திங்கள், மே 30, 2011

சென்னை கிங்ஸ் மீண்டும் ஐ.பி.எல் சாம்பியன் !

ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு) 12 608
2. கோஹ்லி (பெங்களூரு) 16 557
3. சச்சின் (மும்பை) 16 553
4. மார்ஷ் (பஞ்சாப்) 14 504
5. ஹசி (சென்னை) 14 492

மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி விக்.,
1. மலிங்கா (மும்பை) 16 28
2. முனாப் படேல் (மும்பை) 15 22
3. அரவிந்த் (பெங்களூரு) 13 21
4. அஷ்வின் (சென்னை) 16 20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்) 14 19

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் எதிரணி
1. 2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009 டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
4. 2011 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.

தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம் வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட் "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல் உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே ஐ.பி.எல்., "டுவென்டி-20'

ஆதாரம் & நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9577&Value3=I

திங்கள், மே 23, 2011

IPL - 4 Team Standings position as on 23-05-2011




Source : http://epaper.dinamani.com/epapermain.aspx

சனி, மே 21, 2011

IPL - 4 Team Standings position as on 21-05-11 @ 03 : 00 pm (IST)




Source with Courtesy : http://sports.ndtv.com/cricket

சனி, மே 14, 2011

''மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...''

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பதுதியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது. பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

ஆதாரம் & நன்றி : http://tamilstar.net/news-id-human-13-05-11692.htm

வெள்ளி, மே 06, 2011

விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

•லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
•வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
•விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
•லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
•லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை.
•புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை.
•லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
•விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition - ல் மட்டுமே நிறுவமுடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
•லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
•லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸினுடைய Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
•லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
•லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamil-computer.blogspot.com/2011/05/blog-post.html

திங்கள், மே 02, 2011

அன்றும் இன்றும்

அப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம்.
இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.

கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.

மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.

சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப் பட்ட பிறகும் வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.

அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.

எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை. கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.

காய்ச்சலை வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

ஆதாரம் & நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5086&ncat=4

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts