகளைக் கொண்டு (Bluetooth Car-kit) செல்பேசிகளுடன் தொடர்பேர்படுத்திக் கொண்டு, செல்பேசியைக் கையில் தொடாமலேயே அழைப்புகளை இணைக்கவும், பேசவும் முடியும். கார்களில் நாம் இசை கேட்டுக்கொண்டே செல்கையில் ஏதேனும் அழைப்பு ஏற்படின், இசையை நிறுத்தி வைத்து, நாம் பேசி முடித்ததும் மீண்டும் இசையைத் தொடர இந்தக் கருவிகள் உதவுகின்றன. சரி, இரு ப்ளூடூத் கருவிகள் அருகருகே நெருங்கையில் தாமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து தகவல் அனுப்பத் தொடங்கிவிடுமா? இல்லை. அவ்வாறு தாமாக இணைந்து கொண்டு தகவல் பரிமாரிமாறும் வசதி இருந்தால் அது பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையே அல்ல. ப்ளூடூத் கருவிகள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதைப் பின்வருமாறு எளிதாய் விளக்கலாம்.
1. இரு கருவிகளிலும் ப்ளூடூத் இயக்கம் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் (Bluetooth ON).
2. கருவிகள் இரண்டும் கண்டுபிடிப்பு நிலையில் (Discoverable mode) இருக்க வேண்டும். இந்த நிலையானது ஏற்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே பிற கருவிகள் அந்தக் கருவி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக, நீங்கள் உங்களது ப்ளூடூத் கருவியை இயக்கியவுடன் அது கண்டுபிடிப்பு நிலையில் இயங்கத்தொடங்கும்.
3. ப்ளூடூத் கருவிக்கென அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புப் பகுதிக்குச் (Settings) சென்று , அருகிலுள்ள பிற கருவிகளைக் கண்டுபிடிக்கும் பட்டியை சுட்டுங்கள் . உங்களது ப்ளூடூத் கருவி உடனே, பிற கருவிகளைத் தேட ஆரம்பிக்கும். கண்டுபிடிப்பு நிலையில் உள்ள பிற கருவிகளைத் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு உங்கள் முன் நிறுத்தும்.
4. நீங்கள் இணைப்பு ஏற்படுத்த விரும்பும் கருவியைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களது கருவி குறிப்பிட்ட மற்றொரு கருவியுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இணைப்புக் கேட்டவுடன் இணைப்பு ஏற்படுத்த அனுமதிப்பதும், மறுப்பதும் எதிர்கருவியின் விருப்பம்.
5. உங்களது ப்ளூடூத் கருவியுடன் இணைய விருப்பம் எனில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடவுச்சொல்லை (Pass key) இணைத்து அனுப்பும்.
6. அக்கருவி அனுப்பும் கடவுச்சொல்லை உங்கள் கருவியில் உள்ளிட்டு அனுப்புங்கள். கடவுச் சொல் வேறுபட்டால் தொடர்பு மறுக்கப்படும். சரியான கடவுச் சொல் சரிபார்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்படும். இணைப்பு ஏற்படுத்தியாகி விட்டது. எவ்வாறு தகவல் பரிமாறுவது? அல்லது எவ்வாறு ப்ளூடூத் இணைப்பைப் பயன்படுத்துவது?
ப்ளூடூத் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளுமுன் அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்கள் அக்கருவிகளுக்கிடையே தெரிந்திருக்க வேண்டும். அதாவது இரு வேறு சேவை வழங்கும் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால் பயனில்லையே. உதாரணமாக, கோப்புப் பரிமாற்றம் செய்ய வேண்டுமனில், இரண்டு ப்ளூடூத் கருவிகளிடமும் கோப்புப் பரிமாற்றத்துக்கான சேவை (File Transfer) இருக்க வேண்டும்.
ப்ளூடூத் கருவிகள் (சென்ற பதிவில் கூறியது போல்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இணைந்தவுடன் இணைப்பு (Pairing) ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கருவிகளின் சேவையை கண்டுபிடிக்கும் (Service discovery) நிகழ்வும் ஏற்படுத்தலாம். அவ்வாறு சேவை கண்டுபிடித்தல் செய்த பின்பே ஒரு கருவியின் உபயோகம் மற்ற கருவிக்குத் தெரிய வரும். கடவுச் சொல் கொண்டு ஏற்படுத்தப்படும் இணைப்பு பாதுகாப்பானது. அவ்வாறு கடவுச் சொல் இல்லாமல் ஏற்படுத்தப்படும் இணைப்புகளால் உங்கள் அனுமதியின்றி தகவல் உங்கள் கணினி அல்லது செல்பேசியிலிருந்து திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே ப்ளூடூத் இணைப்பு ஏற்படுத்துகையில் பாதுகாப்பான (Secured data transfer) பரிமாற்ற வகையை உங்கள் கருவியின் அமைப்புப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.
பொதுவிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி வைத்தல் சாலச் சிறந்தது. உங்களது செல்பேசியின் ப்ளூடூத் கருவி இயக்க நிலையில் இருந்தால் பிற கருவிகள் உங்களது செல்பேசியுடன் இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கலாம் . பாதுகாப்பான பரிமாற்ற முறையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கவில்லை எனில் உங்கள் செல்பேசியிலிருக்கும் தகவல்களை நீங்கள் அறியாமலேயே பிறர் திருடிக்கொள்ளலாம் . விஷமிகள் , பொதுவிடங்களில் இயக்கத்திலிருக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து , மிரட்டும் தகவல்களை அனுப்பலாம். "You are Bluejacked" என்ற தகவல் இவற்றுள் பிரபலமான பயமுறுத்தும் தகவல் . இத்தகவலால் செல்பேசிக்குப் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் , நாம் மிரண்டு போய், செல்பேசிக்கு ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்று தவறாய் எண்ண வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.இம்மாதிரித் தகவல்கள் உங்கள் செல்பேசியில் , நீங்கள் பொதுவிடங்களில் இருக்கும் போது ஏற்படின் தகவலப் புறக்கணித்து உடனடியாக உங்கள் செல்பேசியின் ப்ளூடூத் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள்.
சென்ற வருடத்தில் பரபரப்பூட்டிய கபீர் எனும் செல்பேசி வைரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கணினி வைரஸ் பல உலவும் இன்னாளில் , முதன் முதலில் செல்போனில் பரவிய வைரஸ் கபிர் ஆகும். எல்லாச் செல்பேசிகளிலும் இது பரவவில்லை. ஸிம்பியன் இயங்குதளம் அமைந்துள்ள செல்பேசிகளில் தான் இது பரவியது. நோக்கியாவின் செல்பேசிகள் பலவும் இந்த இயங்குதளம் கொண்டு அமைக்கப்பட்டிருப்பவை . ப்ளூடூத் மூலம் ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்குப் பரவும் வைரஸ்தானிது. ப்ளூடூத் மூலம் உங்களது செல்பேசிக்கு வரும் இந்த கோப்பு தகவல்பெட்டியில் (Inbox) சேகரிக்கப்படுகிறது. எதோ தகவல் வந்திருக்கிறது என்று எண்ணி இந்தக் கோப்பைத் திறந்தீர்களேயானால் , உங்களது ப்ளூடூத் அமைப்பினை மாற்றி, இந்தக் கோப்பினை அருகிலுள்ள பிற ப்ளூடூத் வசதியுள்ள செல்பேசிகளுக்கு அனுப்பி அந்தச் செல்பேசியையும் பாதிக்கும் குணம் கொன்டது இந்த வைரஸ் . இந்த வைரஸினால் செல்பேசியின் இயல்பான ப்ளூடூத் இயக்கம் பாதிக்கப்படுகிறது. ப்ளூடூத் இயக்கத்தினை நீங்கள் நிறுத்தி வைத்தாலும் , இந்த வைரஸ் உங்களது செல்பேசியில் நுழைந்து விட்டதெனில், தானாக, ப்ளூடூத் இயக்கத்தை ஆரம்பித்து அருகே உள்ள பிற ப்ளூடூத் செல்பேசிகளுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.
மேற்குறிப்பிட்ட ஒரு வைரஸ் மட்டுமே செல்பேசி வைரஸ் என அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு புரளிகள் இணையத்திலும் , மின்னஞ்சல் வழியாகவும் கிளப்பி விடப்படுகின்றன. "இந்த வகை எண்களிலிருந்து அழைப்பு ஏற்படின் அவ்வழைப்பை ஏற்க மறுத்து விடுங்கள் . அவ்வழைப்பினை ஏற்றுப் பேசினீர்களேயானால், உங்கள் செல்பேசியின் எண், ஸிம் அட்டையின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் " என்றெல்லாம் கூறிப் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வருவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வகைத் தகவல்கள் அனைத்தும் புரளியே !
ப்ளூடூத் கருவிகளின் பயன்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது கம்பியில்லா காது பேசியும், கணினியில் பயன்படும் பொது உபயோக ப்ளூடூத் பொருத்தியும் தான் . அழைப்பு ஏற்பட்டால், ப்ளூடூத் காதுபேசியைப் பயன்படுத்தி, செல்பேசியின் விசையை அழுத்தாமலேயே தானாக அழைப்பை ஏற்றுப் பேசலாம் (Auto Answer). தற்போது செல்பேசியிலேயே பாடல் கேட்கும் வசதி வந்துவிட்டதால் ஸ்டீரியோ வகை ப்ளூடூத் காதுபேசிகள் அறிமுகமாகப் போகின்றன. ஆக, இனிவரும் காலங்களில் , மின்னணுவியில் சாதனங்களில் மின்சார கேபிள்கள் தவிர வேறு எந்தத் தேவைக்கும் கேபிள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது !
ஆதாரம் : http://www.tamiloviam.com/unicode/09220506.asp
வெள்ளி, ஜூன் 11, 2010
சனி, மே 22, 2010
அச்சத்தை போக்கிய விளையாட்டு - கலைவாணி
நன்றி : http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=5/15/2010&secid=14
வெள்ளி, மே 07, 2010
வியாழன், மே 06, 2010
புதன், ஏப்ரல் 28, 2010
திங்கள், ஏப்ரல் 26, 2010
IPL T-20 -2010 - கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியது
சனி, ஏப்ரல் 24, 2010
IPL Jury Awards - 24-04-10
Best Batsman - Sachin Tendulkar (Mumbai Indians)
Best Bowler – Pragyan Ojha (Deccan Chargers)
Best Dramatic Performance – Harbhajan Singh (Mumbai Indians)
Most Consistent Performer - Jacques Kallis (Royal Challengers Bangalore)
Best Breakthrough Performance 2008 - Brendon McCullum (Kolkata Knight Riders)
Best Breakthrough Performance 2009 - Anil Kumble (Royal Challengers Bangalore)
Best Fielder - AB de Villiers (Delhi Daredevils)
Best Ground - Chinnaswamy Stadium in Bangalore
Best Stadium Experience - DY Patil Stadium in Mumbai.
Viewers’ Choice Awards
Best Catch: David Hussey (Kolkata Knight Riders)
Best Batsman: Sachin Tendulkar (Mumbai Indians)
Best Captain: Sachin Tendulkar (Mumbai Indians)
Best Bowler: Pragyan Ojha (Deccan Chargers)
Best Commentator: Ravi Shastri
Most Stylish Player: Robin Uthappa (Royal Challengers Bangalore)
Most Fan-Friendly Cricketer: Adam Gilchrist (Deccan Chargers)
Best Fielder: Suresh Raina (Chennai Super Kings)
Statistical Awards
Most Economical Bowler: Ravichandran Ashwin (Chennai Super Kings)
Fastest Hundred: Yusuf Pathan (Rajasthan Royals)
Highest Percentage of Runs Scored in Boundaries: Virender Sehwag (Delhi Daredevils)
Source : http://www.crichotline.com/indian-premier-league-ipl-awards-2010/
Sachin Tendulkar’s Birthday - World Cricket Day - ICC Declare
Source : http://tamilden.blogspot.com/2010/02/sachin-tendulkars-birthday-world.html
செவ்வாய், ஏப்ரல் 20, 2010
சனி, ஏப்ரல் 17, 2010
வியாழன், ஏப்ரல் 15, 2010
சனி, ஏப்ரல் 10, 2010
செவ்வாய், ஏப்ரல் 06, 2010
திங்கள், ஏப்ரல் 05, 2010
The Third Dimension: How 3D movies work
புதன், மார்ச் 31, 2010
'பிக் பாங்' சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?
குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.
இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.
இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .
நன்றி : http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1859
திங்கள், மார்ச் 22, 2010
ஐ.பி.எல்., அணிகள் விலைகள் & புள்ளிப்பட்டியல் 21-03-10
அணிகள் மதிப்பு உரிமையாளர்
1.மும்பை இந்தியன்ஸ் 503.55 கோடி முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ்)
2.பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 502.20 கோடி விஜய் மல்லையா (யு.பி.குரூப்)
3.டெக்கான் சார்ஜர்ஸ் 481.50 கோடி வெங்கட்ராம் ரெட்டி(டெக்கான் கிரானிக்கல்)
4.சென்னை சூப்பர் கிங்ஸ் 413.55 கோடி சீனிவாசன்(இந்தியா சிமென்ட்ஸ்)
5.டில்லி டேர்டெவில்ஸ் 378 கோடி கிராந்தி மல்லிகார்ஜுன ராவ்(ஜி.எம்.ஆர்.ஹோல்டிங்)
6.கிங்ஸ் லெவன் பஞ்சாப் 342 கோடி பிரித்தி ஜிந்தா, நெஸ் வாடியா (பாம்பே டையிங்)
7.கோல்கட்டா நைட் ரைடர்ஸ் 337.95 கோடி ரெட் சில்லீஸ் (ஷாருக்கான், ஜுகி சாவ்லா, ஜெய் மேத்தா)
8.ராஜஸ்தான் ராயல்ஸ் 301.50 கோடி எமர்ஜிங் மீடியா(ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா)
9.புனே 1700 கோடி அபிஜித் சர்க்கார் (சகாரா நிறுவனம்)
10.கொச்சி 1520 கோடி சைலேந்திர கெய்க்வாட் (ரெண்டஸ்வஸ் நிறுவனம்
புள்ளிப்பட்டியல் 21-03-10
டில்லி அணியிடம் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
பெங்களூரு 4 3 1 6 +1.212
டெக்கான் 4 3 1 6 +0.450
மும்பை 3 2 1 4 +1.520
சென்னை 4 2 2 4 +0.448
கோல்கட்டா 4 2 2 4 --0.906
டில்லி 5 2 3 4 -0.920
பஞ்சாப் 3 1 3 2 -0.276
ராஜஸ்தான் 4 1 3 2 -0.953
* சென்னை-பஞ்சாப் இடையிலான போட்டி வரை
நன்றி : http://sports.dinamalar.com/InnerPage.aspx?Page=2
Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against
Royal Challengers Bangalore 4 3 1 0 0 6 +1.212 587/68.4 582/79.2
Deccan Chargers 4 3 1 0 0 6 +0.450 681/80.0 645/80.0
Mumbai Indians 3 2 1 0 0 4 +1.520 581/60.0 483/59.1
Chennai Super Kings 4 2 2 0 0 4 +0.448 649/79.1 620/80.0
Kolkata Knight Riders 4 2 2 0 0 4 -0.906 540/79.2 617/80.0
Delhi Daredevils 5 2 3 0 0 4 -0.919 754/97.0 862/99.1
Kings XI Punjab 4 1 3 0 0 2 -0.276 645/80.0 656/78.4
Rajasthan Royals 4 1 3 0 0 2 -0.953 609/80.0 581/67.5
Source : http://www.cricinfo.com/ipl2010/engine/series/418064.html?view=pointstable
சனி, மார்ச் 20, 2010
2010 DLF IPL Points Table, Standings as on 19-03-10
Mumbai Indians 02 02 00 00 +2.550 04
Bangalore 03 02 01 00 +1.463 04
Chennai Super Kings 03 02 01 00 +0.604 04
Deccan Chargers 03 02 01 00 +0.433 04
Kolkata Knight Riders 03 02 01 00 -0.641 04
Delhi Daredevils 04 02 02 00 -1.027 04
Kings XI Punjab 03 00 03 00 -0.380 00
Rajasthan Royals 03 00 03 00 -1.995 00
Source : http://indianpremierleague-ipl.blogspot.com/2008/04/iplt20-9th-match-live-score-deccan.html
திங்கள், மார்ச் 08, 2010
உங்களையே நீங்கள் அறியுங்கள்: தமிழருவி மணியன்
"மனிதனை இயக்கும் மனதில் இருந்துதான் எண்ணம் தோன்றுகிறது. அதிலிருந்துதான் வார்த்தை,செயல் எல்லாமே உருவாகிறது. ஆகவே மனம் எவ்வழியோ அவ்வழியே வாழ்வும் இருக்கும்".
கோயிலின் கருவறையில் உள்ள கடவுள் ஏன் கல்லில் காட்சி அளிக்கிறார்? கூட்டினால் கிடைப்பதானே கலை? ஆனால், சிற்பமோ கழித்தலில் கண்டெடுக்கப்படுவது. கல்லில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் கடவுள் தெரியும்; நம்மில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் அந்தக் கடவுள் நமக்குள்ளும் தெரியும்.
மனதில் இருக்கும் வேண்டாதவற்றை அகற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை அறிய வேண்டும். நமக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து, கேள்விகளைக் கேட்கும்போதுதான் அதற்கான விழிப்புணர்வு உண்டாகும். வெளியே தேடினால் இன்பமும் துன்பமும் இணைந்த விஞ்ஞானம் தோன்றும்; உள்ளே தேடினால் இன்பத்தை மட்டுமே கொடுக்கின்ற மெய்ஞானம் தோன்றும். ஆகையால், உங்களுக்குள்ளே உள்ள உங்களைக் கண்டறியுங்கள்; கடவுளைக் கண்டடைவீர்கள்"
நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=207916&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=உங்களையே%20நீங்கள்%20அறியுங்கள்:%20தமிழருவி%20மணியன்
வெள்ளி, பிப்ரவரி 26, 2010
பிராட்மேனை மிஞ்சிய சச்சின்: வீரர்கள் புகழாரம்
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளையாடியது இவரது உடலுறுதியை காட்டியது.
கிரிக்கெட் கடவுள்:
இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரம்மிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப்பிட்டுள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது.
சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:
கவாஸ்கர்(இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.
வெங்கசர்க்கார்(இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. தனது விக்கெட்டை வீணாக இழக்க மாட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் மிகப் பெரும் இலக்குகளை எளிதாக எட்டி விடுவார்.
அஜித் வடேகர்(இந்தியா): சச்சின் சாதனைக்காக விளையாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
நாசர் ஹூசைன்(இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றினார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.
இம்ரான் கான்(பாகிஸ்தான்): ஒரு நாள் போட்டிகளில் சேவக் தான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், இச்சாதனையை சச்சின் படைத்துள்ளார். இவர் நிறைய சாதனைகள் படைத்திருக்கலாம். அதில், 147 பந்தில் 200 ரன்கள் என்பது மிகவும் "ஸ்பெஷல்'. இதனை ஒரு அற்புதமான வீரர் நிகழ்த்திய அதிசயமாக கருதுகிறேன்.
சயீத் அன்வர்(பாக்.,): கடந்த 1997ல் சென்னையில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். தற்போது 200 ரன்கள் விளாசி சாதித்துள்ள சச்சின், தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அடையாளம் காட்டியுள்ளார்.
இதுவே ஆசை:
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறுகையில்,""நான் சாதனைக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. காலப் போக்கில் சாதனைகள், தானாகவே வருகின்றன. குவாலியர் போட்டியில் 175 ரன்களை எட்டிய போது, 200 ரன்களை எடுக்கலாம் என மனதில் தோன்றியது. சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்,''என்றார்.
அஞ்சலி பெருமிதம்:
சச்சின் சாதனையை அவரது குடும்பத்தினர் முழுமையாக காண முடியவில்லையாம். பள்ளி தேர்வு நடப்பதால் மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோர் மாலை முழுவதும் படித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் தான் மனைவி அஞ்சலி அதிக கவனம் செலுத்தியுள்ளார். அஞ்சலி கூறுகையில்,""இரட்டை சதம் அடித்த விஷயத்தை "போன்' மூலம் கூறி இன்ப அதிர்ச்சி தந்தார் சச்சின். கிரிக்கெட் மீதுள்ள பக்தி தான் அவரது சாதனைகளுக்கு முக்கிய காரணம்,''என்றார்.
சாதனைக்கு அங்கீகார:
சச்சின் சாதனை படைத்த குவாலியர் ரூப் சிங் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ம.பி.,யில் உள்ள "சிட்டி சென்டர்-ஹுரவாலி' சாலைக்கு சச்சின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பாராட்டு:
சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்திலும் சச்சின் இதுபோன்று சாதிக்க வாழ்த்துக்கள்,'' என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து
உலக சாதனை படைத்த சச்சினுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சச்சினுக்கு முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத்தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் "நம்பர்-3'
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் (766 புள்ளி) மூன்று இடங்கள் முன்னேறி, "நம்பர்-3' இடம் பிடித்தார். இதற்கு குவாலியர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதித்ததே காரணம். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (809), இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
இந்தியா "நம்பர்-2':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (115), மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரூ. 35 லட்சம் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5253&Value3=A
வியாழன், பிப்ரவரி 25, 2010
சாதனை மன்னன் சச்சின்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த [25-02-2010], இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.
இதன்மூலம் சச்சின், ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில்
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு இடம்
சச்சின் (இந்தியா) 200* தென் ஆப்ரிக்கா 2010 குவாலியர்
காவன்ட்ரி (ஜிம்பாப்வே) 194* வங்கதேசம் 2009 புலவாயோ
அன்வர் (பாகிஸ்தான்) 194 இந்தியா 1997 சென்னை
* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 442 17598 46/93
ஜெயசூர்யா (இலங்கை) 444 13428 28/68
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 340 12731 29/76
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 166 13447 47/54
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 142 11859 39/51
* நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர் கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி இடம் ஆண்டு
சச்சின் 200* தென் ஆப்ரிக்கா குவாலியர் 2010
சச்சின் 186* நியூசிலாந்து ஐதராபாத் 1999
தோனி 183* இலங்கை ஜெய்ப்பூர் 2005
கங்குலி 183 இலங்கை டான்டன் 1999
* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் 442 17598 46/93
கங்குலி 308 11221 22/71
டிராவிட் 335 10644 12/81
மூன்றாவது முறையாக
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள் எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது.
இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:
ரன்கள் எதிரணி இடம்/ஆண்டு
414/7 இலங்கை ராஜ்கோட்/2009
413/5 பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின்/2007
401/3 தெ.ஆப்., குவாலியர்/2010
சாதனை ஜோடி:
நேற்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194 ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
5 ரன்கள்:
நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

நன்றி :
1. http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
2. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5239&Value3=A
3. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=202405
&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடரை%20வென்றது%20இந்தியா:%20வாழும்%20வரலாறு%20சச்சின்%20200%20நாட்-அவுட்
4. http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx
வெள்ளி, பிப்ரவரி 19, 2010
கோல்கட்டா டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சம் பரிசு
கோல்கட்டா டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும், டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சத்தை முதன் முறையாக பெற உள்ளது. கடந்த 2003ல் ரேங்கிங் அறிமுகமானதில் இருந்து, இவ்விருதை ஆஸ்திரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐ.சி.சி., ரேங்கிங்கில் "டாப்-5' டெஸ்ட் அணிகள்:
ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 124
2 தென் ஆப்ரிக்கா 120
3 ஆஸ்திரேலியா 116
4 இலங்கை 115
5 இங்கிலாந்து 107
டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இத்தொடரில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்த பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் அதிகபட்சம் சதம்/அரைசதம்
ஆம்லா (தெ.ஆ.,) 2 490 253* 3/0
சேவக் (இந்தியா) 2 290 165 2/0
சச்சின் (இந்தியா) 2 213 106 2/0
காலிஸ் (தெ.ஆ.,) 2 203 173 1/0
தோனி (இந்தியா) 2 163 132* 1/0
லட்சுமண் (இந்தியா) 1 143 143* 1/0
பீட்டர்சன் (தெ.ஆ.,) 1 121 100 1/0
ஸ்டைன் மிரட்டல்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடம்(11) பிடித்தார். இத்தொடரில் 3 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட் வி.கொ.ரன் சி.பந்துவீச்சு
ஸ்டைன் (தெ.ஆ., 2 11 223 7/51
ஹர்பஜன் (இந்தியா) 2 10 289 5/59
ஜாகிர் (இந்தியா) 2 7 218 4/90
ஹாரிஸ் (தெ.ஆ.,) 2 5 297 3/76
மார்கல் (தெ.ஆ.,) 2 4 238 2/115
மிஸ்ரா (இந்தியா) 2 4 288 3/78
* வி.கொ.ரன்- விட்டுக்கொடுத்த ரன்
** சி. பந்துவீச்சு- சிறந்த பந்துவீச்சு
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5175&Value3=A
செவ்வாய், பிப்ரவரி 16, 2010
திங்கள், பிப்ரவரி 15, 2010
பாதங்களை பாருங்கள்
என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் பெண்களுக்கென அப்படி என்ன தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம். பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதியுயர்ந்த செருப்புக்களை அணிவதாலும் நின்ற படி சமைக்கும் சமையல் அறைகளும் நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.
எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கு என்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. அழகிய பாதங்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் அளவிற்கு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாதப்பராமரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பது அவரவர் பயன்படுத்தும் செருப்புகள் தான்.
அண்மைக் காலமாக பெரும்பாலான பெண்கள் cut shoe, high – helad shoe என்று சொல்லப்படும் நாகரீக செருப்புக்கள் மற்றும் தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களிலேயே அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
நீங்களும் அவ்வாறே என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் shoe, high – helad shoe – க்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுங்கள். இவை கால் விரல்கள் தொர்த்த நிலையில் இருப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டுள்ளனவா என்றும் இவற்றைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லாதவாறும் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். குதிங் காலுக்கும், ஆர்ச் போன்ற வளைவைப் பெற்றிருக்கும் கால்களின் மையப் பகுதிக்கும் சரியான பக்க வலுவை (support) நீங்கள் வாங்கப் போகும் காலணி அல்லது
பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
1. மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு (corn, calluses).
2. பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள் (Brown Spots).
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
கால் பாதங்களுக்கு வலிமையூட்டும் சில பயிற்சிகள்
1. வெறுங்காலுடன், கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். அதன் பின்னர் ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை மேலேயும், கீழேயும் முறையே தூக்கி, கீழே இறக்கி பயிற்சி செய்யுங்கள். இது போல் குறைந்தது 50 தடவை செய்து வந்தால் சோர்வடைந்த கால்கள் புத்துணர்வு பெறும்.
2. உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலிமை பெற, வசதியான நிலையில் (தரையிலோ, நாற்காலியிலோ) அமர்நது கொள்ளுங்கள். விரல்களை ஒன்று சேர்த்து உள்ளங்கால்களை அகலமாக விரித்து பின்னர் பழைய நிலைக்கு கொண்டு வந்து மறுபடியும் விரித்து இவ்வாறாக தொடர்ந்து 30 முறை செய்து வந்தால் கால்கள் நல்ல பலம் பெறும்.
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
5. கால்களில் மென்மையைப் பராமரிக்கவும், பாத விரல்களில் வலிமையைப் பாதுகாக்கவும், விரும்புவோர், ஒருபென்சிலை தரையிலிருந்து எடுக்கும் பயிற்சியை பின்பற்றலாம். ஒவ்வொரு காலிலும் தனித் தனியாக இப்பயிற்சியை குறைந்தது பத்து தடவைகள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடைகாலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
காலணிகளில் கவனம்:
செருப்புக்களும் சில வேளைகளில் கால் பாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கால்களுக்கு செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, அவை கூர்மையான முனைகள் இல்லாதவாறிருக்க வேண்டும். ஏனெனில் கூரிய முனைகள் கொண்ட செருப்புகள், பாதங்களில் மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து காய்ப்புக்கள், மற்றும் எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். கால் பாதங்களின் அசைவிற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதங்கள் நுழைவதற்கு தகுந்த அளவு இடம் பற்றாமல் இருந்தால் அது கால்களைச் செருப்புக்களின் முனைப்பக்கம் நோக்கி நகரச் செய்து பெருந் தொந்தரவைத் தரும்.
இதோடு மட்டுமன்றி, கால் விரல்கள் மடங்கிப் போவதுடன் காய்ப்பு மற்றும் கால் விரல்களில் கோளாறுகளும் ஏற்படலாம். எனவே நீங்கள் வாங்கப் போகும் காலணி எதுவாக இருப்பினும் அதிக கவனமுடன் தேர்ந்தெடுப்பது நல்லது.
நன்றி : http://ayurvedham.com/tamil/self-help/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html
சனி, பிப்ரவரி 06, 2010
கவிதை
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.
நன்றி : http://www.pkp.blogspot.com
சனி, ஜனவரி 30, 2010
Manish Pandey Catch of The Century !!
தென் ஆப்ரிக்க அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ள வாரியத் தலைவர் அணிக்கு மணிஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியிலும் இவர் மிக விரைவில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
Visit this youtube : http://www.youtube.com/watch?v=TQAD_ygfS_g
Courtesy : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=4802
வெள்ளி, ஜனவரி 29, 2010
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி

மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் பத்ரிநாத், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன், மேற்குவங்கத்தின் விரிதிமன் சகா வாய்ப்பு பெற்றுள்ளனர். காயம் காரணமாக டிராவிட், யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அடுத்த மாதம் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் வரும் பிப். 6ம் தேதி நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் வரும் பிப்., 14ம் தேதி கோல்கட்டாவிலும் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று, மும்பையில் தேர்வு செய்யப்பட்டனர்.
மீண்டும் லட்சுமண்: சமீபத்திய வங்கதேச தொடரின் போது "மிடில்-ஆர்டர்' வீரர்களான டிராவிட் (தாடை), லட்சுமண் (இடது கை), யுவராஜ் சிங் (மணிக்கட்டு), ஸ்ரீசாந்த் காயம் அடைந்தனர். இதில் காயம் குணமடைந்த லட்சுமண், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
2 தமிழக வீரர்கள்: தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்குவங்க அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இதேபோல், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர, தமிழக வீரர்களான பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் 15பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கைப் ஏமாற்றம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைப், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ""தற்போது முதல் டெஸ்டில் விளையாடும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடும் வீரர்கள் தேர்வு, காயமடைந்துள்ள வீரர்களின் உடற்தகுதி "ரிப்போர்ட்டை' அடிப்படையாக கொண்டு அமையும். தோனியும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டு தான் கூடுதல் கீப்பராக சகாவை தேர்வு செய்துள்ளோம். உள்ளூர் தொடர்களில் மிதுன் சிறப்பாக பந்துவீசிய காரணத்தினால், அவரை தேர்வு செய்துள்ளோம்,'' என்றார்.
15 பேர் கொண்ட இந்திய அணி:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், லட்சுமண், முரளி விஜய், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, அபிமன்யூ மிதுன், விரிதிமன் சகா.
-----------------
ரோகித் கேப்டன்
வரும் பிப்., 2ம் தேதி நாக்பூரில் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடென்ட் லெவன் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் இடம் பிடிக்காத ரோகித் சர்மா, பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), மனீஷ் பாண்டே,அபினவ் முகுந்த், பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே, சேட்டிஸ்வர் புஜாரா, அபிஷேக் நாயர், பியுஸ் சாவ்லா, அஸ்வின், வினய் குமார், அபிமன்யூ மிதுன், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மன்பிரீத் கோனி.
-----------------
புதுமுகம்... அறிமுகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகும் இரண்டு இந்திய வீரர்கள்:
விரிதிமன் சகா: பெங்கால் வீரரான விரிதிமன் சகா (25 வயது), விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக (வலது கை), வலம் வருகிறார். இவர் பெங்கால், இந்தியா "ஏ', ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 24 முதல் தர போட்டி ( 1256 ரன், 65 கேட்ச், 3 ஸ்டெம்பிங்), 33 "ஏ' பிரிவு போட்டி (878 ரன், 32 கேட்ச், 7 ஸ்டெம்பிங்), 28 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் (419 ரன், 13 கேட்ச், 3 ஸ்டெம்பிங்) பங்கேற்றுள்ளார்.
அபிமன்யூ மிதுன்: கர்நாடகா வீரரான அபிமன்யூ மிதுன் (20 வயது), சிறந்த வேகப்பந்துவீச்சாளர். இவர், ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 9 முதல் தர போட்டி (75 ரன், 47 விக்.,), 5 "ஏ' பிரிவு போட்டி (6 ரன், 4 விக்.,), 3 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் தொடரில் 9 போட்டியில் பங்கேற்ற இவர், 47 விக்கெட் வீழ்த்தினார்.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4989&Value3=I
திங்கள், ஜனவரி 18, 2010
சச்சின் 13 ஆயிரம் ரன்....:
சச்சின் தனது சாதனை பயணத்தில் இன்னொரு மைல்கல்லை எட்டினார். நேற்று 30 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற என்ற சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர், ஏற்கனவே 17,394 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன் சதம்/அரைசதம் அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 163 13046 43/55 248*
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48 400*
பாண்டிங் (ஆஸி.,) 142 11859 39/51 257
டிராவிட் (இந்தியா) 138 11260 28/58 270
பார்டர்(ஆஸி.,) 156 11174 27/63 205
ஸ்டீவ் வாக்(ஆஸி.,) 168 10927 32/50 200
காலிஸ்(தெ.ஆப்.,) 135 10640 33/52 189*
கவாஸ்கர்(இந்தியா) 125 10122 34/45 236*
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4899&value3=I
செவ்வாய், ஜனவரி 12, 2010
சிந்தனை
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”
நன்றி : http://www.pkp.blogspot.com/
திங்கள், ஜனவரி 11, 2010
சாதனை நோக்கி : இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டி
அணிகள் போட்டி
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 120
இந்தியா-இலங்கை 120
இலங்கை-பாகிஸ்தான் 119
இந்தியா-பாகிஸ்தான் 118
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 118
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் 114
இந்தியா-ஆஸ்திரேலியா 103
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 101
10-01-2010, இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதின. இதன்மூலம் அதிக போட்டிகளில் மோதியுள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. வரும் 13ம் தேதி நடக்கவுள்ள முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதன்மூலம் கிரிக்கெட் அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் மோதிய அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றன.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4819&Value3=I
சனி, ஜனவரி 09, 2010
விர்ச்சுவல் மெமரி
ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.
நன்றி : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1015
திங்கள், ஜனவரி 04, 2010
வியாழன், டிசம்பர் 31, 2009
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.
நிறம்:
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
முக தோற்றம்:
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.
உடை அலங்காரம்:
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.
பேச்சு திறன்:
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
நன்றி : http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=243&id1=9
வியாழன், டிசம்பர் 17, 2009
புதன், டிசம்பர் 09, 2009
ஒரு நாள் போட்டிகளில் மாற்றம்? * 40 ஓவராக குறைப்பு
கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாயிட் உள்ளார்.
ஓவர்கள் குறைப்பு: தற்போது நடைமுறையில் உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர, "டுவென்டி-20' போட்டிகளை போல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
12 ஓவர்கள்: ஒரு நாள் போட்டிகளில் பவுலர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து, இரண்டு பவுலர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு பவுலர்களுக்கு தலா 10 ஓவர்களும், ஐந்தாவது பவுலர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும். இதன் மூலம் திறமையான பவுலர்களை அணியின் கேப்டன்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.,கிரிக்கெட் கமிட்டி எடுத்துள்ள இம்முடிவுகள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4510&Value3=A
செவ்வாய், டிசம்பர் 08, 2009
"நம்பர்-1" இடத்துக்கு முன்னேறி இந்திய அணி
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்த கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சூப்பர் கேப்டன்:
மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துக் காட்டியுள்ளார் தோனி. 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவரது தலைமையில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 2 சதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சேவக் அதிரடி:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஜொலித்தார் இந்திய துவக்க வீரர் சேவக். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரின் செயல்பாடும் சிறப்பானதாக அமைந்தது.
அனுபவ அசத்தல்:
இத்தொடரில் இடம் பெற்ற அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். காம்பிருக்குப் பதில் மும்பை டெஸ்டில் இடம் பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வேகம் மிரட்டல்:
பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கிலும் மிரட்டியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ஜாகிர், ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளித்தனர். ஹர்பஜன், ஓஜாவின் சுழற் பந்து வீச்சு பக்கபலமாக அமைந்தது. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இத்தொடரில் வெற்றியை எட்டிய இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.
இலங்கை சோகம்:
இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் வந்த இலங்கை அணிக்கு சோகமே மிஞ்சியது. தொடரையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமரவீரா சொதப்பினார்.
முரளி ஏமாற்றம்:
முரளிதரனை நம்பி வந்த இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. ஹெராத் (11 விக்.,) ஆறுதல் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர்களான வலகேதரா, தம்மிகா பிரசாத், குலசேகரா சோபிக்க தவறினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இலங்கை அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு:
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, நேற்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,"" டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை எட்டி மக்கள் மனதை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனி, சேவக் உள்ளிட்ட வீரர்களுக்கு எனது சார்பிலும் லோக்சபா சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்,''என்றார்.
நாக்பூரில் இந்திய அணி:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி மொகாலியில் நடக்கிறது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4507&Value3=I
இந்தியா “நம்பர்-1′: இலங்கையை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது.
ஜாகிர் 5 விக்.,:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே ஜாகிர் கான் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா 137 ரன்களுக்கு அவுட்டானார். பின் ஹெராத்(3), குலசேகராவை (19) வெளியேற்றிய ஜாகிர், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி கட்டத்தில் முரளிதரன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஜாகிர் கான் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய இவர், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹர்பஜன் சுழலில் முரளிதரன்(14) சிக்க, இந்திய ரசிகர்கள் <உற்சாகத்தில் மிதந்தனர். இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
முதலிடம்:
இன்று காலை ஆட்டம் துவங்கியதில் இருந்து இலங்கை அணி வெறும் 7.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதையடுத்து சுமார் 40 நிமிடங்களில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடந்த 1932ல் லார்ட்சில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் இந்தியா விளையாடியது. தற்போது 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று அசத்தியுள்ளது.
முதல் இன்னிங்சில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு:
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 393
இந்தியா 726/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 54(144)
தில்ஷன் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 16(27)
சங்ககரா (கே)தோனி(ப)ஜாகிர் 137(261)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)ஜாகிர் 12(24)
சமரவீரா(கே)லட்சுமண்(ப)ஜாகிர் 0(13)
மாத்யூஸ்(கே)தோனி(ப)ஓஜா 5(8)
பிரசன்னா எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 32(42)
குலசேகரா (கே)லட்சுமண்(ப)ஜாகிர் 19(68)
ஹெராத்(கே)ஓஜா(ப)ஜாகிர் 3(10)
முரளிதரன்(கே)தோனி(ப)ஹர்பஜன் 14(9)
வலகேதரா-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 17
மொத்தம் (100.4 ஓவரில் ஆல் அவுட்) 309
விக்கெட் வீழ்ச்சி: 1-29(தில்ஷன்), 2-119(பரணவிதனா), 3-135(ஜெயவர்தனா), 4-137(சமரவீரா), 5-144(மாத்யூஸ்), 6-208(பிரசன்னா), 7-278(சங்ககரா). 8-282(ஹெராத்), 9-307(குலசேகரா), 10-309(முரளிதரன்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 34.4-5-80-2, ஓஜா 23-4-84-2, ஜாகிர் 21-5-72-5, ஸ்ரீசாந்த் 13-4-36-1, சேவக் 9-2-24-0.
——
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
—
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
—
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
—
இது தான் சிறந்த அணி: சச்சின்
முதலிடத்தை பெறுவதற்கு நான் மட்டுமல்ல நாடே காத்திருந்தது. இப்பெருமையை பெறுவதற்கு கடந்த 18 மாதங்களாக வீரர்கள் கடுமையாக உழைத்தனர். கிறிஸ்டன் தவிர நீக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வெங்கடேஷ் பிரசாத்(பவுலிங்), ராபின் சிங்(பீல்டிங்) ஆகியோருக்கும் பங்கு உண்டு. இந்திய சார்பில் இதுவரை பங்கேற்ற அணிகளில் தோனி தலைமையிலான அணி தான் மிகச் சிறந்தது. துவக்க வீரர் முதல் 7வது வீரர் வரை சிறப்பாக பேட் செய்கிறார். அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.
—
மறுபரிசீலனை முறை: சங்ககரா
மும்பை டெஸ்டில் அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இரண்டு முறை தில்ஷன் அவுட்டானார். இது குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,""சில தவறான முடிவுகளால் 500 ரன் வாய்ப்பு, நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவியது. இதற்கு அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை பின்பற்றப்படாததே காரணம்,'' என்றார். இதே கருத்தை வலியுறுத்திய முரளிதரன் கூறுகையில்,""ஐ.சி.சி., விரைவாக விழித்துக் கொண்டு, அனைத்து போட்டிகளிலும் அம்பயர் மறுபரிசீலனை முறையை அமல்படுத்த வேண்டும்,''என்றார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையி<லு<ம் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயன் அடைந்தால் நல்ல முறை என்பர். பாதிக்கப்பட்டால் பழித்துக் கூறுவர்,''என்றார்.
—
ஹர்பஜன் "50'
நேற்று முரளிதரனை வெளியேற்றிய ஹர்பஜன், டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக 50வது விக்கெட்டை பெற்ற இரண்டாவது இந்திய வீரரானார். முன்னதாக கும்ளே 74 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
—
எட்டாவது முறை
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எட்டாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
—
இலங்கை ஏமாற்றம்
இதுவரை ஏழு முறை (1982/83, 86/87, 90/91, 93/94, 97/98, 2005/06, 2009/10) இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 17 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 10 போட்டியில் வெற்றி கண்டது. ஏழு போட்டி "டிராவில்' முடிந்தது. இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த இலங்கை அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
* இந்தியா, இலங்கை அணிகள் இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் இந்திய அணி ஐந்து முறை (1986/87, 90/91, 93/94, 2005/06, 09/10) தொடரை வென்றது. இரண்டு முறை தொடர் டிராவில் முடிந்தது.
—
சேவக் அதிரடி:
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 491 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் 190 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
இந்தியா:
வீரர் போட்டி சதம்/அரைசதம் ரன்கள்
சேவக் 3 2/1 491
டிராவிட் 3 2/1 433
காம்பிர் 2 2/0 282
தோனி 3 2/0 214
சச்சின் 3 1/1 197
இலங்கை:
ஜெயவர்தனா 3 1/0 373
பிரசன்னா 3 1/0 297
தில்ஷன் 3 2/0 248
சங்ககரா 3 1/0 241
பரனவிதனா 3 0/2 200
—
ஹர்பஜன் துல்லியம்
இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி அதிகபட்சமாக 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
இந்தியா
வீரர் போட்டி விக்கெட்
ஹர்பஜன் 3 13
ஜாகிர் 3 10
ஓஜா 2 9
ஸ்ரீசாந்த் 2 8
இலங்கை:
ஹெராத் 3 11
முரளிதரன் 3 9
வெலகேதரா 3 6
நன்றி : தினமலர்
வெள்ளி, டிசம்பர் 04, 2009
சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...
* டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் (334, 304), லாரா (400*, 375), சேவக் (319, 309) மட்டுமே தலா இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளனர். சேவக் இன்றைய ஆட்டத்தில் 16 ரன் எடுத்தால், 3 முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.
* டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதம், 6வது இரட்டை சதம் விளாசிய சேவக் 6000 ரன்களையும் கடந்தார்.
* 6000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் வரிசையில் சேவக் 3வது இடம் (123 இன்னிங்ஸ்) பிடித்தார். கவாஸ்கர் 117 இன்னிங்சிலும், சச்சின் 120 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
* இலங்கைக்கு எதிராக சேவக் அடித்த 2வது இரட்டை சதம் இது. கடந்த ஆண்டு காலேவில் நடந்த டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 201 ரன் விளாசியிருந்தார்.
* இந்தியா ஒரே நாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் (443/1) இது அமைந்தது. கான்பூர் டெஸ்டில் 417 ரன் எடுத்த சாதனை நேற்று தகர்ந்தது.
* அதிவேக இரட்டை சதங்களில் 2வது இடம் (168 பந்து)
நன்றி : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "





















