சனி, மே 16, 2009

பல்லேலக்கா..பல்லேக்கா

சிவாஜியில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் பாடல் காட்சி பல்லேலக்கா..பல்லேக்கா
ஸ்பெஷல் ப்ரீவியூ உங்களுக்காக...

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா

Female Chorus:

சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :

ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...

Male:

காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)

சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )


சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts