செவ்வாய், ஜூன் 30, 2009

நண்பன்

நாய்க்குப் பேரு முத்து மாலையாம்
நாய்க்கு நெய் செரிக்காது
நாய்க்கு வேலையில்லை, ஆனால் நிக்க நேரமில்லை
நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ...
ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்
கல்லைக் கண்டா நாயக் காணோம் ; நாயக் கண்டா கல்லைக் காணோம்
நாய் கையில கிடைச்ச தேங்காய் மாதிரி - தானும் திங்காது , அடுத்தவனையும் திங்க விடாது
நாய் வால நிமிர்த்த முடியாது
நாயக் கொஞ்சினா வாய நக்கும்
நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்
நாய் சகவாசம் சேலையக் கிழிக்கும்
குரைக்கிற நாய் கடிக்காது
நாய் நக்கி சமுத்திரம் வத்திப் போயிடுமா ?
நாய் விற்ற காசு குறைக்காது
நாய் குரைச்சு விடியுமா? கோழி கூவி விடியுமா ?
நாய் கேட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலாம்
சூரியனப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரி
உங்களுக்குத் தெரிந்த , இதில் விட்டுப் போன பழமொழிகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

வியாழன், ஜூன் 18, 2009

மே.இ. தீவுகளுடனான ஒரு தின தொடர்: இந்திய அணி அறிவிப்பு

புது தில்லி, ஜூன் 17: மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒரு தின கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும், சுரேஷ் ரெய்னா, வீரேந்திர சேவாக் ஆகியோர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை எனவும் கிரிக்கெட் வாரியச் செயலர் என்.சீனிவாசன் புதன்கிழமை அறிவித்தார்.


4 ஆண்டுகளுக்குப் பின் தேசிய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் நாயர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


20-20 உலகக் கோப்பையில் விளையாடிய இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப் பட்டார்.


இந்திய அணி இங்கிலாந்திலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு வியாழக்கிழமை செல்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு தின ஆட்டங்கள் ஜமைக்காவில் ஜூன் 26 மற்றும் 28-ம் தேதிகளிலும், செயின்ட் லூசியாவில் ஜூலை 3 மற்றும் 5-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன.


அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணைக் கேப்டன்), கெüதம் கம்பீர், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆஷிஷ் நெஹ்ரா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

source : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=75350&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=

செவ்வாய், ஜூன் 16, 2009

3G

சென்னையில் பிறந்து வளர்ந்த நீங்கள் ஒரு அலுவல் விஷயமாக கோவைக்கு முதல் முறையாக செல்கிறீர்கள்.
வேலைக்கு பின் மாலை ஆர்.எஸ் புரத்தில் ஷாப்பிங் முடித்து, பக்கத்தில் எந்த நல்ல உணவகம் இருக்கும
என தேடுகிறீர்கள்.இங்கே உங்களிடம் ஒரு 3G போன் இருந்தால் அது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்த
பக்கத்தில் இருக்கும் ஹோட்டல்கள்,அங்கிருக்கும் மெனு கார்டு முதல் நீங்கள் செல்ல விரும்பும் ஹோட்டல்
எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்களோடு அதற்கு செல்லும் வழியையும் காட்டும்.
நீங்கள் உலாவி(browser) கொண்டு தேடியந்திரம்(search engine) மூலம் தேடத்தேவையில்லை.
3G போனில் அதற்குறிய ஐகான் -யை க்ளிகினால் போதும் பக்கத்தில் இருக்கும் அனைத்து ஹோட்டல்களின
மேற்சொன்ன விவரங்கள் உங்கள் தொடுதிரையில் கண் சிமிட்டும்.
இது 3G எனப்படுகிற மூன்றாம் தலைமுறை செல்போன்களின் மாயாஜாலங்களில் ஒன்று.
இந்த சேவை ஹோட்டல்களோடு நில்லாமல் மருத்துவமனைகள்,சினிமா தியேட்டர்கள்,பெரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வங்கிகள் வரை பொருந்தும்.அவசர மருத்துவ சிகிச்சைக்க
3G போனில் அதற்குறிய ஐகான் -யை சொடுக்கினால் மிக அருகில் இருக்கும் மருத்துவமனையின் தொலைபேசி எண் முதல் அதற்கான வழித்தடத்தையும் காட்டும்.
நாம் தற்போது பயன்படுத்தும் செல்போன்கள் GSM(Global System for Mobile communications)-எனப்படுகிற இரண்டாம் தலைமுறை 2G தொழில் நுட்ப வகையச் சார்ந்தது.
இதையே சற்று மெருக்கேற்றி இன்டர்நெட் பயன்படுத்த உதவும் GPRS(General packet radio service) எனப்படும் 2.5G தொழில் நுட்பத்தை கொண்டுவந்தார்கள்.
தற்போது அறிமுகப்படுத்தப் படும் 3G, WCDMA(Wide band Code Division Multiple Access) தொழில் நுட்ப வகையைச் சார்ந்தது. GSM 2G-யில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு அலைவரிசையில் ஒரு கால அளவு ஒதுக்கப்படும். 3G WCDMA-வில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதே அலைவரிசையை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு இலக்கம்(code) ஒதுக்கப்படும்.
டில்லி-யில் MTNL எற்கனவே 3G-யை சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் BSNL கடந்த பிப்ரவரி மாதத்தில் 3G-யை அறிமுகப்படுத்தியது. நோக்கியா,சாம்சங்,மொடோரொலா,சோனி எரிக்சன்,எல்.ஜி போன்ற கம்பனிகள் தற்போது பெருமளவில் 3G போன்களை விற்பனை செய்தாலும், ஆப்பிளின் 3G ஐ-போன் அதனுடைய சிறப்பம்சம்களுக்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களது 3G போன், 3G சேவை இல்லாத இடத்தில் 2G தொழில் நுட்பத்தில் வேலை செய்யும்.
3G வழங்கும் மற்றுமொரு வியத்தகு சேவை வீடியோ டெலிபோனி.இனி நண்பர்கள் வீட்டில
கம்பைன் ஸடடி என பொய் சொல்லி ஊர் சுற்றுவது கடினம்,ஏனென்றால் 3G போனில
எதிர்முனையில் இருப்பவர்களின் முகத்தையும் சுற்றுபுறத்தையும் கேமரா வழியே பார்த்துக்கொண்டே பேசலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில்(Live) பார்க்கும் வசதி, FM ரேடியோ,அதி நவீன வீடியோ கேமரா, சினிமா போன்றவற்றை சேமித்து பார்க்கும் வசதி,GPS(Global Positioning System) எனப்படும் வழிகாட்டும் கருவி,14.4 Mbps வேகம் வரை தரவிறக்கம்(download) செய்யும் வசதி(BSNL தற்போது வழங்குவது அதிகபட்சம் 2 Mbps) மிகத்துல்லியமான தொடுதிரை வசதி,பயனாளர்கள் எளிதாக உலாவக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து மினி கம்ப்யூட்டர் போல் செயல்படும் மூன்றாம் தலைமுறை மொபைல் போன்கள்
மக்களை நிச்சயம் ஈர்க்கும்.
Source : http://crashonsen.blogspot.com/2009/06/3g.html

சனி, ஜூன் 13, 2009

பிஎப் - வசதி பெறும் தனியார் தொழிலாளர்கள்



Source : http://dkn.dinakaran.com/firstpage.aspx# - Dinakaran - 13-06-09 Page No : 11

வெள்ளி, ஜூன் 12, 2009

T20 World cup சூப்பர் * points table / standings on 12-06-09 @ 05:00 pm (IST)

வியாழன், ஜூன் 11, 2009

T20 World cup points table / standings on 11-06-09 @ 12:00 pm (IST)

2009 Twenty20 World Cup Super Eight Schedule

Thursday, 11th June, 2009

13th Match: Group F
Ireland vs New Zealand
Trent Bridge, Nottingham
Timing: 6.00 PM IST

14th Match: Group E
England vs South Africa
Trent Bridge, Nottingham
Timing: 10.00 PM IST

Friday, 12th June, 2009

15th Match: Group F
Pakistan vs Sri Lanka
Lord's, London
Timing: 6.00 PM IST

16th Match: Group E
India vs West Indies
Lord's, London
Timing: 10.00 PM IST

Saturday, 13th June, 2009

17th Match: Group E
South Africa vs West Indies
Kennington Oval, London
Timing: 6.00 PM IST

18th Match: Group F
New Zealand vs Pakistan
Kennington Oval, London
Timing: 10.00 PM IST

Sunday, 14th June, 2009

19th Match: Group F
Ireland vs Sri Lanka
Lord's, London
Timing: 6.00 PM IST

20th Match: Group E
India vs England
Lord's, London
Timing: 10.00 PM IST

Monday, 15th June, 2009

21st Match: Group E
England vs West Indies
Kennington Oval, London
Timing: 6.00 PM IST

22nd Match: Group F
Ireland vs Pakistan
Kennington Oval, London
Timing: 10.00 PM IST

Tuesday, 16th June, 2009

23rd Match: Group F
New Zealand vs Sri Lanka
Trent Bridge, Nottingham
Timing: 6.00 PM IST

24th Match: Group E
India vs South Africa
Trent Bridge, Nottingham
Timing: 10.00 PM IST


2009 Twenty20 World Cup Knockout Schedule:

2009 Twenty20 World Cup Semi-Finals:

Thursday, 18th June, 2009

25th Match: 1st Semi-Final
E2 vs F1
Trent Bridge, Nottingham
Timing: 10.00 PM IST

Thursday, 18th June, 2009

26th Match: 2nd Semi-Final
E1 vs F2
Kennington Oval, London
Timing: 10.00 PM IST

2009 Twenty20 World Cup Final:

27th Match: Final
Winner of SF1 vs Winner of SF2
Lord's, London
Timing: 7.30 PM IST

Source : http://icctwenty20worldcup2009.blogspot.com/2009/06/t20-wc-super-8-schedule-2009-20-20.html

புதன், ஜூன் 10, 2009

சூப்பர் எட்டு அட்டவணை - 10-06-09 @ 10:00 am



Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=2601&Value3=I

ICC Twenty20 World Cup 2009 Teams standing position as on 10-06-09 @ 09:00 am



Source : http://cricket.ndtv.com/cricket/ndtvcricket/WT20/games/points.htm

செவ்வாய், ஜூன் 09, 2009

ICC Twenty20 World Cup 2009 Teams standing position as on 09-06-09 @ 11:00 am



Source : http://cricket.ndtv.com/cricket/ndtvcricket/WT20/games/points.htm

திங்கள், ஜூன் 08, 2009

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா
கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்
கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை
இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா
இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும்
மறக்கதிர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து
கொள்ளாதிர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து
அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்
நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

* தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

Source : http://danoj.ucoz.com/publ/35-1-0-78

சனி, ஜூன் 06, 2009

Self Improvement - SIX STEPS ULTIMATE SUCCESS FORMULA

In fact, it is the simplest and most basic formula of success.

WHY NOT TAKE THIS TIME - PROVEN, SIMPLE FORMULA AND APPLY IT TO LIFE?
- Decide. What exactly you want to do.

- Make a step-by-step plan.

- Start working on your plan!

- Review your results.

- Be Flexible. Change actions if needed.

- Stay focused.



1. Take Decision

2. Plan your work

3. Start working on your step-by-step plan immediately

4. Monitor your progress

5. Be Flexible

6. Stay Focused on your target

Remeber : *WINNERS NEVER QUIT, AND QUITTER NEVER WINS*

Source : http://gopi4peace.blogspot.com/2009/06/self-improvement-six-steps-ultimate.html

செவ்வாய், ஜூன் 02, 2009

20-20 உலகக் கோப்பை அட்டவணை

இரண்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 5ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்‌ட்ரேலியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள்
கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 2 அணிகள் வீதம் மொத்தம் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பின்னர் இந்த 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதிய பிறகு அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

குழு ஏ- இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து.
குழு பி- பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து.
குழு சி- ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்.
குழு டி- நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து.

சூப்பர் 8 பிரிவு
குழு ஈ- ஏ1, பி2, சி1, டி2
குழு எஃப்- ஏ2, பி1, சி2, டி1.

லீக் ஆட்டங்கள்

ஜூன் 5 இங்கிலாந்து - நெதர்லாந்து லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 6 நியூஸிலாந்து - ஸ்காட்லாந்து ஓவல் -மதியம் 2.30
ஜூன் 6 ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் ஓவல் -மாலை 6
ஜூன் 6 இந்தியா - வங்கதேசம் டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 7 தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து ஓவல் -மாலை 6
ஜூன் 7 இங்கிலாந்து - பாகிஸ்தான் ஓவல் - இரவு 10
ஜூன் 8 வங்கதேசம் - அயர்லாந்து டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 8 ஆஸ்திரேலியா - இலங்கை டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 9 பாகிஸ்தான் - நெதர்லாந்து லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 9 நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 10 இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 10 இந்தியா - அயர்லாந்து டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10

சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள்

ஜூன் 11 டி1 -ஏ2 டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 11 பி2 -டி2 டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 12 பி1 -சி2 லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 12 ஏ1 -சி1 லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 13 சி1 -டி2 ஓவல் -மாலை 6
ஜூன் 13 டி1 -பி1 ஓவல் -இரவு 10
ஜூன் 14 ஏ2 -சி2 லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 14 ஏ1 -பி2 லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 15 பி2 -சி1 ஓவல் -மாலை 6
ஜூன் 15 பி1 -ஏ2 ஓவல் -இரவு 10
ஜூன் 16 டி1 -சி2 டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 16 டி2 -ஏ1 டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10

அரை இறுதி ஆட்டங்கள்

ஜூன் 18: ஈ1 -எஃப்2 (டிரென்ட் பிரிட்ஜ்) -இரவு 10.
ஜூன் 19: எஃப்1 -ஈ2 (ஓவல்) -இரவு 10.

இறுதி ஆட்டம்

ஜூன் 21: அரை இறுதியில் வென்றோர் (லார்ட்ஸ்) -இரவு 10.

source : Dinamani - Tuesday, June 02, 2009.

திங்கள், ஜூன் 01, 2009

சிரிப்பவன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்

அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

எண் புதிர்

ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் எட்டும்,
எட்டால் வகுத்தால் ஏழும்,
ஏழால் வகுத்தால் ஆறும்,
ஆறால் வகுத்தால் ஐந்தும்,
ஐந்தால் வகுத்தால் நான்கும்,
நான்கால் வகுத்தால் மூன்றும்,
மூன்றால் வகுத்தால் இரண்டும்,
இரண்டால் வகுத்தால் ஒன்றும் தரும்.

அந்த எண் 2519

வெள்ளி, மே 29, 2009

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

** டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.


இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும். இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.



ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன. ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.

Source : http://dshan2009.blogspot.com/2009/05/blog-post_4645.html

IPL - 2 Team standing Position as on 24-05-09

Thanks to : www.cmdn.com

வியாழன், மே 28, 2009

ICC Twenty20 Cricket World Cup 2009 - England

Group A Group B Group C Group D

India Pakistan Australia New Zealand

Bangladesh England Sri Lanka South Africa

Ireland Netherlands West Indies Scotland

Group E A1, B2, C1, D2 Group F B1, A2, C2, D1

S.No Date Time(IST) Match Venue Result

1 05/06/2009 10.00pm England v Netherlands Group B Lord’s
2 06/06/2009 2.30pm New Zealand v Scotland Group D The Oval
3 06/06/2009 6.00pm Australia v West Indies Group C The Oval
4 06/06/2009 10.00pm India v Bangladesh Group A Trent Bridge
5 07/06/2009 6.00pm South Africa v Scotland Group D The Oval
6 07/06/2009 10.00pm England v Pakistan Group B The Oval
7 08/06/2009 6.00pm Bangladesh v Ireland Group A Trent Bridge
8 08/06/2009 10.00pm Australia v Sri Lanka Group C Trent Bridge
9 09/06/2009 6.00pm Pakistan v Netherlands Group B Lord’s
10 09/06/2009 10.00pm New Zealand v South Africa Group D Lord’s
11 10/06/2009 6.00pm Sri Lanka v West Indies Group C Trent Bridge
12 10/06/2009 10.00pm India v Ireland Group A Trent Bridge
13 11/06/2009 6.00pm D1 v A2 Group F Trent Bridge
14 11/06/2009 10.00pm B2 v D2 Group E Trent Bridge
15 12/06/2009 6.00pm B1 v C2 Group F Lord’s
16 12/06/2009 10.00pm A1 v C1 Group E Lord’s
17 13/06/2009 6.00pm C1 v D2 Group E The Oval
18 13/06/2009 10.00pm D1 v B1 Group F The Oval
19 14/06/2009 6.00pm A2 v C2 Group F Lord’s
20 14/06/2009 10.00pm A1 v B2 Group E Lord’s
21 15/06/2009 6.00pm B2 v C1 Group E The Oval
22 15/06/2009 10.00pm B1 v A2 Group F The Oval
23 16/06/2009 6.00pm D1 v C2 Group F Trent Bridge
24 16/06/2009 10.00pm D2 v A1 Group E Trent Bridge
25 18/06/2009 10.00pm 1st Semi-Final Trent Bridge
26 19/06/2009 10.00pm 2nd Semi-Final The Oval
27 21/06/2009 7.30pm Final, T20 WC Lord’s

புதன், மே 27, 2009

ஒரே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக்கொள்ள வசதி

புதன், மே 20, 2009

IPL - 2 Team standing position as on 20-05-09 @ 09:30am

Thanks to : www.cmdn.com

செவ்வாய், மே 19, 2009

IPL - 2 Team standing position as on 19-05-09 @ 10:00am

Thanks to www.cmdn.com

திங்கள், மே 18, 2009

IPL - 2 Team standing position as on 18-05-09 @ 11:00 am

Thanks : www.cmdn.com

சனி, மே 16, 2009

இந்திய அணியின் மேற்கிந்தியப் பயணம்

ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் அணி
மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற பிறகு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி கிரிக்கெட் பயணம் மேற்கொள்கிறது.

முதல் இரண்டு ஒரு தினப் போட்டிகள் சபைனா பார்க் மைதானத்திலும், கடைச் இரண்டு ஒரு தினப் போட்டிகள் செயின்ட் லூசியாவிலும் நடைபெறுகிறது.

போட்டிகள் விவரம்:

ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) : முதல் ஒரு நாள் போட்டி, சபைனா பார்க், கிங்ஸ்டன்

ஜூன் 28 (ஞாயிறு) : 2-வது ஒரு நாள் போட்டி, சபைனா பார்க், கிங்ஸ்டன்

ஜூலை 3 (வெள்ளி) 3-வது ஒரு நாள் செயிண்ட் லூசியா

ஜூலை 5 (ஞாயிறு) 4-வது ஒரு நாள் போட்டி, செயின்ட் லூசியா

எந்த நாசியில் சுவாசிக்கிறீர்கள்

சித்தர்களின் மருத்துவ ஞானம். படித்ததில் பிடித்தது..,

சரம் என்பது மூச்சு ஓட்டம். ஒரு நாழிகைக்கு (24 நிமிஷம்) 360 சரவோட்டம் நடைபெறும். இப்படி ஒரு நாளைக்கு 21,600 முறை நடைபெறும். 5 நாழிகைக்கு (2 மணி) ஒரு முறை சரம் மாறும். திருமூலர் எந்தெந்த நாட்களில் எந்தெந்த கலைகளில் சரவோட்டம் நடைபெறும் எனக் குறித்துள்ளார்.

'வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே' - திருமந்திரம் 770.

திங்கள், புதன், வெள்ளி - இடம்
செவ்வாய், சனி, ஞாயிறு - வலம்
வியாழன் (வளர்பிறை) - இடம்
வியாழன் (தேய்பிறை) - வலம்.

'இடகலை, அல்லது பிங்கலையில் ஓர் இரவு முழுவதும் சுவாசம் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருடங்களில் மரணமடைவான். பிங்கலையில் மாறுதல் இல்லாமல் இரண்டு இரவு இரண்டுபகல் இடைவிடாமல் நடந்தால் அவன் இரண்டு ஆண்டுகளில் மரணமடைவான். இடைவிடாமல் சுவாசம் ஒரு நாசியில் மூன்று நாளைக்கு நடக்குமானால் ஒரு ஆண்டில் மரணமடைவான். இரவு முழுதும் இடகலையிலும், பகல் முழுவதிலும் பிங்கலையிலும் இடைவிடாமல் நடந்தால் ஆறு மாதத்தில் மரணமடைவான். பிங்கலையே தொடர்ச்சியாக இடைவிடாமல் நடந்தால் 15 நாளில் மரணமடைவான். இவ்வாறு சிவயோகசாரம் என்னும் நூல் கூறுகிறது.

Thanks to : சூர்யா ௧ண்ணன்
http://suryakannan.blogspot.com

" பெண் " ஒரு விளக்கம்



Thanks to : http://naikkutty.blogspot.com/2009/04/blog-post_14.html

பல்லேலக்கா..பல்லேக்கா

சிவாஜியில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் பாடல் காட்சி பல்லேலக்கா..பல்லேக்கா
ஸ்பெஷல் ப்ரீவியூ உங்களுக்காக...

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா

Female Chorus:

சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :

ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...

Male:

காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)

சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )


சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பலுக்கு என்ன காரணம் ...

ஹய்டேன், ரைனா தவிர பாட்ஸ்மேன் வேரு யாரும் சிறப்பாக இல்லை.

ஹய்டேன் : வாங்குன காசுக்கு ஒழுங்க ஆடுற மனுஷன்.

ரைனா : வந்தோமா, முப்பது ரன் அடிசோமா போய்கிஇடே இருப்பாரு. மத்த ஆட்டகாரர்கள் எல்லாம் இவரை விட மட்டமாக இருப்பதால் இவர் இடம் நிலையானது.

டோனி : லக்ஸ்மி ராய் வேற பக்கத்துல இல்ல. இருந்தாலாவது ராத்திர்ல ரெண்டு மூணு ரவுண்ட் போகலாம். நான் பைக்குல சொல்லேறேன். தலைவருக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். இவரு எப்ப பிக் அப் ஆயி எப்போ ரன் அடிக்கிறது. அதுக்குள்ள அசல் படம் வந்து அவனவன் ஆப்பு வாங்கி ஆடிபோயிருப்பன்.

பத்ரிநாத் - எப்போ ஆடவந்தலும் கடைசி மூணு அல்லது நாலு ஓவர் மட்டுமே பாக்கி இருக்கும். எவரும் வந்த வேகதில் ஒரு நான்கு அடித்து அவுட் ஆகி விடுவார்ட்வென்டி ட்வென்டி இக்கு முகத்தில் ஒரு ப்யர் இருக்கணும். இவர் முகத்தை பார்த்தல் மரியாதை படத்தை ரெண்டு முறை பார்த்த மாதிரி உம்முன்னு இருஉப்பர்.

மார்கெல் : நாலு ரன் அடிக்க வேண்டிய நேரத்துல ஒரு ரன் அடிக்கவே ஒன்பது தரம் யோசிச்சு வைடா போர பால தொட்டு வர ஒரு ரன்னையும் வர விடாம அவுட் ஆகி போர சிலபடுத்தான் சில் பட்ஸ் மேன்.

பார்த்திவ் படேல் - சரியான தயிர் சாதம். இன்ன தான் முக்கி முக்கி அடித்தாலும் இன் சைடு சர்கில் விட்டு பந்து தான்டாது. மட்டையை தூக்கி அடிப்பர்தற்குள் பந்து கீப்பர் இடம் சென்று அது பௌலேர் இடம் சென்று விடும்.

பாலாஜி : ஒரு ஓவருக்கு மூணு புல் டாஸ் பால் போடலன்னா வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதனம் அப்படின்னு யாரோ சொன்ன மாதிரி மூணு புல் டாஸ் பால் போடுவாரு. முக்கியமான ஓவர்ல தான் சப்ப பட்ஸ்மானும் சூப்பர் சிக்ஸர் அடிக்கிற மாதிரி பால் போடுவாரு.

முரளிதரன் : எப்படி போட்டாலும் அடிக்கிராங்கட. என்ன பணர்துன்னு புரியாம பௌலிங் போடும் போதே எப்பவாவது விக்கெட் விழும்.

கோனி : அடியாள் மாதிரி ஒரு வளந்தா ஆள் வேண்டும். அதுக்கு கோனி சரியான ஆள். ஓடி வர வேகத்த பார்த்த மூணு ஸ்டேம்பையும் முன்நூறு கிலோமீட்டர் வேகத்துல பறக்க வேப்பருன்னு பார்த்த பால் ஸ்டெம்ப் தாண்டவே மூணு நிமிஷம் ஆகும்.

ஜோகிந்தர் சர்மா : நரசிம்ம ராவ் வாரிசு. குசேலன் படத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்த மாதிரி எப்புமே ஒரே ஸோகமா இருப்பாரு. டோனி புண்ணியத்தில் டீமில் இருப்பார்.

பிளின்ட் ஆஃப் : இன்னுமா இந்த ஊரு நம்ம நம்புது. அந்த ரெந்ஜ்ஜிக்கு ஒரு காமெடிபீஸ். எதுக்கு ஏழு கோடி. இவர் அடிச்ச பந்து மைதானத்தின் எந்த கோடிக்கும் போக வில்லை. !!!!!!! ????????? !!!!!!!!.,

இவன்ங்க ஜெயிக்க ஒரே வழி நீங்க தோத்தா தல நடிச்ச ஏகன் படத்த எட்டு வாட்டி பாத்துட்டு மறு நாள் மதியானம் மரியாதை படத்துக்கு மேட்நி ஷோ டிக்கெட் எடுத்து கொடுப்பேன்" அப்படின்னு சொன்ன உயிரை கொடுத்தாவது ஜெயிப்பார்கள்.

Thanks to : http://naikkutty.blogspot.com/2009/04/blog-post_27.html

IPL - 2 Team standing position as on 16-05-09 @ 10:00am

Thanks to www.cmdn.com

வெள்ளி, மே 15, 2009

IPL - 2 Teams standing position as on 15-05-09 @ 10:00 Am

Thanks to : www.cmdn.com

வியாழன், மே 14, 2009

வோடோப்போன் விளம்பரம் ‍ ஆச்சரியம்





IPL - 2 Team standing position as on 14-05-09 @ 01.00pm

செவ்வாய், மே 12, 2009

IPL - 2 Team standing position as on 12-05-09 @ 01.00pm

திங்கள், மே 11, 2009

IPL - 2 Team Standings position as on 11-05-09 @ 02.00pm (IST)

Thanks to related sources
Thanks to : Dinamalar (Mobile Malar) 11-05-09

தமிழ் எழுதி




சனி, மே 09, 2009

IPL - 2 Team Standings position as on 09-05-09 @ 12.00pm (IST)


IPL - 2 Result as on 09-05-09 @ 01.00pm (IST)

18-Apr-09
16:00 IST
Match 1 Chennai Super Kings Vs Mumbai Indians at Newlands, Cape Town
MI won by 19 runs

18-Apr-09
20:00 IST
Match 2 Bangalore Royal Challengers Vs Rajasthan Royals at Newlands, Cape Town
BRC won by 75 runs

19-Apr-09
16:00 IST
Match 3 Delhi Daredevils Vs Kings XI Punjab at Newlands, Cape Town
DD won by 10 wickets

19-Apr-09
20:00 IST
Match 4 Deccan Chargers Vs Kolkata Knight Riders at Newlands, Cape Town
DC won by 8 wickets

20-Apr-09
20:00 IST
Match 5 Bangalore Royal Challengers Vs Chennai Super Kings at St George's Park, Port Elizabeth
CSK won by 92 runs

21-Apr-09
16:00 IST
Match 6 Kings XI Punjab Vs Kolkata Knight Riders at Kingsmead, Durban
KKR won by 11 runs (D/L method)

21-Apr-09
20:00 IST
Match 7 Rajasthan Royals Vs Mumbai Indians at Kingsmead, Durban
Match Abandoned, Play called-off due to rain

22-Apr-09
20:00 IST
Match 8 Bangalore Royal Challengers Vs Deccan Chargers at Newlands, Cape Town
DC won by 24 runs

23-Apr-09
16:00 IST
Match 9 Chennai Super Kings Vs Delhi Daredevils at Kingsmead, Durban
DD won by 9 runs

23-Apr-09
20:00 IST
Match 10 Kolkata Knight Riders Vs Rajasthan Royals at Newlands, Cape Town
Match Tied (RR win in Super over)

24-Apr-09
20:00 IST
Match 11 Bangalore Royal Challengers Vs Kings XI Punjab at Kingsmead, Durban
KXIP won by 7 wickets

25-Apr-09
16:00 IST
Match 12 Deccan Chargers Vs Mumbai Indians at Kingsmead, Durban
DC won by 12 runs

25-Apr-09
20:00 IST
Match 13 Chennai Super Kings Vs Kolkata Knight Riders at Newlands, Cape Town
Match Abandoned, Play called-off due to rain

26-Apr-09
16:00 IST
Match 14 Bangalore Royal Challengers Vs Delhi Daredevils at St George's Park, Port Elizabeth
DD won by 6 wickets

26-Apr-09
20:00 IST
Match 15 Kings XI Punjab Vs Rajasthan Royals at Newlands, Cape Town
KXIP won by 27 runs

27-Apr-09
16:00 IST
Match 16 Chennai Super Kings Vs Deccan Chargers at Kingsmead, Durban
DC won by 6 wickets

27-Apr-09
20:00 IST
Match 17 Kolkata Knight Riders Vs Mumbai Indians at St George's Park, Port Elizabeth
MI won by 92 runs

28-Apr-09
20:00 IST
Match 18 Delhi Daredevils Vs Rajasthan Royals at SuperSport Park, Centurion
RR won by 5 wickets

29-Apr-09
16:00 IST
Match 19 Bangalore Royal Challengers Vs Kolkata Knight Riders at Kingsmead, Durban
BRC won by 5 wickets

29-Apr-09
08:00 IST
Match 20 Kings XI Punjab Vs Mumbai Indians at Kingsmead, Durban
KXIP won by 3 runs

30-Apr-09
16:00 IST
Match 21 Deccan Chargers Vs Delhi Daredevils at SuperSport Park, Centurion
DD won by 6 wickets

30-Apr-09
20:00 IST
Match 22 Chennai Super Kings Vs Rajasthan Royals at SuperSport Park, Centurion
Chennai Super Kings won by 38 runs

1-May-09
16:00 IST
Match 23 Kolkata Knight Riders Vs Mumbai Indians at Buffalo Park, East London
MI won by 9 runs

1-May-09
20:00 IST
Match 24 Bangalore Royal Challengers Vs Kings XI Punjab at Kingsmead, Durban
BRC won by 8 runs

2-May-09
16:00 IST
Match 25 Deccan Chargers Vs Rajasthan Royals at St George's Park, Port Elizabeth
RR won by 3 wickets

2-May-09
20:00 IST
Match 26 Chennai Super Kings Vs Delhi Daredevils at New Wanderers Stadium, Johannesburg
CSK won by 18 runs

3-May-09
16:00 IST
Match 27 Kings XI Punjab Vs Kolkata Knight Riders at St George's Park, Port Elizabeth
KXIP won by 6 wickets

3-May-09
20:00 IST
Match 28 Bangalore Royal Challengers Vs Mumbai Indians at New Wanderers Stadium, Johannesburg
BRC won by 9 wickets

4-May-09
20:00 IST
Match 29 Chennai Super Kings Vs Deccan Chargers at Buffalo Park, East London
CSK won by 78 runs

5-May-09
16:00 IST
Match 30 Kings XI Punjab Vs Rajasthan Royals at Kingsmead, Durban
RR won by 78 runs

5-May-09
20:00 IST
Match 31 Delhi Daredevils Vs Kolkata Knight Riders at Kingsmead, Durban
DD won by 9 wickets

6-May-09
20:00 IST
Match 32 Deccan Chargers Vs Mumbai Indians at SuperSport Park, Centurion
DC won by 19 runs

7-May-09
16:00 IST
Match 33 Bangalore Royal Challengers Vs Rajasthan Royals at SuperSport Park, Centurion
RR won by 7 wickets

7-May-09
20:00 IST
Match 34 Chennai Super Kings Vs Kings XI Punjab at SuperSport Park, Centurion
CSK won by 12 runs(D/L method)

8-May-09
20:00 IST
Match 35 Delhi Daredevils Vs Mumbai Indians at Buffalo Park, East London
DD won by 7 wickets
Bottom of Form

வெள்ளி, மே 08, 2009

IPL - 2 Team Standings position as on 08-05-09 @ 12.00pm (IST)


Thanks to related sources

வியாழன், மே 07, 2009

IPL - 2 Team Standings position as on 07-05-09 @ 02.00pm (IST)


புதன், மே 06, 2009

IPL - 2 Team Standings position as on 06-05-09 @ 10.00am (IST)

Thanks to related sources

செவ்வாய், மே 05, 2009

IPL - 2 Team Standings position as on 05-05-09 @ 11.00am (IST)




சில பெயர்களும் அதன் விளக்கங்களும்

சில பெயர்களும் அதன் விளக்கங்களும் சுவாரஸ்யமானவை.
FortNight - Fourteen Night
Byte - By Eight
Pixel - Picture எலேமேன்ட்

COMPUTER - ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research

Micro Soft - முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

Linux - செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது

IBM - ன் விரிவாக்கம் International Business Machines.
Wipro - ன் விரிவாக்கம் Western India Products

Java - என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்
Oracle - என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்

VIRUS - ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege

Yahoo - வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle
Google - googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.
Cisco - அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது

HP - நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது

Dell - அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.
Nokia - தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது

STAR TV - ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV

HSBC - ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce
HDFC - ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited

ICICI - ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India

Nissan - ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

ADIDAS - ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler)

Pepsi - Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937.
ஆனால் Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

MRF - ன் விரிவாக்கம் Madras Rubber Factory

TVS - ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited

KPMG - என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.
அதாவது K stands for Klynveld, P is for Peat, M stands for Marwick, G is for Goerdeler.

Toshiba - இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து. அது தான் இன்றைய Toshiba.

Thanks to Related sources

20-20 உலகக் கோப்பை: இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 5 முதல் 21' 2009

நியூஸிலாந்தில் கடந்த பிப்ரவரியில் 20-20 போட்டியில் விளையாடிய முனாப் படேல், விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

முதல் 20-20 உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2007-ல் நடைபெற்றது. இதில் இந்தியா பட்டம் வென்றது. தற்போது 2-வது போட்டி இங்கிலாந்தில் ஜூன் 5 முதல் 21 வரை நடைபெறுகிறது.
இந்திய அணியில் 5 பேட்ஸ்மென், 5 வேகப் பந்துவீச்சாளர்கள், 2 சுழற் பந்துவீச்சாளர்கள், 2 ஆல் ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம் :

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக் (துணைக் கேப்டன்), கெüதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், ஆர்.பி.சிங், ரவீந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா, இர்பான் பதான்.

திங்கள், மே 04, 2009

IPL - 2 Team Standings position as on 04-05-09 @ 12.00pm (IST)




சனி, மே 02, 2009

IPL - 2 Team Standings position as on 02-05-09 @ 10.00am (IST)

செல்போன் எண் வசதி

வியாழன், ஏப்ரல் 30, 2009

விண்டோஸில் வித்தைகள்

வித்தை-1: விண்டோஸில் எந்த இடத்திலும் "CON" என்ற பெயரில் நீங்கள் ஃபோல்டர் உருவாக்க முடியாது.

வித்தை-2: விண்டோஸில் வேர்ட் பைல் ஓப்பன் செய்து =rand(200,99)என டைப் செய்து என்டர் கீ யை அழுத்தினால்...பாருங்கள் அதிசயத்தை.

வித்தை-3: விண்டோஸில் ஒரு நோட்பேட் பைல் ஓப்பன் செய்து அதில் Bush hid the facts என்று எழுதி அதனை சேவ் செய்து சிறிது நேரம் கழித்து ஓப்பன் செய்து பாருங்கள்...ஆச்சர்யம் காத்திருக்கிறது.

சாப்பிட்டவுடன் தவிர்க்கப்படவேண்டிய ஏழு பழக்கங்கள்...

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது:

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது ஒரே சமயத்தில் பத்து சிகரெட்டுகளை புகைபிடிப்பதற்கு சமம் என அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இது கேன்சர் நோயக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிறது

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது:

உணவு சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவதால் வயற்றினுள் காற்று அதிகமாக நிரப்பப்படுகிறது. எனவே சாப்பிட்டபின் 1-2 மணி நேரங்கள் கழித்து பழங்கள் சாப்பிடுவது நலம்.

சாப்பிட்டவுடன் டீ குடிப்பது:

உணவு சாப்பிட்ட உடன் டீ குடிப்பதை தவிர்ப்பது நலம். தேயிலையில் உள்ள அமிலங்கள் உணவில் கலந்து சாப்பிட்ட உணவு ஜீரணமாவதை கடினமாக்குகிறது.

சாப்பிட்டவுடன் இடுப்புபட்டையை(பெல்ட்)தளர்த்துதல்:

சாப்பிட்டவுடன் அணிந்திருக்கும் இடுப்புபட்டையை தளர்த்துவதால் குடல் அடைத்துக்கொள்ளவும்,முறுக்கப்படவும் வாய்ப்புகளுண்டு.


சாப்பிட்டவுடன் குளிப்பது:

சாப்பிட்வுடன் குளிப்பதால் கை,கால் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டம் குறைந்து ஜீரணமாவதை பாதிக்கிறது.


சாப்பிட்டவுடன் நடப்பது:

சாப்பிட்டவுடன் நடந்தால் நூறு ஆண்டுகள் வாழலாம் என்று கூறுவதுண்டு.முற்றிலும் தவறு.
சாப்பிட்டவுடன் நடப்பதால் உணவு செரிமானத்தின் போது உணவிலுள்ள சத்துக்கள் முழுமையாக உட்கிரகிகப்படுவதில்லை.


சாப்பிட்டவுடன் தூங்குவது:

சாப்பிட்டவுடன் தூங்குவதால் குடலில் வாயு பிரச்சினை.

நினைப்பது

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.

IPL - 2 Team Standings position as on 30-04-09 @ 11.45am (IST)

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

திங்கள், ஏப்ரல் 27, 2009

IPL - 2 Team Standings position as on 27-04-09 @ 11.45am (IST)

Sno Team Played Won Lost Tied No Result Points Run Rate

1 Hyderabad 3 3 0 0 0 6 1.627
2 Delhi 3 3 0 0 0 6 0.684
3 Mohali 4 2 2 0 0 4 0.271
4 Chennai 4 1 2 0 1 3 1.067
5 Mumbai 3 1 1 0 1 3 0.175
6 Kolkata 4 1 1 1 1 3 -0.887
7 Jaipur 4 0 2 1 1 3 -1.7
8 Bangalore 5 1 4 0 0 2 -0.596

மைக்ரோசாப்ட் கால்குலேட்டர்

மைக்ரோசாப்ட் கால்குலேட்டரில் கீழே உள்ள கணக்கீட்டை முயற்சித்துப் பாருங்கள்.

1. 2704/50 = 54.08 விடை சரியாக இருக்கிறது.

2. 2704/51 = 53.01960784 இதுவும் விடை சரியாக இருக்கிறது.

3. 2704/52 = 1 இங்குதான் பிரச்சினை, இதற்கான விடை கிடைப்பதில்லை.

மைக்ரோசாப்ட் கால்குலேட்டர் ஒரு ??? !!!.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

IPL - 2 Team Standings position as on 24-04-09 @ 12.00pm (IST)

IPL - 2 @ South Africa Standings as on 24-04-09

Teams MP W L NRR PTS

Deccan Chargers 2 2 0 +2.158 4
Delhi Daredevils 2 2 0 +0.985 4
Mumbai Indians 2 1 0 +0.950 3
Rajasthan Royals 3 1 1 -1.875 3
Chennai Super Kings 3 1 2 +1.067 2
Royal Challengers
Bangalore 3 1 2 -0.683 2
Kolkata Knight
Riders 3 1 1 -0.887 2
Kings XI Punjab 2 0 2 -1.779 0

Thanks to : http://www.maxtelevision.com/ipl2009_external/ipl_standings.php

வியாழன், ஏப்ரல் 16, 2009

பழமொழிகள்


அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு
அடாது செய்தவன் படாது படுவான்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? .

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி,
ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவணுமில்லை
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இறுகினால் களி , இளகினால் கூழ்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.


ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.


உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.


ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.


ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோபம்.


ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?


ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.


ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒள
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

புதன், ஏப்ரல் 08, 2009

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்தது

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் வெலிங்டன் டெஸ்ட் "டிராவில்' முடிய, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவியது. நியூசிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது. மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 379, நியூசிலாந்து 197 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 617 ரன்களை நிர்ணயித்தது. இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

டெய்லர் சதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந் தது. ரோஸ் டெய்லர், பிராங்க்ளின் ஆட்டத்தை தொடர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய டெய்லர், டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். 16 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் குவித்த இவர், ஹர்பஜன் சுழலில் போல்டானார். 5 வது விக்கெட்டுக்கு டெய்லர், பிராங்க்ளின் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது.

சச்சின் மிரட்டல்: ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதை அறிந்த கேப்டன் தோனி, சச்சினை பந்து வீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. சச்சின் சுழலில், மெக்கலம் (6), பிராங்க்ளின் (49) அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த சவுத்தி (3) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

பறிபோன வெற்றி: உணவு இடைவேளைக்குப் பின் 30 நிமிடம் தான் ஆட்டம் நடந்தது. இதற்குப் பின் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. 336 ரன்கள் பின்தங்கியிருந்தது. கேப்டன் வெட்டோரி (15), ஓ பிரையன் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் மழை காரணமாக போட்டி "டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தரப்பில் ஹர்பஜன் 4, சச்சின், ஜாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வரலாற்று சாதனை: வெலிங்டன் டெஸ்ட் வெற்றி பறிபோனாலும், ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 1967-68 ம் ஆண்டு மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை (3-1) வென்றிருந்தது.

சூப்பர் கேப்டன் : கேப்டன் தோனி தலைமை யிலான இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. இதுவரை டெஸ்ட் போட்டி களில் இவரது அணி தோல்வி அடைந்தது இல்லை. இதுவரை 7 போட்டிகளுக்கு தலைமை வகித்த தோனி, 5 வெற்றி, 2 "டிராவை' பதிவு செய்துள்ளார். இவரது தலைமையின் கீழ், இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் (1-0), தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை (1-0) வென்றுள்ளது.

ரூ. 15 லட்சம் பரிசு : இந்திய அணியின் புதிய சாதனைக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பாராட்டும், பரிசுத் தொகையும் அறிவித்து உள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,"" நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் (3-1) மற்றும் டெஸ்ட் (1-0) தொடர்களை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் களில் பங்கேற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சமும், அணி உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும்,'' என்றார்.

எல்லாமே காம்பிர் : வெலிங்டன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 167 ரன்கள் குவித்து அசத்திய காம்பிர், ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 2 சதம் ஒரு அரை சதம் உட்பட 445 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் வென்றார். இது குறித்து காம்பிர் கூறுகையில்,""அன்னிய மண்ணில் முதன் முதலாக சிறப்பாக செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. சச்சின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் நெருக்கடியின்றி விளையாடுமாறு அறிவுறுத்தினர். இதனால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப் படுத்த முடிந்தது,'' என்றார்.

வெற்றியில் அனைவருக்கும் பங்கு : நியூசிலாந்து மண்ணில் பெற்ற சாதனை வெற்றியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் சரியான அளவில் இடம் பெற்றிருந்தனர். அனுபவ வீரர்கள் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி ஆலோசனை வழங்கினர். வெற்றிக்கு ஒரு வீரர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. காம்பிர் இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களான சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோரின் செயல்பாடு அணிக்கு பக்கபலமாக அமைந்தது. பின் வரிசை வீரர்களும் இத்தொடரில் சிறப்பாக பேட் செய்து அசத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். ஜாகிர், இஷாந்த், ஹர்பஜன் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இந்த வெற்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கூடுதலாக 10 ஓவர்கள் கிடைத்திருந்தால் வெலிங்டன் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருப்போம். கடைசி நாளில் மழை பெய்யும் என எங்களுக்கு தெரியும். இருப்பினும் இயற்கையை யாரும் உறுதிபட கூற முடியாது. அதனால் 2வது இன்னிங்சை சற்று தாமதமாக "டிக்ளேர்' செய்தேன். குறைந்தது 110 ஓவர்கள் வீச முடியும் என எண்ணினேன். ஆனால் மழை சூழ்நிலையை மாற்றி விட்டது,'' என்றார்.

பறிபோன 100வது வெற்றி : மழை குறுக்கிட்டதால், இந்தியாவின் 100 வது டெஸ்ட் வெற்றி பறிபோனது. இதுவரை 429 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 99 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. வெலிங்டனில் நேற்று இந்தியா வெற்றி பெற்றிருந்தால், டெஸ்டில் வெற்றி சதம் அடித்திருக்கலாம்.

ஜனாதிபதி பாராட்டு : நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதில், ""நியூசிலாந்தில் புதிய சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களின் சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது. இனி வரும் தொடர்களிலும் அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என பாராட்டியுள்ளார்.
நன்றி : தினமலர் 08-04-2009

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி "டிராவில்' முடிந்தது.

மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது (ஏப்ரல் 03 - 07 '2009).


டிராவிட் உலக சாதனை : வெலிங்டன் டெஸ்டில் புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ராகுல் டிராவிட். நேற்றைய 2வது இன்னிங்சில் நியூசிலாந்தின் துவக்க வீரர் டிம் மெக்லன்டாசை கேட்ச் பிடித்து வெளியேற்றியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக "கேட்ச்' பிடித்த "பீல்டர்' என்ற பெருமை பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்கின் (181 "கேட்ச்') சாதனையை முறியடித்தார் டிராவிட். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 183 "கேட்ச்' பிடித்துள்ளார்.

டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-5' வீரர்கள்: (போட்டி/கேட்ச்) : டிராவிட் இந்தியா 134*183, மார்க்வாக் ஆஸி., 128/181, பிளமிங் - நியூசி., 111/171, லாரா - வெ.இண்டீஸ் 131 /164, மார்க் டெய்லர் - ஆஸி., 104/157
கடந்து வந்த பாதை : 144 "கேட்சுகள்'- வலது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 39 - இடது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 88- இந்திய மண்ணில் பிடித்தவை
* 95 -அன்னிய மண்ணில் பிடித்தவை
* 55- அனில் கும்ளே பந்துவீச்சில் பிடித்தவை
* 45-ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிடித்தவை
* 79- கங்குலி தலைமையின் கீழ் பிடித்த "கேட்சுகள்' : * அதிக பட்சமாக ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கரை, 6 முறை "கேட்ச்' பிடித்துவெளியேற்றியுள்ளார் டிராவிட்.
* கடந்த 2004-05 ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், டிராவிட் 13 "கேட்சுகள்' பிடித்தார். இதுவே ஒரு டெஸ்ட் தொடரில் இவர் பிடித்த அதிக "கேட்சுகள்'.
* இரண்டு முறை (2002, 2004) ஆண்டுக்கு 26 " கேட்சுகள்' பிடித்து அசத்தியுள்ளார் டிராவிட்.

மகிழ்ச்சியான அனுபவம் : நியூசிலாந்து வீரர் மெக்லன்டாசை "கேட்ச்' பிடித்து வெளியேற்றிய டிராவிட் பந்தை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறியது: கேட்சுகள் பிடிப்பது ரன் சேர்ப்பதை விட எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். ஆட்டத்தின் வெற்றிக்கு அதிக "கேட்ச்' பிடிப்பதும் முக்கியம் என்பதை கடந்த 12-13 ஆண்டுகளாக எனது டெஸ்ட் வாழ்க்கையில் அறிந்துள்ளேன். இச்சாதனையை நான் எட்டியதற்கு வெங்கடேஷ் பிரசாத், ஜாகிர் கான், அனில் கும்ளே, ஜாகிர் கான் உள்ளிட்ட திறமை வாய்ந்த இந்திய பவுலர்கள் முக்கிய காரணம். சூப்பர் "கேட்ச்' பிடிப்பது என்பது சிரமமான விஷயம்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் சச்சின் பந்து வீச்சில், டேமியன் மார்டினை "கேட்ச்' பிடித்து வெளியேற்றினேன். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில், ஹர்பஜன் வீசிய பந்தில், மார்க் வாக்கை வெளியேற்றினேன். இந்த இரண்டு நிகழ்வுகளும் எனது கிரிக்கெட் வாழ்வில் நீங்காத நினைவுகளாக உள்ளன. இவ்வாறு டிராவிட் கூறினார்.

நன்றி : தினமலர் 07-04-2009

Thanks to : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=1921&Value3=I

வியாழன், மார்ச் 12, 2009

வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

Thanks to : http://www.pkp.blogspot.com

புதன், மார்ச் 04, 2009

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."

"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."

"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!

- Courtesyhttp://www.pkp.blogspot.com

புதன், பிப்ரவரி 18, 2009

குறிக்கோள்

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு
நன்றி : http://www.pkp.blogspot.com

மகிழ்ச்சி

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!

வியாழன், பிப்ரவரி 12, 2009

மொழியாக்கமும் அகராதியும் : திகழ்மிளிர்

1 கையெழுத்து Handwriting
2 கையொப்பம் Signature
3 வாழ்த்தொப்பம் Autograph
4 தன் வரலாறு Autobiagraphy
5 உறுதியொப்பம் Authentication
6 சுருக்கொப்பம் Initials
7 சீம்பூ Shampoo
8 அலாரம் Alarm
9 உரிமை ஊதியம் Royalty
10 பராமரிப்பு ஊதியம் Alimony
11 ஓய்வு ஊதியம் Pension
12 குறும் பேழை Brief Case
13 ஊடகம் Media
14 செய்தித்தாள், நாளேடு Newspaper
15 ஓடு பாதை Runway
16 வாழ்க்கை Life
17 விமானம் Flight
18 தாய்மொழி Mother Tongue
19 நாடாளுமன்றம் , பாராளுமன்றம் Parliament
20 பார்வையாளர்கள் Visitors
21 நடிகர்கள் Actors
22 இருக்கை , நாற்காலி , கதிரை Chair
23 கனவுகள் Dreams
24 பழம் Fruit
25 வாழைப்பழம் Banana
26 வரலாறு History
27 மரம் Tree
28 பலாப்பழம் Jackfruit
29 பலகை Plank
30 விசைப் பலகை, தட்டச்சுப் பலகை Keyboard
31 விளம்பரம் Advertising
32 விளம்பரப் பலகை Hoardings
33 மாநில உரிமம் State Permit
34 கணினிப்பலகை, கணினித்திரை Computer Monitor
35 திரைப்பலகை Theatre Screen
36 கரும்பலகை Blackboard
37 திரையரங்கு Cinema Theatre
38 வாக்காளர் Voter
39 அகராதி Dictionary
40 கைப்படுக்கை Stretcher

வியாழன், ஜனவரி 29, 2009

"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Thanks http://www.pkp.blogspot.com/

செவ்வாய், ஜனவரி 13, 2009

தமிழின் பெருமைகள்

ஏறுமுக இலக்கங்கள்1 = ஒன்று -one10 = பத்து -ten100 = நூறு -hundred1000 = ஆயிரம் -thouand10000 = பத்தாயிரம் -ten thousand100000 = நூறாயிரம் -hundred thousand1000000 = பத்துநூறாயிரம் - one million10000000 = கோடி -ten million100000000 = அற்புதம் -hundred million1000000000 = நிகர்புதம் - one billion10000000000 = கும்பம் -ten billion100000000000 = கணம் -hundred billion1000000000000 = கற்பம் -one trillion10000000000000 = நிகற்பம் -ten trillion100000000000000 = பதுமம் -hundred trillion1000000000000000 = சங்கம் -one zillion10000000000000000 = வெல்லம் -ten zillion100000000000000000 = அன்னியம் -hundred zillion1000000000000000000 = அர்த்தம் -?10000000000000000000 = பரார்த்தம் —?100000000000000000000 = பூரியம் -?1000000000000000000000 = முக்கோடி -?10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

வியாழன், நவம்பர் 06, 2008

பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம்பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்படர்கின்ற காதல் அதிசயம்(பூவுக்குல்)ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமேஅலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமேமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமேஉடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்நினைத்தால் நினைத்தால் அதிசயமே(கல்தோன்றி)(பூவுக்குள்)பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமேஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமேவான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமேநங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமேஅசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)(பூவுக்குள்)

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

உங்கள் ராசியும் உங்கள் குணமும்

சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும்.

அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் கேது திசை தொடங்கும்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சுக்கிர திசை தொடங்கும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சூரிய திசை தொடங்கும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் சந்திர திசை தொடங்கும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தால் செவ்வாய் திசை முதலில் தொடங்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத் திரத்தில் பிறந்தால் முதலில் ராகு திசை தொடங்கும்.

புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் குரு திசை முதலில் தொடங்கும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தால் சனி திசை
முதலில் தொடங்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தால் முதலில் புதன் திசை தொடங்கும்.

12 ராசிகளில் பிறந்தவர்களின் தன்மைகள்

மேஷம்

ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் ஆவார். தைரியம், துணிவு, முரட்டுத்தனமான நடவடிக்கை, வலிமை மிகுந்த உடலமைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, கூட்டாளிகளை உயர்த்தும் தன்மை, பலரை நிர்வகிக்கும் திறன், மிகதைரியசாலியாக மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவராக விளங்குவார்கள்.

ரிஷபம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகானவர்கள். கோதுமை போன்ற நிறமும், தரமான உயரமும், கருப்பான கண்களும் நன்றாக வளர்ந்த தலைமுடியும், கற்பனை வளம் கொண்டு பேச்சுத் திறனால் மற்றவர்களை கவர்ச்சி செய்யும் திறன் கொண்டவராகவும், மென்மையான உணர்ச்சியும், கலை, சினிமா, ஆடை, ஆபரணத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

புதன் ஆதிக்கம் கொண்ட இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், உயரமான உடலமைப்பு, எளிதில் உணர்ச்சிக்கு உட்பட்டவராகவும், வேடிக்கை செய்பவரும், வணிகத்துறையில் நாட்டம் கொண்டவராகவும், அடிக் கடிமனம் மாறும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

கடகம்

ஜென்ம ராசியாதிபதி சந்திரன் ஆவார். மனோதைரியம் மிக்கவ ராகவும், தரமான உயரமும், வெண்மை நிறமும், இரக்க குணமும் வீட்டை நேசிப்பவராகவும் இருப்பார்கள். மிக புத்திசாலியாகவும், உடல் அழகும் கொண்டவராக இருப்பார்கள். பெண் என்றால் கவர்ச்சி மிகுந்த உடலமைப்பு, இனிய குரல், சேமிக்கும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

சிம்மம்

ராசியாதிபதி சூரியன் ஆவார். இயற்கையாகவே எதிலும் மிகத் துணிச்சலுடன் தொலைநோக்கு பார்வையும், லட்சியம் பல உடையவராகவும், கௌரவமான தோற்றமும், வெளிபார்வைக்கு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்போல இருந்தாலும் அப்படி இருக்க மாட்டார்கள். எதிலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ள தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

ஜென்ம ராசியாதிபதி புதன் பகவான் ஆவார். தரமான உடலமைப்பு உணர்ச்சி மிக்கவராகவும், புத்திசாலியாகவும், காதல் கற்பனை கொள்பவரா கவும், இசையிலும் பல நுண்ணிய கலைகளிலும் நாட்டம் கொண்டவராகவும், மற்றவர்களை எளிதில் நட்பு கொள்ளாத வராகவும் இருப்பார்கள்.

துலாம்

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் அழகான தோற்றம், கற்பனை வளம் மிக்கவராகவும், நல்ல உடலமைப்பும், அன்புள்ளவராகவும், எந்த சூழ்நிலையிலும் சாயாத தன்மை கொண்டவராகவும், கலை, இசை, சினிமாவில் நாட்டம் கொண்டவராகவும் இருப் பார்கள்.


விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயர்ந்த பண்பு உடையவராகவும், இளமையானவராகவும், உணர்ச்சி வசப்படும் தன்மையும், பயந்த சுபாவம் கொண்டவராகவும், மனக்குழப்பம் அதிகம் கொண்டவரா கவும், ரகசிய உடல் பாதிப்பு உடைய வராகவும் இருப்பார்கள்.

தனுசு

குருவின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் பயந்த சுபாவம் கொண்டு இருந்தாலும்; நினைத்த காரியத்தை முடிப்பதில் பிடிவாதம் கொண்டவராகவும், அறிவு திறன் மிக்கவராகவும், மற்றவர்களை எளிதில் நம்பும் தன்மை கொண்டவராகவும், கடவுள் பயம் மிக்கவராகவும் இருப்பார்கள்.

மகரம்

சனியின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் உயரமான உடலமைப்பு, மாநிறம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம், திறமை மிக்கவர். நல்ல நடவடிக்கை கொண்டவராகவும், கடவுள் பயம் கொண்டவராகவும், வாழ்வில் அடி மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்த வர்களாக இருப்பார்கள்.

கும்பம்

ஜென்ம ராசி யாதிபதி சனி பகவான் ஆவார். படித்தவர், புத்திசாலி, சீக்கிரம் கோபம் வரும் தன்மை கொண்டவர்கள். கற்பனை வளம் மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பல்வேறு தடைகளை சந்திப்பவர்.

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் நல்லநிறமும், திடமான உடலமைப்பும், மிக ஜாக்கிரதையாக செயல்படும் திறனும் கொண்டு கடவுள் பயம்மிக்கவராக இருப்பார்கள்.

நன்றி : http://eegarai.darkbb.com/-f3/--t555.htm

புதன், நவம்பர் 05, 2008

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும். அதாவது,
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள்.
ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும்,
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்கள்.
ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்கள்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.
ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்கள், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள்
மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகள். பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள்.
வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

வியாழன், அக்டோபர் 30, 2008

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்...
சிரிக்கும் குழந்தையை தேடித்தேடி ரசிக்கிறேன்...
நீதானடி என் தெய்வம்..’’

நன்றி : http://www.karkibava.com

புதன், அக்டோபர் 29, 2008

சில்லென்று ஒரு காதல்

படம் : சில்லென்று ஒரு காதல்இசை :ஏஆர்ரகுமான்பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகாஇயக்கம்:என்.கிருஷ்ணாஎழுதியவர்:வாலிவரிகள்(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வாநான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதேமுன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

(பெண்)பூ வைத்தாய் பூ வைத்தாய்நீ பூவைக்கோர் பூ வைத்தாய்மண பூ வைத்து பூ வைத்தபூவைக்குள் தீ வைத்தாய்(ஒ ஓ)

(ஆண்)தேனி - நீ -நீ மழையில் ஆடநாம் - நாம் -நாம் நனைந்து வாடஎன் நாளத்தில் உன் ரத்தம்ஆடைக்குள் உன் சத்தம்உயிரே ஒ

(பெண்)தோழி ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன்முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாநான் நானா கேட்டேன் என்னை நானே

(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானே

(பெண்)முன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமாநாம் வாழும் வீட்டுக்குள்வே ராரும் வந்தாலே தகுமா?

(பெண்)தேன் மழை தேக்கத்தில் நீ தான்உந்தன் தோள்களில் இடம் தரலாமாநான் சாயும் தோள் மேல்வேர்யாரும் சாய்ந்தாலேதகுமா?

(ஆண்)நீரும் செங்குள சேறும்கலந்தது போலேகலந்திடலாம்

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசித்திர புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

வெள்ளி, அக்டோபர் 10, 2008

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமன்

தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.

சீதை

வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்
பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.

லக்ஷமணன்

சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.

பரதன்

தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.
கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

கூனி-மந்தரை

யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது

சூர்பனகை

திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது

ராவணன்

இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.

மண்டோதரி

கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

கும்பகர்ணன்

தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

விபீஷணன்

தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

வாலி

தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.

சுக்ரீவன்

அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.

அனுமான்

தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.

புஷ்பகவிமானம்

இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.

நன்றி : ஈதேனீ மன்றம், http://wiki.pkp.in/forum/t-95805/#post-280147

வியாழன், செப்டம்பர் 04, 2008

தமிழின் பெருமை

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

- நன்றி www.pkp.blogspot.com

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts