வெள்ளி, ஜனவரி 29, 2010

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி






மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் பத்ரிநாத், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன், மேற்குவங்கத்தின் விரிதிமன் சகா வாய்ப்பு பெற்றுள்ளனர். காயம் காரணமாக டிராவிட், யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.




இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அடுத்த மாதம் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் வரும் பிப். 6ம் தேதி நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் வரும் பிப்., 14ம் தேதி கோல்கட்டாவிலும் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று, மும்பையில் தேர்வு செய்யப்பட்டனர்.




மீண்டும் லட்சுமண்: சமீபத்திய வங்கதேச தொடரின் போது "மிடில்-ஆர்டர்' வீரர்களான டிராவிட் (தாடை), லட்சுமண் (இடது கை), யுவராஜ் சிங் (மணிக்கட்டு), ஸ்ரீசாந்த் காயம் அடைந்தனர். இதில் காயம் குணமடைந்த லட்சுமண், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

2 தமிழக வீரர்கள்: தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்குவங்க அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இதேபோல், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர, தமிழக வீரர்களான பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் 15பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


கைப் ஏமாற்றம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைப், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ""தற்போது முதல் டெஸ்டில் விளையாடும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடும் வீரர்கள் தேர்வு, காயமடைந்துள்ள வீரர்களின் உடற்தகுதி "ரிப்போர்ட்டை' அடிப்படையாக கொண்டு அமையும். தோனியும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டு தான் கூடுதல் கீப்பராக சகாவை தேர்வு செய்துள்ளோம். உள்ளூர் தொடர்களில் மிதுன் சிறப்பாக பந்துவீசிய காரணத்தினால், அவரை தேர்வு செய்துள்ளோம்,'' என்றார்.
15 பேர் கொண்ட இந்திய அணி:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், லட்சுமண், முரளி விஜய், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, அபிமன்யூ மிதுன், விரிதிமன் சகா.
-----------------
ரோகித் கேப்டன்
வரும் பிப்., 2ம் தேதி நாக்பூரில் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடென்ட் லெவன் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் இடம் பிடிக்காத ரோகித் சர்மா, பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), மனீஷ் பாண்டே,அபினவ் முகுந்த், பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே, சேட்டிஸ்வர் புஜாரா, அபிஷேக் நாயர், பியுஸ் சாவ்லா, அஸ்வின், வினய் குமார், அபிமன்யூ மிதுன், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மன்பிரீத் கோனி.
-----------------
புதுமுகம்... அறிமுகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகும் இரண்டு இந்திய வீரர்கள்:
விரிதிமன் சகா: பெங்கால் வீரரான விரிதிமன் சகா (25 வயது), விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக (வலது கை), வலம் வருகிறார். இவர் பெங்கால், இந்தியா "ஏ', ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 24 முதல் தர போட்டி ( 1256 ரன், 65 கேட்ச், 3 ஸ்டெம்பிங்), 33 "ஏ' பிரிவு போட்டி (878 ரன், 32 கேட்ச், 7 ஸ்டெம்பிங்), 28 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் (419 ரன், 13 கேட்ச், 3 ஸ்டெம்பிங்) பங்கேற்றுள்ளார்.
அபிமன்யூ மிதுன்: கர்நாடகா வீரரான அபிமன்யூ மிதுன் (20 வயது), சிறந்த வேகப்பந்துவீச்சாளர். இவர், ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 9 முதல் தர போட்டி (75 ரன், 47 விக்.,), 5 "ஏ' பிரிவு போட்டி (6 ரன், 4 விக்.,), 3 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் தொடரில் 9 போட்டியில் பங்கேற்ற இவர், 47 விக்கெட் வீழ்த்தினார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4989&Value3=I

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts