வெள்ளி, பிப்ரவரி 26, 2010
பிராட்மேனை மிஞ்சிய சச்சின்: வீரர்கள் புகழாரம்
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளையாடியது இவரது உடலுறுதியை காட்டியது.
கிரிக்கெட் கடவுள்:
இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரம்மிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப்பிட்டுள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது.
சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:
கவாஸ்கர்(இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.
வெங்கசர்க்கார்(இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. தனது விக்கெட்டை வீணாக இழக்க மாட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் மிகப் பெரும் இலக்குகளை எளிதாக எட்டி விடுவார்.
அஜித் வடேகர்(இந்தியா): சச்சின் சாதனைக்காக விளையாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
நாசர் ஹூசைன்(இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றினார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.
இம்ரான் கான்(பாகிஸ்தான்): ஒரு நாள் போட்டிகளில் சேவக் தான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், இச்சாதனையை சச்சின் படைத்துள்ளார். இவர் நிறைய சாதனைகள் படைத்திருக்கலாம். அதில், 147 பந்தில் 200 ரன்கள் என்பது மிகவும் "ஸ்பெஷல்'. இதனை ஒரு அற்புதமான வீரர் நிகழ்த்திய அதிசயமாக கருதுகிறேன்.
சயீத் அன்வர்(பாக்.,): கடந்த 1997ல் சென்னையில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். தற்போது 200 ரன்கள் விளாசி சாதித்துள்ள சச்சின், தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அடையாளம் காட்டியுள்ளார்.
இதுவே ஆசை:
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறுகையில்,""நான் சாதனைக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. காலப் போக்கில் சாதனைகள், தானாகவே வருகின்றன. குவாலியர் போட்டியில் 175 ரன்களை எட்டிய போது, 200 ரன்களை எடுக்கலாம் என மனதில் தோன்றியது. சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்,''என்றார்.
அஞ்சலி பெருமிதம்:
சச்சின் சாதனையை அவரது குடும்பத்தினர் முழுமையாக காண முடியவில்லையாம். பள்ளி தேர்வு நடப்பதால் மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோர் மாலை முழுவதும் படித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் தான் மனைவி அஞ்சலி அதிக கவனம் செலுத்தியுள்ளார். அஞ்சலி கூறுகையில்,""இரட்டை சதம் அடித்த விஷயத்தை "போன்' மூலம் கூறி இன்ப அதிர்ச்சி தந்தார் சச்சின். கிரிக்கெட் மீதுள்ள பக்தி தான் அவரது சாதனைகளுக்கு முக்கிய காரணம்,''என்றார்.
சாதனைக்கு அங்கீகார:
சச்சின் சாதனை படைத்த குவாலியர் ரூப் சிங் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ம.பி.,யில் உள்ள "சிட்டி சென்டர்-ஹுரவாலி' சாலைக்கு சச்சின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பாராட்டு:
சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்திலும் சச்சின் இதுபோன்று சாதிக்க வாழ்த்துக்கள்,'' என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து
உலக சாதனை படைத்த சச்சினுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சச்சினுக்கு முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத்தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் "நம்பர்-3'
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் (766 புள்ளி) மூன்று இடங்கள் முன்னேறி, "நம்பர்-3' இடம் பிடித்தார். இதற்கு குவாலியர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதித்ததே காரணம். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (809), இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
இந்தியா "நம்பர்-2':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (115), மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரூ. 35 லட்சம் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5253&Value3=A
வியாழன், பிப்ரவரி 25, 2010
சாதனை மன்னன் சச்சின்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த [25-02-2010], இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.
இதன்மூலம் சச்சின், ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில்
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு இடம்
சச்சின் (இந்தியா) 200* தென் ஆப்ரிக்கா 2010 குவாலியர்
காவன்ட்ரி (ஜிம்பாப்வே) 194* வங்கதேசம் 2009 புலவாயோ
அன்வர் (பாகிஸ்தான்) 194 இந்தியா 1997 சென்னை
* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 442 17598 46/93
ஜெயசூர்யா (இலங்கை) 444 13428 28/68
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 340 12731 29/76
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 166 13447 47/54
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 142 11859 39/51
* நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர் கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி இடம் ஆண்டு
சச்சின் 200* தென் ஆப்ரிக்கா குவாலியர் 2010
சச்சின் 186* நியூசிலாந்து ஐதராபாத் 1999
தோனி 183* இலங்கை ஜெய்ப்பூர் 2005
கங்குலி 183 இலங்கை டான்டன் 1999
* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் 442 17598 46/93
கங்குலி 308 11221 22/71
டிராவிட் 335 10644 12/81
மூன்றாவது முறையாக
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள் எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது.
இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:
ரன்கள் எதிரணி இடம்/ஆண்டு
414/7 இலங்கை ராஜ்கோட்/2009
413/5 பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின்/2007
401/3 தெ.ஆப்., குவாலியர்/2010
சாதனை ஜோடி:
நேற்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194 ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
5 ரன்கள்:
நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

நன்றி :
1. http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
2. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5239&Value3=A
3. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=202405
&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடரை%20வென்றது%20இந்தியா:%20வாழும்%20வரலாறு%20சச்சின்%20200%20நாட்-அவுட்
4. http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx
வெள்ளி, பிப்ரவரி 19, 2010
கோல்கட்டா டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சம் பரிசு
கோல்கட்டா டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும், டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சத்தை முதன் முறையாக பெற உள்ளது. கடந்த 2003ல் ரேங்கிங் அறிமுகமானதில் இருந்து, இவ்விருதை ஆஸ்திரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐ.சி.சி., ரேங்கிங்கில் "டாப்-5' டெஸ்ட் அணிகள்:
ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 124
2 தென் ஆப்ரிக்கா 120
3 ஆஸ்திரேலியா 116
4 இலங்கை 115
5 இங்கிலாந்து 107
டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இத்தொடரில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்த பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் அதிகபட்சம் சதம்/அரைசதம்
ஆம்லா (தெ.ஆ.,) 2 490 253* 3/0
சேவக் (இந்தியா) 2 290 165 2/0
சச்சின் (இந்தியா) 2 213 106 2/0
காலிஸ் (தெ.ஆ.,) 2 203 173 1/0
தோனி (இந்தியா) 2 163 132* 1/0
லட்சுமண் (இந்தியா) 1 143 143* 1/0
பீட்டர்சன் (தெ.ஆ.,) 1 121 100 1/0
ஸ்டைன் மிரட்டல்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடம்(11) பிடித்தார். இத்தொடரில் 3 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட் வி.கொ.ரன் சி.பந்துவீச்சு
ஸ்டைன் (தெ.ஆ., 2 11 223 7/51
ஹர்பஜன் (இந்தியா) 2 10 289 5/59
ஜாகிர் (இந்தியா) 2 7 218 4/90
ஹாரிஸ் (தெ.ஆ.,) 2 5 297 3/76
மார்கல் (தெ.ஆ.,) 2 4 238 2/115
மிஸ்ரா (இந்தியா) 2 4 288 3/78
* வி.கொ.ரன்- விட்டுக்கொடுத்த ரன்
** சி. பந்துவீச்சு- சிறந்த பந்துவீச்சு
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5175&Value3=A
செவ்வாய், பிப்ரவரி 16, 2010
திங்கள், பிப்ரவரி 15, 2010
பாதங்களை பாருங்கள்
என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் பெண்களுக்கென அப்படி என்ன தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம். பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதியுயர்ந்த செருப்புக்களை அணிவதாலும் நின்ற படி சமைக்கும் சமையல் அறைகளும் நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.
எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கு என்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. அழகிய பாதங்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் அளவிற்கு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாதப்பராமரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பது அவரவர் பயன்படுத்தும் செருப்புகள் தான்.
அண்மைக் காலமாக பெரும்பாலான பெண்கள் cut shoe, high – helad shoe என்று சொல்லப்படும் நாகரீக செருப்புக்கள் மற்றும் தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களிலேயே அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
நீங்களும் அவ்வாறே என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் shoe, high – helad shoe – க்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுங்கள். இவை கால் விரல்கள் தொர்த்த நிலையில் இருப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டுள்ளனவா என்றும் இவற்றைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லாதவாறும் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். குதிங் காலுக்கும், ஆர்ச் போன்ற வளைவைப் பெற்றிருக்கும் கால்களின் மையப் பகுதிக்கும் சரியான பக்க வலுவை (support) நீங்கள் வாங்கப் போகும் காலணி அல்லது
பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
1. மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு (corn, calluses).
2. பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள் (Brown Spots).
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
கால் பாதங்களுக்கு வலிமையூட்டும் சில பயிற்சிகள்
1. வெறுங்காலுடன், கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். அதன் பின்னர் ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை மேலேயும், கீழேயும் முறையே தூக்கி, கீழே இறக்கி பயிற்சி செய்யுங்கள். இது போல் குறைந்தது 50 தடவை செய்து வந்தால் சோர்வடைந்த கால்கள் புத்துணர்வு பெறும்.
2. உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலிமை பெற, வசதியான நிலையில் (தரையிலோ, நாற்காலியிலோ) அமர்நது கொள்ளுங்கள். விரல்களை ஒன்று சேர்த்து உள்ளங்கால்களை அகலமாக விரித்து பின்னர் பழைய நிலைக்கு கொண்டு வந்து மறுபடியும் விரித்து இவ்வாறாக தொடர்ந்து 30 முறை செய்து வந்தால் கால்கள் நல்ல பலம் பெறும்.
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
5. கால்களில் மென்மையைப் பராமரிக்கவும், பாத விரல்களில் வலிமையைப் பாதுகாக்கவும், விரும்புவோர், ஒருபென்சிலை தரையிலிருந்து எடுக்கும் பயிற்சியை பின்பற்றலாம். ஒவ்வொரு காலிலும் தனித் தனியாக இப்பயிற்சியை குறைந்தது பத்து தடவைகள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடைகாலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
காலணிகளில் கவனம்:
செருப்புக்களும் சில வேளைகளில் கால் பாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கால்களுக்கு செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, அவை கூர்மையான முனைகள் இல்லாதவாறிருக்க வேண்டும். ஏனெனில் கூரிய முனைகள் கொண்ட செருப்புகள், பாதங்களில் மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து காய்ப்புக்கள், மற்றும் எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். கால் பாதங்களின் அசைவிற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதங்கள் நுழைவதற்கு தகுந்த அளவு இடம் பற்றாமல் இருந்தால் அது கால்களைச் செருப்புக்களின் முனைப்பக்கம் நோக்கி நகரச் செய்து பெருந் தொந்தரவைத் தரும்.
இதோடு மட்டுமன்றி, கால் விரல்கள் மடங்கிப் போவதுடன் காய்ப்பு மற்றும் கால் விரல்களில் கோளாறுகளும் ஏற்படலாம். எனவே நீங்கள் வாங்கப் போகும் காலணி எதுவாக இருப்பினும் அதிக கவனமுடன் தேர்ந்தெடுப்பது நல்லது.
நன்றி : http://ayurvedham.com/tamil/self-help/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html
சனி, பிப்ரவரி 06, 2010
கவிதை
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.
நன்றி : http://www.pkp.blogspot.com
சனி, ஜனவரி 30, 2010
Manish Pandey Catch of The Century !!
தென் ஆப்ரிக்க அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ள வாரியத் தலைவர் அணிக்கு மணிஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியிலும் இவர் மிக விரைவில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
Visit this youtube : http://www.youtube.com/watch?v=TQAD_ygfS_g
Courtesy : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=4802
வெள்ளி, ஜனவரி 29, 2010
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி

மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் பத்ரிநாத், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன், மேற்குவங்கத்தின் விரிதிமன் சகா வாய்ப்பு பெற்றுள்ளனர். காயம் காரணமாக டிராவிட், யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அடுத்த மாதம் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் வரும் பிப். 6ம் தேதி நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் வரும் பிப்., 14ம் தேதி கோல்கட்டாவிலும் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று, மும்பையில் தேர்வு செய்யப்பட்டனர்.
மீண்டும் லட்சுமண்: சமீபத்திய வங்கதேச தொடரின் போது "மிடில்-ஆர்டர்' வீரர்களான டிராவிட் (தாடை), லட்சுமண் (இடது கை), யுவராஜ் சிங் (மணிக்கட்டு), ஸ்ரீசாந்த் காயம் அடைந்தனர். இதில் காயம் குணமடைந்த லட்சுமண், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
2 தமிழக வீரர்கள்: தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்குவங்க அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இதேபோல், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர, தமிழக வீரர்களான பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் 15பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கைப் ஏமாற்றம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைப், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ""தற்போது முதல் டெஸ்டில் விளையாடும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடும் வீரர்கள் தேர்வு, காயமடைந்துள்ள வீரர்களின் உடற்தகுதி "ரிப்போர்ட்டை' அடிப்படையாக கொண்டு அமையும். தோனியும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டு தான் கூடுதல் கீப்பராக சகாவை தேர்வு செய்துள்ளோம். உள்ளூர் தொடர்களில் மிதுன் சிறப்பாக பந்துவீசிய காரணத்தினால், அவரை தேர்வு செய்துள்ளோம்,'' என்றார்.
15 பேர் கொண்ட இந்திய அணி:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், லட்சுமண், முரளி விஜய், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, அபிமன்யூ மிதுன், விரிதிமன் சகா.
-----------------
ரோகித் கேப்டன்
வரும் பிப்., 2ம் தேதி நாக்பூரில் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடென்ட் லெவன் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் இடம் பிடிக்காத ரோகித் சர்மா, பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), மனீஷ் பாண்டே,அபினவ் முகுந்த், பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே, சேட்டிஸ்வர் புஜாரா, அபிஷேக் நாயர், பியுஸ் சாவ்லா, அஸ்வின், வினய் குமார், அபிமன்யூ மிதுன், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மன்பிரீத் கோனி.
-----------------
புதுமுகம்... அறிமுகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகும் இரண்டு இந்திய வீரர்கள்:
விரிதிமன் சகா: பெங்கால் வீரரான விரிதிமன் சகா (25 வயது), விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக (வலது கை), வலம் வருகிறார். இவர் பெங்கால், இந்தியா "ஏ', ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 24 முதல் தர போட்டி ( 1256 ரன், 65 கேட்ச், 3 ஸ்டெம்பிங்), 33 "ஏ' பிரிவு போட்டி (878 ரன், 32 கேட்ச், 7 ஸ்டெம்பிங்), 28 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் (419 ரன், 13 கேட்ச், 3 ஸ்டெம்பிங்) பங்கேற்றுள்ளார்.
அபிமன்யூ மிதுன்: கர்நாடகா வீரரான அபிமன்யூ மிதுன் (20 வயது), சிறந்த வேகப்பந்துவீச்சாளர். இவர், ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 9 முதல் தர போட்டி (75 ரன், 47 விக்.,), 5 "ஏ' பிரிவு போட்டி (6 ரன், 4 விக்.,), 3 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் தொடரில் 9 போட்டியில் பங்கேற்ற இவர், 47 விக்கெட் வீழ்த்தினார்.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4989&Value3=I
திங்கள், ஜனவரி 18, 2010
சச்சின் 13 ஆயிரம் ரன்....:
சச்சின் தனது சாதனை பயணத்தில் இன்னொரு மைல்கல்லை எட்டினார். நேற்று 30 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற என்ற சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர், ஏற்கனவே 17,394 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன் சதம்/அரைசதம் அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 163 13046 43/55 248*
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48 400*
பாண்டிங் (ஆஸி.,) 142 11859 39/51 257
டிராவிட் (இந்தியா) 138 11260 28/58 270
பார்டர்(ஆஸி.,) 156 11174 27/63 205
ஸ்டீவ் வாக்(ஆஸி.,) 168 10927 32/50 200
காலிஸ்(தெ.ஆப்.,) 135 10640 33/52 189*
கவாஸ்கர்(இந்தியா) 125 10122 34/45 236*
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4899&value3=I
செவ்வாய், ஜனவரி 12, 2010
சிந்தனை
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”
நன்றி : http://www.pkp.blogspot.com/
திங்கள், ஜனவரி 11, 2010
சாதனை நோக்கி : இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டி
அணிகள் போட்டி
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 120
இந்தியா-இலங்கை 120
இலங்கை-பாகிஸ்தான் 119
இந்தியா-பாகிஸ்தான் 118
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 118
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் 114
இந்தியா-ஆஸ்திரேலியா 103
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 101
10-01-2010, இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதின. இதன்மூலம் அதிக போட்டிகளில் மோதியுள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. வரும் 13ம் தேதி நடக்கவுள்ள முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதன்மூலம் கிரிக்கெட் அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் மோதிய அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றன.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4819&Value3=I
சனி, ஜனவரி 09, 2010
விர்ச்சுவல் மெமரி
ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.
நன்றி : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1015
திங்கள், ஜனவரி 04, 2010
வியாழன், டிசம்பர் 31, 2009
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.
நிறம்:
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
முக தோற்றம்:
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.
உடை அலங்காரம்:
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.
பேச்சு திறன்:
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
நன்றி : http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=243&id1=9
வியாழன், டிசம்பர் 17, 2009
புதன், டிசம்பர் 09, 2009
ஒரு நாள் போட்டிகளில் மாற்றம்? * 40 ஓவராக குறைப்பு
கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாயிட் உள்ளார்.
ஓவர்கள் குறைப்பு: தற்போது நடைமுறையில் உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர, "டுவென்டி-20' போட்டிகளை போல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
12 ஓவர்கள்: ஒரு நாள் போட்டிகளில் பவுலர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து, இரண்டு பவுலர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு பவுலர்களுக்கு தலா 10 ஓவர்களும், ஐந்தாவது பவுலர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும். இதன் மூலம் திறமையான பவுலர்களை அணியின் கேப்டன்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.,கிரிக்கெட் கமிட்டி எடுத்துள்ள இம்முடிவுகள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4510&Value3=A
செவ்வாய், டிசம்பர் 08, 2009
"நம்பர்-1" இடத்துக்கு முன்னேறி இந்திய அணி
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்த கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சூப்பர் கேப்டன்:
மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துக் காட்டியுள்ளார் தோனி. 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவரது தலைமையில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 2 சதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சேவக் அதிரடி:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஜொலித்தார் இந்திய துவக்க வீரர் சேவக். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரின் செயல்பாடும் சிறப்பானதாக அமைந்தது.
அனுபவ அசத்தல்:
இத்தொடரில் இடம் பெற்ற அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். காம்பிருக்குப் பதில் மும்பை டெஸ்டில் இடம் பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வேகம் மிரட்டல்:
பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கிலும் மிரட்டியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ஜாகிர், ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளித்தனர். ஹர்பஜன், ஓஜாவின் சுழற் பந்து வீச்சு பக்கபலமாக அமைந்தது. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இத்தொடரில் வெற்றியை எட்டிய இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.
இலங்கை சோகம்:
இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் வந்த இலங்கை அணிக்கு சோகமே மிஞ்சியது. தொடரையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமரவீரா சொதப்பினார்.
முரளி ஏமாற்றம்:
முரளிதரனை நம்பி வந்த இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. ஹெராத் (11 விக்.,) ஆறுதல் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர்களான வலகேதரா, தம்மிகா பிரசாத், குலசேகரா சோபிக்க தவறினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இலங்கை அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு:
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, நேற்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,"" டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை எட்டி மக்கள் மனதை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனி, சேவக் உள்ளிட்ட வீரர்களுக்கு எனது சார்பிலும் லோக்சபா சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்,''என்றார்.
நாக்பூரில் இந்திய அணி:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி மொகாலியில் நடக்கிறது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4507&Value3=I
இந்தியா “நம்பர்-1′: இலங்கையை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது.
ஜாகிர் 5 விக்.,:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே ஜாகிர் கான் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா 137 ரன்களுக்கு அவுட்டானார். பின் ஹெராத்(3), குலசேகராவை (19) வெளியேற்றிய ஜாகிர், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி கட்டத்தில் முரளிதரன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஜாகிர் கான் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய இவர், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹர்பஜன் சுழலில் முரளிதரன்(14) சிக்க, இந்திய ரசிகர்கள் <உற்சாகத்தில் மிதந்தனர். இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
முதலிடம்:
இன்று காலை ஆட்டம் துவங்கியதில் இருந்து இலங்கை அணி வெறும் 7.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதையடுத்து சுமார் 40 நிமிடங்களில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடந்த 1932ல் லார்ட்சில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் இந்தியா விளையாடியது. தற்போது 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று அசத்தியுள்ளது.
முதல் இன்னிங்சில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு:
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 393
இந்தியா 726/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 54(144)
தில்ஷன் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 16(27)
சங்ககரா (கே)தோனி(ப)ஜாகிர் 137(261)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)ஜாகிர் 12(24)
சமரவீரா(கே)லட்சுமண்(ப)ஜாகிர் 0(13)
மாத்யூஸ்(கே)தோனி(ப)ஓஜா 5(8)
பிரசன்னா எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 32(42)
குலசேகரா (கே)லட்சுமண்(ப)ஜாகிர் 19(68)
ஹெராத்(கே)ஓஜா(ப)ஜாகிர் 3(10)
முரளிதரன்(கே)தோனி(ப)ஹர்பஜன் 14(9)
வலகேதரா-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 17
மொத்தம் (100.4 ஓவரில் ஆல் அவுட்) 309
விக்கெட் வீழ்ச்சி: 1-29(தில்ஷன்), 2-119(பரணவிதனா), 3-135(ஜெயவர்தனா), 4-137(சமரவீரா), 5-144(மாத்யூஸ்), 6-208(பிரசன்னா), 7-278(சங்ககரா). 8-282(ஹெராத்), 9-307(குலசேகரா), 10-309(முரளிதரன்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 34.4-5-80-2, ஓஜா 23-4-84-2, ஜாகிர் 21-5-72-5, ஸ்ரீசாந்த் 13-4-36-1, சேவக் 9-2-24-0.
——
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
—
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
—
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
—
இது தான் சிறந்த அணி: சச்சின்
முதலிடத்தை பெறுவதற்கு நான் மட்டுமல்ல நாடே காத்திருந்தது. இப்பெருமையை பெறுவதற்கு கடந்த 18 மாதங்களாக வீரர்கள் கடுமையாக உழைத்தனர். கிறிஸ்டன் தவிர நீக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வெங்கடேஷ் பிரசாத்(பவுலிங்), ராபின் சிங்(பீல்டிங்) ஆகியோருக்கும் பங்கு உண்டு. இந்திய சார்பில் இதுவரை பங்கேற்ற அணிகளில் தோனி தலைமையிலான அணி தான் மிகச் சிறந்தது. துவக்க வீரர் முதல் 7வது வீரர் வரை சிறப்பாக பேட் செய்கிறார். அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.
—
மறுபரிசீலனை முறை: சங்ககரா
மும்பை டெஸ்டில் அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இரண்டு முறை தில்ஷன் அவுட்டானார். இது குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,""சில தவறான முடிவுகளால் 500 ரன் வாய்ப்பு, நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவியது. இதற்கு அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை பின்பற்றப்படாததே காரணம்,'' என்றார். இதே கருத்தை வலியுறுத்திய முரளிதரன் கூறுகையில்,""ஐ.சி.சி., விரைவாக விழித்துக் கொண்டு, அனைத்து போட்டிகளிலும் அம்பயர் மறுபரிசீலனை முறையை அமல்படுத்த வேண்டும்,''என்றார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையி<லு<ம் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயன் அடைந்தால் நல்ல முறை என்பர். பாதிக்கப்பட்டால் பழித்துக் கூறுவர்,''என்றார்.
—
ஹர்பஜன் "50'
நேற்று முரளிதரனை வெளியேற்றிய ஹர்பஜன், டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக 50வது விக்கெட்டை பெற்ற இரண்டாவது இந்திய வீரரானார். முன்னதாக கும்ளே 74 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
—
எட்டாவது முறை
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எட்டாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
—
இலங்கை ஏமாற்றம்
இதுவரை ஏழு முறை (1982/83, 86/87, 90/91, 93/94, 97/98, 2005/06, 2009/10) இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 17 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 10 போட்டியில் வெற்றி கண்டது. ஏழு போட்டி "டிராவில்' முடிந்தது. இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த இலங்கை அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
* இந்தியா, இலங்கை அணிகள் இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் இந்திய அணி ஐந்து முறை (1986/87, 90/91, 93/94, 2005/06, 09/10) தொடரை வென்றது. இரண்டு முறை தொடர் டிராவில் முடிந்தது.
—
சேவக் அதிரடி:
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 491 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் 190 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
இந்தியா:
வீரர் போட்டி சதம்/அரைசதம் ரன்கள்
சேவக் 3 2/1 491
டிராவிட் 3 2/1 433
காம்பிர் 2 2/0 282
தோனி 3 2/0 214
சச்சின் 3 1/1 197
இலங்கை:
ஜெயவர்தனா 3 1/0 373
பிரசன்னா 3 1/0 297
தில்ஷன் 3 2/0 248
சங்ககரா 3 1/0 241
பரனவிதனா 3 0/2 200
—
ஹர்பஜன் துல்லியம்
இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி அதிகபட்சமாக 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
இந்தியா
வீரர் போட்டி விக்கெட்
ஹர்பஜன் 3 13
ஜாகிர் 3 10
ஓஜா 2 9
ஸ்ரீசாந்த் 2 8
இலங்கை:
ஹெராத் 3 11
முரளிதரன் 3 9
வெலகேதரா 3 6
நன்றி : தினமலர்
வெள்ளி, டிசம்பர் 04, 2009
சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...
* டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் (334, 304), லாரா (400*, 375), சேவக் (319, 309) மட்டுமே தலா இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளனர். சேவக் இன்றைய ஆட்டத்தில் 16 ரன் எடுத்தால், 3 முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.
* டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதம், 6வது இரட்டை சதம் விளாசிய சேவக் 6000 ரன்களையும் கடந்தார்.
* 6000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் வரிசையில் சேவக் 3வது இடம் (123 இன்னிங்ஸ்) பிடித்தார். கவாஸ்கர் 117 இன்னிங்சிலும், சச்சின் 120 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
* இலங்கைக்கு எதிராக சேவக் அடித்த 2வது இரட்டை சதம் இது. கடந்த ஆண்டு காலேவில் நடந்த டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 201 ரன் விளாசியிருந்தார்.
* இந்தியா ஒரே நாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் (443/1) இது அமைந்தது. கான்பூர் டெஸ்டில் 417 ரன் எடுத்த சாதனை நேற்று தகர்ந்தது.
* அதிவேக இரட்டை சதங்களில் 2வது இடம் (168 பந்து)
நன்றி : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
திங்கள், நவம்பர் 30, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "




