வியாழன், பிப்ரவரி 16, 2012

புதிய பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.

தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது. இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.
இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார். தற்போது தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர், 2011-12 "பிக்பாஷ்' "டுவென்டி-20' தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்தார்.
முத்தரப்பு தொடர் முடிந்ததும், இவர் பவுலிங் பயிற்சியாளராக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.

ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=12324&Value3=I

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts