செவ்வாய், ஜூலை 26, 2011

ATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா ?

இது போன்றதொரு சூழ் நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த பதிவுதான் இது .

நேராக ATM ல் கார்டை செருகி PIN நம்பரை REVERSE ஆக டைப் செய்யுங்கள்.உதாரணமாக உங்கள் PIN நம்பர் 1234 என்றால் 4321 என்று டைப் செய்யுங்கள் .

அவன் கேட்ட பணம் இப்போது வந்துவிடும் .ஆனால் அவன் அறியாமலேயே அவனுக்கு இப்போது ஒரு ஆபத்து.

உடனடியாக நீங்கள் திருடனிடம் மாட்டிக்கொண்ட விஷயம் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரிய வரும். உங்கள் பணம் மீட்கப் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.


இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டுள்ளது. பலருக்கு இது தெரியாததால் பயன்படுத்துவதில்லை. மனதில் இதை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்

ஆதாரம் & நன்றி : http://koodalbala.blogspot.com/2011/06/atm.html

சனி, ஜூலை 16, 2011

Chronology of major blasts in the country

Varanasi, Dec 7, 2010: Two-year-old girl killed and 25 others injured in a blast which takes place between the Dashashwamedh and Shitla ghats on the river Ganga.

Pune, Feb 13, 2010: 17 people killed and over 60 injured when a bomb rips out the famous German bakery in the city.

Mumbai, Nov 26, 2008: 166 people killed in coordinated serial explosions and indiscriminate firing across Mumbai including the crowded CST railway station and two five-star hotels -- Oberoi and Taj.

Assam, Oct 30, 2008: At least 77 killed and over 100 injured in 18 bombings across Assam.

Imphal, Oct 21, 2008: 17 killed in a powerful blast near Manipur Police Commando complex.

Malegaon, Maharashtra, Sep 29, 2008: Five people killed after a bomb kept in a motorbike goes off in a crowded market.

Modasa, Gujarat, Sep 29, 2008: One killed and several injured after a low-intensity bomb kept on a motorcycle goes off near a mosque.

New Delhi, Sep 27, 2008: Three people killed after a crude bomb is thrown in a busy market in Mehrauli.

New Delhi, Sep 13, 2008: 26 people killed in six blasts across the city.

Ahmedabad, July 26, 2008: 57 people killed after 20 synchronised blasts in less than two hours.

Bangalore, July 25, 2008: One person killed in a low-intensity bomb explosion.

Jaipur, May 13, 2008: 68 people killed in serial bombings.

January 2008: Terrorist attack on CRPF camp in Rampur kills eight.

October 2007: Two killed in blast inside Ajmer Sharif shrine in Rajasthan during Ramzan.

August 2007: 30 dead, 60 hurt in Hyderabad terror strike.

May 2007: A blast at Mecca mosque in Hyderabad kills 11 people.

February 19, 2007: Two bombs explode on board a train bound from India to Pakistan, burning to death at least 66 passengers, most of them Pakistanis.

September 2006: 30 dead and 100 hurt in twin blasts at a mosque in Malegaon.

July 2006: Seven bombs on Mumbai’s trains kill over 200 and injure 700 others.

March 2006: Twin bombings at a train station and a temple in Varanasi kill 20 people.

October 2005: Three bombs placed in busy New Delhi markets a day before Diwali kill 62 people and injure hundreds.

Source & Courtesy : http://www.thehindu.com/news/national/article2224460.ece#.TiAoD_qF8jh.email

புதன், ஜூலை 06, 2011

நவரத்தினங்கள்

1 மாணிக்கம் [Ruby]

மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !

2 முத்து [Pearl]

கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !

3 பவழம் [Red Coral]

பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !

4 மரகதம் [Emerald]

பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .

5 புஷ்பராகம் [Topaz]

'ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .

6 வைரம் [Diamond ]

வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும்.

7 நீலக்கல் [Blue Sapphire]

நீலக்கல் என்பது குருந்ததால் ஆனதும் சிவப்பு நிறமல்லாத ஒரு நிறத்தைக் கொண்டதுமான ஒரு இரத்தினக் கல்லைக் குறிக்கும். சிவப்பு நிறமான இரத்தினக்கல் சிவப்புக்கல் அல்லது மாணிக்கம் என அழைக்கக்கப்டும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்க்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பத்பராட்ச்சம் என அழைக்கப்படுகிறது.

8 கோமேதகம் [Hessonite]

நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை.

9 வைடூரியம் [Cats Eye]

க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !

ஆதாரம் & நன்றி : http://santhanamk.blogspot.com/2010/02/blog-post_11.html &
http://www.prohithar.com/gemstones.html

செவ்வாய், ஜூலை 05, 2011

கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை

தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

இம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா? பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா? என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார்.


இம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.


ஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்துக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா? என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது.

கடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது.
உலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை.

மேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழுக்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது.
தற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamilvaasi.blogspot.com/2011/07/blog-post_05.html

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts